வெள்ளி, 29 டிசம்பர், 2023

திராவிடம்'' சொல் வரலாறு: சிறுபார்வை

"திராவிடம்'' சொல் வரலாறு: சிறுபார்வை
       
 
1)இந்தியாவில் கால் ஊன்றிய ஆரியம் இந்தியா முழுதும் இருந்த ஆதிகுடிகளில் ஒன்றை ""வேதங்களை ஏற்காத நால்வருண பாகுபாட்டை கடைபிடிக்காத தாழ்ந்த மக்கள் குழு"என குறிக்கும் சொல்லாக 
கிமு.1500 களில் ரிக்வேதத்தில் குறிப்பிடும்  த்ரவிடர்  எனும் சொல் வரலாற்றில் திராவிடத்தை குறிக்கும் முதல் தரவாகும்.

2)கிமு 1150  களில் ஆண்ட திராவிடராணி பற்றிய செய்தி....

 (3)கி மு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த  கலிங்க மன்னன் காரவேலன் கல்வெட்டில் உள்ள த்ரமிளர் சங்காத்தம் எனும்சொல்,.

3)அகத்தியர் கால அரசரான திராவிடபூபதி என்பவர் பற்றிய தகவல்....
       
4) மகாபாரத்தில் குறிப்பிடப்படும் 56 தேசங்களில் திராவிடம் என்ற நாடு பற்றிய குறிப்பு..

5)திரவிடன் என்னும் சூரியவம்சத்து அரசன் பற்றிய தகவல்... 
       
6) கிபி 5 ஆம் நூற்றாண்டில் வஜ்ரநந்தி என்ற சமணத்துறவி மதுரையில் த்ரமிள (திராவிட)சங்கம் உண்டுபண்ணி தமிழ் தொண்டாற்றியது பற்றிய தகவல்கள்.
     
7) கிபி 7 நூற்றாண்டில் வாழ்ந்த  ஆதிசங்கரர் தனது சௌந்தர்ய லஹிரி - யில் திருஞானசம்பந்தரை  திராவிடச்சிசு என்று வர்ணித்தது..இதில் வியப்பு ஆதிசங்கரர் திருஞானசம்பந்தர் இருவருமே பிராமணர் என்பது.
        
8) ஆதிசங்கருக்கு முன்பே அத்வைத கருத்துக்களை பரப்பிய வேதாந்த சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுதிய திராவிடாசாரி பற்றிய தகவல்கள்.
       
9) கிபி 8 நூற்றாண்டைச்சேர்ந்த குமரிலப்பட்டர் தனது நூலில்  ஆந்திர திரவிட பாஷா எனும்
சொல்லாடலின் மூலம்  தென்னாட்டு மொழிளில்  தெலுங்கை தவிர பிறமொழிகளை திரவிடமொழி  என அழைக்கிறார்.
      
10)  கிபி13 ம் நூற்றான்றை சேர்ந்த அழகிய மணவாளமுனிகள் வேதங்களை சமஸ்கிருத வேதம் ,திராவிடவேதம் என இரண்டாக வகைபடுத்தி உள்ளார்....அவர் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை திராவிட வேதம் எனும் பொருளில் த்ராவிடோபநிஷத் என்றே குறிப்பிடுகிறார்.
         
11)இந்த காலகட்டங்களில் தென்னாட்டு பிராமணர்களை திராவிடபிராமணர் என அழைக்கும் பழக்கம் உருவாகியது.

12) மேற்கண்டவைகளை ஆதாரமாக கொண்டு  அயர்லாந்தைச் சார்ந்த வரலாற்றாசிரியர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் ஆய்வில்  1854 ல் வெளியான 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கனம் ' எனும் நூல் ,,இந்நூல் இந்தோ -ஆரிய  மொழிக்கூட்டமல்லாத "திராவிடமொழிகள்" என ஒரு மொழிக்கூட்டத்தை வரையறை செய்தது,,அம்மொழிகளின் மூலம் மூலத்திராவிடம் எனும் கருத்தை இவர் வைத்தார்,,இம்மொழிக்கூட்டத்தில் தமிழே மிகப்பழமையான மொழி என்று குறிப்பிட்டுள்ளார்.

12)1885 - ல் அயோத்திதாச பண்டிதரால் உருவாக்கப்பட்ட திராவிடபாண்டியன் இதழ்.

13) 1891 இல் மனோன்மணியம் எழுதிய
சுந்தரம்பிள்ளை, தன்னுடைய தமிழ்த் தெய்வ வணக்கம் பாடலில் "திராவிட நற்றிருநாடு"
என்று குறிப்பிடுகிறார்.
         
14) 1892 - ல் அயோத்திதாசர் தாழ்த்தப்பட்ட மக்களை ஆதிதிராவிடர் எனக் கூறவேண்டி ஆங்கிலேய அரசிடம் மனு கொடுத்தது
         
15) 1894 - ல் இரட்டைமலை சீனிவாசன் ஐயா வின் ஆதிதிராவிடர் மகாஜனசபை

16) 1911, டிசம்பர 11 இல் தாகூர் ஜனகணமன நாட்டுப்பண்ணை எழுதுகிறார். அதில் திராவிடம் என்று குறிப்பிடுகிறார். இதனை இந்திய
அரசமைப்புச் சட்டம் அங்கீகரிக்கிறது.
         
17) 1913 - ல் ஐயா நடேசனாரால் உருவாக்கப்பட்டது  திராவிட சங்கம்
         
18) 1944 - ல் பெரியாரின் திராவிடர் கழகம் உருவானது
         
19) 1948 - ல்  அறிஞர் அண்ணாவின்        திராவிட முன்னேற்றக் கழகம் நிறுவப்பட்டது.

20) 1957 இல் திராவிட முன்னற்றக் கழகத்தை,
இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கிறது
         
20)  பின்னர் அதிமுக ..மதிமுக,.தேமுதிக..
பெரியார் திராவிட கழகம்....தந்தை பெரியார் திராவிட கழகம்..திராவிட இயக்க தமிழர் பேரவை என நிறைய இயக்கங்களை உருவாகின. இவற்றுள் சில
கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம்
பெற்றன.

தமிழ்..தமிழம்..த்ரமிளம் ..த்ரவிடம் ..திராவிடம் என... தமிழ்தான் திராவிடம் என்று வடமொழியினரால் திரித்து கூறப்பட்டது என்பது ஓரளவு சரியான வாதமாகக் கொள்ளலாம்,,

திராவிடம் வரலாறு எழுதத்தொடங்கிய காலத்திலிருந்தே வழங்கப்படும் சொல்லாடலாகும்.

முதலில் அது ஒரு மக்கள் கூட்டத்தின் பெயராகவும்,,

பின்னர் ஒரு மொழிக்கூட்டத்தின் பெயராகவும்

அதன்வழியாக பின்னர் ஒரு இனக்கூட்டத்தின் பெயராகவும் 

வழங்கப்பட்டு வந்துள்ளது.

தற்போது ஒரு தத்துவத்தின் பெயராக பெரியாரியல் தொண்டர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது,

          ✍️ பல்வேறு தரவுகளின் தொகுப்பு✍️

           ⚖️ #துலாக்கோல்/29.12.2023⚖️
- சோம நடராஜன் முகநூல் பதிவு