வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

திராவிடர் கழகமா? தமிழர் கழகமா?

03.05.1947 - குடிஅரசிலிருந்து... -


திராவிடர் கழகத்தில் மற்ற இயக்கங்களில் இல்லாத கொள்கைகள் இருக்கின்றன. காங் கிரஸ் வர்ணாச்சிரம தர்மத்தை ஆதரிக்கிறது. ஜாதிப் பிரிவுகளையும் பல உருவக் கடவுள்கள் ஆராதனையும் அழிக்க முற்படவில்லை. திராவிடர்களுக்குப் பல ஜாதிகளும், பல கடவுள்கள் ஆராதனையும் பண்டைக் காலத்திலே இருந்ததில்லை. இந்த நாட்டுச் சொந்த மக்கள் நாலாஞ் ஜாதியைச் சேர்ந்த வர்களென்றும், சூத்திரர்கள் (அடிமைகள், தாசி மகன்) என்றும் இழிவுபடுத்தப்படுகிறார்கள். வடநாட்டு ஆதிக்கத்தால் நாடு பொருளாதாரத் துறையில் நலிவடைகிறது. வளம்மிகுந்த நாட்டில் வறுமை தாண்டவமாடுகிறது. நோய் நாடி, அதுமுதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி. ஆவனசெய்து திராவிட சமுகத்தைக் காக்கவே திராவிடர் கழகம் தோன்றிற்று.

திராவிடர் கழகம் பார்ப்பனரல்லாதார் அதாவது ஆரியரல்லாதாருடைய கழகம். இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவு மொழிகள் பேசும் மக்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவைகள்; அவர்கள் வாழ்வதற்குரியதாக ஆக்குவதற்கு திராவிடர் கழகம் தோன்றிற்று. வேறு எந்தப் பெயரால் அழைத்தாலும் இவ்வியக்கத்தின் கொள்கை களை விளக்கத் தவறும். இதை ஏன் தமிழர் கழகம் என்று அழைக்கக் கூடாது என்று சிலர் ஆராயாமல் கேட்டுவிடுகிறார்கள் தமிழர் கழகம் என்று அழைத்தால் மற்ற திராவிட மொழிகள் பேசும் மக்களை விலக்கி நிற்கும். பார்ப்பனர்களும் தமிழ் மொழி பேசுவதால் தமிழர் கழகத்தில் இடம் பெறுவார்கள். எனவே தமிழர் கழகம் ஆரியத்தையும் பார்ப்பனியத் தையும் அழிக்கத் தவறிவிடும். திராவிட மக் களைப் பார்ப்பனியப் பிடியிலிருந்து விடுவிக்க முடியாமல் போய்விடும். திராவிட மொழிகளுக் குள்ளே மிகவும் ஒற்றுமையிருக்கிறது. 5 மொழி பேசிவரும் திராவிட மக்களுக்குத் தனி நாகரிகம், தனி கலை, தனி வாழ்க்கை முறை இருக்கின்றன. திராவிட நாடு ஆங்கிலேய ஆட்சிக்கு உட்படும் வரையில் தனித்தே இருந்தது. எனவே, திராவிட நாடு திராவிடருக்குரியதாகத் திராவிட நாட் டைத் திராவிடர் அடையவேண்டும். திராவிட நாட்டிற்குத் தனி அரசியல் உண்டு. திராவிட நாட்டில் மொழி வாரியாக தனி ஆட்சியிருந்தாலும் 5 மொழிகள் பேசும் மக்களின், பிரதிநிதிகள் கொண்ட ஒரு கூட்டுச் சபை அமைக்கவேண்டும். வெளிநாட்டு விவகாரங் களை இந்த கூட்டுச்சபையே கவனித்துவரும். எனவே திராவிட நாட்டிற்கும், திராவிட மக்களுக்கும், திராவிடர் கழகம் இன்றியமை யாததாக இருக்கின்றது.

(01.05.1947 அன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் மாணவர் பிரசார குழு பயிற்சிப்  பாசறையில் நடத்திய வகுப்பின் உரை தொகுப்பு.)

- விடுதலை நாளேடு, 16. 8 .19

திங்கள், 12 ஆகஸ்ட், 2019

திராவிடர்கள்

தந்தை பெரியார்


திராவிடர் கழகமானது இனத்தின் பேரால், பிறவியின் காரணமாய், நாட்டின் உரிமையின் காரணமாய், ஆரியர்களால் இழிவு செய்யப்பட்டு அடக்கி ஒடுக்கி தாழ்த்தி வைத்திருக்கும் மக்களின் விடுதலைக்கும் முன்னேற்றத் திற்கும் பாடுபடும் ஓர் அமைப்பு (ஸ்தாபனம்) ஆகும்.  விளக்கமாக சொல்ல வேண்டுமானால் இந்து மத (ஆரிய) தர்மப்படி 4ஆம் வர்ணஸ்தர்களாகவும் அல்லது 5ஆம் அவர்ணஸ்தர்களாகவும் ஆக்கப் பட்டிருக்கும் சூத்திரர்கள் எனப்படுபவர்கள் எல்லாருடைய விடுதலைக்கும் முன்னேற் றத் திற்கும் உழைக்கும் கழகமாகும்.

திராவிடர்களைத்தான் சூத்திரர்கள் என்பதாக இந்து மதத்தின் பேரால் ஆரியர்கள் அழைத்து வருகிறார்கள் என்பதற்குப் பல ஆதாரங்கள் இருந்து வருகின்றன.  உதாரணமாக மனுதர்ம சாஸ்திரத்தில் 10ஆம் அத்தியாயத்தில் சங்கர ஜாதி என்ற தலைப்பின்கீழ் ஜாதி தர்மத்தை அனு சரிக்காதவர்கள், அனுசரிக்காதவர்களுக்குப் பிறந்தவர்கள் திராவிடர் என்ற பெயர் கொண்டவர் என்றும், சூத்திரன் பிராமண ஸ்தீரியைப் புணர்ந்தால் பெறப்படும் குழந்தைகள் பாக்கிய ஜாதியர் என்றும், அதாவது சமீபத்தில் வரக்கூடாத சண்டாள ஜாதி என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  மற்றும் பிராமணர்களுக்கு சூத்திர ஸ்தீரிகளிடத்தில் பிறந்த குழந்தைகள் ஆர்யா வர்த்த தேசத்தில் செம்படவன் என்ற ஈன ஜாதியாகச் சொல்லப்படுவார்கள் என்று குறிப் பிடப்பட்டிருக்கிறது.  மற்றும் ஜாதி தர்மம் தவறிய கலப்பினால் பிறப்பவர்களால்தான் தோல் வேலை செய்யும் (சக்கிலி) ஜாதியும், பிணத்தின் துணியைப் பிடித்துக் கொள்கிறவர்களும், எச்சில் சாப்பிடுகிறவர்களுமான (பறையர்) ஜாதியும் ஏற்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. "திராவிட தேசத்தை ஆண்டவர்கள் சூத்திரர்களாய் விட்டார்கள்" என்று தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது.  இது மனு 10ஆம் அத்தியாயம் 44ஆம் ஸ்லோகம் ஆகும்.  மற்றும் "மிலேச்ச பாஷை பேசுகிறவர்கள் அனைவரும் தஸ்யூக்கள் என்று சொல்லப்படுவார்கள்" என்று தெளிவாக விளக்கப் பட்டிருக்கிறது.  இது 10ஆம் அத்தியாயம் 45ஆம் ஸ்லோகம்.  தஸ்யூக்கள் என்றால் திருடர்கள் என்ற கருத்தும் அதிலேயே கீழே காட்டப்பட்டிருக்கிறது.

இதில் மற்றொரு விசேஷம் என்ன வென்றால் திராவிடன் என்கிற பெயரைப் போலவே ஆந்திரன் என்ற பெயரும் மனு தர்மத்தில் காணப்படுகிறது.  அதாவது காட்டிற்குச் சென்று மிருகங்களைக் கொன்று நாட்டில் கொண்டு வந்து விற்பவன் ஆந்திரன் என்று கூறப்பட்டிருக்கிறது.  (அத்தி யாயம் 10 - ஸ்லோகம் 48) எனவே திராவிடர்கள், ஆந்திரர்கள் என்பது மாத்திரமல்லாமல், கீழான, இழிவான, தீண்டப்படாத திருடர்களான ஜாதியார்கள் என்பதை மனுதர்ம சாஸ்திரம் நன்றாக வலியுறுத்துகிறது என்பது 10ஆம் அத்தியாயத்தில் சங்கர ஜாதி என்ற தலைப்பில் நன்றாக விளக்கப்பட்டிருக்கிறது.

மற்றும், "இவர்கள் அனைவரும் பட்டணத்துக்கும் ஊருக்கும் வெளியில் மரத்தடி, தோப்பு, மயானத்திற்குச் சமீபமான இடம் ஆகிய இடங்களில் இழி தொழிலைச் செய்யும் மக்கள் என்று யாவருக்கும் தெரியும்படியாக வாசம் செய்ய வேண்டியது" என்று 50ஆம் ஸ்லோகத் தில் கூறப்படுகிறது.  இப்படிப்பட்ட திராவிடர்களான மக்கள் "நாயும் கழுதைகளும்தான் வளர்க்க வேண்டியது "மாடு முதலியன வைத்துக் கொண்டு ஜீவிக்கக் கூடாது" என்று 51ஆம் ஸ்லோகம் கூறுகிறது.

52- முதல் 57ஆம் ஸ்லோகம் வரையில் என்ன கூறப்படுகிறது தெரியுமா? திராவிடத் தோழர்களே!  கவனியுங்கள்.  "இவர்கள் பிணத்தின் துணியையே உடுக்க வேண்டும்.  உடைந்த சட்டியில் அன்னம் புசிக்க வேண்டும்.  உலோகப் பாத்திரங்களை உபயோகிக்கக் கூடாது.  இரும்பு, பித்தளை ஆகியவகைகளால் செய்யப்பட்ட நகைகளையே அணிய வேண்டும். இவர்கள் ஜீவனத்துக்காக எப்போதும் வேலை தேடிக்கொண்டே திரிய வேண்டும். நல்ல காரியம் நடக்கும் போது இவர்களைப் பார்க்கக் கூடாது. இவர்களோடு பேசக்கூடாது. இவர்களைத் தங்கள் ஜாதிக்குள்ளாகவே மணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்த வேண்டும். இவர்களுக்கு நேரே எதுவும் கொடுக்கக் கூடாது. உடைந்த பாத்திரத்தில் அன்னம் போட்டு வைக்க வேண்டியது. ஊருக்குள் இரவில் சஞ்சரிக்க விடக்கூடாது" என்றும் இப்படிப்பட்ட ஈன ஜாதியார்கள் நல்ல வேடம் தரித்திருந்த போதிலும் அவர்களை ஈனர்கள் என்றே கருதவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒரே ஒரு விமோசனம், அதென்ன தெரியுமா? அதுதான் ஏழெட்டு வருஷங்களுக்கு முன்பு காந்தியார் இங்கு வந்தபோது சொன்ன மார்க்கம். அதாவது ஒரு சூத்ர ஸ்த்ரீ வயிற்றில் பிராமணனுக்கு விவாக முறைப்படி பிறந்த பெண் மறுபடியும் பிராமணனையே மணந்ததின் மூலம் அவள் வயிற்றில் பிறந்து இப்படியாக 7 பிறவி பிறந்தால் 7ஆம் தலைமுறையில் பிராமண ஜாதி ஆகலாம் என்பதுதான். இதுதான் காந்தியார் தமிழ்நாட்டிற்கு வந்தபோது திருப்பூரில் சொன்னது. மற்றும் கடைசியாகச் "சூத்திரன் பிராமண னுடைய தொழிலைச் செய்வதாலேயே பிராமணன் ஆக மாட்டான். எப்படி ஒரு பிராமணன் எந்த விதமான இழிவான தொழிலைச் செய்தாலும் அவன் பிராமணனே ஒழிய சூத்திர ஜாதி ஆகமாட்டானோ அதுபோல ஒரு சூத்திரன் எவ்வளவு மேலான பிராமணன் தொழிலைச் செய்தாலும் பிராமணன் ஆகமாட்டான். இது பிரம்மாவினால் நிச்சயிக்கப்பட்ட உண்மை யாகும், தத்துவமாகும்."  (அத்தியாயம் 10.  ஸ்லோகம் 713)

பிராமண தர்மம்

பிராமணன் கீழான தொழிலைச் செய்த போதிலும் பயிரிடும் தொழிலை (உழுவதை) கண்டிப்பாய்ச் செய்யக் கூடாது. அதைச் செய்யாவிட்டால் ஜீவனத்திற்கு  மார்க்க மில்லை என்கின்ற காலத்தில்  அந்நியனைக் கொண்டு செய்விக்கலாம். (அத்தியாயம் 10. ஸ்லோகம் 83)

ஏனெனில் அந்தப் பிழைப்பு இரும்புக் கலப்பையையும் மண் வெட்டியையும் கொண்டு  பூமியை வெட்ட வேண்டிய தாகும். ஆகையால் பிராமணர் உழுது பயிரிடுதல் கூடாது என்பதாகும். (அத்.10.சு.84)

தாழ்ந்த ஜாதியான் மேலான ஜாதியானின் தொழிலைச் செய்தால் அவனுடைய பொருள் முழுமையும் பிடுங்கிக் கொண்டு அவனையும் நாட்டை விட்டு அரசன் உடனே விரட்டிவிடவேண்டும். (அத்.10.சு.96)

சூத்திரனுக்கு சமஸ்காரங்கள், ஓமம் வளர்த்தல் முதலிய வைகளுக்கு உரிமை கிடையாது. (அத். 10. சு.126)

சூத்திரன் எவ்வளவு தகுதியுடையவனாயினும் தன் ஜீவியத்துக்கு அதிகமாக பொருள் சம்பாதிக்கக்கூடாது. அப்படிச் சம்பாதித்தால் அது பிராமணனுக்கு இம்சையாக நேரும் (அத்.10.சு.129)

சூத்திரனுக்கு யாகாதி கர்மங்கள் சம்பந்தமில்லை. ஆதலால் அவன் வீட்டிலுள்ள செல்வத்தை பிராமணன் தாராளமாக  வலுவினாலும் கொள்ளலாம். (அத்.11. சு.13)

அசுரர்கள் என்பது சூத்திரர்களைத்தான் என்பதற்கு ஆதாரம். மனு தர்ம சாஸ்திரத்தில் 11ஆம் அத்தியாயம் 20ஆம் சுலோகத்தில் காணப்படுகிறது. அதாவது யாகம் செய்யாதவர்கள் அசுரர்கள் - அவர்கள் பொருளைக் கவ்வுவது தர்மமாகும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. திராவிடர்கள் சூத்திரர்கள், சூத்திரர்களுக்கு யாகாதி காரியங்களுக்குள் உரிமையில்லை. யாகம் செய்யாதவர்கள் அசுரர்கள். இந்த மாதிரி குறிப்புகள் மனுதர்ம சாஸ்திரத்தில் இருக்குமானால் மனுதர்ம சாஸ்திரமே இந்து மதத்திற் கேற்பட்ட தர்மமானால் திராவிடர்கள் இந்துக்களானால் திராவிடர்களின் நிலை என்ன என்பதைப் பொது மக்கள் உணர்ந்து பார்க்க  வேண்டுமாய் விரும்புகிறேன்.

இப்படிப்பட்ட இழிவுகளேற்பட்ட தன்மை திராவிட சமுதாயத்திற்கே இருக்கக் கூடாதென்றும், அவை எப்படி யாவது ஒழிக்கப்பட்டே ஆக வேண்டுமென்றும், அதற்கு முக்கிய எல்லையான திராவிட நாட்டை (சென்னை மாகாணத்தை) பரப்பாக வைத்து அதிலுள்ளவர்களை திரா விடர்களாகக் கருதி நடத்தப்படும் திராவிடர் கழக திராவிட நாடு எழுச்சிக்கு தமிழ்நாடு. ஆந்திரநாடு, கேரள நாடு, கருநாடக நாடு என்பதான கிளர்ச்சிகளை இந்த முக்கியக் குறிப்பில்லாமல் குறுக்கே போட்டு மொழியைப் பிரதானமாக வைத்துக் கொண்டு போராடுவதென்றால் மனுதர்ம சாஸ் திரத்தை மெய்ப்படுத்துகிறோம் என்பதல்லாமல் அதில் வேறு தன்மை என்ன இருக்கிறதாகக் காணமுடியும்?

'குடிஅரசு' - கட்டுரை - 20.09.1947

 - விடுதலை, நாளேடு, 11.8.19

திராவிடமே! தமிழ்நாடே! - 2

08.03.1947 குடிஅரசிலிருந்து....


சென்ற வாரத் தொடர்ச்சி

ஏற்கனவே ஆரியன் ஆதிக்கமே பல்லாற் றானும் இருந்துவந்தது என் றாலும் அது வெள்ளையன் முத்திரையின் கீழ் நடந்து வந்ததாகும். இனி ஆரியன் ஆதிக்கம் வெளிப்படையாகவே ஆரியன் முத்திரையின் கீழ் நடந்து வரப்போகிறது. இன்று ஆரியர்களது ஏகபோக ஆட்சிக்கு உள்ள ஒரு சிறு தடை யெல்லாம் முஸ்லிம்கள்,  தாழ்த்தப்பட்ட மக்கள் ஆகிய இருவர்களிடமும் ஒரு ஒப்பந்தம் (ஒற்றுமை) ஏற்படவேண்டும் என்கின்ற ஒரு சாக்குதானே தவிர திராவிடன் (தமிழன்) நிலையைத் தன்மையைப் பற்றிய சங்கதி ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது.

அரசியல் நிர்ணயசபை  என்பது பயனற்ற,  பித்தலாட்ட, ஒரு கூட்டத்தாரின்  நலனுக்கு  மாத்திரம் ஏற்பட்ட ஒரு மாயாஜால  மந்திரசபை  என்றாலும்  அந்தப்படி சொல்ல முஸ்லிம்கள் தான் உரிமையுள்ளவர்களாய் இருக்கிறார்களே தவிர திராவிடர்கள் அதைப்பற்றி நினைக்கவும் அருகதை அற்றவர்களாக ஆகிக்கொண் டார்கள்.  ஏன் என்றால் திராவிடர்கள்  சிலர் அரசியல் நிர்ணயசபையில் இருக்கிறார்கள், அவர்கள் திராவிட சமுதாயப் பிரதிநிதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளுகிறார்கள்.

அவர்கள் சொல்லாவிட்டாலும் ஆரியர்கள்  அவர்களைத் திராவிடர்களின் பிரதிநிதிகள்  என்றே பிரிட்டிஷாரிடம் கணக்குக்  (லிஸ்ட்டு) கொடுத்து  இருக்கிறார்கள்.   ஆனால்  இந்தத் திராவிடர்கள்  அரசியல் நிர்ணய சபையில் ஆரியர் - திராவிடர் என்கின்ற  பேச்சே  பேசக் கூடாது என்கின்ற  ஒப்பந்தத்தின் மீது ஆரியர் களால்  மங்களாசாசனம் செய்யப்பட்டவர் களாவார்கள்.

எனவே, இப்போதைய  அரசியல் மாறுதலில் திராவிடர்கள்  அல்லது தமிழர்கள் திராவிட நாடு  அல்லது தமிழ்நாடு என்பதைப் பெறுவதற்கு அல்லது அடைவதற்கு  என்ன செய்ய வேண்டும்?  அரசியல் நிர்ணய  சபையில் இல்லாவிட்டாலும் ஒரு தனி சபையாகத் திராவிடர் அல்லது  தமிழர் கூடி ஒரு முகப்பட்ட அபிப்பிராயத்தை - கருத்தை - தேவையை  வலியுறுத்தி அதை வைத்து ஒரு பொதுக்கிளர்ச்சி அல்லது சிலர் லண்டன் சென்று  வலியுறுத்தி விட்டு வது கிளர்ச்சி செய்வது  என்கின்றதான  ஒரு தீவிரப்பணியில்  அவசரமாய் ஈடுபட வேண்டியது இன்று மிகமிக அவசியமான காரியம் என்று கருதுகிறோம். திராவிடமே!  தமிழ்நாடே!  என்ன சொல்லுகிறாய்?  திரா விடத்தின் வரலாற்றுச் சுவடி யையும், புதை பொருளையும் பற்றிப் பிரசங்க மாரி பொழிவதும், கம்யூனிசம், சோஷலிசம், தேசியம்  என்று  மக்களைத் தொல்லைப்படுத்தி நாச வேலை செய்வதும் முதலிய  பணியோடு  உன் வாழ்வு,  தொண்டு, கடமை  முடிந்ததா?  மற்ற  சமுதாயத்தைப் பார்!  பார்! பார்!

- விடுதலை நாளேடு, 10.8.19

இந்திய மொழி, இன வரலாறு

- கவிஞர் கலி பூங்குன்றன்

அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

பார்ப்பன புஷ்யமித்திரன் காலத்தில்தான் இராமாயணம்

படித்தவர்களைத் தலைவெட்டிய கொடூரம்!!

(இந்தியாவின் வரலாறு காலவரிசைப்படி)

இந்தியா மற்றும் உலக அகழ்வாராய்ச்சி மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் குறிப் பிடப்படும் உண்மை இந்திய வரலாறு -

5000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்துவெளி நாகரிகம், (1902ஆம் ஆண்டிலிருந்து நீண்ட அகழ்வாய்வு செய்து ஆய்வுகளின் முடிவு களை கொண்டு முடிவு செய்யப்பட்டது.  அதே காலகட்டத்தில் கீழடி ஆதிச்ச நல்லூர் நாகரிகம் - சமீபத்தில் உறுதிசெய்யப்பட்டது - மேலும் ஆய்வு தொடர்கிறது.

3000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து வெளி நாகரிகம் திடீரென்று மெல்ல மெல்ல அழியத்துவங்கியது, ஆரியர்கள் சிறு சிறு குழுக்களாக இந்துகுஷ் மற்றும் கைபர் கணவாய் வழியாக இந்திய தீபகற்பத்தில் நுழைதல்...

2500-ஆம் ஆண்டு கங்கைச்சமவெளி ராஜ்யங்கள் தோன்றுதல். பெரு ராஜ்யங் களுக்குள் உட்பட்டிருந்த ஒரு சிறுராஜ்ஜி யத்தின் மன்னருக்கு மகனாக புத்தர் பிறப்பு - "புத்தர் காலம்" என்று கூறுவார்கள்

2200 மவுரியர்களின் காலம்

1700 குப்தர்களின் காலம்

ஆனால், ஆர்.எஸ்.எஸ் வரலாறு என்ன கூறுகிறது?

10000 ஆண்டுகளுக்கு முன்பு வேத காலம்.

7000 ஆண்டுகளுக்கு முன்பு இராமா யண காலம்.

5000 ஆண்டுகளுக்கு முன்பு மகாபாரத காலம் - துவாரகையில் கிருஷ்ணன் ஆட்சி.

4000 ஆண்டுகளுக்கு முன்பு சரஸ்வதி நதிக்கரை நாகரிகம்,

2000 ஆண்டுகளுக்குப் பிறகு, கங்கை சமவெளி நாகரிகம்

(இவர்கள் கூறும் பட்டியல் எல்லாம் கற் பனைகளாக எழுதப்பட்டவையே) எடுத்துக் காட்டாக, கிருஷ்ணன் ஆண்டதாகக் கூறும் துவாரகை குறித்து சுதந்திரத்திற்குப் பிறகு குஜராத் கடற்கரைப் பகுதியில் துவங்கி இன் றைய காலம் வரை தொடர்ந்து அகழாய்வு செய்ததில் எந்த ஒரு சான்றும் கிடைக்க வில்லை. துவாரகை குறித்து ஆங்கிலேய அகழாய்வு அறிஞர்கள் அங்கு அகழாய்வு செய்வது வீண் என்று கூறிவிட்டனர். 2003-ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் நவீன கருவிகள் கொண்டு இஸ்ரோ உதவியுடன் அகழாய்வு செய்தும் துவாரகை பகுதியில் முன்பு ஒரு நகரம் இருந்ததற்கான எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை.

சிந்துவெளி நாகரீகத்திற்கு முன்பு இந்தியா முழுவதும் ஒரே கலாச்சாரம் கொண்ட மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதற் கான சான்றுகள் இன்றும் உள்ளன, எடுத்துக் காட்டாக, தெற்கே நாகர்கோவில், நாகனூர், பாகிஸ்தான், பங்களாதேஷ் என இந்திய தீபகற்பம் முழுவதும் பெரிய நகரம், சிறிய நகரம் சிற்றூர் என நாகம் என்ற பெயரில் 18000-த்திற்கும் மேற்பட்ட ஊர்கள் உள்ளன. ஒரு பகுதி மக்கள் தாங்கள் செல்லும் பகுதிக்கு தங்கள் ஊர் பெயரையே சூட்டுவர் என்பது வரலாற்றுச் சான்றாக உள்ளது, இதனடிப்படையில் சிந்து சமவெளிக்கு முன்பு இந்திய தீபகற்பம் முழுவதும் ஒரே இனம் வாழ்ந்து வந்தது, அதன் பிறகு ஆரியர்களின் வருகை காரணமாக இனக் குழுக்கள் சிதைந்து கலப்பு ஏற்பட்டு நாடு முழுவதும் பிரிவுகள் ஏற்பட்டன, இருப் பினும் இவர்களால் அன்று முன்னோர்கள் சூட்டிய வரலாற்று பெயர்களை அழிக்க முடியவில்லை.

மொழிக்கு வருவோம்!

மொழி மக்கள் வாழும் இடத்தைப் பொறுத்தே உச்சரிக்கப்படும். தமிழை ஒற்றே, வட இந்தியா முழுவதும் இருந்த கடிபோலி, பாலி போன்றவை இருந்தன. இது மக்களால் பேசப்பட்டு வந்தது, நமது தட்ப வெட்ப நிலையைப் பொறுத்து தடிப்பான உச்சரிப்புகளே அதிகம் உண்டு - நெருப்பு, சோறு, ஆறு, மரம், வயல் வரப்பு என்றவாறு.

ஆனால் சமஸ்கிருதத்தில் அக்னி, போஜன், நதி, விருக்‌ஷம், க்ருஷம், க்ருஷு மென்மையான உச்சரிப்புகள் நமது காலச் சூழலுக்கு ஒத்துப்போகாத வார்த்தைகள். இதிலிருந்து சமஸ்கிருதம் வெளியிருந்து வந்த மொழி ஆயினும் பொதுவில் உச்சரிப்பு சிக்கல் தொடர்பாக பெருவாரியான மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே அந்த மொழி வந்ததில் இருந்தே செத்த மொழியா கத்தான் இருந்தது,

கி.மு.180 சுங்கன் புஷ்யமித்திரன் என்ற பார்ப்பனரால் மவுரியப் பேரரசு முடிவிற்கு வந்தது. அதன் பிறகு தான் ராமர் கதைகள் உருவாக்கப்பட்டன.

புஷ்யமித்திரன் வரலாறு தான் இராமா யணமாக மாற்றப்பட்டு - ராமனாக மாற்றப் பட்டான் என்று சில வரலாற்று ஆய்வா ளர்கள் கூறுவார்கள். இது உண்மையாக இருப்பதற்கு ஒரே ஒரு சான்று, பார்ப்பனர் களைத் தவிர வேறு யாருமே கல்வி கற்கக் கூடாது என்றும், அப்படியாரும் கல்வி பயில முற்பட்டால் அவர்களின் தலையை வெட் டிக்கொண்டுவருவோருக்கு தங்கக் காசுகள் பரிசாக தருவேன் என்று அறிவித்தான். அதன் விளைவாக பவுத்த துறவிகள் சங்கத் தில் பயின்றவர்களின் தலைகள் தொடர்ந்து வெட்டப்பட்டன, அந்தத் தலைகளைக் கொண்டுவந்து மன்னர் அரண்மனைக்கு முன்பு காண்பித்துவிட்டு அதை சுத்தியலால் உடைத்து ஆற்றில் போட்டுவிடுவார்கள். பிளக்கப்பட்ட மண்டை ஓடுகள் தொடர்ந்து ஆற்றில் பாத்திரங்களைப் போல் மிதந்து ஓடியதால் சராயுது என்று அழைக்கப்பட்ட நதி பிற்காலத்தில் சராயூ என்று மருவி இன்றுகூட சராயூ என்று அழைக்கப்படு கிறது. கற்றவர்களின் தலையை வெட்ட உத்தரவிட்ட புஷ்யமித்திரனின் வரலாற்று நிகழ்வை வைத்துத்தான் ராமாயணத்தில் சம்பூகன் தலையை வெட்டும் நிகழ்வை சேர்ந்துள்ளனர். புஷ்ய மித்திரன் அனைத் துப் பவுத்த நூல்களை அழித்து வேதம் என்ற பெயரில் பல சமஸ்கிருத புராணக் கதைகளை எழுத உத்திரவிட்டான். அன்றி லிருந்து தான் சமஸ்கிருத காலம் துவங்கு கிறது, அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு.. இதற்குச் சான்றுகள் புஷ்யமித்திர னின் வாழ்க்கை வரலாற்றில் இருந்தே தெளிவாகத் தெரிகிறது, அதற்கு முன்பு சமஸ்கிருதமே இல்லாத பகுதியில் வேதங் கள் மட்டும் யார் எழுதினார்கள்? அதைப் படிப்பவர்கள் பேசுபவர்கள் யார் என்ற கேள்வி எழும்.

வரலாற்றில் புலம்பெயர்பவர்கள் தங் கள் வேதங்களைக் கொண்டு செல்வார்கள் என்பதற்கு யூதர்கள் சான்றாக உள்ளனர். மோசே தனது இனக்குழுவுடன் இடம் பெய ரும் போது, தனக்கு முன்பு எழுதப்பட்ட பழைய ஏற்பாடு கதைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதற்குப் பெரிதும் ஊக்கம் கொடுத்தார். ஆகவே தான் அவரை ஏசுவின் பிறப்பிற்குப் பிறகு எழுதப்பட்ட புதிய ஏற்பாடு என்ற நூலிலும் அவரைப்பற்றி அதிகம் எழுதி நன்றி தெரிவித்துள்ளனர். மோசேவிற்கு முன் பிருந்த பழைய ஏற்பாடு நூலில் உள்ள பல கதைகள் மகாபாரதத்திலும் அப்படியே வருகின்றன, இதிலிருந்தே ஆரியர்கள் வருகை 3000 ஆண்டுக்குப் பிறகு என்றும் அவர்கள் மோசேவின் கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்தவர்கள் என்றும் உறுதிசெய்யப் படுகிறது. ஆரியர்கள் வெளியிலிருந்து வந் தவர்கள் என்பதற்கு மற்றுமொரு சான்று; மோசே கூட்டத்தார் பெருங்கழுதைகளில் பயணப்பட்டு பல தேசங்கள் சென்றார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது குதிரைகளின் பயன்பாட்டை மோசேவிடம் இருந்து பிரிந்துவந்த கூட்டத்தினர் பயன் படுத்தினர் என்றும் சிந்து வெளி நாகரீகத்தில் குதிரைப் பயன்பாடு இல்லை என்பதும் அனைவரும் அறிந்ததே.

சிந்துவெளி நாகரிகத்திலும் அதனைத் தொடர்ந்து கங்கைச் சமவெளி நாகரிகத்தி லும் கிடைத்த பொதுப்பயன்பாட்டுக்கான கல்வெட்டுகள் அனைத்துமே பாலி, பிராமி மற்றும் அபிலேகி போன்றவைகள் ஆகும். இதில் எங்குமே சமஸ்கிருதம் இருந்ததாக ஒரு சான்று கூட கிடையாது,

பாலி மொழி திபெத்தோ பர்மான் என்று மருவி, பின்னர் சீனம், மங்கோல், பர்மியம் மற்றும் தாய்ப் பகுதிகளில் பேசப்பட்டுவந்த உள்ளூர் மொழியுடன் கலந்து சீனமொழி யாகவும், பர்மிய மொழியாகவும், தாய் மொழியாகவும், இதர தென்கிழக்கு ஆசிய மொழியாகவும் மாறியது.

இதில் எங்குமே சமஸ்கிருதம் இல்லை.

சுல்தான்கள் மற்றும் முகலாயர்கள் வருவதற்கு முன்பு பாலி, தமிழ் மற்றும் சில வட்டார மொழிகள் பேசப்பட்டு வந்தன. சுல்தான்களுக்குப் பிறகு சிந்தி மொழி, பார்ஸி போன்றவையும் மொகலாயர்க ளுக்குப் பின்பு சிந்தி பார்ஸி மொழிகள் சிறுத்து உருதுமொழி ஆகி விட்டது, அதன் பிறகு உருது உள்ளூர் மொழிக்கலப்பு உரு வாகி இந்துஸ்தானி உருவானது. இந்த இந் துஸ்தானியில் தான் சமஸ்கிருதம் திணித்து இந்தி என்ற ஒன்றை உருவாக்கினார்கள்.

வங்கமொழியும் கூட திராவிட மொழி யின் கிளைதான், இதை புகழ்பெற்ற வர லாற்று மொழி ஆய்வியலாளர்     டி டி கோசம்பி உறுதிசெய்துள்ளார். அவர் கூறும் போது - இந்திய மொழிகளில் மிகவும் கரடுமுரடான மொழி என்றால் அது வங்கம் தான்; அவர்கள் மொழியைப் போலவே அவர்கள் வணங்கும் கடவுளையும் ஆக் ரோசமான துர்க்கையாகவே வணங்கினர், ஆனால் சமஸ்கிருதம் என்பது இதற்கு அப்படியே எதிர்மறையான ஒன்று ஆகும். ஆகவே வங்க மொழி சமஸ்கிருதத்தில் இருந்து பிரிந்தது என்று கூறுவது பாலை வனத்தில் மாமரம் ஒன்று செழித்து வளர்ந் திருந்தது, அதில் சுவையான மாம்பழங் களைச் சாப்பிட்டேன் என்று கூறுவதற்குச் சமம் என்று கூறியுள்ளார்.

மூன்று தலைமுறை மொழி ஆய்வியல் குடும்பத்தில் பிறந்த இவர் தனது மூன்றாம் தாத்தா பதிவு செய்த கல்வெட்டு ஆய்வு களை முழுமையாக ஆய்வு செய்து நூலாக வெளியிட்டார்.

- 12.8.19