வெள்ளி, 29 டிசம்பர், 2023

திராவிடம்'' சொல் வரலாறு: சிறுபார்வை

"திராவிடம்'' சொல் வரலாறு: சிறுபார்வை
       
 
1)இந்தியாவில் கால் ஊன்றிய ஆரியம் இந்தியா முழுதும் இருந்த ஆதிகுடிகளில் ஒன்றை ""வேதங்களை ஏற்காத நால்வருண பாகுபாட்டை கடைபிடிக்காத தாழ்ந்த மக்கள் குழு"என குறிக்கும் சொல்லாக 
கிமு.1500 களில் ரிக்வேதத்தில் குறிப்பிடும்  த்ரவிடர்  எனும் சொல் வரலாற்றில் திராவிடத்தை குறிக்கும் முதல் தரவாகும்.

2)கிமு 1150  களில் ஆண்ட திராவிடராணி பற்றிய செய்தி....

 (3)கி மு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த  கலிங்க மன்னன் காரவேலன் கல்வெட்டில் உள்ள த்ரமிளர் சங்காத்தம் எனும்சொல்,.

3)அகத்தியர் கால அரசரான திராவிடபூபதி என்பவர் பற்றிய தகவல்....
       
4) மகாபாரத்தில் குறிப்பிடப்படும் 56 தேசங்களில் திராவிடம் என்ற நாடு பற்றிய குறிப்பு..

5)திரவிடன் என்னும் சூரியவம்சத்து அரசன் பற்றிய தகவல்... 
       
6) கிபி 5 ஆம் நூற்றாண்டில் வஜ்ரநந்தி என்ற சமணத்துறவி மதுரையில் த்ரமிள (திராவிட)சங்கம் உண்டுபண்ணி தமிழ் தொண்டாற்றியது பற்றிய தகவல்கள்.
     
7) கிபி 7 நூற்றாண்டில் வாழ்ந்த  ஆதிசங்கரர் தனது சௌந்தர்ய லஹிரி - யில் திருஞானசம்பந்தரை  திராவிடச்சிசு என்று வர்ணித்தது..இதில் வியப்பு ஆதிசங்கரர் திருஞானசம்பந்தர் இருவருமே பிராமணர் என்பது.
        
8) ஆதிசங்கருக்கு முன்பே அத்வைத கருத்துக்களை பரப்பிய வேதாந்த சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுதிய திராவிடாசாரி பற்றிய தகவல்கள்.
       
9) கிபி 8 நூற்றாண்டைச்சேர்ந்த குமரிலப்பட்டர் தனது நூலில்  ஆந்திர திரவிட பாஷா எனும்
சொல்லாடலின் மூலம்  தென்னாட்டு மொழிளில்  தெலுங்கை தவிர பிறமொழிகளை திரவிடமொழி  என அழைக்கிறார்.
      
10)  கிபி13 ம் நூற்றான்றை சேர்ந்த அழகிய மணவாளமுனிகள் வேதங்களை சமஸ்கிருத வேதம் ,திராவிடவேதம் என இரண்டாக வகைபடுத்தி உள்ளார்....அவர் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை திராவிட வேதம் எனும் பொருளில் த்ராவிடோபநிஷத் என்றே குறிப்பிடுகிறார்.
         
11)இந்த காலகட்டங்களில் தென்னாட்டு பிராமணர்களை திராவிடபிராமணர் என அழைக்கும் பழக்கம் உருவாகியது.

12) மேற்கண்டவைகளை ஆதாரமாக கொண்டு  அயர்லாந்தைச் சார்ந்த வரலாற்றாசிரியர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் ஆய்வில்  1854 ல் வெளியான 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கனம் ' எனும் நூல் ,,இந்நூல் இந்தோ -ஆரிய  மொழிக்கூட்டமல்லாத "திராவிடமொழிகள்" என ஒரு மொழிக்கூட்டத்தை வரையறை செய்தது,,அம்மொழிகளின் மூலம் மூலத்திராவிடம் எனும் கருத்தை இவர் வைத்தார்,,இம்மொழிக்கூட்டத்தில் தமிழே மிகப்பழமையான மொழி என்று குறிப்பிட்டுள்ளார்.

12)1885 - ல் அயோத்திதாச பண்டிதரால் உருவாக்கப்பட்ட திராவிடபாண்டியன் இதழ்.

13) 1891 இல் மனோன்மணியம் எழுதிய
சுந்தரம்பிள்ளை, தன்னுடைய தமிழ்த் தெய்வ வணக்கம் பாடலில் "திராவிட நற்றிருநாடு"
என்று குறிப்பிடுகிறார்.
         
14) 1892 - ல் அயோத்திதாசர் தாழ்த்தப்பட்ட மக்களை ஆதிதிராவிடர் எனக் கூறவேண்டி ஆங்கிலேய அரசிடம் மனு கொடுத்தது
         
15) 1894 - ல் இரட்டைமலை சீனிவாசன் ஐயா வின் ஆதிதிராவிடர் மகாஜனசபை

16) 1911, டிசம்பர 11 இல் தாகூர் ஜனகணமன நாட்டுப்பண்ணை எழுதுகிறார். அதில் திராவிடம் என்று குறிப்பிடுகிறார். இதனை இந்திய
அரசமைப்புச் சட்டம் அங்கீகரிக்கிறது.
         
17) 1913 - ல் ஐயா நடேசனாரால் உருவாக்கப்பட்டது  திராவிட சங்கம்
         
18) 1944 - ல் பெரியாரின் திராவிடர் கழகம் உருவானது
         
19) 1948 - ல்  அறிஞர் அண்ணாவின்        திராவிட முன்னேற்றக் கழகம் நிறுவப்பட்டது.

20) 1957 இல் திராவிட முன்னற்றக் கழகத்தை,
இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கிறது
         
20)  பின்னர் அதிமுக ..மதிமுக,.தேமுதிக..
பெரியார் திராவிட கழகம்....தந்தை பெரியார் திராவிட கழகம்..திராவிட இயக்க தமிழர் பேரவை என நிறைய இயக்கங்களை உருவாகின. இவற்றுள் சில
கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம்
பெற்றன.

தமிழ்..தமிழம்..த்ரமிளம் ..த்ரவிடம் ..திராவிடம் என... தமிழ்தான் திராவிடம் என்று வடமொழியினரால் திரித்து கூறப்பட்டது என்பது ஓரளவு சரியான வாதமாகக் கொள்ளலாம்,,

திராவிடம் வரலாறு எழுதத்தொடங்கிய காலத்திலிருந்தே வழங்கப்படும் சொல்லாடலாகும்.

முதலில் அது ஒரு மக்கள் கூட்டத்தின் பெயராகவும்,,

பின்னர் ஒரு மொழிக்கூட்டத்தின் பெயராகவும்

அதன்வழியாக பின்னர் ஒரு இனக்கூட்டத்தின் பெயராகவும் 

வழங்கப்பட்டு வந்துள்ளது.

தற்போது ஒரு தத்துவத்தின் பெயராக பெரியாரியல் தொண்டர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது,

          ✍️ பல்வேறு தரவுகளின் தொகுப்பு✍️

           ⚖️ #துலாக்கோல்/29.12.2023⚖️
- சோம நடராஜன் முகநூல் பதிவு

செவ்வாய், 7 நவம்பர், 2023

திராவிடர்-ஆரியர் என்று கற்பித்தது திராவிட இயக்கமா? கவிஞர் கலி.பூங்குன்றன்

  

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

திராவிடர்-ஆரியர் என்று கற்பித்தது திராவிட இயக்கமா?

கவிஞர் கலி.பூங்குன்றன்

5

ஆரியராவது - திராவிடராவது - எல்லாம் வெள் ளைக்காரன் கட்டிவிட்ட கதை என்று பார்ப்பனர்கள் சொல்லி வந்தார்கள்.

"நாங்கள் ஆரியர்கள் - பிராமணோத்தமர்கள்!" என்று பூணூலை முறுக்கிக் காட்டிக் கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு.

திராவிடர் இயக்கம் தோன்றிய பிறகு - தந்தை பெரியார் என்ற மகத்தான சமூகப் புரட்சித் தலைவரின் சகாப்தம் தோன்றிய நிலையில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றத்தால் ஆரியம் தன் வாலைச் சுருட்டிக் கொண்டது. தம் பெயருக்குப் பின்னால் ஒட்ட வைத்துக் கொண்டிருந்த அய்யர், அய்யங்கார், சர்மா, சாஸ்திரி களை வெட்டிக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டது.

அந்த அளவுக்கு எழுச்சி ஏற்பட்ட நெருக்கடியில் ஆரியம் பம்முகிறது.

ஆரியராவது - திராவிடராவது என்று “கோரஸ்" பாட ஆரம்பித்து விட்டனர். இந்தப் பஜனைக் கூட்டத் தில், ஆர்.எஸ்.எஸில் பயிற்சிப் பெற்ற ஆளுநர் இரவி யும் சேர்ந்து கொண்டு விட்டார்.

ஆரியர் - திராவிடர் என்பதெல்லாம் கிடையாது என்று பேச ஆரம்பித்துவிட்டார் - ஆம், அவரைப் பேச வைக்கும் நிலையை - தாக்கத்தை உண்டு பண்ணியது திராவிடம் இயக்கம்.

ஏதோ, ஆரியர், திராவிடர் என்பதை திராவிட இயக்கம் உருவாக்கியது போல உளற ஆரம்பித்து விட்டனர்.

ஆனால் உண்மை நிலை என்ன? வரலாறு என்ன பேசுகிறது?

உலகில் பல இனங்கள், பல மொழிகள், பல பண்பாடுகள் இருப்பது போலவே இந்தியத் துணைக் கண்டத்திலும் பல இனங்கள் உண்டு. அவற்றுள் மிக முக்கியமான இனங்கள் ஆரியர்-திராவிடர் என்ப தாகும்.

திராவிட எனும் சொல்லைப் பரவலாக்கியவர் கால்டுவெல், மனுதர்ம சாத்திரத்திலே (கி.மு. முதல் நூற்றாண்டு) ஜாதி விலக்கம் செய்யப்பட்டவர்களை பற்றிச் சொல்ல வரும்போது 'திராவிட' என்னும் சொல் கையாளப்பட்டுள்ளது (மனுதர்ம சாஸ்திரம், 43,44) கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரில பட்டர் 'திராவிட பாஷா' என்று தமிழ் முதலாய மொழிகளைக் குறிப்பிட்டுள்ளார். (ச.அகத்தியலிங்கம் “திராவிட மொழிகள்", பக்கம் 22)

திராவிடர்கள் இந்தியாவின் ஆதிக்குடிகள் (டி.ஆர். சேசையங்காரின் "திராவிட இந்தியா” மொழிபெயர்ப்பு முனைவர் க.ப.அறவாணன் பக்கம் 43) என்றும், ஆரியர்கள் இந்தியாவில் குடியேறியவர்கள் என்றும், அப்படிக் குடியேறியவர்களாகிய ஆரியர்களுக்கும், பூர்வீகக் குடிகளான திராவிடர்களுக்கும் இடையே பகை உணர்வுகள் இருந்தன என்றும் ஆரியர்களின் வேதநூல்களிலும் இராமாயணம் முதலியவற்றிலும் இது பிரதிபலிக்கின்றது என்பதற்கு எண்ணிடலங்கா ஆதாரங்கள் உள்ளன. 

6

அவற்றில் சில மட்டும் இங்கே:

* "தென்னிந்தியாவில் வசித்துவந்த ஆரியரல்லா தவர்களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் ராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது".

ரோமேஷ் சந்திரதத் C.I.E.I.C.S,

"புராதன இந்தியா" (52-ஆம் பக்கம்.)

* "திராவிடர்கள் தங்கள்மீது படையெடுத்து வந்த ஆரியர்களோடு கடும்போர் புரியவேண்டி இருந்தது, இந்த விஷயம் ரிக் வேதத்தில் அநேக சுலோகங்களாக இருக்கின்றன."

டாக்டர் ரோமேஷ் சந்திர மஜும்தார் எம்.ஏ., "பூர்வீக இந்திய சரித்திரமும், நாகரிகமும்'' நூல் (பக்கம் 22)

 "ராமாயணக் கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திராவிடர்கள் மீது படை யெடுத்து வெற்றி பெற்றதைச் சித்தரித்துக் காட்டுவ தாகும்.

பி. சிதம்பரம் பிள்ளை, "திராவிடரும் ஆரியரும்" 

(24-ஆம் பக்கம்)

* ''ராமாயணக் கதையானது புரோகித வகுப்பாருக்கும் யுத்த வீரர்களுக்கும் இடையே நடந்த போரைக் குறிப்பதாகும். ராமாயணத்தில் குறிக்கப் பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென் இந்தியாவில் உள்ளவர்களை - ஆரியரல்லாதவர்களைக் குறிப்பதாகும்."

ரோமேஷ் சந்திரதத் எழுதிய "பண்டைய இந்தியாவின் நாகரிகம்" 139-141ஆம் பக்கங்கள்).

* "தென்னிந்தியாவில் இருந்த மக்களேதான் ராமாயணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்''.

"சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும்' 'ராமாயணம்' (587-589ஆம்  பக்கங்கள்)

* "ஆரியன் என்கின்ற சொல் இந்தியாவின் புராதன குடி மக்களிடமிருந்து தங்களை பிரித்துக் காட்டுவதற்காக ஆரியர் ஏற்படுத்திக் கொண்ட சொல்".

* "ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர் (சூத்திரர்) கள் என்றும், தஸ்யூக்கள், அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆரியருக்கும் ஆரியரல்லாதா ருக்கும் இருந்துகொண்டிருந்த அடிப்படையான பகை மையைப்பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காண லாம். இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும் அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைமைக்குக் காரணமாகும்".

டாக்டர் ராதா குமுத் முகர்ஜீ எம்.ஏ., பிஎச்.டி., "இந்து நாகரிகம்" (69ஆம் பக்கம்.)

* "ராமாயணக் கதையின் உட்பொருள் என்ன வென்றால் ஆரிய நாகரிகத்திற்கும் ஆரியரல்லாத நாகரிகத்திற்கும் (அவற்றின் தலைவர்களான ராமன்- ராவணன் ஆகியவர்களால்) நடத்தப்பட்ட போராகும்'' என்று அதேநூலில் (பக். 141) கூறுகிறார்.

* "தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவின் தென்கிழக்கிலும், இலங்கையின் சில பாகத்திலும் வசிக்கும் ஆரியரல்லாத திராவிட மக்கள் ஆவார்கள். தமிழ் என்பது மேற்படியார்களால் பேசும் பாஷை."

சர்-ஜேம்ஸ்மர்ரே எழுதிய புதிய இங்கிலீஷ் அகராதியில் (பக்கம் 67இல்) குறிப்பிட்டுள்ளார்.

* ஆரியர்கள் தங்கள் மொழியை ஆரிய ரல்லாதாருக்குள் புகுத்த முயற்சித்து முடியாமல் போனதால் ஆரியரல்லாதாருடைய பாஷைகளைக் கற்றுக்கொண்டு, அவர்களது நாகரிகத்தையும் பின்பற்ற வேண்டிவந்தது.

இது பண்டர்காரின் கட்டுரைகள், (வால்யூம் 3, பக்கம் 10) கூறும் செய்தி.

* "தமிழர்கள் ஆரியர்களை வடவர், வடநாட்டார் என்று அழைத்தார்கள். ஏனெனில், ஆரியர்கள் வடக்கே இருந்து வந்தவர்களானதால்” என்கிறார்.

டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார் எம்.ஏ., பிஎச்.டி., தனது "தென் இந்தியாவும் இந்திய கலையும்'' எனும் நூலில் (3ஆம் பக்கம்.)

*"திராவிடர்களை ஆரியர்கள் வென்றுவிட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதிவைத்தார்கள். ஆனால், இந்தப்படி இழிவுபடுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தே (திராவிடர்களிடமிருந்தே) பல நாகரிகங்களை இந்தப் பிராமணர்கள் கற்றுக்கொண்டார்கள்” என ஷோஷி சந்தர்தத் "இந்தியா அன்றும் இன்றும்" எனும் நூலில் குறிப்பிடுகிறார் (15ஆம் பக்கம்)

'ஆரியர்கள் தங்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரி களாகிய திராவிடர்களைத் தங்களுடைய புத்தகங்களில் திராவிடர்கள் தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்".

7

'ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில், ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழு தினார்கள்" என சி.எஸ். சீனிவாசாச்சாரி எம்.ஏ., எம்.எஸ். ராமசாமி அய்யங்கார் எம்.ஏ, ஆகிய வரலாற்றாசிரி யர்கள் "இந்திய வரலாறு முதல் பகுதி" என்னும் நூலில் "இந்து இந்தியா” என்னும் தலைப்பில் (16, 17ஆம் பக்கங்கள்) எழுதியுள்ளனர்.

'ஆரியர்களில் சமஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து வட இந்தியாவை அடைந்தார்கள். அங்கு தங்களைவிட முன்னேற்றமான திராவிடர்களைக் கண்டு அவர்களிட மிருந்து பல நாகரிகங்களைக் கற்றுக்கொண்டார்கள்" என்கிறார் எச்.ஜி. வெல்ஸ்.

எச்.ஜி. வெல்சின் "உலகத்தின் சிறிய வரலாறு' என்னும் நூல் (105ஆம் பக்கம்)

* "சுருங்கக் கூறவேண்டுமானால், பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே சொந்தமாக ஆக்கிக்கொண்டு அந்த நிலைமையைத் துஷ்பிரயோகப்படுத்தி, தங்கள் இஷ்டம்போல் எல்லாம் தங்களுக்கு அநுகூலமான சகல விஷயங்களையும் உட்படுத்திக் கட்டுக்கதைகளை எழுதிவைத்துக் கொண்டார்கள். இந்தக் கற்பனைக் கதைகள் அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன் சாமர்த்தியமாய்ப் பிறரை அழுத்தி அடிமைப்படுத்தித் தங்களுடைய நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவே எழுதப்பட்டவையாகும்".

*  “விஷ்ணு என்கின்ற கடவுள் ஆரியக் கூட்டத் தாருக்கு வெற்றி தேடிக்கொடுக்கவும், யோசனை கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாகக் கருதப் பட்டது”.

(ஈ.பி. ஹாவெல் 1918இல் எழுதிய "இந்தியாவில் ஆரியர் ஆட்சியின் வரலாறு” 32ஆம் பக்கம்.)

* "பாரத - ராமாயணங்கள் முதலிய இதிகாசங்களில் காட்டுமிராண்டிகளும், அசுரர்களும், சதர்களும், தஸ்யூக்களும் வசிக்கும் நெருக்கமான காடுகள் கொண்ட நாடு என்று குறிப்பிடப்பட்டிருப் தெல்லாம் தென்னிந்தியாவை (திராவிட நாட்டை)ப் பற்றியே யாகும்” என்கிறார் ஜி.எச்.ராபின்சன் "இந்தியா” 155ஆம் பக்கம்).

“வட இந்தியாவில் இருந்த திராவிடக் கலை, நாகரிகம் முதலியவை யாவும் ஆரியர்களால் அழிக்கப்பட்டு விட்டன. ஆனால் தென்னிந்தியாவில் அவ்விதம் நடக்கவில்லை” என்று தமிழ்ப் பேராசிரியர் கே. என். சிவராஜ பிள்ளை பி.ஏ., எழுதிய "பண்டைத் தமிழர்களின் வரலாறு” (4ஆம் பக்கம்) நூலில் ஆரியர்களால் திராவிடர்களுக்கு ஏற்பட்ட அழிவைக் கூறுகிறார்.

8

“பாரதத்தில் இடும்பி என்று ஒரு ஆரியரல்லாத பெண்மணியைப் பற்றி எழுதிய பார்ப்பனக் கவி தனக்குள்ள ஜாதித் துவேஷத்தால் ராட்சஸி என்று எழுதி இருக்கிறான். ராட்சதர் என்கிற பயங்கர புரளி வார்த்தை வைதீகப் பார்ப்பனனின் மூளையில் தோன்றிய கற்பனையேயாகும்" என்று கடுமையாகவே, நாகேந்திரநாத்கோஷின் "இந்திய ஆரியரின் இலக்கியமும் கலையும்" (194ஆம் பக்கம்.) எனும் நூலில் காண்கிறோம்.

இவ்வளவு கருத்துகளையும் தந்தை பெரியார் அவர்கள், “ஆரியர் - திராவிடர்” எனும் நூலில் இவ்விதம் தொகுத்துக் கூறியுள்ளார். ஆரியர்களின் பூர்விகம் குறித்துப் பல்வேறு அறிஞர்களும் எடுத்துக் கூறியுள்ளனர்.

* ஆரியர்கள் காஸ்பியன் கடலுக்குப் பக்கத்தி லுள்ள வடமேற்குப் பிரதேசங்களிலிருந்து இந்தியாவில் புகுந்ததாகப் பெரும்பாலான பண்டிதர்கள் கூறு கிறார்கள். இதை பால கங்காதர திலகர் வடதுருவப் பிரதேசமான ஆர்க்டிக் மகா சமுத்திரத்தை அடுத்த ஒரு நாட்டிலிருந்து ஆரியர்கள் அய்ரோப்பா முழுவதும் பரவி கடைசியில் இந்தியாவுக்கு வந்ததாகக் கூறுகிறார். 

9

ஆரியர்கள் எங்கிருந்து வந்தாலும் சரி, அவர்கள் இந்தியாவுக்கு வந்து பூர்வகுடிகளைக் கொடுமைப் படுத்தி அடிமைகொண்டுவிட்டார்கள் என்பது மட்டும் உண்மை. சுதந்திரமிழந்த ஆதி இந்தியர்கள் ஆரியர் களுக்கு அடிமைகளாக இருந்திட விரும்பவில்லை. எனவே அவர்கள் காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் குடி புகுந்து வாழத் தொடங்கினர். அவ்வாறு சென்றவர் களுக்கு ஆரியர்கள் ராட்சஸர் என்று பெயர் சூட்டினர் என்பதே வரலாறு கூறும் உண்மை.

குடிபுகுந்த ஆரியர்கள் பூர்வ குடிகளைவிட அழகிய வெள்ளை நிறமுடையவர்களாயிருந்தார்கள். எனவே வெள்ளை நிறமுடைய ஆரியர், மாநிறமான கறுப்பர்களான ஆதி இந்தியர்களைவிட உயர்ந்த வர்கள் என எண்ணம் ஏற்பட்டது.

அன்று முதற்கொண்டே வர்ண பேதக்கொடுமை ஆரம்பமாயிற்று. வர்ண பேதக்கொடுமையினால் இந்தியாவைப் போல் துயரப்படும் நாடு உலகத்திலேயே வேறு இல்லை என்றே சொல்லலாம்.

ஆரியர்கள் ஆதி இந்தியர்களைச் சந்தித்த போதே அவர்களுக்குக் “கறுப்பர்கள்” என்ற இழிபெயரைச் சூட்டினர். போர்க் கடவுளான இந்திரனை ஒரு ஆரிய வீரனாகப் பாராட்டிப் புகழ்ந்தனர்.

ஆரியர் சட்டத்துக்குக் கீழ்ப்படியாதவர்களைக் கண்டித்துக் கறுப்பர்களை மனுவுக்கு அடிமைப்படுத்தி, மற்றும் நூற்றுக்கணக்கான உதவிகள் புரிந்து இந்திரன் ஆரியர்களைக் காப்பாற்றினான் (ரிக் வேதம், முதல் மண்டலம், 30 ஆவது மந்திரம், 8ஆவது ஸ்லோகம்) என ரிக்வேதம் கூறுகிறது.

ஆரியர்களுக்கும், ஆதி இந்தியர்களுக்கும் நடை பெற்ற போரைப் பற்றியும், ஆரியர் செய்த பற்பல கொடுமைகளைப் பற்றியும், வேதங்களில் பல குறிப்பு கள் காணப்படுகின்றன. வெள்ளை ஆரியர்கள் கறுப் புப் பூர்வ குடிகளை எவ்வளவு குரூரமாக இம்சித்தார்கள் என்பதை அறிய ஒன்றிரண்டு எடுத்துக் காட்டுகளை நாளை காண்போம்.

(தொடரும்)

9

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)

திராவிடர்-ஆரியர் என்று கற்பித்தது திராவிட இயக்கமா? (2)

நேற்றைய (28.10.2023) தொடர்ச்சி....

எடுத்துக்காட்டு; ஒன்று

ஓ உலகம் போற்றும் இந்திரனே! ஸீஷ் ரூவனை எதிர்த்த இருபது கறுப்பு அரசர்களையும் அவர்களது அறுபதினாயிரத்துத் தொண்ணூற்றொன்பது படை களையும் உன் தேர்ச் சக்கரத்துக்கு இரையாக்கிக் கொன்று ஆரியர்களுக்கு உதவி புரிந்தாய். (ரிக்வேதம் மண்டலம் 1 மந்திரம் 53, ஸ்லோகம் 9, அதர்வணவேதம் காண்டம் XX  மந்திரம் 21, ஸ்லோகம் 9)

- - - - -

எடுத்துக்காட்டு: இரண்டு

ஓ இந்திரனே! பிப்ரூ, மிருஷய அசுர அரசர்களை ஆரிய மன்னனான விதாதின் புத்திரன் ரிஜீஷ்வனுக்கு அடிமைப்படுத்தினாய்! அய்ம்பதாயிரம் கறுப்புப் படைகளை செயித்தாய். முதுமை உயிரை மாய்ப் பதுபோல் அனேக கோட்டைகளையும் பாழாக்கினாய்.

(ரிக்வேதம் மண்டலம் IV மந்திரம் 16, ஸ்லோகம் 13)

- - - - -

8

எடுத்துக்காட்டு: மூன்று

ஆரிய அரசன் தாவிதியின் நன்மைக்காக முப்பதாயிரம் தாசர்களை உன் மந்திர சக்தியினால், ஓ இந்திரனே எமனுலகு அனுப்பினாய்!

இப்படி ஏராளம் உண்டு. (ரிக்வேதம் மண்டலம் IV  மந்திரம் 3 ஸ்லோகம் 21)

சிந்து சமவெளி நாகரிகம் என்பது திராவிடர் நாகரி கமே என்று தொல்லியல் ஆய்வாளர்கள் அய்ராவதம் மகாதேவன் முதல் பலரும் அறுதியிட்டுள்ளனர். (தினமணி, 2.5.2006)

இந்நிலையில் இந்தியாவின் பண்டைய நாகரிக மானது - முதல் நாகரிகமானது சிந்துவெளி நாகரிகம் ஆகும்.

அந்த நாகரிகத்தை ஆரியர்கள் எப்படியெல்லாம் சிதைத்தனர் என்பதற்கும் ஆதாரங்கள் உண்டு. 

சிந்துசமவெளி திராவிடர்கள் அணைக்கட்டுகளைக் கட்டி விவசாயம் உள்ளிட்ட தொழில்களைச் செய்தனர். 

அணையைக் காவல் காத்த விருத்திரன் என்ப வனை இந்திரன் என்னும் ஆரியத் தலைவன் கொன்று அணையை  திறந்துவிட்டான் என்கிறது ரிக்வேதம். 

(பி.இராமநாதன், எம்.ஏ, பி.எல், எழுதிய "சிந்து வெளி நாகரிகத்தை ஆரியர் சிதைத்தது எவ்வாறு?" செந்தமிழ்ச்செல்வி 1986 மார்ச்) எனத் தனிக் கட்டு ரையே தீட்டியுள்ளார்.

தந்தை பெரியார் 1972இல் (9.2.1972) ‘விடுதலை'யில் எழுதிய தலையங்கம் ஒன்றில் ஆரியர்களின் நிலை குறித்துத் தெற்றென விளக்கும் கருத்து ஆராய்ச்சி அறிஞர்களாலேயே மறுக்க இயலாததாக உள்ளது. 

இந்தியாவில் ஆரியர்கள் நுழைந்த காலம் காட்டு மிராண்டிக் காலம் என்றபோதிலும் திராவிடர்களைவிட ஆரியர்கள் காட்டுமிராண்டிகளாக இருந்துள்ளனர் என்பது அவர்களுடைய கற்பனைக் கருத்துகள், புனைந்த கதைகள், பின்னர் அவர்களைத் தழுவிவந்த நூல்களின் அடிப்படையில் இருந்துள்ளது என்று தந்தை பெரியார் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்.

அதேவேளையில் திராவிடர் நிலையை அறிய பவுத்த ஆட்சி, பவுத்தக் கருத்துகள் சான்றாக விளங்கு கின்றன எனக் கூறுகிறார்.

இராம-இராவணப் போரைத் தந்தை பெரியார் ஆரியர் - திராவிடர் போர் எனக் காட்டுகிறார்.

இதற்கு எடுத்துக்காட்டாக இராவணன் பார்ப் பனர்கள் செய்த வேள்வியை, உயிர்க் கொலையைக் கொலைச் செயல்களைத் தடுத்தமையால்தான் என்று அவர்கள் குற்றம் சாட்டியிருப்பதை எடுத்துக்காட்டு கிறார்.

ஆரியர்கள் காட்டுமிராண்டிகள் என்பதனைப் பொருத்தமாக தந்தை பெரியார் எடுத்துக் கூறுகிறார்.

10

"அவர்கள் வாழ்ந்த தன்மை அக்காலங்களில் காட்டுமிராண்டித் தன்மையதாய் இருந்தது என்பதற்கு அவர்கள் எழுதிய உலக சிருஷ்டி முறைகள். அவர்கள் குறிப்பிடும் காலங்கள், அக்காலத் தேவர்கள், கடவுளர்கள், அவர்களது யாக முறைகள், புணர்ச்சி முறைகள், நீதி முறைகள் முதலியவைகளும் மற்றும் அவர்கள் கற்பித்துக்கொண்ட தேவர்கள், கடவுளர்கள், ரிஷிகள் முதலியவர்களின் பிறப்பு முறை, செய்கை முறை, ஆயுள் முறை, வாழ்க்கை முறை, நீதிமுறை, புணர்ச்சி முறை முதலியவைகளில் எது - இன்றைக்கு அவர்களாலேயே ஒப்புக்கொள்ளத் தக்கதாய் மனிதத் தன்மையுடையதாய் நடப்புக்கு ஏற்றதாய் இருக்கிறது" என்று குறிப்பிடுகிறார்.

11

இறுதியாகப் பெரியார் தம் பாணியிலேயே "மனிதப் பிறப்பு எப்படியோ நாசமாய்ப் போனாலும் இவர்கள் கூறும் கடவுள்கள் - கந்தன், கணபதி முதலியவர்கள் பிறப்பும் அவதாரக் கதைகளும், பகுத்தறிவுள்ள மனிதன் என்பவனால் சிந்திக்கத் தக்கவையா என்று சிந்திக்க வேண்டுகிறேன்" என்கிறார்.

டி.ஆர். சேஷையங்கார் என்பார் எழுதிய “DRAVIDIAN INDIA"  எனும் ஆங்கில நூலை தமிழில் முனைவர் க. ப. அறவாணன் மொழிபெயர்த்துள்ளார்.

இந்நூல் ஆரியர்-திராவிடர் குறித்த பல அரிய செய்திகளை அளிக்கிறது. அதில் திராவிடக் கட்டடக் கலையைப் பாராட்டுகிறார். ஆரியருக்குக் கட்டடம் கட்டும் திறன் இல்லை என்று சுட்டிக் காட்டுகிறார். இந் தியப் பண்பாட்டில் திராவிட செல்வாக்குத் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கிறது. சுமேரியரும் திராவிடரும் வெற்றிக்கு வகை செய்யும் குதிரைகள் போன்ற வேகமான விலங்குகளைப் பெற்றிருக்க வில்லை. பண்பாட்டில் நாகரிகத்தில் செல்வத்தில் ஆரியரைவிடப் பல மடங்கு உயர்ந்த நிலையில் வாழ்ந்து வந்தனர் என்கிறார். 

ஆரிய - திராவிட நாகரிகக் கலப்பிற்கான காரண மாகத் திராவிடர்களின் வாழ்க்கையை எடுத்துக் காட்டு கிறார். இந்தியப் பூர்வீகக் குடிகள் ஆரிய நாகரிகத்திற்கே அடிப்படைப் பொருள்களை வழங்கினர் எனும் கென்னடி என்ற ஆரியர் கருத்தையும் சேஷயங்கார் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

இத்தகு கருத்துகளின் அடிப்படையில் திராவிடர்- தமிழர் குறித்த தந்தை பெரியாரின் கருத்தைக் கவனிக்க வேண்டும்.

திராவிடரும் தமிழரும் ஒன்றே!

திராவிடர் -தமிழர் என்று சொல்லப்பட்டாலும் வார்த்தை வேறுபாடுகளே தவிர இன வேறு பாடல்ல. திராவிடத்திலிருந்து தமிழ் வந்தது என்றும், தமிழி லிருந்து திராவிடம் வந்தது என்றும் தமிழ் அறிஞர்கள் கூறுவதுண்டு.

தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்தவரை திரு இடம் என்பது தான் திராவிடம் என்று ஆயிற்று என்று கூறுகிறார்.

(17.11.1942 இல் திருவள்ளுவர் நன்னெறிக் கழகத்தில் ஆற்றிய உரையிலிருந்து)

தமிழம் என்பது-த்ரமிள (ம்) த்ரவிட (ம்)- த்ராவிட (ம்) என்னும் முறையில் தமிழம் என்னும் சொல்லே திராவிடம் என்று திரிந்ததாகும் என்கிறார் திராவிட மொழி ஞாயிறு ஞா.தேவநேயப்பாவணார் (ஒப்பியல் மொழி நூல் 2000 ஆண்டு பதிப்பு - பக்கம் 28)

இன்றைய பார்ப்பனர்கள் வேறு- ஆரியர்கள் வேறு என்று கூறுவோரும் உண்டு.

ஆனால் நடைமுறை உண்மைக்கு மாறான கருத்து இது.

மறைமலை அடிகள் போன்ற தமிழ் அறிஞர்கள் ஆரியப் பார்ப்பனர்கள் என்றே குறிப்பிடுகின்றனர். (ஆதாரம் ‘வேளாளர் நாகரிகம்' நூலில் கட்டுரையின் தலைப்பு "ஆரியப் பார்ப்பனர் தமிழையும் சிவத்தையும் இகழ்தல்")

"ஆரியப் பார்ப்பனர்களின் அளவிறந்த கொட் டங்கள்" என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் தனி நூலே எழுதியுள்ளார்.

தந்தை பெரியார் ஆச்சாரியாருக்கும் பதில் கூறும் விதமாக பொருத்தமான விளக்கம் தருகிறார்.

பார்ப்பனர்களை நான் ஆரியர் என்று குறிப்பிட்டு வருவதில் ஒரு பெரிய ஓட்டையைக் கண்டு பிடித்து விட்டதாகக் கருதிக் கொண்டு நமக்கு ஆச்சாரியார் (ராஜாஜி) முட்டாள் பட்டத்தையோ, பைத்தியகாரப் பட்டத்தையோ கட்டி வந்தாலும், ஆச்சாரியார் இந்த ஓட்டையை வேண்டுமென்றே கற்பித்து மக்களை மயக்கப் பேசுகிறார் என்றேதான் கருகிறேன். 

ஏனெனில், பார்ப்பனர் ஆரிய இனத்தின் கலப்பு என்று ஆச்சாரியார் கூறுவதை நாம் ஒப்புக்கொண் டாலும், திராவிடர்களும் ஓர் அளவுக்காவது அதுபோல் இருக்கலாம் என்றாலும் நாம் ஆரியர்- திராவிடர் (அல்லது தமிழர்) என்பதன் கருத்தும் உண்மையும் என்ன என்பதை பலமுறை வெளியாக்கி இருக்கிறோம்.

அதாவது, பார்ப்பனர் தமிழர் கலப்பு உடையவர்கள் ஆனாலும், ஆரிய கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறவர் கள்  ஆவார்கள். அதுவும் தங்களை தங்கள் பிறவியை உயர்த்திக் கொள்ளவும் மற்றவர்களை தாழ்த்திக் கொள்ளுகிறவர்கள். இதனாலேயே இதற்காகவே அவர்கள் தங்களை மற்ற தமிழர்களிடமிருந்து வாழ்க்கை முறையில் பிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லி வருகிறோம். எதுபோல் என்றால் நம் நாட்டில் உள்ள சட்டைக்காரர்கள் அல்லது ஆங்கிலோ இந்தியர்கள் என்கின்ற பிரிவார் அய்ரோப்பியர் அல் லர், வெள்ளைக்காரர்களும் அல்லர். தமிழர் பெண் களுக்கும் அய்ரோப்பிய ஆண்களுக்கும் பிறந்தவர் கள், அப்படி இருந்தாலும் அவர்கள் தகப்பனையே முக்கியமாய் கருதி, தாயை மறந்து அய்ரோப்பிய கலாச்சாரத்தை அதாவது பழக்க வழக்கம் மனப் பான்மை ஆகியவற்றைக் கையாண்டு தங்களை சட் டைக்காரர்-இந்தோ-அய்ரோப்பியன் என சொல்லிக் கொண்டு வெள்ளையன் காலத்தில் உயர் வாழ்வு, உயர்ந்த சலுகைப் பெற்று, துரை என்னும் பெயரால் தொப்பி போட்டுக்கொண்டு வாழ்ந்ததைப் போல், இந்தப் பார்ப்பனர்கள் தங்களை ஆரியப் பட்டமாகிய பிராமணர்கள், அய்யர், ஆச்சாரியார், ரிஷிகள் முதலிய பட்டத்தை வைத்துக்கொண்டு, ஆரிய சின்னமாகிய பூணூலை தரித்துக்கொண்டு ஆரிய உடை அணிந்து கொண்டு, ஆரிய பழக்க வழக்க நடப்பு மனப்பான்மை யைக் கொண்டு தனிச் சலுகை, தனி உரிமை முதலியவைகளை அனுபவித்துக்கொண்டு நம்மை தலையெடுக்க வொட்டாமல் செய்து வருகிறார்கள் என்று சொல்லி வந்திருக்கிறேன். (“ராஜாஜியின் பேயாட்டம்” எனும் தலைப்பில் பெரியார்- விடுதலை 21.6.1956)

இதே கருத்தை அண்ணா அவர்களும் இவ்வாறு கூறுகிறார்.

தமிழர் என்றால் தமிழகத்திலே பிறந்து தமிழ் பேசும் அனைவரும் தமிழரே என்று. ஆனால் உள்ளூர உணர்வர். தமிழர் என்றால், தமிழ் மொழியினர் என்பது மட்டுமல்ல, மொழி, வழி, விழி மூன்றிலும் தமிழர்! நோக்கம் நெறி இரண்டும், (விழி, வழி) தமிழருக்குத் தனி! ஆரிய நோக்கம் வேறு, மார்க்கம் வேறு! தமிழர் எனில் தனி இனம் என்ற கருத்தே தவிர, மொழியிலே மட்டுமல்ல!

(-அறிஞர் அண்ணா விடுதலைப் போர் பக்கம்-30) 

ஆரியராவது, திராவிடராவது என்று தங்களுக்கு நெருக்கடி வரும் பொழுது தட்டிக்கழிப்பார்கள். இது வெள்ளைக்காரன்கட்டி விட்ட கைச்சரக்கு என்று கேலி கூடப் பேசுவார்கள். ஆனால் நடைமுறையில் அவர் கள் எப்படி இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்களில் முக்கியமானவரான கோல்வால்கர் -  BUNCH OF THOUTHTS  எனும் தமது நூலில் என்ன கூறுகிறார்?

"நம்முடைய மக்களின் மூலாதாரம் எது என்பது சரித்திர மேதைகளுக்கே தெரியவில்லை. ஒரு வழியில் நாம் அநாதிகள். துவக்கம் இல்லாதவர்கள். பெயர் இல்லாமல் வாழ்ந்திருக்கிறோம். நாம் நல்லவர்கள்; நாம் அறிவுத்திறம் கொண்டவர்கள், இயற்கையின் விதி களை அறிந்தவர்கள் நாம்தான். ஆன்மாவின் விதி களை அறிந்தவர்களும் நாம்தான். மனிதனுக்கு எவை எவைகள் நன்மை பயக்குமோ, அவை அவைகளை எல்லாம், மனித சமூகம் நன்மை பெறுவதற்கே வாழ்க்கைக்குக்கொண்டு வந்தது நாம்தான்! அப்போது நம்மைத்தவிர, மற்றவர்கள் எல்லாம் இரண்டு கால் பிராணிகளாகத்தான் அறிவற்றவர்களாகவே இருந்த னர். எனவே தனிமைப்படுத்தி நமக்குப் பெயர் எதை யும் அவர்கள் சூட்டவில்லை. சில நேரங்களில்-நமது மக்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட நாம் ஆரியர்கள் அதாவது அறிவுத்திறம் மிக்கவர்கள் என்று அழைக்கப்பட்டோம். நம்மைத் தவிர மற்ற வர்கள் எல்லாம் மிலேச்சர்கள்.

(The origin of our People is unknown to scholors of history. In a way we are anadhi; without a beginning or we existed when there was no need of any name. We were the good, the enlightened people. We were the people who know about laws of nature the laws of spirit. We had brought into actual life almost every thing that was beneficial to maknkind. Then the rest of humanity was just bipeds and no distinctive name was given to us. Sometimes in trying to distinguish our people from others, we ere called the enlightened- the Aryas-and the rest the melacher.

- (From Bunch of Thoughts)

இன்றைய நிலை

டாக்டர் வி.அய்.சுப்பிரமணியம் அவர்கள் 2000-2001 ஆம் ஆண்டில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியைச் சந்தித்து “திரவிடியன் என்சைக்ளோபீடியா' என்ற நூலை அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

இந்நூலைப் பெற்றுக்கொண்ட ஜோஷி, இந்நூலின் பெயரிலுள்ள 'திரவிடியன்' என்ற சொல்லை நீக்கி விடலாமன்றோ என்றார். இதற்குப் பதில் உரைத்த டாக்டர் வி.அய்.சுப்பிரமணியம் அமைச்சரை நோக்கி, நீங்கள் நாட்டுப்பண்ணிலிருந்து 'திராவிடம்' என்ற சொல்லை நீக்கிவிடுங்கள்; நானும் திராவிடக் களஞ்சியம் என்பதிலிருந்து 'திராவிடம்' என்ற பெயரை நீக்கிவிடுகிறேன் என்றார். இது 2003 பிப்ரவரியில் வெளியான DLA News' இல் காணப்படுகிறது.

ஒரு ஒன்றிய அமைச்சராக இருக்கக்கூடியவர். ஒரு  வரலாற்றுப் பெயரை மறைக்க விரும்புவதை இங்குக் கவனிக்க வேண்டும்.

"திராவிடியன் என் சைக்ளோ பீடியா" எனும் தலைப்பில் ஒரு தொகுப்பு வெளிவருவதை அவர்கள் விரும்பவில்லை என்பதுதான் உண்மை.

ஆனால் அதே நேரத்தில் ஆரியர்கள்தான் அறி வாளிகள், மற்றவர்கள் மிலேச்சர்கள் என்று அவர் சாந்திருக்கும் அமைப்பின் நிறுவனர் கோல்வால்கர் எழுதியுள்ளது குறித்து அவர்கள் உள்ளத்தில் பெரும் மகிழ்ச்சி நீச்சல்தான்.

ஆரியப் பார்ப்பனர்கள் தங்களை திராவிடர்கள் என்றோ தமிழர் என்றோ சொல்லிக்கொள்வதில்லை. காரணம் அவர்களுக்கு அந்த உணர்வு என்பது கிடையாது.

எடுத்துக்காட்டாக தமிழ் செம்மொழியாக அங்கீ கரிக்கப்பட்ட நிலையயில்,

அது பற்றி 'தினமலர்' வாரமலர் (13.6.2009) என்ன எழுதிற்று? தமிழ்மொழியை செம்மொழி ஆக்கினால் ஒரு வேளை கஞ்சிக்கே வழியில்லாதவர்களுக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கப் போகிறது பாருங்கள் என்று ஏகடியம் செய்தது கவனிக்கத்தகுந்ததாகும்.

"பெங்களுரூ திருவள்ளுவர் சிலை திறந்திட்டோமா, இல்லையா - அதுக்கப்புறம் டெல்டா பகுதிகளில் முப்போகம் விளையாதா என்ன?'

(தினமலர் 18.8.2009 பக்.10) என்று கிண்டல் செய்வதையும் கவனிக்க வேண்டும்)

யதார்த்தமான இந்த நிலையின் அடிப்படையில் தான் இந்த நாட்டில் திராவிடர் இயக்கம் தோன்றியது. பார்ப்பனர் எதிர்ப்பு என்பது ஒரு ஆதிக்கத்தை எதிர்த்தே பெரும்பாலான மக்களுக்காக உரிமைகளை, சுயமரியாதையை, சமத்துவத்தை நிலைநாட்டவே யாகும். அது ஒரு காலத்திலும் தனிப்பட்ட பார்ப்பன பகைமையாக இருந்ததில்லை.

தேர்தலில்கூட வெளிப்படையாக பார்ப்பனர்- பார்ப்பனர் அல்லாதார் என்ற அடிப்படையில் களம் அமைவதை நாடு பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. 

இங்கு நடைபெறுவது வெறும் அரசியல் போராட் டமல்ல. ஆரியர்-திராவிடர் போராட்டமே என்பதுதான் தந்தை பெரியார் அவர்களின் கணிப்பு ('விடுதலை' 22.5.1967)

தேவர்கள், அரக்கர்கள் போராட்டமே தமிழ்நாட் டின் நிலை என்று சி.ராஜகோபாலச்சாரியார் (18.9.1953 அன்று சென்னை திருவொற்றியூரில் உரையாற்ற வில்லையா?

இந்தியத் தேசிய கீதத்திலும் 'திராவிட' இருக்கிறது. மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ் வாழ்த்திலும் 'ஆரியம்' இடம்பெற்று இருக்கிறது. வரலாறு வரலாறு தானே - மறைக்க முடியுமா?


த்ரவிட விஷயம் - காஞ்சி சங்கராச்சாரியர் என்ன சொல்லுகிறார்?

 

 (இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

தொகுப்பு: மின்சாரம்

5

ஆரியராவது - திராவிடராவது, எல்லாம் கட்டுக் கதை - எல்லாம் வெள்ளைக்காரன் ஏற்பாடு செய்த பிரித்தாளும் சூழ்ச்சி என்று பார்ப்பனர்கள் திசை திருப்பப் பார்க்கின்றனர்.

ஒரு காலத்தில் இது அவர்களுக்கு வசதியாக இருந்தது - இப்பொழுது எதிர்ப்பதமாக ஆகிவிட்டது; அதனால் இப்படி எல்லாம் பேசவும், எழுதவும் ஆரம்பித்துள்ளனர் - ஆளுநர் ஆர்.நாராயண ரவி உட்பட.

சங்கராச்சாரியாரே திராவிடர் பற்றி எழுதி இருக் கிறாரே - பார்ப்பனர் பால கங்காதர திலகரே எழுதி யுள்ளாரே. பிரபல வரலாற்றாசிரியர் ரொமீலா தாப்பரே ஆதாரத்துடன் அடித்துச் சொல்லியுள்ளாரே - இதோ பார்ப்போம்:

சங்கராச்சாரியார்

தமிழ் என்பதுதான் திராவிட (திராவிடம் என்பது) முதல் எழுத்தான ‘த' என்பது ‘த்ர' என்று இருக்கிறது. இப்படி ‘ர' காரம் சேருவதுச்மஸ்கிருத வழக்கு. மேலே சொன்ன சுலோகத்தில் வருகிற ‘தோடகர்' என்ற பேரைக்கூட ‘த்ரோடகர்' என்று சொல்லுகிற வழக்கம் இருக்கிறது. இதனால் சில பேர் ஸம்ஸ்க்ருதத்தையே ‘ரொம்ப' ஸம்ஸ்கிருதமாக்கி ‘தேகம்' என்பதைக்கூட ‘த்ரேகம்' என்று சொல்கிறார்கள்!

த-மி-ழ் என்பதில் 'த', 'த்ர' வாயிருக்கிறது. 'மி' என்பது 'வி' என்றாயிருக்கிறது. 'ம' வும் 'வ' வும் ஒன்றுக்கொன்று மாறுவதற்கு பிலாலஜிக்காரர்கள் (மொழி ஒப்பு இயல் நிபுணர்கள்) நிறைய உதாரணம் கொடுப்பார்கள். ஸம்ஸ்கிருதத்துக்குள்ளேயே இதில் ஒன்று மற்றதாகும். உதாரணமாக 'சாளக்ராவம்' என்பது தான் 'சாளக்ராமம்' என்றாயிருக்கிறது.

சம்ஸ்க்ருதத்தில் 'மண்டோதரி' என்பதைத் தமிழில் 'வண்டோதரி' என்கிறோம். 'த்ரவிட' என்பதையே 'த்ரமிட' என்றும் சொல்வதுண்டு. 'ல வும் 'ள' வும் மாறு வது சகஜம். மதுரை, ராமநாதபுரம் ஜில்லாக்களில் போனால் 'வாளைப்பளத்தில் வளுக்கி விளுந்திடப் போறே' என்று சொல்வார்கள். 'ழ'வுக்கும் 'ள'வுக்கும் ரொம்பக் கிட்டத்தில் உள்ளது தான் 'ட'வும்.

6

வேதத்திலேயே 'அக்னிமீடே' என்று வருவது 'அக்னிமீளே' என்றும் மாறுகிறது. இப்படித்தான் 'தமிழ்' என்பதில் உள்ள 'ழ்' 'த்ரவிட்' என்பதன் 'ட்' ஆக இருக்கிறது. த - 'த்ர'வாகவும், மி - 'வி' யாகவும், ழ் - 'ட்' டாகவும் - மொத்தத்தில் 'தமிழ்' என்பது 'த்ரவிட்' என்றிருக்கிறது.

இப்போது எல்லாவற்றிலும் தமிழ் சம்பந்தம் காட்டினால் ஒரு ஸந்தோஷம் உண்டாவதால், த்ரவிடா சார்யாரைச் சொல்லும் போது அவருக்குத் தமிழ் சம்பந்தம் காட்டி நாமுந்தான் ஸந்தோஷப்படு வோமே என்று தோன்றிற்று; சொன்னேன்.

- “கல்கி", 9.4.2017

சங்கராச்சாரியார் விளக்கம் ஒரு பக்கம் இருக்கட்டும் - திராவிடம் என்பதை ஒப்புக் கொண்டுள்ளதை ஆர்.என்.ரவிகள் தெரிந்து கொள்ளட்டும்.

ரிக் வேதத்தில் திராவிட மொழி!

(ரொமீலா தாப்பர்)

பண்டைய இந்திய வரலாற்றை மறு வாசிப்புக்கு உட்படுத்திய இந்திய வரலாற்றாசிரியர்களில் முதன்மை யானவர் ரொமிலா தாப்பர். டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர். ''ஹிஸ்ட்ரி ஆஃப் இந்தியா', 'அசோகா அண்டு தி டிக்ளைன் ஆஃப் தி மவுரியாஸ்' போன்ற வரலாற்று ஆய்வு நூல்களை எழுதியவர். அவருடனான பேட்டியின் சில முக்கியப் பகுதிகள் இங்கே!

உங்களுடைய சமீபத்திய புத்தகமான 'தி பாஸ்ட் ஆஸ் பிரசண்ட்-அய் வாசிக்கும்போது, வரலாற்று ஆய்வின் இன்றைய போக்கையும் இந்திய வரலாறு குறித்த வெகுஜனப் புரிதலையும் ஒருவிதமான வருத்தத்தோடு அவதானிப்பதாகத் தோன்றுகிறது.

50 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி நிறுவனங்களில் வரலாற்றுப் பாடம் கற்றுத்தரப்பட்ட விதமே வேறு. அப்போது வரலாற்றைப் புதிய பார்வையில் எழுதி யவர்கள் பல எதிர்ப்புகளைச் சந்தித்தோம். அந்தவகை யில் இன்று ஓரளவு” ஆரோக்கியமான மாற்றம் வந்துள் ளது. இருப்பினும், பொதுமக்களிடையே காலாவதியான வரலாறும் வரலாறே அல்லாதவையும்தான் இன்னமும் வரலாறாக இருக்கின்றன. கடந்த காலத் தகவல்களின் குவியல்தான் வரலாறு என இன்றும் பலர் நம்புகின்றனர். பலவிதமான மூலங்களைக் கண்டறிந்து, அவற்றைக் குறுக்குவிசாரணை செய்து, ஆதாரங்களின் நம்பகத் தன்மையைச் சோதித்து அதன் அடிப்படையில்தான் தகவல்களைத் திரட்ட வேண்டும். 'வரலாற்று முறைமை' என நாங்கள் அழைப்பது இதைத்தான்..

முறையான பயிற்சி இன்றி பொதுவான ஆர்வத்தில் வரலாற்றைத் தேடுபவர்களுக்கும், தர்க்கரீதியாக சமரச மின்றி வரலாற்றைப் புரிந்துகொள்ளும் வரலாற்றாசிரி யருக்கும் துல்லியமான வேறுபாடு உள்ளது என்கிறீர் கள் அல்லவா?

நிச்சயமாக - நான் சொன்னது எல்லா வரலாற் றுக்கும் பொருந்தும். அதிலும், பண்டைய இந்திய வரலாற்றில் இந்தச் சிக்கல் கூடுதலாகவே இருக்கிறது. ஒரு டஜன் பண்டைய இந்திய வரலாற்றுப் புத்தகங் களைப் படித்துவிட்டால் நீங்கள் நிபுணராகி விட முடியாது, அதன் மூலங்கள் மற்றும் அக்கால கட்டத்தில் வழக்கத்திலிருந்த மொழிகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, மவுரியக் கல்வெட்டுகளை ஆராய பிராகிருதம் தெரிந்திருக்க வேண்டும். அதனு டன் தொடர்புடைய கவுடில்யரின் (சாணக்கியர்) அர்த்த சாஸ்திரத்தை வாசிக்க சம்ஸ்கிருதமும் சுற்றிருக்க வேண்டும். ஓரளவாவது தொல்லியல் தெரிந்திருக்க வேண்டும்.

7

தற்காலத் தொல்லியல் ஆய்வுகளில் அறிவியல் முறைகள் பல பின்பற்றப்படுகின்றன. இதனால் தொல் லியலை என்னால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அடுத்தபடியாக முழுமையாகப் வெறுமனே மொழி அறிவையும் தாண்டி மொழியியல் தெரிந்திருக்க வேண்டும். சம்ப காலமாகப் பெரிதும் விவாதிக்கப்படும் ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன்

நாங்கள் மாணவர்களாக இருந்தபோது ரிக் வேதத்தின் ஒரே மொழி இந்து ஆரிய மொழி. ஆனால், இன்றைய வேத ஆய்வாளர்களைக் கேட்டுப்பாருங் கள். ரிக் வேதத்தில் திராவிட மொழியும் உள்ளதென்று அவர்களில் பெரும்பாலோர். சொல்வார்கள். வரலாற் றாசிரியரின் பார்வையை இது புரட்டிப்போடுகிறதல் லவா? “ஒரே ஒரு மொழியை மட்டுமே பேசிய மக்களின் மொழியில் எழுதப்பட்ட ஒரு நூல் இங்குள்ளது" என இனி எவரும் சொல்ல முடியாது.

நீங்கள் பேசுவதிலிருந்து கடந்த காலம் என்பது ஒற்றைத் தன்மை கொண்டதல்ல என்பது புரிகிறது. சாமானிய மக்கள் மனதில் சில தவறான, அபாயகரமான விஷயங்கள் புகுத்தப்பட்டுள்ளன. சில மதம் சார்ந்த நடவடிக்கைகளை, சில இன அடையாளங்களை, சில குழுக்களை ஒற்றைத் தன்மையிலேயே புரிந்துவைத்து உள்ளனர்...

பொதுமக்களிடையே பரப்பப்படுவதைப் பற்றி நான் இப்போதுவிளக்கப்போவதில்லை. ஆனால் ஒன்றைக் கவனிக்க வேண்டும். 'மத்திய ஆசியாவி லிருந்து ஈரான் வழியாக இந்தியா வந்தடைந்ததுதான் ஆரிய மொழி என்றுதான் நெடுங்காலமாகச் சொல்லப் பட்டது. ஆனால், 'ஆரிய மொழி பேசியவர்கள் இம் மண்ணின் மைந்தர்களே' எனும் கருத்து சமீபகால மாகப் பரப்பப்படுகிறது. சிலர் ஹரப்பா நாகரிகத்தைத் தோற்றுவித்ததே ஆரியர்கள்தான் என்கின்றனர். ஒட்டுமொத்தமாக ஆரியர் அல்லாத கூறுகளே இந்திய நாகரிகத்தில் இல்லை எனச் சொல்லத் தொடங்கி விட்டனர். பல காரணங்களுக்காக இதை நான் மறுக்கிறேன்.

புனிதப்படுத்துதல் என்பதாலா?

8
ஆம்! புனிதமான ஆரியவாதம். அதில் ஒரு மூலம் மட்டும் முன்னிறுத்தப்படுகிறது. பன்முகத் தன்மைகள் விளிம்புக்குத் தள்ளப்படுகின்றன. மொழியியல் மற்றும் தொல்லியல் அடிப்படையில் இதை நாங்கள் முற்றிலுமாக மறுக்கிறோம். ஹரப்பா நாகரிகத்துக்குப் பின்தோன்றியதுதான் ரிக் வேதம் என்பதே எங்களு டைய வாதம். ஏனென்றால், ஓமனில் ஹரப்பா பண் பாட்டின் தடங்கள் காணப்படுகின்றன. அவர்களுக்கு மெசபடோமியாவோடும் தொடர்பு இருந்திருக்கிறது.

ஆனால், இத்தகைய கூறுகள் ரிக் வேதத்தில் பிரதிபலிக்கவில்லை. கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியிலும் இரண்டாம் நூற்றாண்டின் தொடக் கத்திலும் ஹரப்பா கலாச்சாரம் அக்கம்பக்கத்தில் இருந்த பிற கலாச்சாரங்களோடு தொடர்பு கொண்ட தாகத் தெரியவருகிறது. ஆனால், ரிக் வேதமோ கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் மத்திய காலம் தொடங்கி இறுதிவரையில்தான் தொகுக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் சாம்பல் நிறப் பானைக் கலாச்சாரம், கருப்பு மற்றும் சிவப்புப் பானைக் கலாச்சாரம், பெருங் கற்கள் கலாச்சாரம் எனப் பல விதமான கலாச்சாரங்கள் இருந்துள்ளன. இப்படிப் பலதரப்பட்ட கலாச்சாரச் சூழலில்தான் ஆரிய மொழி பேசிய மக்கள் இந்தியா வில் குடியேறினர்.

அதிலும் ஹரப்பா நகரங்களின் கலாச்சாரம் அதி நவீனமானது. அம்மக்களுக்கு எழுத்தறிவும் இருந்தது. மறுபுறம் எழுத்தறிவற்ற, நகர்ப்புற வாழ்க்கை முறை அறியாத, விவசாயத்தை மட்டுமே நம்பி இருந்த ரிக் வேதச் சமூகம். இது போன்ற அடிப்படையான வேறு பாடுகளை யாரும் மறந்துவிட வேண்டாம்! 

தமிழில் சுருக்கமாக: ம.சுசித்ரா

நன்றி: ஃப்ரண்ட்லைன்

நன்றி: ‘தி ஹிந்து, 28.9.2015, பக். 7)

ரொமீலா தாப்பர் இந்தியாவில் நிபுணத்துவம் வாய்ந்த வரலாற்று ஆசிரியர். திராவிடர் - ஆரியர் பற்றிய இவரின் ஆய்வுக்கு ஆரியப் பார்ப்பனர்களின் பதில் என்ன?

ஆரியர்கள் குறித்து 

பாலகங்காதர திலகர்

9

பாலகங்காதர திலகர் பத்திரிகை ஆசிரியராக இருந் தவர், ஆரியர்கள் பற்றிய பல வரலாற்றுச் செய்திகளை அவர் தனதுமராத்தா இதழில் எழுதியுள்ளார்

"இந்தக் கோட்பாட்டில், ஆரியர்கள் ஆர்டிக் வட துருவத்தை ஒட்டிய பகுதி(இன்றைய சைபிரியா பகுதியில் இருந்து வந்தவர்கள் என்று அவர் கூறினார். கி.மு. 8000 இல் ஏற்பட்ட பனிப் பிரளயத்தால் கடுமையான குளிர் நிலவியதால் அவர்கள் வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். பனி யுகத்திற்கு முன்பு ஆரியர்கள் வட துருவத்திற்கு ஒட்டிய நிலப்பகுதிகளில் வாழ்ந்தனர் பனியுகம் துவங்கியதால் அவர்கள் (ஆரியர்களின்) இடம் பெயர்ந்து புதிய குடியேற்றங்களுக்கான நிலங்களைத் தேடி அய்ரோப்பா மற்றும் ஆசியாவின் வடக்குப் பகுதி களுக்கு இடம் பெயர வேண்டியிருந்தது."

எழுதியிருப்பவர் ஆர்.எஸ்.எஸின் முன்னோடி யான பாலகங்காதர திலகர்.

ஆரியர்களின் பூர்வாங்க வரலாற்றைப் படம் பிடித்துள்ளார்.

இவரையும் திராவிட இயக்கத்திலோ வெள்ளைக் காரர் பட்டியலிலோ சேர்க்கப் போகிறார்களோ!

ஊரையும் உலகத்தையும் வெகுநாள் ஏமாற்ற முடியாது. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது நல்மொழி.

திங்கள், 28 ஆகஸ்ட், 2023

திராவிட லெனின் டி.எம்.நாயர் (நினைவு நாள்: 17.07.1919) - புலவர் கந்தசாமி

   

6

ஆண்ட இனம் அடிமைப் பட்டு அடக்கப் பட்டு ஒடுக்கப்பட்டுத் தன்னிலை மறந்த இனமாக வீழ்த்தப்பட்டது ஆரியரின் சூழ்ச்சியால் சூது மதியால்.கல்வி அறிவு பெறுவதற்கும் வழியின்றி மூடத்தனத்தில் மூழ்கிக் கிடக்கும் நிலையில் திராவிடர்கள் கிடத்தப்பட்டார்கள். 

7

இச்சூழலில் 15.01.1868 இல் கேரளாவைச் சார்ந்த தாரவாட் மாதவன் நாயர் பாலக்காட்டுக்கு அடுத்த தாரவாட் என்னும் சிற்றூரில்  தோன்றினார்.  இவர்தம் தந்தை சி.சங்கரன் நாயர் வழக்குரைஞராக மாவட்ட முன்சீப்பாகப் பதவி வகித்தவர். பள்ளிப் படிப்பைப் பாலக்காட்டில் முடித்தார்.  ஒரு நூலைப் படித்து முடித்து விட்டால் அதனை அப்படியே ஒப்பிக்கும் திறமை இயல்பாகவே பெற்றிருந்தார். அய்ந்தாம் பாரத்தில் படித்துவந்த போதே மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் எஃப் ஏ (Fellow of Arts) பட்டம் பெற்று சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். மேனாட்டு மருத்துவப் பட்டம் பெற 1889 இல் இங்கிலாந்து சென்றார்.

ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றிருந்ததுடன்  வாதாடும் திறனையும் கொண்டவராகவும் எழுத்தாற்றல் பெற்றவராகவும்‌ தம்மை வளர்த்துக் கொண்டார். இங்கிலந்தில் போர்க்குணம் வாய்ந்தவராகவும் உலக அனுபவங்களைப் பெற்றவராகவும் திகழ்ந்தார். அரசியல், வரலாறு போன்றவற்றிலும் தம் அறிவை வளர்த்துக் கொண்டார்.

‘பிரிட்டன் மருத்துவ சங்கம் ‘ போன்ற பல சமூக நல சங்கங்களுடன் தம்மை இணைத்துக் கொண்டார். ஆளுமைத் திறனும் எந்த சிக்கலையும் தீர்வு செய்யும்  நுணுக்கத்தைக் கற்றவராகவும்  வளர்ந்தார்.  1897 இல் மருத்துவ அறிவையும் உலக அறிவையும் பெற்ற ஆற்றல் வாய்ந்தவராக இந்தியா திரும்பினார். சென்னையில் ஏழை மக்களுக்காகப் பல மருத்துவ மனைகளைப் பல இடங்களில் கட்டி வைத்துச் சேவை புரிந்து வந்தார்.

1897இல் காங்கிரஸில் சேர்ந்தார்.சுதேசி இயக்கத்தில்  1905இல் சென்னைக் கூட்டத்தில் பேசினார்.லக்னோவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார்.1907இல் சித்தூர் மாநாட்டில் தலைமை தாங்கிப் பேருரையாற்றினார். சென்னை மருத்துவக் கழகத்தின் துணைத் தலைவர் ஆனார்.’ ஆண்ட்டி செப்டிக்‘ (Anti septic) என்ற மருத்துவ இதழை மாத இதழாக  நடத்தி வந்தார். 1914இல் போர்க்களத்திற்கு (volunteer) மருத்துவ நலக் குழுவுடன் சென்று வந்தார் .போரில்  போர்க்களப் பணிக்காகத்  தங்கப் பதக்கம் பெற்றார்.கடற்படை வீரர்களுக்கும் போர்க்காலத்தில் மருத்துவ உதவிகள் செய்தார்.

1904 முதல் 1916 வரை சென்னை மாநகராட்சி உறுப்பினராகப் பணியாற்றினார். சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் நிர்வாகியாகவும் ஆளுமை பெற்றவராகவும்  விளங்கினார். அக்கால அண்ணாவாக இருந்துள்ளார்.இவர்  கொண்டுவந்த ‘சாய்க்கடைத் திட்டத்’தால் வெள்ளுடை வேந்தர் தியாகராயருக்கும்  இவருக்கும் கருத்து வேற்றுமை உண்டாகியது.

நகராட்சிச்  சீர்திருத்தத்தில் காட்டிவந்த ஊக்கத்தால் ‘தென்னிந்தியாவின் பெரோஷ்ஷா மேத்தா’ என்று இந்து நாளிதழ் பாராட்டியது.’மதராஸ் ஸ்டாண்டர்டு ‘ பத்திரிகை ஆசிரியர் ஆனார். 

1912 இல் சட்ட மேலவை உறுப்பினராக இருந்த போது மருத்துவ உதவி, மக்கள் நல்வாழ்வு, கல்வி, தொழில்,  தொழிலாளர் முன்னேற்றம்,  தன்னாட்சி அமைப்பு  போன்ற விவாதங்களில் கலந்து கொண்டார். சென்னை மருத்துவப் பதிவு மசோதா  (Madras Medical Registration Act)   இவரது முயற்சியால் கொண்டுவரப்பட்டது. இம்மசோதா மூடத்தன மருத்துவ முறைகளைத் தடுத்ததுடன் சித்த ஆங்கில மருத்துவ முறைகளைத் தெளிவாக வரையறுத்தது.பட்டம் பெற்ற மருத்துவர்களின் தொழில் விதிகளை ஒழுங்கு படுத்தியது.

1916இல் திராவிடச் சங்கம் சார்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்

29.11.1916இல் விக்டோரியா பப்ளிக் ஹாலில் ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ‘ தோன்றியது. நடேசனாருடன் இணைந்து பணியாற்றினார். பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டது.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் முக்கியமாக்கப்பட்டது. சட்டமன்றத்திலும் அரசாங்க அலுவலகத்திலும் பிரதிநிதித்துவம் வலியுறுத்தப்பட்டது. ஒரு பகுதி மக்கள் ஒடுக்கப்படும் நிலையைக் கடுமையாகக் கண்டித்தார். காங்கிரசுக் கட்சியில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைக் கண்டித்தார். ஒடுக்கப் பட்டவர்களின் உரிமைகள் நசுக்கப்படும் நிலைமையைக் கண்டு வெகுண்டார்.

20.1.1916இல் பார்ப்பனரல்லாத மக்களுக்கான கட்சி காண வேண்டிய அவசியம் பற்றிப் பேசினார். ஓரிரு நாளில் அரசியல் கட்சியின் கூட்டம் என்ற உணர்வோடு கூடியது. அதிலே கட்சிப் பெயர், கொடி, சட்டதிட்டம் வகுக்கப்பட்டது. இதில்  நாயரின் பங்கு முக்கியமானதாக இருந்தது.

தென்னிந்திய நல உரிமைச்சங்கம் உதயமானது.செய்தித் தாள்களாக ஆங்கிலத்தில் ‘ ஜஸ்டிஸ் ‘ (நாயரை ஆசிரியராகக் கொண்டும்) திராவிடன் தமிழில் ஆந்திர பிரகாசிகா தெலுங்கில் என்று மூன்று  தொடங்கப்பட்டது.

சமூக நீதி காக்கும் நோக்கை வகுப்பு வாரிப்  பிரதிநிதித்துவத்தை முதன்மையாகக் கொண்டதாலும் அதற்காக உழைக்கும் பத்திரிகை ஜஸ்டிஸ் என்றானதாலும்  இச் சங்கம் மக்களால்  (ஜஸ்டிஸ் ) ‘நீதிக் கட்சி’ என்று அழைக்கப்பட்டது.

திராவிடர் சங்கம் சார்பில்  Dravidian worthies  மற்றும் Non Bramin Letters, என்னும் இருநூல்களை வெளியிட்டார். திராவிடரை விழிப்படையச் செய்தன இந்நூல்கள்.

திராவிட இயக்கச் சிற்பி, திராவிட இயக்க இதயம், மூளை என்றும்  நீதிக் கட்சியைத் திறம்பட செலுத்திய மாலுமி என்றும் கருதப்பட்டார்.

ஆதிதிராவிடர்க்கும் பிற்படுத்தப்பட்ட வகுப் பினருக்கும் சலுகைகள் பெறுவதை மூச்சாகக் கொண்டார்.7.10.1917இல் ஸ்பர்ட்டங் சாலையில் பஞ்சமர் கூட்டம் நடத்தி  பஞ்சமர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டித்தார்.தீண்டாமையைச் சாடினார்.இக் கூட்டம் வரலாற்றுச் சிறப்புடையது.இரட்டைமலை சீனிவாசன் தலைமை தாங்கிட வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி தியாகராயர் கலந்து கொண்டார்.

“இந்த நாட்டில் இரு இனங்கள் உண்டு.ஒன்று இந்நாட்டின் சொந்தக்காரர்கள் இனமான நம் திராவிட இனம். மற்றொன்று நாம் அசட்டையாய்த் தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டிற்குள் நுழைந்துவிடும் திருடன் போன்ற ஆரிய இனம்“ என்றார். பார்ப்பனர்கள் 100க்கு தொண்ணூறு பேர் படித்தவர்களாகவும் பார்ப்பனரல்லாதவர்களில்  நூற்றுக்குத் தொண்ணூறு பேர்  படிக்காதவர்களாகவும்  இருக்கவும் இந்த அவல நிலையில்  தன்னாட்சியா? என்றும் வினா எழுப்பினார்.

சில வடநாட்டுத் தலைவர்கள்  தேசியம்  என்று சொல்லிக் கொண்டு இங்குள்ளவர்களுக்கு அறிவுரைகள் கூறத் தலைப்பட்டிருக்கின்றனர்! இங்கு நிலவும் வருணாச்சிரம தர்மம் காரணமாக இந்துகளுக்குள்ளே பலப்பல வேறுபாடுகள் ஏற்பட்டுப் பலர் சூத்திரர் என்றும்  வேசிமக்கள் என்றும் படிக்கக் கூடாதவர்கள் என்றும் தீண்டத்தகாதவர்கள் என்றும் நெருங்கத்தகாத வர்கள் பார்க்கத் தகாதவர்கள் என்றும் இழிவுபடுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும், 

“கடவுள் என்றொரு கற்பனைக் கருத்தைச் சுட்டிக் காட்டித் திராவிடர்களின் மூளையையே குழப்பி விட்டார்கள் “என்றும் கனல் தெறிக்க முழக்கமிட்டார்.” 

இலண்டனிலும் சென்னையிலும் என்னைப் பெரிய டாக்டர் என்று சொல்லுகிறார்கள்.நான் ஒரு எம்.டி பட்டதாரி. எனக்கு ஏராளமான வருமானம் வருகிறது; எனக்காகும் செலவு போக  என் வருமானத்தில் மீதப்படும் பணத்தை எல்லாம் என்னருமைத் தலைவர் திரு.பிட்டி தியாகராயர் அவர்களைப் போன்று உங்களைப் போன்ற திராவிட மக்களைத் தட்டி எழுப்பும் நீதிக்கட்சியின் வளர்ச்சிக்காகச் செலவிடுவதில் பெருமைப் படுகிறேன் என்ற போதும் என் பிறந்த இடமான கேரளத்தில் நானோர் சூத்திரன்தானே” என்றும் கூறி மக்களை உணர்ச்சி மயமாக்கினார்.

“வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் வராமல் தூங்கோம்; இது சத்தியம்“ என்றும் “ அரசியல் பார்ப்பனரை நம்பாதே” என்றும் பேசினார். “

எல்லா வகுப்பு மக்களுக்கும் வாழ்க்கையில் சம வாய்ப்பும் சம வசதியும் ஏற்பட வேண்டுமென்ற நோக்கத்தோடு வற்புறுத்தப் பட்டுவரும் வகுப்புவாரிப் பிரதி நிதித்துவக் கொள்கை  அரசின் அனைத்துத் துறையிலும் கையாளவேண்டும் என்பதைத்தான் நமது நீதிக்கட்சிக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது” என்றும் கூறினார்.   இந்தக் குறிக் கோளை இங்கு விளக்கி வருவது போன்றே இங்கிலாந்திலும் கூட்டம் போட்டுப் பேசியும் எழுதியும் வருவதற் காகத்தான் நான் ஆண்டுதோறும் தவறாமல் இங்கிலாந்துக்குச் சென்று வருகிறேன் “ என்றார் டாக்டர் நாயர்.

 “பிரம்மாவின் முகத்திலிருந்து வெடித்து விழுந்த வீரர்களாச்சே அவாள்” என்று சீறி எழுந்த சிங்கமென பெரும் ஆரவாரத்துக் கிடையே பொழிந்தார் .

டாக்டர் பி.வரதராஜுலுவுடன் பேசும்போது “சீக்கிரமாகத் தாங்களும் தங்கள் தோழர்களான நாயக்கரும் பிள்ளைவாளும் முதலியார் வாளும் என் ஜஸ்டிஸ் கட்சியை நாடி வந்தாக வேண்டும்‘ என்று நாயர் கூறியது போல ஆறு  ஆண்டுகளுக்குப் பின் இவர்கள் அனைவரும்  நீதிக்கட்சியில் இணைந்தனர்.அதுமட்டுமின்றி தந்தை பெரியார் தலைவராகவே ஆனார். 

‘மக்களை விடுவித்த செம்மல்’ என்றும்

‘இந்நாட்டு லெனின்’ என்றும் 

‘பார்ப்பனரல்லாதார் இயக்கச் சிற்பி’

‘சொல்லின் செல்வர்’ என்றும் நாயர் அழைக்கப் பட்டார்.

“தற்போது இந்திய அரசிடம் குவிக்கப் பட்டுள்ள அதிகாரங்கள் பரவலாக்கப் படவேண்டும் .இவற்றில் பலவற்றை மாநில அரசுகளின் பொறுப்பில் விட வேண்டும். இதை நிறுவினால் தான் கூட்டாட்சி முறை வெற்றிபெற முடியும்” என்றார். மேலும் உள்ளாட்சி, காவல், நீதித்துறை, சிறைகள், வருவாய்த்துறை , கல்வி,  மருத்துவம், சுகாதாரம், நீர்ப்பாசனம், வனத்துறை, நகராட்சி இவைபோன்றவற்றில் முழு அதிகாரம் பெற்றதாக இருக்க வேண்டும் என பட்டியலிட்டு மாநில தன்னாட்சியை வலியுறுத்தினார்.

இது பற்றி ஆராய மாண்ட்போர்டு அறிக்கை நியமித்த ‘சவுத் பரோ’  குழுவைப் புறக்கணித்து இங்கிலந்துக்கு 1.6.1918இல் புறப்பட்டுச் சென்று 7.1.1919இல் திரும்பினார்.சவுத் பரோ குழு அறிக்கை 16.5.1919இல்  வெளியிடப் பட்டது. இது வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் இல்லை என்றது. நாடெங்கும் எதிர்ப்புக் குரல் ஒலித்தது. நீதிக்கட்சித் தலைவர்கள் ஆங்காங்கே பொதுக்கூட்டம் நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இவ்வறிக்கை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின்முன் இறுதி முடிவுக்காகக் காத்திருந்தது.

 இது பார்ப்பனரல்லாத மக்களுக்குப் பேரிடியாகும்.இதை உணர்ந்த நீதிக் கட்சி டாக்டர் நாயர் , கே.வி.ரெட்டி நாயுடு, ஆற்காடு இராமசாமி முதலியார், கோகா அப்பாராவ்,  எல்.கே.துளசிராம் ஆகியோரை இங்கிலாந்து அனுப்பியது. இவர்களில் நாயர் மட்டும் முன்னதாகப்  புறப்பட்டுச் சென்றார்.

மாண்டேகு செம்ஸ்போர்டு குழுவினரின் சீர்திருத்த அறிக்கையில் பார்ப்பனரல்லாத மக்களின் உரிமைகள் இடம் பெறாது போய்விட்டதையும் இந்தியாவிலுள்ள எவருடைய உதவி மூலமும் அவ்வுரிமையைப் பெற முடியாது என்பதையும் தெரிந்து கொண்ட டாக்டர் நாயர் இங்கிலாந்து அறிவுடைய மக்கள் மூலமே பெறமுடியும் என்பதுணர்ந்தார். இதற்கு முன்  1918இல் லண்டன் சென்றார். 1.6.1918 முதல் 7.1. 1919 வரை அங்கிருந்து  பல விவாத அரங்குகளில் கலந்து கொண்டிருந்தார்.

அதன்பின் 6.5.1919இல் புறப்பட்டு 19.6.1919இல் இங்கிலாந்து சென்றடைந்தார். தம் கட்சியின் கொள்கை களையும் கோரிக்கை களையும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முன் நேரில் கூறிப் பார்ப்பனரல்லாதாரின் தனி வாக்குரிமை கூடிய சீர்திருத்தத்தைப் பெறுவதற்கான சான்றுகளைத் திரட்டிவந்தார். தம்மால் (உடல் நிலையில்) முடியாத போதினிலும் இரவு பகல் பாராமல் பலரையும் பார்த்துத் தெளிவு பெறவும் கருத்துகளைப் பெறவும் முனனந்திருந்தார். 

1919 ஜூலை 18ஆம் நாள் அவரின் சாட்சியத்தைப் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முன் படைக்கும் நிலையில் ஜூலை 17ஆம் நாள் அங்கேயே  மறைந்தார்.

20.07.1940இல் நம் தந்தை பெரியார் திராவிட லெனின் என்று டாக்டர் நாயரைப் புகழ்ந்தார்.” நாயர் இனியும் கொஞ்ச காலம் இருந்து வகுப்பு வாதத்தைக் கொழுந்துவிட்டு எரியச் செய்யாமல் போய்விட்டாரே” என்றார் .

“டாக்டர் டி.எம்.நாயர் சர்.பிட்டி.தியாகராய செட்டியாருடன் இணைந்து நின்று பிராமணரல்லாதார் இயக்கத்தைத் தோற்றுவித்தது மட்டுமல்ல; திறம்பட இயங்கிவரச் செய்த வீரருமாவார்! திராவிடரின் நலிந்த வாழ்வை நல்வாழ்வாக்கிய உத்தமர்!சூத்திரரெனவும் பறையரெனவும் தாழ்ந்து நின்ற திராவிட சமுதாயத் தினரை மானமிகு மனிதராக்கிய சமுதாயச்சிற்பி! பார்ப்பனரின் ஜாதி வெறியை அடக்கி எவரும் சூத்திரன் என்றோ  பறையன் என்றோ உச்சரித்திடவும் அஞ்சும்படிச் செய்திட்ட அஞ்சா நெஞ்சர்” என்று

நாயரைப் படம்பிடித்துக் காட்டுகிறார் தோழர் குமாரசாமி.

அவர் வழியைப் பின்பற்றுவோம்.

வாழ்க டி.எம்.நாயர்! வாழ்க தந்தை பெரியார்!