ஞாயிறு, 18 அக்டோபர், 2020

திராவிடத்தை ஏற்ற விடுதலை புலிகளும் ஈழமும்

 




தோழர் மனோஜ் அவர்களின்
வாட்ஸ் அப் பதிவு...
புலிகள் திராவிடத்தை ஏற்றார்களா ?? இங்குள்ளவர்கள் ஈழத்தமிழர்களை திராவிடர்களாக ஏற்பார்களா??
.- நாம் தமிழர் கல்யாணசுந்தரம்
*முதல்_படம்* - "பூர்வகுடி இலங்கை தமிழர்கள் கூட்டமைப்பு" என்ற அமைப்பு அன்று ஆட்சி செய்து கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஓர் கடிதம் எழுதியது,,,அந்த கடிதத்தில் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கையில் திராவிடர்கள் என அடையாளப்படு்த்திக் கொண்டனர்,,,
இந்த கடிதம் எழுதப்பட்டது 1940 ஆம் ஆண்டு,,,அதாவது தமிழ்நாட்டிலேயே திராவிடர் கழகம் உருவாகாத ஆண்டு,,,திராவிடர் கழகம் 1944 ஆம் ஆண்டு தான் உருவானது,,,,
*இரண்டாம்_படம்* - 1978 ஆம் ஆண்டு கியூபாவில் நடைபெற்ற தேசிய இன விடுதலை இயக்கங்களுக்கான மாநாடு நடைபெற்றது,,,அதில் பங்கு பெற்ற தமிழீழ விடுதலைப்புலிகள் (LTTE) தங்களை திராவிடர்கள் என்றே அறிமுகப்படுத்திக் கொண்டனர்,,,,
*மூன்றாம்_படம்*- தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆசான் என அழைக்கப்பட்ட ஆண்டன் பாலசிங்கம் அவர்கள் "போரும் சமாதானம்" என்ற புத்தகத்தை எழுதினார்,,, அதில் தங்களை திராவிடர்கள் என்றே அடையாளப்படுத்திக் கொண்டார்,,,,
இதற்கு நாம் தமிழரை சேர்ந்த ஈன,மான,ரோசமுள்ள யாராவது பதில் அளிப்பாளர்களா ??
உங்களின் வயித்துப் பிழைப்பிற்காக நீங்கள் ஆரியத்தின் காலை நக்கிப்பிழைக்க திராவிட எதிர்ப்பு அரசியல் பேசிவிட்டு போங்கள்,,,என்ன வெங்காயத்துக்கு புலிகளின் வரலாறையும்,ஈழத்தமிழர் வரலாற்றையும் நீங்கள் மாற்றுகிறீர்கள் ??