வெள்ளி, 21 ஜூன், 2024

இறுதியாகக் குடியேறியவர்கள் ஆரியர்கள்


 ஜூலை 1-15, 2023

ஸ்டெப்பிப் புல்வெளிகளில் மேய்ப்பாளர்களாகவும் போர்வீரர்களாகவும் இருந்தவர்கள். எப்படி முதலில் அய்ரோப்பாவையும் பின்னர் தெற்காசியாவையும் ஆக்கிரமித்தனர் என்பதையும், இந்தியாவின் மிகப் பெரிய மொழிக் குடும்பத்தையும், புதிய மதச் சடங்குகளையும், ஹரப்பா பாரம்பரியங்களும் ஸ்டெப்பி நடைமுறைகளும் விரவிக் கிடக்கும் கலாச்சாரக் கலவையையும் எப்படி இந்தியாவுக்கு அளித்தனர் என்பதையும் பற்றிய கதை இது.

இந்திய – அய்ரோப்பிய மொழிகளைப் பேசிய, தங்களை ஆரியர்கள் என்று கூறிக் கொண்டவர்கள் எப்போது, எப்படி இந்தியத் துணைக்கண்டத்தை அடைந்தனர் என்ற கேள்வியைவிட அதிகமான சூட்டையும் ஓசையையும் எழுப்பிய கேள்வி வேறு எதுவும் இந்திய வரலாற்றில் கிடையாது.

இது விநோதமானது. ஏனெனில், இதையொத்த தீவிரச் சர்ச்சையை, இந்தியாவில் முதன்முதலாகக் குடியேறியவர்கள் எப்போது இங்கு வந்தனர்? திராவிட மொழி பேசியவர்கள் எப்போது இந்தியா வந்து சேர்ந்தனர்? முண்டாரி, காசி, மணிப்புரி மொழி பேசியவர்கள் எப்போது இந்தியாவை வந்தடைந்தனர்?’ போன்ற வேறு எந்தக் கேள்வியும் தோற்றுவிக்கவில்லை. இந்தியாவில் முதலில் குடியேறியவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தனர் என்றோ, முதனிலைத் திராவிட மொழி ஈரானின் ஈல மொழியோடு தொடர்புடையது என்றோ, முண்டாரி, காசி, மணிப்புரி மொழிகளைப் பேசியவர்கள் கிழக்காசியாவிலிருந்து வந்தனர் என்றோ கூறினால் அது யாருடைய கோபத்தையும் தூண்டுவதில்லை இந்தப் பதில்களைக் கேட்பவர்கள் தங்களுடைய தோள்களைக் குலுக்கிவிட்டுத் தங்களுடைய வேலைகளைப் பார்க்கச் சென்றுவிடுவர். பல முறை வேறு இடங்களிலிருந்து பெரும் எண்ணிக்கையில் இடம் பெயர்ந்த மக்களால் நிரப்பப்படாத நாடு இன்று உலகில் எதுவும் கிடையாது என்பதுதான் அதற்குக் காரணம். அய்ரோப்பா குறைந்தபட்சம் இரண்டு முறை பெரும் இடப்பெயர்ச்சியால் புரட்டிப் போடப்பட்டிருக்கிறது. அமெரிக்கக் கண்டத்தில் அய்ரோப்பியர் கால் வைப்பதற்கு முன்பு மூன்று முறை, அது மூன்று பெரிய இடப்பெயர்ச்சிகளைச் சந்தித்துள்ளது. கிழக்காசியா குறைந்தபட்சம் மூன்று இடப்பெயர்ச்சிகளைச் சந்தித்துள்ளது. மத்திய ஆசியாவும் மேற்காசியாவும் சந்தித்துள்ள இடப்பெயர்ச்சிகளுக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் கணக்கு வழக்கே கிடையாது.

இது போதாது என்பதுபோல, இந்தியர்களும் பெருமளவுக்கு இங்கிருந்து வெளியேறிப் பல இடங்களில் தங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். குறிப்பாக கி.பி. முதலாம் நூற்றாண்டில் அது நிறையவே நடந்துள்ளது. இன்றைய வியட்நாம், கம்போடியா, பர்மா, தாய்லாந்து, இந்தோனேசியா என்று தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஒரு சமயம் இந்தியர்களின் கலாச்சார ஆளுமையின் கீழ் இருந்தது. சீனாகூட ஒரு சமயம் இந்தியாவின் ஆளுமையின் கீழ் இருந்துள்ளது. சமயங்களில் இது படையெடுப்பு மூலம் நிகழ்ந்திருக்கலாம் என்றாலும் பெரும்பாலும் புத்த மதத் துறவிகள் தங்களுடைய மதத்தைப் பரப்பத் தீவிரமாக முயன்றதுதான் அதற்குக் காரணம். அதோடு, வணிகர்கள் தங்களுடைய சொந்த நலனை விருத்தி செய்து கொள்ள மேற்கொண்ட நடவடிக்கைகளும் இதில் அடங்கும். இன்று உலகெங்கும் 48.8 கோடி மக்கள் புத்த மதத்தைப் பின்பற்றுகின்றனர் என்றாலும் அவர்களில் மிகச் சிறிய சதவிகிதத்தினரே இன்று இந்தியாவில் இருக்கின்றனர். இந்தியா எந்த அளவுக்குத் தன் இயற்கையான எல்லைகளைத் தாண்டித் தன் சிறகை விரித்துள்ளது என்பதையே இது காட்டுகிறது.

அப்படியானால், இந்திய – அய்ரோப்பிய மொழி பேசியவர்களின் வருகை குறித்த கேள்வி மட்டும் ஏன் உணர்ச்சிகளைக் கிளர்ந்தெழச் செய்கிறது? இதற்கு பதிலளிப்பது எளிது: இந்தியக் கலாச்சாரம் என்பது ஆரிய, சமஸ்கிருத, அல்லது வேதக் கலாச்சாரத்தை ஒத்தது அல்லது அவற்றை ஒத்தப் பொருள் கொண்டது என்ற, வெளிப்படையாகச் சொல்லப்படாத, ஆனால் அடிநாதமாக இருக்கின்ற அனுமானம்தான் அது. அதனால் இந்திய -அய்ரோப்பிய மொழி பேசியவர்கள் எப்போது இந்தியாவுக்கு வந்தனர் என்று கேட்பது, எப்போது நாம் நம்முடைய கலாச்சாரத்தை இறக்குமதி செய்தோம் என்று கேட்பதற்குச் சமானமானது.
இது இரண்டு விதங்களில் அபத்தமானது முதலாவது, இந்தியக் கலாச்சாரம் என்பது ஆரிய, சமஸ்கிருத அல்லது வேதக் கலாச்சாரத்தை ஒத்ததோ அல்லது அவற்றை ஒத்த பொருள் கொண்டதோ அல்ல. இந்தியக் கலாச்சாரம் என்று இன்று நாம் அறிந்து வைத்துள்ள தனித்துவமான கலாச்சாரத்திற்கு ஆரியக் கலாச்சார நீரோடை முக்கியப் பங்களிப்பை வழங்கியுள்ளது என்றாலும், ஒருக்காலும் அது ஒன்று மட்டுமே அதற்குக் காரணமல்ல. இந்தியக் கலாச்சாரத்தின் உருவாக்கத்தில் வேறு பல நிரோட்டங்களுக்கும் பங்கிருக்கிறது. இரண்டாவது, இந்திய – அய்ரோப்பிய மொழிகள் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் இந்தியாவுக்குள் வந்தன என்று சொல்வதும், ஆரிய, சமஸ்கிருத அல்லது வேதக் கலாச்சாரம் முழுமையாக வளர்ச்சியடைந்த நிலையில் வெளியிடங்களிலிருந்து இங்கு இறக்குமதி செய்யப்பட்டன என்று சொல்வதும் ஒன்றல்ல. இந்திய_ அய்ரோப்பிய மொழிகளை இந்தியாவுக்கு கொண்டு வந்தவர்களும், இப்பகுதிகளில் ஏற்கனவே வெகுகாலமாகக் குடியேறியிருந்தவர்களும் ஒருவரோடு ஒருவர் கலந்துறவாடி, பரஸ்பரம் விட்டுக்கொடுத்து. விஷயங்களை ஒருவரிடமிருந்து மற்றொருவர் சுவீகரித்துக் கொண்டதன் மூலமாக ஆரியக் கலாச்சாரம் உருவாகியிருந்திருப்பதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம்.
நாம் மீண்டும் அக்கேள்விக்கே வரலாம். இந்திய-அய்ரோப்பிய மொழிகளைப் பேசிய, தங்களை ஆரியர்கள் என்று கூறிக் கொண்டவர்கள் வேறு எங்கிருந்தாவது இங்கு வந்தார்களா? அப்படியெனில், அவர்கள் எப்போது இங்கு வந்தனர்?

இந்தியாவிலிருந்து வெளியே இடப்பெயர்ச்சி அண்மைக் காலம்வரைகூட, இந்திய, அய்ரோப்பிய மொழிகளைப் பேசியவர்கள் சமஸ்கிருதத்தின் தொடக்ககால வடிவத்தோடு இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து வந்து அதை இங்கே பரப்பியிருந்ததற்கு பதிலாக, சமஸ்கிருதத்தின் தொடக்ககால வடிவத்தைப் பேசியவர்கள் இந்தியாவிலிருந்து வெளியே இடம் பெயர்ந்து ஏன் இந்திய _ அய்ரோப்பிய மொழிகளை உலகெங்கும் பரப்பியிருக்கக்கூடாது என்ற விவாதத்திற்குச் சிறிதளவேனும் இடமிருந்தது. ஆனால் மரபியல் ஆய்வுகள், குறிப்பாகப் பண்டைய மனிதர்களின் டிஎன்ஏ சோதனைகளின் அடிப்படையில் அமைந்த மரபியல் ஆய்வுகள், அந்த விவாதத்திற்குத் துளிகூட இடமில்லாமல் செய்துவிட்டன. அது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.

தற்போதைய இந்திய மக்களில் முக்கால்வாசிப் பேர் ஹிந்தி, குஜராத்தி, பஞ்சாபி, மராத்தி போன்ற இந்திய-அய்ரோப்பிய மொழிகளைப் பேசுகின்றனர். அதேபோல, உலக மக்களில் நாற்பது சதவிகிதத்தினர் ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, போர்ச்சுகீஸ், ஈரானி, ரஷ்யன், ஜெர்மன் போன்ற இந்திய – அய்ரோப்பிய மொழிகளைப் பேசுகின்றனர். இந்தியத் துணைக்கண்டம்தான் இந்திய _ அய்ரோப்பிய மொழிக் குடும்பத்தின் கிழக்கு எல்லையாக இருக்கிறது. இந்தியாவுக்குக் கிழக்கே பெரிய அளவில் இந்திய அய்ரோப்பிய மொழிகளைப் பேசுபவர்கள் எவரும் இல்லை. அப்படியானால் இந்த மொழிக் குடும்பம் எப்படி இந்தியாவின் ஆதிக்க மொழியாக மாறியது என்ற கேள்வி எழுவது இயல்புதான். இதற்கு இரண்டே இரண்டு விடைகள்தான் இருக்க முடியும். ஒன்று, கடந்தகாலத்தில் எப்போதோ அது இந்தியாவுக்குள் வந்திருக்க வேண்டும்; அல்லது அது இந்தியாவிலிருந்து அதன் மேற்குப் புறம் இருக்கும் உலகெங்கும் பரவியிருக்க வேண்டும்.

நாம் இரண்டாவது சாத்தியக்கூறை முதலில் எடுத்துக் கொள்ளலாம். ஏதோ ஒரு காலகட்டத்தில் சமஸ்கிருதம் அல்லது முதனிலை சமஸ்கிருத மொழி பேசிய இந்தியர்கள் பெரும் எண்ணிக்கையில் மேற்கிற்கு இடம் பெயர்ந்திருக்க வேண்டும்; அவர்களின் வம்சாவளியினர், ஈரான், மத்திய ஆசியா, மேற்கு ஆசியா, கிழக்கு அய்ரோப்பா, மேற்கு அய்ரோப்பா ஆகிய இடங்களை உள்ளடக்கிய பெரும் பகுதியில் பரவி, இந்திய_-அய்ரோப்பிய மொழிகளை அங்கெல்லாம் பரப்பியிருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால், இப்பகுதிகளில் பதிவாகியிருக்கும் மரபியல் பதிவுகளில் எவையெல்லாம் உங்கள் கண்களில்படும்? ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி இந்தியாவில் குடியேறியிருந்த முதல் இந்தியர்களின் மரபியல் பதிவுகள் இப்பகுதிகளில் பரவலாகத் தூவப்பட்டிருக்க வேண்டும், இல்லையா? ஆனால் முதன்முதலாக அங்கு இடம் பெயர்ந்தவர்கள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவி, ஹரப்பா நாகரிகத்தைக் கட்டியெழுப்பிய மக்களின் ஒரு பகுதியாக ஆகியிருந்தனர் அப்படியானால், ஹரப்பா நாகரிகம் தோன்றுவதற்கு முன்பு பெரும் எண்ணிக்கையில் மக்கள் இந்தியாவிலிருந்து வெளியேறி, இந்திய அய்ரோப்பிய மொழிகளின் பரவலுக்குக் காரணமாக இருந்திருந்தால், மத்திய ஆசியாவிலிருந்து மேற்கு அய்ரோப்பாவரை அவர்களுடைய மரபியல் கால்தடங்கள் நம் பார்வையில் தென்பட்டிருக்க வேண்டும். அப்பிராந்தியங்களில் அப்படிப்பட்டப் பதிவுகள் பெரிய அளவில் கிடைத்துள்ளனவா? இல்லை, கிடைக்கவில்லை அதற்கு நேர்மாறானதே நடந்துள்ளது. முதல் இந்தியர்களின் வம்சாவளிகளுக்கு நெருங்கிய உறவினர்கள் எவரும் உலகில் வேறு எங்கும் இல்லை என்பதை நாம் முதலாம் அத்தியாயத்தில் பார்த்தோம். அதனால் இந்தியாவிலிருந்து வெளியேறியவர்கள் உலகெங்கும் இந்திய_-அய்ரோப்பிய மொழிகளைப் பரப்பினர் என்பது போகாத ஊருக்கு வழி.

ஆனால் இதற்கு ஒரே ஒரு விதிவிலக்கு மட்டும் உள்ளது. அது ஒரு சிறிய நாடோடிக் குழு. முன்பு ஜிப்சிகள் என்று அழைக்கப்பட்ட ரோமா மக்கள்தான் அவர்கள். அவர்கள் பெரும்பாலும் அய்ரோப்பாவிலும் அமெரிக்காவிலும்தான் இருக்கின்றனர். அவர்கள் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பாக, பஞ்சாப், சிந்து, ராஜஸ்தான், ஹரியானா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய வடமேற்கு இந்தியப் பகுதியிலிருந்து வெளியேறிய ஒரே இனக் குழுவின் வம்சாவளிகள் என்பதை மரபியல் ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. அதற்கு முன்பே, இந்திய_ அய்ரோப்பிய மொழிகள் அய்ரோப்பாவிலும் பிற பகுதிகளிலும் நன்றாக வேரூன்றியிருந்தன. அவர்கள் மேற்குப் புறமாக நகர்ந்தபோது அவர்கள் முதல் இந்தியர்களின் மரபியல் சுவடுகளைத் தங்களுடன் சுமந்து கொண்டிருந்தனரா? ஆமாம். சுமந்து கொண்டிருந்தனர்.

2011Þ™ Reconstructing the Indian origin and Dispersal of the European Roma: A Maternal Genetic perspective’ ரோமா மக்கள் இரண்டு தனித்துவமான பரம்பரை மூலங்களைக் கொண்டிருக்கின்றனர். 65 சதவிகிதத்திலிருந்து 94 சதவிகிதம் வரையிலான ரோமா மக்களிடத்தில் அய்ரோப்பிய மத்தியக் கிழக்கு ஹாப்லோ குரூப் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு இவ்வாறு கூறுகிறது.

பரம்பரை இருக்கிறது. மீதமுள்ளவர்கள் M ஹாப்லோ குரூப்பைச் சேர்ந்தவர்கள் இந்த M ஹாப்லோ குரூப் கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் மிகச் சாதாரணமாகக் காணப்பட்டாலும், அய்ரோப்பாவில் அரிதாகவே காணப்படுகிறது. M ஹாப்லோ குரூப்புக்குள் இருக்கும். அனைத்து வம்சாவளியினரும் ஆசியாவைச் சேர்ந்தவர்கள். அதற்கு ஒரே ஒரு விதிவிலக்கு மட்டும் இருந்தது. இரண்டு போர்ச்சுகீசிய ரோமா மக்களிடமிருந்த கிழக்கு ஆப்பிரிக்க M1a1 ஹாப்லோகுரூப்தான் அது கிடைத்துள்ள முக்கிய ஆசியக் கிளை ஹாப்லோகுரூப்புகள் M5M, M18 மற்றும் M35b ஆகும். இவை அனைத்தும் இந்தியப் பரம்பரையைக் கொண்டிருந்தன.

அதாவது இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து மேற்கு நோக்கி அய்ரோப்பாவரை மக்கள் குழு ஒன்று இடம் பெயர்ந்துள்ளது. அவர்கள் அங்கு தங்களுடைய மரபியல் சுவடுகளை விட்டுச் சென்றிருக்கின்றனர். தெற்காசியாவில் முதலில் குடியேறிய வம்சாவளிகளின் மரபியல் சுவடான M ஹாப்லோ குரூப்தான் அது. அது அய்ரோப்பாவில் அபூர்வமாகவே காணப்பட்டது. ரோமா மக்கள் இந்திய_ அய்ரோப்பிய மொழிகளை அய்ரோப்பாவில் பரப்பியிருக்க முடியாது என்பதாலும், வேறு எந்தத் தெற்காசியப் பரம்பரையின் சுவடுகளும் குறிப்பிடத்தக்க அளவில் அய்ரோப்பாவிலோ அல்லது மத்திய ஆசியாவிலோ இல்லை என்பதாலும், இந்தியாவிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் இந்திய- _ அய்ரோப்பிய மொழிகளை அய்ரோப்பாவில் பரப்பியிருப்பார்கள் என்ற வாதம் முற்றிலுமாக நிராகரிக்கப்படுகிறது.

அதனால் இது நம்மை அடுத்த கேள்விக்கு எடுத்துச் செல்கிறது. இந்திய  அய்ரோப்பிய மொழிகள், இந்தியத் துணைக்கண்டத்தில் வெளியிலிருந்து இந்தியாவுக்குள் இடம் பெயர்ந்தவர்களால் பரப்பப்பட்டன என்றால், அது எப்போது நிகழ்ந்தது, அவர்கள் எங்கிருந்து வந்தனர்?

ஆரியர்களின் மரபியல் சுவடுகள்

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அறிஞர்களையும் இதைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தவர்களையும் சோர்வடையச் செய்து கொண்டிருந்த அக்கேள்விக்கு ஒருவழியாக மரபியல் விடை கண்டுள்ளது, மக்கள் எவ்வாறு இடம் பெயர்ந்தனர், காலப்போக்கில் ஓரிடத்தின் மக்களமைப்பு எப்படி மாறியது போன்றவற்றைத் தீர்மானிக்க உதவும் பண்டைய மனிதர்களின் “டிஎன்ஏ”வை அலசி ஆராயும் புதிய மரபியல் உத்திதான் அதைச் சாத்தியமாக்கியுள்ளது. ஒரே இடத்தில் பல காலகட்டங்களைச் சேர்ந்த “டிஎன்ஏ”வை ஆராய்வதன் மூலமாகவோ, பல இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த “டிஎன்ஏ”வை அலசுவதன் மூலமாகவோ, எது எப்போது மாறியது என்பதை மரபியலாளர்களால் கண்டுபிடிக்க முடியும்.

இந்திய _அய்ரோப்பிய மொழி பேசியவர்கள் இந்தியாவுக்குள் இடம் பெயர்ந்தது பற்றி மேலும் அலசுவதற்கு முன்பாக, இந்தியாவிலிருந்து வெளியேறியவர்கள் தொடர்பாக நாம் விவாதித்துக் கொண்டிருந்தபோது நம்முன் தோன்றிய ஒரு கேள்விக்கு இப்போது விடை காண முயற்சிக்கலாம், இந்திய _ அய்ரோப்பிய மொழிகள் மிகப் பெரிய யுரேசியப் பகுதியில் பரவியுள்ளன என்றால், இந்த நிலப்பரப்பில் அவற்றின் மரபியல் சுவடுகள் நம் பார்வையில் பட்டுள்ளனவா என்பதே அக்கேள்வி. ஆம் என்பதே அதற்கான பதில். R1a என்ற Y  குரோமோசோம். ஹாப்லோகுரூப், குறிப்பாக அதன் கிளை ஹாப்லோகுரூப்பான R1a -417 தான் அது. R1a-M 417 இன் பரவல் வரைபடத்தை நீங்கள் உற்று நோக்கினால், அந்த ஹாப்லோகுரூப், ஸ்கேன்டினேவியாவிலிருந்து தெற்காசியாவரை, அதாவது இந்திய_ -அய்ரோப்பிய மொழி பேசுகின்றவர்கள் இருக்கும் அனைத்துப் பகுதிகளிலும் பரவியிருந்ததை அது காட்டும்.

R1a-M417 உலகெங்கும் எவ்வாறு பரவியுள்ளது. என்பதை இப்போது பார்க்கலாம். R1a-M417 கி.மு. 3800ஆம். ஆண்டுவாக்கில், R1a-Z282,, சுடய-ஷ்93 ஆகிய இரண்டு கிளைக் குழுக்களாகப் பிரிந்தது. R1a-Z282 அய்ரோப்பாவில் மட்டுமே உள்ளது. R1a-M93 மத்திய ஆசியாவிலும் தெற்காசியாவிலும் காணப்படுகிறது. அதோடு, இந்தியாவிலுள்ள சுடயஷ் பரம்பரையின் கிட்டத்தட்ட மொத்தமும் இதன் கீழ்தான் வருகிறது. இவற்றுக்கு இடையேயான இடைவெளி மிகவும் பெரியது. இது குறித்து 2014ஆம் ஆண்டு “The phylogenetic and Geographic structure of Y-chromosome Haplogroup RIa’ என்ற தலைப்பில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதை முன்னின்று நடத்தியவர் Y குரோமோசோம் குறித்த ஆய்வுகளில் தலைசிறந்து விளங்கும். டாக்டர் பீட்டர் ஏ.அன்டர்ஹில் ஆவார். அவர் அதில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“நமக்குக் கிடைத்துள்ள 1693 அய்ரோப்பிய R1a-M417 மாதிரிகளில், 96 சதவிகிதத்திற்கும் அதிகமானவை R1a-Z828அய்ச் சேர்ந்தவை. அதேபோல நமக்குக் கிடைத்துள்ள 490 மத்திய மற்றும் தெற்காசிய சுடயஷ் மாதிரிகளில், 98.4 சதவிகிதம். R1a-2 93 அய்ச் சேர்ந்தவை இது முன்பு கூறப்பட்டிருந்த போக்கை ஒட்டியே அமைந்துள்ளது’’.R1a-M417 மற்றும் அதன் கிளையான R1a-Z93 தொடர்பாக நமக்குக் கிடைத்துள்ள சான்றுகளில் பழமையான சான்று உக்ரைனில் கிடைத்துள்ளது. 2017இல் வெளியானThe Genomic History of Southeastern Europe என்ற அறிக்கையின்படி, அது கி.மு. 5000க்கும் கி.மு. 3500க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது. ரஷ்யாவின் சமாரா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட அது கி.மு. 2800ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அய்ரோப்பாவின் பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டது கி.மு. 2500ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பரவலாகக் காணப்படும் R1a-Z93, மத்திய ஆசிய ஸ்டெப்பிப் பகுதிகளில் நிறைய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது கி.மு. 2500ஆம் ஆண்டைச் சேர்ந்தது. என்று கணிக்கப்பட்டுள்ளது. மத்திய வெண்கலயுகத்திலிருந்து பிந்தைய வெண்கல யுகம்வரையிலான காலகட்டத்தில் (கி.மு.2000க்கும் கி.மு. 1400க்கும் இடைப்பட்ட காலம்) மத்திய ஆசிய ஸ்டெப்பிப் பகுதிகளில் சுடய-ஷ்93 அறுபத்தெட்டு சதவிகிதத்திற்கும் அதிகமாக இருந்ததாக ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது. இந்தியாவின் R1a-Z93 மக்கள் மத்திய ஆசியாவின் ஸ்டெப்பிப் பகுதிகளிலிருந்து வந்திருக்க வேண்டும் எனும் தீர்க்கமான முடிவைத்தான் இவையனைத்தும் தெரிவிக்கின்றன.

ஆனால் R1a-Zவும் அதன் கிளைக் குழுக்களும் இந்தியாவிலிருக்கும் இந்திய – அய்ரோப்பிய மொழி பேசும் மக்களுடன் தொடர்புடையவை என்பது நமக்கு எப்படித் தெரியும்? இதைச் சோதிப்பதற்கு ஓர் எளிய வழி உள்ளது. பொதுவாக இந்திய மக்களிடையே R1a எப்படி ஊடுருவியிருக்கிறது என்பதைக் கண்டறிந்து, சமஸ்கிருத மொழியின் பாரம்பரியப் பாதுகாவலர்களாக விளங்கும் உயர்ஜாதியினரோடு, குறிப்பாக பிராமணர்களோடு, அதற்குத் தொடர்பு இருக்கிறதா என்பதைப் பார்த்தாலே எல்லாம் தெளிவாகிவிடும். தாழ்ந்த ஜாதியினரைக் காட்டிலும் உயர்ஜாதியினரிடத்தில் R1a மிக அதிக அளவில் இருப்பதைப் பல ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. பட்டியல் ஜாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரிடம் இருப்பதைப்போல பிராமணர்களிடம் R1a இரண்டு மடங்கு இருக்கிறது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அந்த மரபியல் பதிவுகள் இந்திய – அய்ரோப்பிய மொழிகளைப் பேசும் மக்கள் வசிக்கும் நாடுகளில் பரவலாகக் காணப்படுகின்றன. அதோடு, இந்தியாவிலுள்ள இந்திய-அய்ரோப்பிய மொழிகளில் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றான சமஸ்கிருத மொழியின் பாரம்பரியக் காவலர்களிடத்தில் R1a கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது.

ஸ்டெப்பிப் புல்வெளிகளிலிருந்து மேற்கொள்ளப்பட்ட இடப்பெயர்ச்சி

இந்திய – அய்ரோப்பிய மொழிகளைப் பேசியவர்கள் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்தது தொடர்பான கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆய்வு 2018 மார்ச் 31 அன்றுதான் வெளியானது. “The Genomic Formation of South and Central Asia” என்பதுதான் அந்த ஆய்வறிக்கையின் தலைப்பு. புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சிய இந்த அறிக்கை, முதன்முறையாகத் தெற்காசியா, கஜகிஸ்தான், கிழக்கு ஈரான் போன்ற பகுதிகளில் கிடைத்த பண்டைய மனிதர்களின் டிஎன்ஏ சோதனை முடிவுகளைப் பயன்படுத்திக் கொண்டது.

கி.மு. 2100க்குப் பிறகு கஜகிஸ்தானின் ஸ்டெப்பிப் பகுதிகளிலிருந்து தெற்கு, நோக்கி ஓர் இடப்பெயர்ச்சி நடைபெற்றது உண்மைதான் என்று அந்த அறிக்கை கூறுகிறது. அவர்கள் முதலில் இன்றைய துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய தென்மத்திய ஆசியப் பகுதிகளுக்குச் சென்றனர்; பின்னர் அவர்கள் கி.மு.2000க்கும் கி.மு.1000க்கும் இடைப்பட்ட ஆயிரம் ஆண்டுகளில் தெற்காசியாவை நோக்கி நகர்ந்தனர்: போகிற வழியில், கி.மு. 2300க்கும். கி.மு.1700க்கும் இடைப்பட்ட காலத்தில், இன்றைய வடக்கு ஆப்கானிஸ்தான், தெற்கு உஸ்பெகிஸ்தான் மற்றும் வடக்கு தஜிகிஸ்தான் பகுதிகளில் பரவியிருந்த ஆக்சஸ் நாகரிகத்தின்மீது அதிகத் தாக்கம் எதையும் விளைவிக்காமல் அதைக் கடந்து மேலும் தெற்கு நோக்கிச் சென்று தெற்காசியாவை அடைந்தனர். அங்கு ஏற்கனவே இருந்த ஹரப்பா நாகரிகத்தைச் சேர்ந்த மக்களுடன் இனக்கலப்பில் ஈடுபட்டனர். அதன் விளைவாக, இந்தியாவில் இன்று இருக்கும் இரண்டு முக்கியப் பரம்பரைகளில் ஒன்றை அவர்கள் உருவாக்கினர். அதுதான் வட இந்திய மூதாதையர். மற்றொரு பிரிவினரான தென்னிந்திய மூதாதையர், அதே காலகட்டத்தில், ஹரப்பா நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் தென்னிந்தியாவிலிருந்த முதல் இந்தியர்களுடன் மேற்கொண்ட இனக்கலப்பால் உருவானவர்கள்.
பண்டைய “டிஎன்ஏ”வில் இடப்பெயர்ச்சி குறித்து இருந்த அறிகுறிகளை வைத்து இந்த அறிக்கை இப்படிப்பட்ட முடிவுகளுக்கு வந்திருந்தது. அதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: “கி.மு. 2100க்கு முன்பு ஆக்சஸ் நாகரிகத்தைச் சுற்றியிருந்த பகுதிகளில் இருந்த மக்களிடம் ஸ்டெப்பி மேய்ப்பாளர்களின் பரம்பரைப் பதிவுகள் எதுவும் காணப்படவில்லை. என்று எங்களுடைய ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் கி.மு 2100க்கும் கி.மு 1700க்கும் இடைப்பட்ட காலத்தில், ஆக்சஸ் நாகரிகத்தைச் சுற்றியிருந்த பகுதிகளில் இருந்த மக்களிடம் ஸ்டெப்பி மேய்ப்பாளர்களின் பரம்பரைப் பதிவுகள் காணப்பட்டன.” கி.மு. 2100அய் ஒட்டி ஸ்டெப்பிப் பகுதி மக்கள் ஆக்சஸ் நாகரிகப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என்பதையே இது காட்டுகிறது.

ஆக்சஸ் நாகரிகப் பகுதிகளிலிருந்தும், கிழக்கு ஈரானைச் சேர்ந்த ஷாகர் – ஏ- ஷுக்தக் பகுதியிலும் கிடைத்த பண்டைய “டிஎன்ஏ”விலிருந்து அந்த ஆய்வு பல வியப்பான முடிவுகளைப் பெற்றுள்ளது. இங்கு கிடைத்த மூன்று பண்டைய டிஎன்ஏ சான்றுகள் கி.மு. 3100க்கும் கி.மு. 2200க்கும் இடைப்பட்டக் காலத்தைச் சேர்ந்தவை என்று கணிக்கப்பட்டுள்ளது. அவற்றின் பரம்பரை தனித்துவமானது. அதே இடத்தில் கிடைத்தப் பிற டிஎன்ஏ மாதிரிகள்போல அல்லாது இவற்றில் ஜாக்ரோஸ் வேளாண்குடியினரின் பரம்பரையைத் தவிர்த்து, 14 முதல் 42 சதவிகிதம் வரை முதல் இந்தியர்களின் பரம்பரை இருந்தது. ஹரப்பா நாகரிகம், ஆக்சஸ் நாகரிகத்துடனும் ஷாகர்_ஏ-_ஷுக்தக் பகுதியுடனும் தொடர்பு வைத்திருந்தது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தது. அதனால், அந்த மூன்று மனிதர்களும் சமீபத்தில் அங்கு வந்திருந்தவர்கள் என்று அந்த ஆய்வு முடிவு கட்டியது.

அவர்களிடம் துளிகூட ஸ்டெப்பிப் பரம்பரை இருக்கவில்லை. ஸ்டெப்பிப் பகுதியிலிருந்தவர்கள் கி.மு.2100ஆம் ஆண்டுவாக்கில்தான். தெற்கு நோக்கி இடம் பெயரத் தொடங்கினர் என்ற கண்ணோட்டத்தோடு இது ஒத்துப் போறது.
ஆனால், இதைவிட அதிக சுவாரசியமான ஒரு விஷயம் இனிதான் வருகிறது. பாகிஸ்தானிலுள்ள சுவாட் பள்ளத்தாக்கில் கிடைத்த பண்டைய டிஎன்ஏ. தகவல்களும் ஆய்வாளர்களுக்குக் இடைத்தன. அது கி.மு.1200க்கும் கி.பி.1ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, அது ஆக்சஸ் நாகரிகப் பகுதிகளிலிருந்தும், கிழக்கு ஈரானைச் சேர்ந்த ஷாகர்-ஏ-ஷுக்தக் பகுதியிலும் கிடைத்த சான்றுகளுக்கு ஆயிரம் ஆண்டுகள் பிந்தையது. ஆனால் சுவாட் பள்ளத்தாக்கில் கிடைத்த டிஎன்ஏ சான்றுகள், ஆக்சஸ் நாகரிகப் பகுதிகளிலிருந்தும், கிழக்கு ஈரானைச் சேர்ந்த ஷாகர்-ஏ-ஷுக்தக் பகுதியிலும் கிடைத்த அந்த மூன்று “டிஎன்ஏ”வுடன் மரபியல் ரீதியாக ஒத்திருந்தன. அதாவது, இவற்றிலும் முதல் இந்தியர்களின் பரம்பரையும் ஜாக்ரோஸ் மேய்ப்பாளர்களின் பரம்பரையும் இருந்தன. ஆனால் இரண்டுக்கும் இடையே ஒரு முக்கியமான வேறுபாடு இருந்தது. இவர்களிடம் அந்த இரண்டையும் தவிர, 22 சதவிகித ஸ்டெப்பிப் பரம்பரையும் இருந்தது. அந்த அறிக்கை இவ்வாறு கூறுகிறது; “தெற்காசிய மக்களிடம் கி.மு. 2000ஆம் ஆண்டுவாக்கில் ஸ்டெப்பிப் பரம்பரையும் சேர்ந்து கொண்டதற்கான நேரடியான சான்றை இது அளிக்கிறது. அக்காலகட்டத்தில், ஸ்டெப்பி மக்கள், தூரன் பகுதி வழியாகத் தெற்கு நோக்கிச் சென்றனர் என்பதற்கான சான்றுகளோடு இது ஒத்துப் போகிறது.”

இன்று அய்ரோப்பாவிலும் ஆசியாவிலும் இந்திய_ அய்ரோப்பிய மொழிகளைப் பேசும் மக்களில் பெரும்பகுதியினர், யம்னயா என்று அழைக்கப்படும் ஸ்டெப்பி மேய்ப்பாளர்களின் பரம்பரையையும் தங்களிடம் கொண்டுள்ளனர் என்று, அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கிறது. யம்னயா மக்கள் முதனிலை இந்திய-_ அய்ரோப்பிய மொழியைப் பேசினர் என்றும், இந்திய_- அய்ரோப்பிய மொழிகளை அவர்கள் அய்ரோப்பாவிலும் ஆசியாவிலும் பரப்பினர் என்றும் நீண்டகாலமாகக் கருதப்பட்டு வந்த யோசனையோடு இது ஒத்துப் போகிறது. கி.மு. 3000ஆம் ஆண்டுவாக்கில் யம்னயா மக்கள் மேற்குப் புறமாக அய்ரோப்பாவுக்கு இடம்பெயரத் தொடங்கியிருந்ததை முந்தைய மரபியல் ஆய்வுகள் பதிவு செய்திருந்தன. ஆனால் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்படும்வரை, ஸ்டெப்பிப் பரம்பரை தெற்காசியா வரை பரவியிருந்ததற்கான பண்டைய டிஎன்ஏ சான்றுகள் எதுவும் கிடைத்திருக்கவில்லை. கி.மு. 2100ஆம் ஆண்டுவாக்கில் பெரிய எண்ணிக்கையில் ஸ்டெப்பி மக்கள் தெற்கு நோக்கி இடம் பெயர்ந்தது தொடர்பாகத் தாங்கள் தொகுத்திருந்த ஆவணங்கள், இது தொடர்பாக இதுவரை கைநழுவிப் போயிருந்த சான்றுகள் கிடைக்கக் காரணமாக அமைந்தன என்று இந்த ஆய்வை நடத்தியவர்கள் கூறினர்.

விஷயம் இதோடு முடியவில்லை. இன்றைய இந்திய மக்கட்குழு, வட இந்திய மூதாதையருக்கும் (ஹரப்பர்கள் (முதல் இந்தியர்கள் + ஜாக்ரோஸ் வேளாண்குடியினர்)+ ஸ்டெப்பி மேய்ப்பாளர்கள்), தென்னிந்திய மூதாதையருக்கும் (ஹரப்பர்கள் + முதல் இந்தியர்கள்) இடையே ஏற்பட்ட இனக்கலப்பால் உருவானவர்கள். வட இந்திய மூதாதையரும் தென்னிந்திய மூதாதையரும் இணைந்ததால் உருவானவர்கள், இன்று தெற்காசியாவிலிருக்கும் 140 இனக்குழுக்களுக்குப் பொருந்துகிறதா என்று மரபியலாளர்கள் சோதித்தபோது பத்துக் குழுக்கள் அதில் சரியாகப் பொருந்தவில்லை. ஏனெனில், அவர்களிடத்தில் எதிர்பார்த்திருந்ததைவிட அதிக விகிதத்தில் ஸ்டெப்பிப் பரம்பரை இருந்ததுதான் அதற்குக் காரணம், அவற்றில் இரண்டு குழுக்களிடம்தான் அந்த விகிதம் மிகவும் அதிகமாக இருந்தது. அவர்கள் பாரம்பரியமாகப் பூசாரிகளாக இருந்ததோடு, சமஸ்கிருத மொழிப் படைப்புகளின் காவலர்களாகவும் விளங்கி வந்தனர் இது எதை விளக்குகிறது? ஸ்டெப்பிப் பகுதிகளிலிருந்து தெற்காசியாவுக்கு மேற்கொள்ளப்பட்ட இடப்பெயர்ச்சி, வெவ்வேறு ஸ்டெப்பிப் பரம்பரை விகிதங்களைக் கொண்ட வெவ்வேறு குழுக்களை உருவாக்கியிருப்பதற்கு வாய்ப்பிருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அதிக ஸ்டெப்பிப் பரம்பரை விகிதாச்சாரம் கொண்டிருந்தவர்கள், தொடக்ககால வேதக் கலாச்சாரத்தைப் பேணுவதிலும் அதைப் பரப்புவதிலும் முக்கியப் பங்கு வகித்ததாகத் தெரிகிறது. ஒருசில குழுக்கள், தங்களுடைய சமூகத்திற்குள்ளாக மட்டுமே திருமணம் செய்து கொள்ளும் பழக்கத்தைத் தீவிரமாகக் கடைபிடித்து வருவதால்தான், ஸ்டெப்பிப் பரம்பரை விகிதாச்சாரம் அதிகமாக இருக்கும் குழுக்கள் இன்றுகூடத் தொடர்ந்து இருந்து வருகின்றன. ♦


செவ்வாய், 28 மே, 2024

ஆரிய மாயை : திராவிடரும் ஆரியரும்


2022 ஆகஸ்ட் 16-31 2022 

அறிஞர் அண்ணா

”ஆரியராவது! திராவிடராவது! எப்பொழுதோ எழுதி வைத்த பழைய சரித்திரத்தைப் பேசுவதற்கு இது காலமா? இப்பொழுது ஆரியர் இன்னார் என்று யாரால் குறிப்பிட முடியும்? இரு சமூகமும் எவ்வளவோ ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாகக் கலந்து-விட்டனர். மறந்து போன இனப்பிரிவை உயிர்ப்பிக்க முனைவது நாட்டுக்கு நலமன்று; அரசியல் முன்னேற்றத்திற்கும் அடுக்காது” என்று ஒருசாரார் கூறுகின்றனர்.
இவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு நம்மவர்களிலும் சிலர் ‘ஆமாம்’ போடுவர். தங்கள் பகுத்தறிவுக்குச் சிறிதும் வேலை கொடுக்காமல், ஆரியர்கள் _ பார்ப்பனர்கள் சொல்லுவதை அப்படியே ஒப்புக்கொண்டு, ஜஸ்டிஸ் கட்சியும் சுயமரியாதைக் கட்சியும், இக்கட்சிகளின் தலைவராகிய பெரியாரும், அவருடைய தோழர்களும், ஆரியர் _ திராவிடர் என்ற வகுப்புப் பிரிவினைப் பிரச்சாரம் செய்கின்றனர் என்று கூறுகிறார்கள். இவர்களுக்கு எத்தனை முறை ஆரியர் _ திராவிடர் போராட்ட உண்மையை விளக்கினாலும், அவர்கள் மரமண்டையில் உண்மை குடி புகுவதேயில்லை. ஆயினும் அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதைக் கருதி, நாமும் இது சம்பந்தமான உண்மைகளை எடுத்துக் காட்டி வருகிறோம்.
நெல்லூரில் வக்கீலாக இருந்த ஜானகிராமமூர்த்தி என்ற பார்ப்பனர்.

16.-9.1926இல் நீலா வெங்கட சுப்பம்மா என்ற திராவிடப் பெண்ணைச் சென்னையில் மணந்தார். இப்பெண் ஓர் ஆரம்பப் பள்ளிக்கூட ஆசிரியை. இவருக்கும் மேற்படி இராமமூர்த்திக்கும் இரு குழந்தைகள் உண்டு. இவர் இரண்டாவது மனைவி. முதல் மனைவி பார்ப்பன மாது. ஜானகி ராமமூர்த்தி இறந்தவுடன் அவருடைய திராவிட மனைவி தன் 2 குழந்தைகளுக்கும் தனக்கும் ஜீவனாம்சம் கொடுக்குமாறு பார்ப்பன மனைவி மீது வழக்குத் தொடர்ந்தாள்.
இவ்வழக்கை பாண்டுரங்கராவ், சோமையா ஆகிய இரு பார்ப்பன நீதிபதிகளும் விசாரித்தனர். இறுதியில் இந்தத் திராவிடர் _ ஆரியர் கலப்பு மணஞ் செல்லாது என்று தீர்ப்பளித்து விட்டனர்.

இந்நாட்டில் ஆரியர் _ திராவிடர் வேற்றுமை இல்லையென்று கூறும் சாதுக்களுக்கு, இப்பொழுதாவது புத்தி வருமா என்பது நமக்குச் சந்தேகந்தான்.
ஆரிய வேத ஸ்மிருதிகளை ஆதரவாகக் கொண்டு இத்தீர்ப்புக் கூறப்பட்டிருக்கிறது. ஆரிய வேத ஸ்மிருதிகளோ பெரும்பாலும் திராவிடர் கொள்கைக்கு மாறுபட்டவை, திராவிடரை அடிமைப்படுத்த வேண்டு-மென்னும் நோக்கத்துடன் எழுதப்பட்டவை. அவை திராவிட அறிஞர்களால் ஒப்புக்-கொள்ள முடியாதவை. இந்த ஆரிய வேத ஸ்மிருதி முக்கிய வழக்குகளை முடிவு செய்வதில் இன்னும் ஆதரவாக இருக்கு-மானால் ஆரியர் _ திராவிடர் பேதம் ஒழிந்து விட்டதாகக் கூறுவது எவ்வாறு பொருந்தும்.

“இனியேனும் திராவிடர்கள், உண்மையை உணருவார்களா? ஆரியர் _ திராவிடர் வேற்றுமை சாத்திரத்தில் இருக்கிறது. ஆரியர் _ திராவிடர் வேற்றுமை, புராணங்களில், வேத ஸ்மிருதிகளில் இருக்கிறது. ஆரியர் _ திராவிடர் வேற்றுமை நமது நாட்டுப் பழக்க வழக்கங்களிலிருக்கிறது. சட்டத்திலும் நிலைத்திருக்-கிறது. இதை யார் இல்லை என்று மறுக்க முடியும்? இவ்வளவுமிருந்தும், ஆரியர் _ திராவிடர் வேற்றுமைக் கூச்சல் பெரியாரால் கிளப்பி விடப்படுவது என்றால், அதை எந்த அறிவுள்ள திராவிடராவது நம்ப முடியுமா?’’

ஞாயிறு, 12 மே, 2024

திராவிடர் மனம் மட்டும் புண்படாதா?




Published September 23, 2023, விடுதலை ஞாயிறு மலர்

(உலக மக்கள் முன் நம்மைத் தாழ்த்த ஆரியர் எழுதி வைத்துள்ள வஞ்சக மொழிகளை அம்பலப்படுத்தும் வரலாற்றுச் சான்றுகள்)

1. “தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியரல்லாதவர்களையே  குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் ராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது”

– ‘புராதன இந்தியா’ 52ஆவது பக்கம் ரமேஷ் சந்திரட்  CIEICS.

2. “தென்னிந்தியாவில் இருந்த மக்களேதான் ராமாயணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

– “சுவாமி விவேகானந்தர் அவர்களது சொற்பொழிவுகளும் கட்டுரைகளும்“ என்ற புத்தகத்தில் ‘ராமாயணம்“ என்னும் தலைப்பில் 587-589 பக்கங்களில் உள்ளது.

3. தஸ்யூக்கள் என்பது இந்திய புராதன குடி மக்களுக்கு அவர்கள் (ஆரியர்கள்) கொடுத்த பெய ராகும்.‘ஆரியன்’என்கின்றசொல்இந்தியா வின்புராதனகுடிமக்களிடமிருந்துதங்களைப் பிரித்துக்காட்டுவதற்காக ஆரியர் ஏற்படுத்திக் கொண்ட சொல் ஆகும்.

– 1922ஆம் வருஷம் பதிப்பிக்கப்பட்ட ‘கேம்ப்ரிட்ஜ் பழைய இந்தியாவின் சரித்திரம்’ என்னும் புத்தகத்தில் உள்ளது.

4. ஆரியர்கள் தங்கள் மொழியை ஆரியரல்லாதாருக்குள் புகுத்த முயற்சித்து முடியாமல் போனதால் ஆரியரல்லாதாருடைய மொழிகளைக் கற்றுக்கொண்டு அவர்களது நாகரிகத்தையும் பின் பற்றவேண்டி வந்தன.

– ‘பண்டர்காரின் கட்டுரைகள்’ வால்யூம் 3, பக்கம்-10

5. ஆரியக்கடவுள்களாகிய இந்திரனையும்,  இதர கடவுள்களையும் பூசித்தவர்களும் அவர்களைப் பின்பற்றியவர்களும் தேவர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். இந்த ஆரியக்கடவுள்கள் வணக் கத்தை எதிர்த்தவர்களை அசுரர்கள் என்று அழைத் தார்கள். இந்த இரு கூட்டத்தாருக்கும் விடாப்பகை இருந்துகொண்டே வந்தது.

– ‘ரிக்வேத கால இந்தியா’ பக்கம் 151, ஏ.சி.தாஸ் எம்.ஏ.பி.எல்.

6. ஜாதிப் பிரிவுகள் நான்கில் அதாவது ஆரிய கடவுள்கள் வணக்கத்தை எதிர்த்தவர்களை அசுரர்கள் என்று அழைத்தார்கள். இந்த இரு கூட்டத்தாருக்கும் விடாப்பகை இருந்துகொண்டே வந்தது.

– ‘ரிக்வேத கால இந்தியா’, பக்கம் 151, ஏ.சி.தாஸ் எம்.ஏ.பி.எல்.

7. ஜாதிப் பிரிவுகள் நான்கில் அதாவது பிரா மணர்கள், சத்திரியர்கள் வைசியர்கள், சூத்திரர்கள் என்பவர்களில் முதல் மூன்று பிரிவினர்கள் ஆரிய சம்பந்தப்பட்டவர்கள், கடைசி வகுப்பார் (சூத்திரர்கள்) இந்தியாவின் புராதனக்குடிகள்.

– ‘நியூ ஏஜ் என்சைக்ளோ பீடியா’, 1925, 2 ஆவது வால்யூம், பக். 273

8. ராமாயணத்தில் குடிகாரர்களை சுரர்கள் என்றும், குடியை வெறுத்தவர்களை அசுரர்கள் என்றும் பிரித்துக் கூறப்பட்டிருக்கிறது.

– “சரித்திரக்காரர்களின் உலக சரித்திரம்“, வால்யூம் 2, பக்கம் 521; ஹென்றி ஸ்மித், வில்லியம் எல்.எல்.டி

9. ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களைத் தங்களுடைய புத்தகங்களில் திராவிடர்கள், தஸ்யூக்கள், தானவர்கள், இராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இது ஆரியக்கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பைக் காட்டுகிறது. ஏனெனில் ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் செலுத்து வதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்.

– சி.சீனிவாசாச்சாரி எம்.ஏ., எம்.எஸ்., இராமசாமி  அய்யங்கார் எம்.ஏ., “இந்திய சரித்திரம்” -பக்கம் 16-17

10. சுருங்கக் கூறவேண்டுமானால் பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே சொந்தமாக ஆக்கிக் கொண்டு அந்த நிலைமையைத் துஷ்பிரயோகப் படுத்தித் தங்கள் இஷ்டம் போல் எல்லாம், தங்களுக்கு அநுகூலமான சகல விஷயங்களையும் உட்படுத்திக் கட்டுக் கதைகளை எழுதிவைத்துக் கொண்டார்கள். இந்தக் கற்பனைக் கதைகள் அனைத்தும் வேண்டு மென்றே கெட்ட எண்ணத்துடன் சாமர்த்தியமாய் பிறரை அழுத்தி அடிமைப்படுத்தித் தங்களுடைய நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவே எழுதப் பட்டவைகளாகும்

– 1865இல் எழுதப்பட்ட “விரிவான இந்திய சரித்திரம்” – முதல் பாகம் பக்கம் 15-ஹென்றி பெரிட்ஜ் (சரித்திர ஆசிரியர்)

வெள்ளி, 29 டிசம்பர், 2023

திராவிடம்'' சொல் வரலாறு: சிறுபார்வை

"திராவிடம்'' சொல் வரலாறு: சிறுபார்வை
       
 
1)இந்தியாவில் கால் ஊன்றிய ஆரியம் இந்தியா முழுதும் இருந்த ஆதிகுடிகளில் ஒன்றை ""வேதங்களை ஏற்காத நால்வருண பாகுபாட்டை கடைபிடிக்காத தாழ்ந்த மக்கள் குழு"என குறிக்கும் சொல்லாக 
கிமு.1500 களில் ரிக்வேதத்தில் குறிப்பிடும்  த்ரவிடர்  எனும் சொல் வரலாற்றில் திராவிடத்தை குறிக்கும் முதல் தரவாகும்.

2)கிமு 1150  களில் ஆண்ட திராவிடராணி பற்றிய செய்தி....

 (3)கி மு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த  கலிங்க மன்னன் காரவேலன் கல்வெட்டில் உள்ள த்ரமிளர் சங்காத்தம் எனும்சொல்,.

3)அகத்தியர் கால அரசரான திராவிடபூபதி என்பவர் பற்றிய தகவல்....
       
4) மகாபாரத்தில் குறிப்பிடப்படும் 56 தேசங்களில் திராவிடம் என்ற நாடு பற்றிய குறிப்பு..

5)திரவிடன் என்னும் சூரியவம்சத்து அரசன் பற்றிய தகவல்... 
       
6) கிபி 5 ஆம் நூற்றாண்டில் வஜ்ரநந்தி என்ற சமணத்துறவி மதுரையில் த்ரமிள (திராவிட)சங்கம் உண்டுபண்ணி தமிழ் தொண்டாற்றியது பற்றிய தகவல்கள்.
     
7) கிபி 7 நூற்றாண்டில் வாழ்ந்த  ஆதிசங்கரர் தனது சௌந்தர்ய லஹிரி - யில் திருஞானசம்பந்தரை  திராவிடச்சிசு என்று வர்ணித்தது..இதில் வியப்பு ஆதிசங்கரர் திருஞானசம்பந்தர் இருவருமே பிராமணர் என்பது.
        
8) ஆதிசங்கருக்கு முன்பே அத்வைத கருத்துக்களை பரப்பிய வேதாந்த சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுதிய திராவிடாசாரி பற்றிய தகவல்கள்.
       
9) கிபி 8 நூற்றாண்டைச்சேர்ந்த குமரிலப்பட்டர் தனது நூலில்  ஆந்திர திரவிட பாஷா எனும்
சொல்லாடலின் மூலம்  தென்னாட்டு மொழிளில்  தெலுங்கை தவிர பிறமொழிகளை திரவிடமொழி  என அழைக்கிறார்.
      
10)  கிபி13 ம் நூற்றான்றை சேர்ந்த அழகிய மணவாளமுனிகள் வேதங்களை சமஸ்கிருத வேதம் ,திராவிடவேதம் என இரண்டாக வகைபடுத்தி உள்ளார்....அவர் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை திராவிட வேதம் எனும் பொருளில் த்ராவிடோபநிஷத் என்றே குறிப்பிடுகிறார்.
         
11)இந்த காலகட்டங்களில் தென்னாட்டு பிராமணர்களை திராவிடபிராமணர் என அழைக்கும் பழக்கம் உருவாகியது.

12) மேற்கண்டவைகளை ஆதாரமாக கொண்டு  அயர்லாந்தைச் சார்ந்த வரலாற்றாசிரியர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் ஆய்வில்  1854 ல் வெளியான 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கனம் ' எனும் நூல் ,,இந்நூல் இந்தோ -ஆரிய  மொழிக்கூட்டமல்லாத "திராவிடமொழிகள்" என ஒரு மொழிக்கூட்டத்தை வரையறை செய்தது,,அம்மொழிகளின் மூலம் மூலத்திராவிடம் எனும் கருத்தை இவர் வைத்தார்,,இம்மொழிக்கூட்டத்தில் தமிழே மிகப்பழமையான மொழி என்று குறிப்பிட்டுள்ளார்.

12)1885 - ல் அயோத்திதாச பண்டிதரால் உருவாக்கப்பட்ட திராவிடபாண்டியன் இதழ்.

13) 1891 இல் மனோன்மணியம் எழுதிய
சுந்தரம்பிள்ளை, தன்னுடைய தமிழ்த் தெய்வ வணக்கம் பாடலில் "திராவிட நற்றிருநாடு"
என்று குறிப்பிடுகிறார்.
         
14) 1892 - ல் அயோத்திதாசர் தாழ்த்தப்பட்ட மக்களை ஆதிதிராவிடர் எனக் கூறவேண்டி ஆங்கிலேய அரசிடம் மனு கொடுத்தது
         
15) 1894 - ல் இரட்டைமலை சீனிவாசன் ஐயா வின் ஆதிதிராவிடர் மகாஜனசபை

16) 1911, டிசம்பர 11 இல் தாகூர் ஜனகணமன நாட்டுப்பண்ணை எழுதுகிறார். அதில் திராவிடம் என்று குறிப்பிடுகிறார். இதனை இந்திய
அரசமைப்புச் சட்டம் அங்கீகரிக்கிறது.
         
17) 1913 - ல் ஐயா நடேசனாரால் உருவாக்கப்பட்டது  திராவிட சங்கம்
         
18) 1944 - ல் பெரியாரின் திராவிடர் கழகம் உருவானது
         
19) 1948 - ல்  அறிஞர் அண்ணாவின்        திராவிட முன்னேற்றக் கழகம் நிறுவப்பட்டது.

20) 1957 இல் திராவிட முன்னற்றக் கழகத்தை,
இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கிறது
         
20)  பின்னர் அதிமுக ..மதிமுக,.தேமுதிக..
பெரியார் திராவிட கழகம்....தந்தை பெரியார் திராவிட கழகம்..திராவிட இயக்க தமிழர் பேரவை என நிறைய இயக்கங்களை உருவாகின. இவற்றுள் சில
கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம்
பெற்றன.

தமிழ்..தமிழம்..த்ரமிளம் ..த்ரவிடம் ..திராவிடம் என... தமிழ்தான் திராவிடம் என்று வடமொழியினரால் திரித்து கூறப்பட்டது என்பது ஓரளவு சரியான வாதமாகக் கொள்ளலாம்,,

திராவிடம் வரலாறு எழுதத்தொடங்கிய காலத்திலிருந்தே வழங்கப்படும் சொல்லாடலாகும்.

முதலில் அது ஒரு மக்கள் கூட்டத்தின் பெயராகவும்,,

பின்னர் ஒரு மொழிக்கூட்டத்தின் பெயராகவும்

அதன்வழியாக பின்னர் ஒரு இனக்கூட்டத்தின் பெயராகவும் 

வழங்கப்பட்டு வந்துள்ளது.

தற்போது ஒரு தத்துவத்தின் பெயராக பெரியாரியல் தொண்டர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது,

          ✍️ பல்வேறு தரவுகளின் தொகுப்பு✍️

           ⚖️ #துலாக்கோல்/29.12.2023⚖️
- சோம நடராஜன் முகநூல் பதிவு

செவ்வாய், 7 நவம்பர், 2023

திராவிடர்-ஆரியர் என்று கற்பித்தது திராவிட இயக்கமா? கவிஞர் கலி.பூங்குன்றன்

  

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

திராவிடர்-ஆரியர் என்று கற்பித்தது திராவிட இயக்கமா?

கவிஞர் கலி.பூங்குன்றன்

5

ஆரியராவது - திராவிடராவது - எல்லாம் வெள் ளைக்காரன் கட்டிவிட்ட கதை என்று பார்ப்பனர்கள் சொல்லி வந்தார்கள்.

"நாங்கள் ஆரியர்கள் - பிராமணோத்தமர்கள்!" என்று பூணூலை முறுக்கிக் காட்டிக் கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு.

திராவிடர் இயக்கம் தோன்றிய பிறகு - தந்தை பெரியார் என்ற மகத்தான சமூகப் புரட்சித் தலைவரின் சகாப்தம் தோன்றிய நிலையில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றத்தால் ஆரியம் தன் வாலைச் சுருட்டிக் கொண்டது. தம் பெயருக்குப் பின்னால் ஒட்ட வைத்துக் கொண்டிருந்த அய்யர், அய்யங்கார், சர்மா, சாஸ்திரி களை வெட்டிக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டது.

அந்த அளவுக்கு எழுச்சி ஏற்பட்ட நெருக்கடியில் ஆரியம் பம்முகிறது.

ஆரியராவது - திராவிடராவது என்று “கோரஸ்" பாட ஆரம்பித்து விட்டனர். இந்தப் பஜனைக் கூட்டத் தில், ஆர்.எஸ்.எஸில் பயிற்சிப் பெற்ற ஆளுநர் இரவி யும் சேர்ந்து கொண்டு விட்டார்.

ஆரியர் - திராவிடர் என்பதெல்லாம் கிடையாது என்று பேச ஆரம்பித்துவிட்டார் - ஆம், அவரைப் பேச வைக்கும் நிலையை - தாக்கத்தை உண்டு பண்ணியது திராவிடம் இயக்கம்.

ஏதோ, ஆரியர், திராவிடர் என்பதை திராவிட இயக்கம் உருவாக்கியது போல உளற ஆரம்பித்து விட்டனர்.

ஆனால் உண்மை நிலை என்ன? வரலாறு என்ன பேசுகிறது?

உலகில் பல இனங்கள், பல மொழிகள், பல பண்பாடுகள் இருப்பது போலவே இந்தியத் துணைக் கண்டத்திலும் பல இனங்கள் உண்டு. அவற்றுள் மிக முக்கியமான இனங்கள் ஆரியர்-திராவிடர் என்ப தாகும்.

திராவிட எனும் சொல்லைப் பரவலாக்கியவர் கால்டுவெல், மனுதர்ம சாத்திரத்திலே (கி.மு. முதல் நூற்றாண்டு) ஜாதி விலக்கம் செய்யப்பட்டவர்களை பற்றிச் சொல்ல வரும்போது 'திராவிட' என்னும் சொல் கையாளப்பட்டுள்ளது (மனுதர்ம சாஸ்திரம், 43,44) கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரில பட்டர் 'திராவிட பாஷா' என்று தமிழ் முதலாய மொழிகளைக் குறிப்பிட்டுள்ளார். (ச.அகத்தியலிங்கம் “திராவிட மொழிகள்", பக்கம் 22)

திராவிடர்கள் இந்தியாவின் ஆதிக்குடிகள் (டி.ஆர். சேசையங்காரின் "திராவிட இந்தியா” மொழிபெயர்ப்பு முனைவர் க.ப.அறவாணன் பக்கம் 43) என்றும், ஆரியர்கள் இந்தியாவில் குடியேறியவர்கள் என்றும், அப்படிக் குடியேறியவர்களாகிய ஆரியர்களுக்கும், பூர்வீகக் குடிகளான திராவிடர்களுக்கும் இடையே பகை உணர்வுகள் இருந்தன என்றும் ஆரியர்களின் வேதநூல்களிலும் இராமாயணம் முதலியவற்றிலும் இது பிரதிபலிக்கின்றது என்பதற்கு எண்ணிடலங்கா ஆதாரங்கள் உள்ளன. 

6

அவற்றில் சில மட்டும் இங்கே:

* "தென்னிந்தியாவில் வசித்துவந்த ஆரியரல்லா தவர்களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் ராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது".

ரோமேஷ் சந்திரதத் C.I.E.I.C.S,

"புராதன இந்தியா" (52-ஆம் பக்கம்.)

* "திராவிடர்கள் தங்கள்மீது படையெடுத்து வந்த ஆரியர்களோடு கடும்போர் புரியவேண்டி இருந்தது, இந்த விஷயம் ரிக் வேதத்தில் அநேக சுலோகங்களாக இருக்கின்றன."

டாக்டர் ரோமேஷ் சந்திர மஜும்தார் எம்.ஏ., "பூர்வீக இந்திய சரித்திரமும், நாகரிகமும்'' நூல் (பக்கம் 22)

 "ராமாயணக் கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திராவிடர்கள் மீது படை யெடுத்து வெற்றி பெற்றதைச் சித்தரித்துக் காட்டுவ தாகும்.

பி. சிதம்பரம் பிள்ளை, "திராவிடரும் ஆரியரும்" 

(24-ஆம் பக்கம்)

* ''ராமாயணக் கதையானது புரோகித வகுப்பாருக்கும் யுத்த வீரர்களுக்கும் இடையே நடந்த போரைக் குறிப்பதாகும். ராமாயணத்தில் குறிக்கப் பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென் இந்தியாவில் உள்ளவர்களை - ஆரியரல்லாதவர்களைக் குறிப்பதாகும்."

ரோமேஷ் சந்திரதத் எழுதிய "பண்டைய இந்தியாவின் நாகரிகம்" 139-141ஆம் பக்கங்கள்).

* "தென்னிந்தியாவில் இருந்த மக்களேதான் ராமாயணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்''.

"சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும்' 'ராமாயணம்' (587-589ஆம்  பக்கங்கள்)

* "ஆரியன் என்கின்ற சொல் இந்தியாவின் புராதன குடி மக்களிடமிருந்து தங்களை பிரித்துக் காட்டுவதற்காக ஆரியர் ஏற்படுத்திக் கொண்ட சொல்".

* "ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர் (சூத்திரர்) கள் என்றும், தஸ்யூக்கள், அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆரியருக்கும் ஆரியரல்லாதா ருக்கும் இருந்துகொண்டிருந்த அடிப்படையான பகை மையைப்பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காண லாம். இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும் அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைமைக்குக் காரணமாகும்".

டாக்டர் ராதா குமுத் முகர்ஜீ எம்.ஏ., பிஎச்.டி., "இந்து நாகரிகம்" (69ஆம் பக்கம்.)

* "ராமாயணக் கதையின் உட்பொருள் என்ன வென்றால் ஆரிய நாகரிகத்திற்கும் ஆரியரல்லாத நாகரிகத்திற்கும் (அவற்றின் தலைவர்களான ராமன்- ராவணன் ஆகியவர்களால்) நடத்தப்பட்ட போராகும்'' என்று அதேநூலில் (பக். 141) கூறுகிறார்.

* "தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவின் தென்கிழக்கிலும், இலங்கையின் சில பாகத்திலும் வசிக்கும் ஆரியரல்லாத திராவிட மக்கள் ஆவார்கள். தமிழ் என்பது மேற்படியார்களால் பேசும் பாஷை."

சர்-ஜேம்ஸ்மர்ரே எழுதிய புதிய இங்கிலீஷ் அகராதியில் (பக்கம் 67இல்) குறிப்பிட்டுள்ளார்.

* ஆரியர்கள் தங்கள் மொழியை ஆரிய ரல்லாதாருக்குள் புகுத்த முயற்சித்து முடியாமல் போனதால் ஆரியரல்லாதாருடைய பாஷைகளைக் கற்றுக்கொண்டு, அவர்களது நாகரிகத்தையும் பின்பற்ற வேண்டிவந்தது.

இது பண்டர்காரின் கட்டுரைகள், (வால்யூம் 3, பக்கம் 10) கூறும் செய்தி.

* "தமிழர்கள் ஆரியர்களை வடவர், வடநாட்டார் என்று அழைத்தார்கள். ஏனெனில், ஆரியர்கள் வடக்கே இருந்து வந்தவர்களானதால்” என்கிறார்.

டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார் எம்.ஏ., பிஎச்.டி., தனது "தென் இந்தியாவும் இந்திய கலையும்'' எனும் நூலில் (3ஆம் பக்கம்.)

*"திராவிடர்களை ஆரியர்கள் வென்றுவிட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதிவைத்தார்கள். ஆனால், இந்தப்படி இழிவுபடுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தே (திராவிடர்களிடமிருந்தே) பல நாகரிகங்களை இந்தப் பிராமணர்கள் கற்றுக்கொண்டார்கள்” என ஷோஷி சந்தர்தத் "இந்தியா அன்றும் இன்றும்" எனும் நூலில் குறிப்பிடுகிறார் (15ஆம் பக்கம்)

'ஆரியர்கள் தங்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரி களாகிய திராவிடர்களைத் தங்களுடைய புத்தகங்களில் திராவிடர்கள் தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்".

7

'ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில், ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழு தினார்கள்" என சி.எஸ். சீனிவாசாச்சாரி எம்.ஏ., எம்.எஸ். ராமசாமி அய்யங்கார் எம்.ஏ, ஆகிய வரலாற்றாசிரி யர்கள் "இந்திய வரலாறு முதல் பகுதி" என்னும் நூலில் "இந்து இந்தியா” என்னும் தலைப்பில் (16, 17ஆம் பக்கங்கள்) எழுதியுள்ளனர்.

'ஆரியர்களில் சமஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து வட இந்தியாவை அடைந்தார்கள். அங்கு தங்களைவிட முன்னேற்றமான திராவிடர்களைக் கண்டு அவர்களிட மிருந்து பல நாகரிகங்களைக் கற்றுக்கொண்டார்கள்" என்கிறார் எச்.ஜி. வெல்ஸ்.

எச்.ஜி. வெல்சின் "உலகத்தின் சிறிய வரலாறு' என்னும் நூல் (105ஆம் பக்கம்)

* "சுருங்கக் கூறவேண்டுமானால், பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே சொந்தமாக ஆக்கிக்கொண்டு அந்த நிலைமையைத் துஷ்பிரயோகப்படுத்தி, தங்கள் இஷ்டம்போல் எல்லாம் தங்களுக்கு அநுகூலமான சகல விஷயங்களையும் உட்படுத்திக் கட்டுக்கதைகளை எழுதிவைத்துக் கொண்டார்கள். இந்தக் கற்பனைக் கதைகள் அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன் சாமர்த்தியமாய்ப் பிறரை அழுத்தி அடிமைப்படுத்தித் தங்களுடைய நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவே எழுதப்பட்டவையாகும்".

*  “விஷ்ணு என்கின்ற கடவுள் ஆரியக் கூட்டத் தாருக்கு வெற்றி தேடிக்கொடுக்கவும், யோசனை கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாகக் கருதப் பட்டது”.

(ஈ.பி. ஹாவெல் 1918இல் எழுதிய "இந்தியாவில் ஆரியர் ஆட்சியின் வரலாறு” 32ஆம் பக்கம்.)

* "பாரத - ராமாயணங்கள் முதலிய இதிகாசங்களில் காட்டுமிராண்டிகளும், அசுரர்களும், சதர்களும், தஸ்யூக்களும் வசிக்கும் நெருக்கமான காடுகள் கொண்ட நாடு என்று குறிப்பிடப்பட்டிருப் தெல்லாம் தென்னிந்தியாவை (திராவிட நாட்டை)ப் பற்றியே யாகும்” என்கிறார் ஜி.எச்.ராபின்சன் "இந்தியா” 155ஆம் பக்கம்).

“வட இந்தியாவில் இருந்த திராவிடக் கலை, நாகரிகம் முதலியவை யாவும் ஆரியர்களால் அழிக்கப்பட்டு விட்டன. ஆனால் தென்னிந்தியாவில் அவ்விதம் நடக்கவில்லை” என்று தமிழ்ப் பேராசிரியர் கே. என். சிவராஜ பிள்ளை பி.ஏ., எழுதிய "பண்டைத் தமிழர்களின் வரலாறு” (4ஆம் பக்கம்) நூலில் ஆரியர்களால் திராவிடர்களுக்கு ஏற்பட்ட அழிவைக் கூறுகிறார்.

8

“பாரதத்தில் இடும்பி என்று ஒரு ஆரியரல்லாத பெண்மணியைப் பற்றி எழுதிய பார்ப்பனக் கவி தனக்குள்ள ஜாதித் துவேஷத்தால் ராட்சஸி என்று எழுதி இருக்கிறான். ராட்சதர் என்கிற பயங்கர புரளி வார்த்தை வைதீகப் பார்ப்பனனின் மூளையில் தோன்றிய கற்பனையேயாகும்" என்று கடுமையாகவே, நாகேந்திரநாத்கோஷின் "இந்திய ஆரியரின் இலக்கியமும் கலையும்" (194ஆம் பக்கம்.) எனும் நூலில் காண்கிறோம்.

இவ்வளவு கருத்துகளையும் தந்தை பெரியார் அவர்கள், “ஆரியர் - திராவிடர்” எனும் நூலில் இவ்விதம் தொகுத்துக் கூறியுள்ளார். ஆரியர்களின் பூர்விகம் குறித்துப் பல்வேறு அறிஞர்களும் எடுத்துக் கூறியுள்ளனர்.

* ஆரியர்கள் காஸ்பியன் கடலுக்குப் பக்கத்தி லுள்ள வடமேற்குப் பிரதேசங்களிலிருந்து இந்தியாவில் புகுந்ததாகப் பெரும்பாலான பண்டிதர்கள் கூறு கிறார்கள். இதை பால கங்காதர திலகர் வடதுருவப் பிரதேசமான ஆர்க்டிக் மகா சமுத்திரத்தை அடுத்த ஒரு நாட்டிலிருந்து ஆரியர்கள் அய்ரோப்பா முழுவதும் பரவி கடைசியில் இந்தியாவுக்கு வந்ததாகக் கூறுகிறார். 

9

ஆரியர்கள் எங்கிருந்து வந்தாலும் சரி, அவர்கள் இந்தியாவுக்கு வந்து பூர்வகுடிகளைக் கொடுமைப் படுத்தி அடிமைகொண்டுவிட்டார்கள் என்பது மட்டும் உண்மை. சுதந்திரமிழந்த ஆதி இந்தியர்கள் ஆரியர் களுக்கு அடிமைகளாக இருந்திட விரும்பவில்லை. எனவே அவர்கள் காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் குடி புகுந்து வாழத் தொடங்கினர். அவ்வாறு சென்றவர் களுக்கு ஆரியர்கள் ராட்சஸர் என்று பெயர் சூட்டினர் என்பதே வரலாறு கூறும் உண்மை.

குடிபுகுந்த ஆரியர்கள் பூர்வ குடிகளைவிட அழகிய வெள்ளை நிறமுடையவர்களாயிருந்தார்கள். எனவே வெள்ளை நிறமுடைய ஆரியர், மாநிறமான கறுப்பர்களான ஆதி இந்தியர்களைவிட உயர்ந்த வர்கள் என எண்ணம் ஏற்பட்டது.

அன்று முதற்கொண்டே வர்ண பேதக்கொடுமை ஆரம்பமாயிற்று. வர்ண பேதக்கொடுமையினால் இந்தியாவைப் போல் துயரப்படும் நாடு உலகத்திலேயே வேறு இல்லை என்றே சொல்லலாம்.

ஆரியர்கள் ஆதி இந்தியர்களைச் சந்தித்த போதே அவர்களுக்குக் “கறுப்பர்கள்” என்ற இழிபெயரைச் சூட்டினர். போர்க் கடவுளான இந்திரனை ஒரு ஆரிய வீரனாகப் பாராட்டிப் புகழ்ந்தனர்.

ஆரியர் சட்டத்துக்குக் கீழ்ப்படியாதவர்களைக் கண்டித்துக் கறுப்பர்களை மனுவுக்கு அடிமைப்படுத்தி, மற்றும் நூற்றுக்கணக்கான உதவிகள் புரிந்து இந்திரன் ஆரியர்களைக் காப்பாற்றினான் (ரிக் வேதம், முதல் மண்டலம், 30 ஆவது மந்திரம், 8ஆவது ஸ்லோகம்) என ரிக்வேதம் கூறுகிறது.

ஆரியர்களுக்கும், ஆதி இந்தியர்களுக்கும் நடை பெற்ற போரைப் பற்றியும், ஆரியர் செய்த பற்பல கொடுமைகளைப் பற்றியும், வேதங்களில் பல குறிப்பு கள் காணப்படுகின்றன. வெள்ளை ஆரியர்கள் கறுப் புப் பூர்வ குடிகளை எவ்வளவு குரூரமாக இம்சித்தார்கள் என்பதை அறிய ஒன்றிரண்டு எடுத்துக் காட்டுகளை நாளை காண்போம்.

(தொடரும்)

9

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)

திராவிடர்-ஆரியர் என்று கற்பித்தது திராவிட இயக்கமா? (2)

நேற்றைய (28.10.2023) தொடர்ச்சி....

எடுத்துக்காட்டு; ஒன்று

ஓ உலகம் போற்றும் இந்திரனே! ஸீஷ் ரூவனை எதிர்த்த இருபது கறுப்பு அரசர்களையும் அவர்களது அறுபதினாயிரத்துத் தொண்ணூற்றொன்பது படை களையும் உன் தேர்ச் சக்கரத்துக்கு இரையாக்கிக் கொன்று ஆரியர்களுக்கு உதவி புரிந்தாய். (ரிக்வேதம் மண்டலம் 1 மந்திரம் 53, ஸ்லோகம் 9, அதர்வணவேதம் காண்டம் XX  மந்திரம் 21, ஸ்லோகம் 9)

- - - - -

எடுத்துக்காட்டு: இரண்டு

ஓ இந்திரனே! பிப்ரூ, மிருஷய அசுர அரசர்களை ஆரிய மன்னனான விதாதின் புத்திரன் ரிஜீஷ்வனுக்கு அடிமைப்படுத்தினாய்! அய்ம்பதாயிரம் கறுப்புப் படைகளை செயித்தாய். முதுமை உயிரை மாய்ப் பதுபோல் அனேக கோட்டைகளையும் பாழாக்கினாய்.

(ரிக்வேதம் மண்டலம் IV மந்திரம் 16, ஸ்லோகம் 13)

- - - - -

8

எடுத்துக்காட்டு: மூன்று

ஆரிய அரசன் தாவிதியின் நன்மைக்காக முப்பதாயிரம் தாசர்களை உன் மந்திர சக்தியினால், ஓ இந்திரனே எமனுலகு அனுப்பினாய்!

இப்படி ஏராளம் உண்டு. (ரிக்வேதம் மண்டலம் IV  மந்திரம் 3 ஸ்லோகம் 21)

சிந்து சமவெளி நாகரிகம் என்பது திராவிடர் நாகரி கமே என்று தொல்லியல் ஆய்வாளர்கள் அய்ராவதம் மகாதேவன் முதல் பலரும் அறுதியிட்டுள்ளனர். (தினமணி, 2.5.2006)

இந்நிலையில் இந்தியாவின் பண்டைய நாகரிக மானது - முதல் நாகரிகமானது சிந்துவெளி நாகரிகம் ஆகும்.

அந்த நாகரிகத்தை ஆரியர்கள் எப்படியெல்லாம் சிதைத்தனர் என்பதற்கும் ஆதாரங்கள் உண்டு. 

சிந்துசமவெளி திராவிடர்கள் அணைக்கட்டுகளைக் கட்டி விவசாயம் உள்ளிட்ட தொழில்களைச் செய்தனர். 

அணையைக் காவல் காத்த விருத்திரன் என்ப வனை இந்திரன் என்னும் ஆரியத் தலைவன் கொன்று அணையை  திறந்துவிட்டான் என்கிறது ரிக்வேதம். 

(பி.இராமநாதன், எம்.ஏ, பி.எல், எழுதிய "சிந்து வெளி நாகரிகத்தை ஆரியர் சிதைத்தது எவ்வாறு?" செந்தமிழ்ச்செல்வி 1986 மார்ச்) எனத் தனிக் கட்டு ரையே தீட்டியுள்ளார்.

தந்தை பெரியார் 1972இல் (9.2.1972) ‘விடுதலை'யில் எழுதிய தலையங்கம் ஒன்றில் ஆரியர்களின் நிலை குறித்துத் தெற்றென விளக்கும் கருத்து ஆராய்ச்சி அறிஞர்களாலேயே மறுக்க இயலாததாக உள்ளது. 

இந்தியாவில் ஆரியர்கள் நுழைந்த காலம் காட்டு மிராண்டிக் காலம் என்றபோதிலும் திராவிடர்களைவிட ஆரியர்கள் காட்டுமிராண்டிகளாக இருந்துள்ளனர் என்பது அவர்களுடைய கற்பனைக் கருத்துகள், புனைந்த கதைகள், பின்னர் அவர்களைத் தழுவிவந்த நூல்களின் அடிப்படையில் இருந்துள்ளது என்று தந்தை பெரியார் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்.

அதேவேளையில் திராவிடர் நிலையை அறிய பவுத்த ஆட்சி, பவுத்தக் கருத்துகள் சான்றாக விளங்கு கின்றன எனக் கூறுகிறார்.

இராம-இராவணப் போரைத் தந்தை பெரியார் ஆரியர் - திராவிடர் போர் எனக் காட்டுகிறார்.

இதற்கு எடுத்துக்காட்டாக இராவணன் பார்ப் பனர்கள் செய்த வேள்வியை, உயிர்க் கொலையைக் கொலைச் செயல்களைத் தடுத்தமையால்தான் என்று அவர்கள் குற்றம் சாட்டியிருப்பதை எடுத்துக்காட்டு கிறார்.

ஆரியர்கள் காட்டுமிராண்டிகள் என்பதனைப் பொருத்தமாக தந்தை பெரியார் எடுத்துக் கூறுகிறார்.

10

"அவர்கள் வாழ்ந்த தன்மை அக்காலங்களில் காட்டுமிராண்டித் தன்மையதாய் இருந்தது என்பதற்கு அவர்கள் எழுதிய உலக சிருஷ்டி முறைகள். அவர்கள் குறிப்பிடும் காலங்கள், அக்காலத் தேவர்கள், கடவுளர்கள், அவர்களது யாக முறைகள், புணர்ச்சி முறைகள், நீதி முறைகள் முதலியவைகளும் மற்றும் அவர்கள் கற்பித்துக்கொண்ட தேவர்கள், கடவுளர்கள், ரிஷிகள் முதலியவர்களின் பிறப்பு முறை, செய்கை முறை, ஆயுள் முறை, வாழ்க்கை முறை, நீதிமுறை, புணர்ச்சி முறை முதலியவைகளில் எது - இன்றைக்கு அவர்களாலேயே ஒப்புக்கொள்ளத் தக்கதாய் மனிதத் தன்மையுடையதாய் நடப்புக்கு ஏற்றதாய் இருக்கிறது" என்று குறிப்பிடுகிறார்.

11

இறுதியாகப் பெரியார் தம் பாணியிலேயே "மனிதப் பிறப்பு எப்படியோ நாசமாய்ப் போனாலும் இவர்கள் கூறும் கடவுள்கள் - கந்தன், கணபதி முதலியவர்கள் பிறப்பும் அவதாரக் கதைகளும், பகுத்தறிவுள்ள மனிதன் என்பவனால் சிந்திக்கத் தக்கவையா என்று சிந்திக்க வேண்டுகிறேன்" என்கிறார்.

டி.ஆர். சேஷையங்கார் என்பார் எழுதிய “DRAVIDIAN INDIA"  எனும் ஆங்கில நூலை தமிழில் முனைவர் க. ப. அறவாணன் மொழிபெயர்த்துள்ளார்.

இந்நூல் ஆரியர்-திராவிடர் குறித்த பல அரிய செய்திகளை அளிக்கிறது. அதில் திராவிடக் கட்டடக் கலையைப் பாராட்டுகிறார். ஆரியருக்குக் கட்டடம் கட்டும் திறன் இல்லை என்று சுட்டிக் காட்டுகிறார். இந் தியப் பண்பாட்டில் திராவிட செல்வாக்குத் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கிறது. சுமேரியரும் திராவிடரும் வெற்றிக்கு வகை செய்யும் குதிரைகள் போன்ற வேகமான விலங்குகளைப் பெற்றிருக்க வில்லை. பண்பாட்டில் நாகரிகத்தில் செல்வத்தில் ஆரியரைவிடப் பல மடங்கு உயர்ந்த நிலையில் வாழ்ந்து வந்தனர் என்கிறார். 

ஆரிய - திராவிட நாகரிகக் கலப்பிற்கான காரண மாகத் திராவிடர்களின் வாழ்க்கையை எடுத்துக் காட்டு கிறார். இந்தியப் பூர்வீகக் குடிகள் ஆரிய நாகரிகத்திற்கே அடிப்படைப் பொருள்களை வழங்கினர் எனும் கென்னடி என்ற ஆரியர் கருத்தையும் சேஷயங்கார் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

இத்தகு கருத்துகளின் அடிப்படையில் திராவிடர்- தமிழர் குறித்த தந்தை பெரியாரின் கருத்தைக் கவனிக்க வேண்டும்.

திராவிடரும் தமிழரும் ஒன்றே!

திராவிடர் -தமிழர் என்று சொல்லப்பட்டாலும் வார்த்தை வேறுபாடுகளே தவிர இன வேறு பாடல்ல. திராவிடத்திலிருந்து தமிழ் வந்தது என்றும், தமிழி லிருந்து திராவிடம் வந்தது என்றும் தமிழ் அறிஞர்கள் கூறுவதுண்டு.

தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்தவரை திரு இடம் என்பது தான் திராவிடம் என்று ஆயிற்று என்று கூறுகிறார்.

(17.11.1942 இல் திருவள்ளுவர் நன்னெறிக் கழகத்தில் ஆற்றிய உரையிலிருந்து)

தமிழம் என்பது-த்ரமிள (ம்) த்ரவிட (ம்)- த்ராவிட (ம்) என்னும் முறையில் தமிழம் என்னும் சொல்லே திராவிடம் என்று திரிந்ததாகும் என்கிறார் திராவிட மொழி ஞாயிறு ஞா.தேவநேயப்பாவணார் (ஒப்பியல் மொழி நூல் 2000 ஆண்டு பதிப்பு - பக்கம் 28)

இன்றைய பார்ப்பனர்கள் வேறு- ஆரியர்கள் வேறு என்று கூறுவோரும் உண்டு.

ஆனால் நடைமுறை உண்மைக்கு மாறான கருத்து இது.

மறைமலை அடிகள் போன்ற தமிழ் அறிஞர்கள் ஆரியப் பார்ப்பனர்கள் என்றே குறிப்பிடுகின்றனர். (ஆதாரம் ‘வேளாளர் நாகரிகம்' நூலில் கட்டுரையின் தலைப்பு "ஆரியப் பார்ப்பனர் தமிழையும் சிவத்தையும் இகழ்தல்")

"ஆரியப் பார்ப்பனர்களின் அளவிறந்த கொட் டங்கள்" என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் தனி நூலே எழுதியுள்ளார்.

தந்தை பெரியார் ஆச்சாரியாருக்கும் பதில் கூறும் விதமாக பொருத்தமான விளக்கம் தருகிறார்.

பார்ப்பனர்களை நான் ஆரியர் என்று குறிப்பிட்டு வருவதில் ஒரு பெரிய ஓட்டையைக் கண்டு பிடித்து விட்டதாகக் கருதிக் கொண்டு நமக்கு ஆச்சாரியார் (ராஜாஜி) முட்டாள் பட்டத்தையோ, பைத்தியகாரப் பட்டத்தையோ கட்டி வந்தாலும், ஆச்சாரியார் இந்த ஓட்டையை வேண்டுமென்றே கற்பித்து மக்களை மயக்கப் பேசுகிறார் என்றேதான் கருகிறேன். 

ஏனெனில், பார்ப்பனர் ஆரிய இனத்தின் கலப்பு என்று ஆச்சாரியார் கூறுவதை நாம் ஒப்புக்கொண் டாலும், திராவிடர்களும் ஓர் அளவுக்காவது அதுபோல் இருக்கலாம் என்றாலும் நாம் ஆரியர்- திராவிடர் (அல்லது தமிழர்) என்பதன் கருத்தும் உண்மையும் என்ன என்பதை பலமுறை வெளியாக்கி இருக்கிறோம்.

அதாவது, பார்ப்பனர் தமிழர் கலப்பு உடையவர்கள் ஆனாலும், ஆரிய கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறவர் கள்  ஆவார்கள். அதுவும் தங்களை தங்கள் பிறவியை உயர்த்திக் கொள்ளவும் மற்றவர்களை தாழ்த்திக் கொள்ளுகிறவர்கள். இதனாலேயே இதற்காகவே அவர்கள் தங்களை மற்ற தமிழர்களிடமிருந்து வாழ்க்கை முறையில் பிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லி வருகிறோம். எதுபோல் என்றால் நம் நாட்டில் உள்ள சட்டைக்காரர்கள் அல்லது ஆங்கிலோ இந்தியர்கள் என்கின்ற பிரிவார் அய்ரோப்பியர் அல் லர், வெள்ளைக்காரர்களும் அல்லர். தமிழர் பெண் களுக்கும் அய்ரோப்பிய ஆண்களுக்கும் பிறந்தவர் கள், அப்படி இருந்தாலும் அவர்கள் தகப்பனையே முக்கியமாய் கருதி, தாயை மறந்து அய்ரோப்பிய கலாச்சாரத்தை அதாவது பழக்க வழக்கம் மனப் பான்மை ஆகியவற்றைக் கையாண்டு தங்களை சட் டைக்காரர்-இந்தோ-அய்ரோப்பியன் என சொல்லிக் கொண்டு வெள்ளையன் காலத்தில் உயர் வாழ்வு, உயர்ந்த சலுகைப் பெற்று, துரை என்னும் பெயரால் தொப்பி போட்டுக்கொண்டு வாழ்ந்ததைப் போல், இந்தப் பார்ப்பனர்கள் தங்களை ஆரியப் பட்டமாகிய பிராமணர்கள், அய்யர், ஆச்சாரியார், ரிஷிகள் முதலிய பட்டத்தை வைத்துக்கொண்டு, ஆரிய சின்னமாகிய பூணூலை தரித்துக்கொண்டு ஆரிய உடை அணிந்து கொண்டு, ஆரிய பழக்க வழக்க நடப்பு மனப்பான்மை யைக் கொண்டு தனிச் சலுகை, தனி உரிமை முதலியவைகளை அனுபவித்துக்கொண்டு நம்மை தலையெடுக்க வொட்டாமல் செய்து வருகிறார்கள் என்று சொல்லி வந்திருக்கிறேன். (“ராஜாஜியின் பேயாட்டம்” எனும் தலைப்பில் பெரியார்- விடுதலை 21.6.1956)

இதே கருத்தை அண்ணா அவர்களும் இவ்வாறு கூறுகிறார்.

தமிழர் என்றால் தமிழகத்திலே பிறந்து தமிழ் பேசும் அனைவரும் தமிழரே என்று. ஆனால் உள்ளூர உணர்வர். தமிழர் என்றால், தமிழ் மொழியினர் என்பது மட்டுமல்ல, மொழி, வழி, விழி மூன்றிலும் தமிழர்! நோக்கம் நெறி இரண்டும், (விழி, வழி) தமிழருக்குத் தனி! ஆரிய நோக்கம் வேறு, மார்க்கம் வேறு! தமிழர் எனில் தனி இனம் என்ற கருத்தே தவிர, மொழியிலே மட்டுமல்ல!

(-அறிஞர் அண்ணா விடுதலைப் போர் பக்கம்-30) 

ஆரியராவது, திராவிடராவது என்று தங்களுக்கு நெருக்கடி வரும் பொழுது தட்டிக்கழிப்பார்கள். இது வெள்ளைக்காரன்கட்டி விட்ட கைச்சரக்கு என்று கேலி கூடப் பேசுவார்கள். ஆனால் நடைமுறையில் அவர் கள் எப்படி இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்களில் முக்கியமானவரான கோல்வால்கர் -  BUNCH OF THOUTHTS  எனும் தமது நூலில் என்ன கூறுகிறார்?

"நம்முடைய மக்களின் மூலாதாரம் எது என்பது சரித்திர மேதைகளுக்கே தெரியவில்லை. ஒரு வழியில் நாம் அநாதிகள். துவக்கம் இல்லாதவர்கள். பெயர் இல்லாமல் வாழ்ந்திருக்கிறோம். நாம் நல்லவர்கள்; நாம் அறிவுத்திறம் கொண்டவர்கள், இயற்கையின் விதி களை அறிந்தவர்கள் நாம்தான். ஆன்மாவின் விதி களை அறிந்தவர்களும் நாம்தான். மனிதனுக்கு எவை எவைகள் நன்மை பயக்குமோ, அவை அவைகளை எல்லாம், மனித சமூகம் நன்மை பெறுவதற்கே வாழ்க்கைக்குக்கொண்டு வந்தது நாம்தான்! அப்போது நம்மைத்தவிர, மற்றவர்கள் எல்லாம் இரண்டு கால் பிராணிகளாகத்தான் அறிவற்றவர்களாகவே இருந்த னர். எனவே தனிமைப்படுத்தி நமக்குப் பெயர் எதை யும் அவர்கள் சூட்டவில்லை. சில நேரங்களில்-நமது மக்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட நாம் ஆரியர்கள் அதாவது அறிவுத்திறம் மிக்கவர்கள் என்று அழைக்கப்பட்டோம். நம்மைத் தவிர மற்ற வர்கள் எல்லாம் மிலேச்சர்கள்.

(The origin of our People is unknown to scholors of history. In a way we are anadhi; without a beginning or we existed when there was no need of any name. We were the good, the enlightened people. We were the people who know about laws of nature the laws of spirit. We had brought into actual life almost every thing that was beneficial to maknkind. Then the rest of humanity was just bipeds and no distinctive name was given to us. Sometimes in trying to distinguish our people from others, we ere called the enlightened- the Aryas-and the rest the melacher.

- (From Bunch of Thoughts)

இன்றைய நிலை

டாக்டர் வி.அய்.சுப்பிரமணியம் அவர்கள் 2000-2001 ஆம் ஆண்டில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியைச் சந்தித்து “திரவிடியன் என்சைக்ளோபீடியா' என்ற நூலை அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

இந்நூலைப் பெற்றுக்கொண்ட ஜோஷி, இந்நூலின் பெயரிலுள்ள 'திரவிடியன்' என்ற சொல்லை நீக்கி விடலாமன்றோ என்றார். இதற்குப் பதில் உரைத்த டாக்டர் வி.அய்.சுப்பிரமணியம் அமைச்சரை நோக்கி, நீங்கள் நாட்டுப்பண்ணிலிருந்து 'திராவிடம்' என்ற சொல்லை நீக்கிவிடுங்கள்; நானும் திராவிடக் களஞ்சியம் என்பதிலிருந்து 'திராவிடம்' என்ற பெயரை நீக்கிவிடுகிறேன் என்றார். இது 2003 பிப்ரவரியில் வெளியான DLA News' இல் காணப்படுகிறது.

ஒரு ஒன்றிய அமைச்சராக இருக்கக்கூடியவர். ஒரு  வரலாற்றுப் பெயரை மறைக்க விரும்புவதை இங்குக் கவனிக்க வேண்டும்.

"திராவிடியன் என் சைக்ளோ பீடியா" எனும் தலைப்பில் ஒரு தொகுப்பு வெளிவருவதை அவர்கள் விரும்பவில்லை என்பதுதான் உண்மை.

ஆனால் அதே நேரத்தில் ஆரியர்கள்தான் அறி வாளிகள், மற்றவர்கள் மிலேச்சர்கள் என்று அவர் சாந்திருக்கும் அமைப்பின் நிறுவனர் கோல்வால்கர் எழுதியுள்ளது குறித்து அவர்கள் உள்ளத்தில் பெரும் மகிழ்ச்சி நீச்சல்தான்.

ஆரியப் பார்ப்பனர்கள் தங்களை திராவிடர்கள் என்றோ தமிழர் என்றோ சொல்லிக்கொள்வதில்லை. காரணம் அவர்களுக்கு அந்த உணர்வு என்பது கிடையாது.

எடுத்துக்காட்டாக தமிழ் செம்மொழியாக அங்கீ கரிக்கப்பட்ட நிலையயில்,

அது பற்றி 'தினமலர்' வாரமலர் (13.6.2009) என்ன எழுதிற்று? தமிழ்மொழியை செம்மொழி ஆக்கினால் ஒரு வேளை கஞ்சிக்கே வழியில்லாதவர்களுக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கப் போகிறது பாருங்கள் என்று ஏகடியம் செய்தது கவனிக்கத்தகுந்ததாகும்.

"பெங்களுரூ திருவள்ளுவர் சிலை திறந்திட்டோமா, இல்லையா - அதுக்கப்புறம் டெல்டா பகுதிகளில் முப்போகம் விளையாதா என்ன?'

(தினமலர் 18.8.2009 பக்.10) என்று கிண்டல் செய்வதையும் கவனிக்க வேண்டும்)

யதார்த்தமான இந்த நிலையின் அடிப்படையில் தான் இந்த நாட்டில் திராவிடர் இயக்கம் தோன்றியது. பார்ப்பனர் எதிர்ப்பு என்பது ஒரு ஆதிக்கத்தை எதிர்த்தே பெரும்பாலான மக்களுக்காக உரிமைகளை, சுயமரியாதையை, சமத்துவத்தை நிலைநாட்டவே யாகும். அது ஒரு காலத்திலும் தனிப்பட்ட பார்ப்பன பகைமையாக இருந்ததில்லை.

தேர்தலில்கூட வெளிப்படையாக பார்ப்பனர்- பார்ப்பனர் அல்லாதார் என்ற அடிப்படையில் களம் அமைவதை நாடு பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. 

இங்கு நடைபெறுவது வெறும் அரசியல் போராட் டமல்ல. ஆரியர்-திராவிடர் போராட்டமே என்பதுதான் தந்தை பெரியார் அவர்களின் கணிப்பு ('விடுதலை' 22.5.1967)

தேவர்கள், அரக்கர்கள் போராட்டமே தமிழ்நாட் டின் நிலை என்று சி.ராஜகோபாலச்சாரியார் (18.9.1953 அன்று சென்னை திருவொற்றியூரில் உரையாற்ற வில்லையா?

இந்தியத் தேசிய கீதத்திலும் 'திராவிட' இருக்கிறது. மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ் வாழ்த்திலும் 'ஆரியம்' இடம்பெற்று இருக்கிறது. வரலாறு வரலாறு தானே - மறைக்க முடியுமா?


த்ரவிட விஷயம் - காஞ்சி சங்கராச்சாரியர் என்ன சொல்லுகிறார்?

 

 (இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

தொகுப்பு: மின்சாரம்

5

ஆரியராவது - திராவிடராவது, எல்லாம் கட்டுக் கதை - எல்லாம் வெள்ளைக்காரன் ஏற்பாடு செய்த பிரித்தாளும் சூழ்ச்சி என்று பார்ப்பனர்கள் திசை திருப்பப் பார்க்கின்றனர்.

ஒரு காலத்தில் இது அவர்களுக்கு வசதியாக இருந்தது - இப்பொழுது எதிர்ப்பதமாக ஆகிவிட்டது; அதனால் இப்படி எல்லாம் பேசவும், எழுதவும் ஆரம்பித்துள்ளனர் - ஆளுநர் ஆர்.நாராயண ரவி உட்பட.

சங்கராச்சாரியாரே திராவிடர் பற்றி எழுதி இருக் கிறாரே - பார்ப்பனர் பால கங்காதர திலகரே எழுதி யுள்ளாரே. பிரபல வரலாற்றாசிரியர் ரொமீலா தாப்பரே ஆதாரத்துடன் அடித்துச் சொல்லியுள்ளாரே - இதோ பார்ப்போம்:

சங்கராச்சாரியார்

தமிழ் என்பதுதான் திராவிட (திராவிடம் என்பது) முதல் எழுத்தான ‘த' என்பது ‘த்ர' என்று இருக்கிறது. இப்படி ‘ர' காரம் சேருவதுச்மஸ்கிருத வழக்கு. மேலே சொன்ன சுலோகத்தில் வருகிற ‘தோடகர்' என்ற பேரைக்கூட ‘த்ரோடகர்' என்று சொல்லுகிற வழக்கம் இருக்கிறது. இதனால் சில பேர் ஸம்ஸ்க்ருதத்தையே ‘ரொம்ப' ஸம்ஸ்கிருதமாக்கி ‘தேகம்' என்பதைக்கூட ‘த்ரேகம்' என்று சொல்கிறார்கள்!

த-மி-ழ் என்பதில் 'த', 'த்ர' வாயிருக்கிறது. 'மி' என்பது 'வி' என்றாயிருக்கிறது. 'ம' வும் 'வ' வும் ஒன்றுக்கொன்று மாறுவதற்கு பிலாலஜிக்காரர்கள் (மொழி ஒப்பு இயல் நிபுணர்கள்) நிறைய உதாரணம் கொடுப்பார்கள். ஸம்ஸ்கிருதத்துக்குள்ளேயே இதில் ஒன்று மற்றதாகும். உதாரணமாக 'சாளக்ராவம்' என்பது தான் 'சாளக்ராமம்' என்றாயிருக்கிறது.

சம்ஸ்க்ருதத்தில் 'மண்டோதரி' என்பதைத் தமிழில் 'வண்டோதரி' என்கிறோம். 'த்ரவிட' என்பதையே 'த்ரமிட' என்றும் சொல்வதுண்டு. 'ல வும் 'ள' வும் மாறு வது சகஜம். மதுரை, ராமநாதபுரம் ஜில்லாக்களில் போனால் 'வாளைப்பளத்தில் வளுக்கி விளுந்திடப் போறே' என்று சொல்வார்கள். 'ழ'வுக்கும் 'ள'வுக்கும் ரொம்பக் கிட்டத்தில் உள்ளது தான் 'ட'வும்.

6

வேதத்திலேயே 'அக்னிமீடே' என்று வருவது 'அக்னிமீளே' என்றும் மாறுகிறது. இப்படித்தான் 'தமிழ்' என்பதில் உள்ள 'ழ்' 'த்ரவிட்' என்பதன் 'ட்' ஆக இருக்கிறது. த - 'த்ர'வாகவும், மி - 'வி' யாகவும், ழ் - 'ட்' டாகவும் - மொத்தத்தில் 'தமிழ்' என்பது 'த்ரவிட்' என்றிருக்கிறது.

இப்போது எல்லாவற்றிலும் தமிழ் சம்பந்தம் காட்டினால் ஒரு ஸந்தோஷம் உண்டாவதால், த்ரவிடா சார்யாரைச் சொல்லும் போது அவருக்குத் தமிழ் சம்பந்தம் காட்டி நாமுந்தான் ஸந்தோஷப்படு வோமே என்று தோன்றிற்று; சொன்னேன்.

- “கல்கி", 9.4.2017

சங்கராச்சாரியார் விளக்கம் ஒரு பக்கம் இருக்கட்டும் - திராவிடம் என்பதை ஒப்புக் கொண்டுள்ளதை ஆர்.என்.ரவிகள் தெரிந்து கொள்ளட்டும்.

ரிக் வேதத்தில் திராவிட மொழி!

(ரொமீலா தாப்பர்)

பண்டைய இந்திய வரலாற்றை மறு வாசிப்புக்கு உட்படுத்திய இந்திய வரலாற்றாசிரியர்களில் முதன்மை யானவர் ரொமிலா தாப்பர். டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர். ''ஹிஸ்ட்ரி ஆஃப் இந்தியா', 'அசோகா அண்டு தி டிக்ளைன் ஆஃப் தி மவுரியாஸ்' போன்ற வரலாற்று ஆய்வு நூல்களை எழுதியவர். அவருடனான பேட்டியின் சில முக்கியப் பகுதிகள் இங்கே!

உங்களுடைய சமீபத்திய புத்தகமான 'தி பாஸ்ட் ஆஸ் பிரசண்ட்-அய் வாசிக்கும்போது, வரலாற்று ஆய்வின் இன்றைய போக்கையும் இந்திய வரலாறு குறித்த வெகுஜனப் புரிதலையும் ஒருவிதமான வருத்தத்தோடு அவதானிப்பதாகத் தோன்றுகிறது.

50 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி நிறுவனங்களில் வரலாற்றுப் பாடம் கற்றுத்தரப்பட்ட விதமே வேறு. அப்போது வரலாற்றைப் புதிய பார்வையில் எழுதி யவர்கள் பல எதிர்ப்புகளைச் சந்தித்தோம். அந்தவகை யில் இன்று ஓரளவு” ஆரோக்கியமான மாற்றம் வந்துள் ளது. இருப்பினும், பொதுமக்களிடையே காலாவதியான வரலாறும் வரலாறே அல்லாதவையும்தான் இன்னமும் வரலாறாக இருக்கின்றன. கடந்த காலத் தகவல்களின் குவியல்தான் வரலாறு என இன்றும் பலர் நம்புகின்றனர். பலவிதமான மூலங்களைக் கண்டறிந்து, அவற்றைக் குறுக்குவிசாரணை செய்து, ஆதாரங்களின் நம்பகத் தன்மையைச் சோதித்து அதன் அடிப்படையில்தான் தகவல்களைத் திரட்ட வேண்டும். 'வரலாற்று முறைமை' என நாங்கள் அழைப்பது இதைத்தான்..

முறையான பயிற்சி இன்றி பொதுவான ஆர்வத்தில் வரலாற்றைத் தேடுபவர்களுக்கும், தர்க்கரீதியாக சமரச மின்றி வரலாற்றைப் புரிந்துகொள்ளும் வரலாற்றாசிரி யருக்கும் துல்லியமான வேறுபாடு உள்ளது என்கிறீர் கள் அல்லவா?

நிச்சயமாக - நான் சொன்னது எல்லா வரலாற் றுக்கும் பொருந்தும். அதிலும், பண்டைய இந்திய வரலாற்றில் இந்தச் சிக்கல் கூடுதலாகவே இருக்கிறது. ஒரு டஜன் பண்டைய இந்திய வரலாற்றுப் புத்தகங் களைப் படித்துவிட்டால் நீங்கள் நிபுணராகி விட முடியாது, அதன் மூலங்கள் மற்றும் அக்கால கட்டத்தில் வழக்கத்திலிருந்த மொழிகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, மவுரியக் கல்வெட்டுகளை ஆராய பிராகிருதம் தெரிந்திருக்க வேண்டும். அதனு டன் தொடர்புடைய கவுடில்யரின் (சாணக்கியர்) அர்த்த சாஸ்திரத்தை வாசிக்க சம்ஸ்கிருதமும் சுற்றிருக்க வேண்டும். ஓரளவாவது தொல்லியல் தெரிந்திருக்க வேண்டும்.

7

தற்காலத் தொல்லியல் ஆய்வுகளில் அறிவியல் முறைகள் பல பின்பற்றப்படுகின்றன. இதனால் தொல் லியலை என்னால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அடுத்தபடியாக முழுமையாகப் வெறுமனே மொழி அறிவையும் தாண்டி மொழியியல் தெரிந்திருக்க வேண்டும். சம்ப காலமாகப் பெரிதும் விவாதிக்கப்படும் ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன்

நாங்கள் மாணவர்களாக இருந்தபோது ரிக் வேதத்தின் ஒரே மொழி இந்து ஆரிய மொழி. ஆனால், இன்றைய வேத ஆய்வாளர்களைக் கேட்டுப்பாருங் கள். ரிக் வேதத்தில் திராவிட மொழியும் உள்ளதென்று அவர்களில் பெரும்பாலோர். சொல்வார்கள். வரலாற் றாசிரியரின் பார்வையை இது புரட்டிப்போடுகிறதல் லவா? “ஒரே ஒரு மொழியை மட்டுமே பேசிய மக்களின் மொழியில் எழுதப்பட்ட ஒரு நூல் இங்குள்ளது" என இனி எவரும் சொல்ல முடியாது.

நீங்கள் பேசுவதிலிருந்து கடந்த காலம் என்பது ஒற்றைத் தன்மை கொண்டதல்ல என்பது புரிகிறது. சாமானிய மக்கள் மனதில் சில தவறான, அபாயகரமான விஷயங்கள் புகுத்தப்பட்டுள்ளன. சில மதம் சார்ந்த நடவடிக்கைகளை, சில இன அடையாளங்களை, சில குழுக்களை ஒற்றைத் தன்மையிலேயே புரிந்துவைத்து உள்ளனர்...

பொதுமக்களிடையே பரப்பப்படுவதைப் பற்றி நான் இப்போதுவிளக்கப்போவதில்லை. ஆனால் ஒன்றைக் கவனிக்க வேண்டும். 'மத்திய ஆசியாவி லிருந்து ஈரான் வழியாக இந்தியா வந்தடைந்ததுதான் ஆரிய மொழி என்றுதான் நெடுங்காலமாகச் சொல்லப் பட்டது. ஆனால், 'ஆரிய மொழி பேசியவர்கள் இம் மண்ணின் மைந்தர்களே' எனும் கருத்து சமீபகால மாகப் பரப்பப்படுகிறது. சிலர் ஹரப்பா நாகரிகத்தைத் தோற்றுவித்ததே ஆரியர்கள்தான் என்கின்றனர். ஒட்டுமொத்தமாக ஆரியர் அல்லாத கூறுகளே இந்திய நாகரிகத்தில் இல்லை எனச் சொல்லத் தொடங்கி விட்டனர். பல காரணங்களுக்காக இதை நான் மறுக்கிறேன்.

புனிதப்படுத்துதல் என்பதாலா?

8
ஆம்! புனிதமான ஆரியவாதம். அதில் ஒரு மூலம் மட்டும் முன்னிறுத்தப்படுகிறது. பன்முகத் தன்மைகள் விளிம்புக்குத் தள்ளப்படுகின்றன. மொழியியல் மற்றும் தொல்லியல் அடிப்படையில் இதை நாங்கள் முற்றிலுமாக மறுக்கிறோம். ஹரப்பா நாகரிகத்துக்குப் பின்தோன்றியதுதான் ரிக் வேதம் என்பதே எங்களு டைய வாதம். ஏனென்றால், ஓமனில் ஹரப்பா பண் பாட்டின் தடங்கள் காணப்படுகின்றன. அவர்களுக்கு மெசபடோமியாவோடும் தொடர்பு இருந்திருக்கிறது.

ஆனால், இத்தகைய கூறுகள் ரிக் வேதத்தில் பிரதிபலிக்கவில்லை. கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியிலும் இரண்டாம் நூற்றாண்டின் தொடக் கத்திலும் ஹரப்பா கலாச்சாரம் அக்கம்பக்கத்தில் இருந்த பிற கலாச்சாரங்களோடு தொடர்பு கொண்ட தாகத் தெரியவருகிறது. ஆனால், ரிக் வேதமோ கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் மத்திய காலம் தொடங்கி இறுதிவரையில்தான் தொகுக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் சாம்பல் நிறப் பானைக் கலாச்சாரம், கருப்பு மற்றும் சிவப்புப் பானைக் கலாச்சாரம், பெருங் கற்கள் கலாச்சாரம் எனப் பல விதமான கலாச்சாரங்கள் இருந்துள்ளன. இப்படிப் பலதரப்பட்ட கலாச்சாரச் சூழலில்தான் ஆரிய மொழி பேசிய மக்கள் இந்தியா வில் குடியேறினர்.

அதிலும் ஹரப்பா நகரங்களின் கலாச்சாரம் அதி நவீனமானது. அம்மக்களுக்கு எழுத்தறிவும் இருந்தது. மறுபுறம் எழுத்தறிவற்ற, நகர்ப்புற வாழ்க்கை முறை அறியாத, விவசாயத்தை மட்டுமே நம்பி இருந்த ரிக் வேதச் சமூகம். இது போன்ற அடிப்படையான வேறு பாடுகளை யாரும் மறந்துவிட வேண்டாம்! 

தமிழில் சுருக்கமாக: ம.சுசித்ரா

நன்றி: ஃப்ரண்ட்லைன்

நன்றி: ‘தி ஹிந்து, 28.9.2015, பக். 7)

ரொமீலா தாப்பர் இந்தியாவில் நிபுணத்துவம் வாய்ந்த வரலாற்று ஆசிரியர். திராவிடர் - ஆரியர் பற்றிய இவரின் ஆய்வுக்கு ஆரியப் பார்ப்பனர்களின் பதில் என்ன?

ஆரியர்கள் குறித்து 

பாலகங்காதர திலகர்

9

பாலகங்காதர திலகர் பத்திரிகை ஆசிரியராக இருந் தவர், ஆரியர்கள் பற்றிய பல வரலாற்றுச் செய்திகளை அவர் தனதுமராத்தா இதழில் எழுதியுள்ளார்

"இந்தக் கோட்பாட்டில், ஆரியர்கள் ஆர்டிக் வட துருவத்தை ஒட்டிய பகுதி(இன்றைய சைபிரியா பகுதியில் இருந்து வந்தவர்கள் என்று அவர் கூறினார். கி.மு. 8000 இல் ஏற்பட்ட பனிப் பிரளயத்தால் கடுமையான குளிர் நிலவியதால் அவர்கள் வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். பனி யுகத்திற்கு முன்பு ஆரியர்கள் வட துருவத்திற்கு ஒட்டிய நிலப்பகுதிகளில் வாழ்ந்தனர் பனியுகம் துவங்கியதால் அவர்கள் (ஆரியர்களின்) இடம் பெயர்ந்து புதிய குடியேற்றங்களுக்கான நிலங்களைத் தேடி அய்ரோப்பா மற்றும் ஆசியாவின் வடக்குப் பகுதி களுக்கு இடம் பெயர வேண்டியிருந்தது."

எழுதியிருப்பவர் ஆர்.எஸ்.எஸின் முன்னோடி யான பாலகங்காதர திலகர்.

ஆரியர்களின் பூர்வாங்க வரலாற்றைப் படம் பிடித்துள்ளார்.

இவரையும் திராவிட இயக்கத்திலோ வெள்ளைக் காரர் பட்டியலிலோ சேர்க்கப் போகிறார்களோ!

ஊரையும் உலகத்தையும் வெகுநாள் ஏமாற்ற முடியாது. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது நல்மொழி.