செவ்வாய், 13 நவம்பர், 2018

தீபாவளி திடுக்கிடும் உண்மைகள்!



இந்துமதப் பண்டிகைகள் பெரும்பாலும் அசுரனைக் கொன்றதாக - அரக்கனைக் கொன்றதாகக் கூறி, அவற்றின் அடிப்படையில் கொண்டாடப்படுகின்றன. மகாவிஷ்ணு எடுத்த தாகக் கூறப்படும் அவதாரங்களும் அசுரர்களைக் கொன்றதாகவே இருக்கின்றன.

தீபாவளி கதையை எடுத்துக் கொண்டாலும், நரகாசுர னைக் (அசுரனை) கொன்றதாகத்தான் கூறப்படுகிறது. அசுரர்கள், அரக்கர்கள், தஸ்யூக்கள், ராட்சதர்கள், குரங்குகள், கரடிகள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் யார்? வரலாற்றுப் பேராசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்?

தென்னிந்தியாவில் வசித்துவந்த ஆரியரல்லாதவ ர்களையே குரங்குகள் என்றும் அசுரர்கள் என்றும் ராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட் டிருக்கிறது

(ரோமேஷ் சந்திர டட் எழுதிய புராதன இந்தியா எனும் நூல் பக்கம் 52)

ராமாயணக் கதை என்பது, ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திராவிடர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதைச் சித் திரித்துக் காட்டுவதாகும்/

(சிதம்பரம்பிள்ளை எழுதிய திராவிடரும் ஆரியரும் எனும் நூல் பக்கம் 24)

தென்னிந்தியாவில் இருந்த மக்களேதான் ராமாயணத் தில் குரங்கு கள் என்றும் , அரக்கர்கள் என்றும் அழைக்கப் பட்டிருக்கிறார்கள்

(விவேகானந்தரின் சொற்பொழிவு களும் கட்டுரைகளும் என்னும்

நூலில் ராமாயணம்  எனும் தலைப்பில் 587-589 ஆம் பக்கங்களில் இடம் பெற்றுள்ளது)

ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள் என்றும், தஸ்யூக்கள், அசுரர்கள் என்றும் கூறப்பட் டிருக்கிறது. ஆரியருக்கும் ஆரியரல்லாதவருக்கும் இருந்து கொண்டிருந்த அடிப்படையான பகைமையைப் பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம். இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும், அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைமைக்குக் காரணமாகும்

(டாக்டர் ராதாகுமுத முகர்ஜி எம்.ஏ., பிஎச்.டி., எழுதிய இந்து நாகரிகம் எனும் நூல் பக்-69)

இராமாயணமும், மகாபாரதமும் இந்தோ ஆரியர் காலத்தையும் அவர்களுடைய வெற்றிகளையும், உள்நாட்டுச் சண்டைகளையும் பற்றிக் கூறுவதாகும்

(ஜவகர்லால் நேரு எழுதிய டிஸ்கவரி ஆஃப் இந்தியா நூல் பக்கம் 76-77)

இராமாயணம் என்பது தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதைக் குறிப்பதாகும்

(ஜவகர்லால் நேரு - அதே நூல் பக்கம் 82)

இந்த வரலாற்று உண்மைகளை அடிப்படையாகத் தெரிந்து கொண் டால், நாம் கொண்டாடும் பண்டிகை களில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் அசுரர்கள் எல்லாம் திராவிடர்கள்தாம் என்ற பேருண்மை சூரிய ஒளி போலத் தெரிந்துவிடும்.

நம்மை அழித்ததற்காக நாமே விழா கொண்டாடலாமா என்பதுதான் கேள்வி. காந்தியைக் கொன்றதற்காக கோட்சேக்கு விழா கொண்டாடலாமா?

தீபாவளிக் கதையைக் கொஞ்சம் கருத்தூன்றி இந்த வெளிச்சத்தில் படியுங்கள். உண்மை பளிச்சென்று தெரிந்து விடுமே! இதுபற்றி தந்தை பெரியார் என்ன கூறுகிறார்?

தீபாவளி என்றால் என்ன?


1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.

2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து  விரித்தார்.

3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றி யுடன்  கலவி  செய்ய ஆசைப்பட்டது.

4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு)  பூமியுடன் கலவி செய்தது.

5. அதன் பயனாக பூமி  கர்ப்பமுற்று நரகாசுரன் என்ற பிள்ளையையும் பெற்றது.

6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.

7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசுர டனுடன் போர்  துவங்கினார்.

8. விஷ்ணுவால்  அவனைக் கொல்ல முடியவில்லை.  விஷ்ணுவின் மனைவி நரகாசுரனுடன் போர்தொடுத்து  அவனைக் கொன்றாள்.

9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

10.  இந்த மகிழ்ச்சி (நரகாசுரன் இறந் ததற்காக)  நரகாசுரனின்  இனத் தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

மேற்கண்டவற்றை புராணங்களி லிருந்து தந்தை பெரியார் எடுத்துக்கூறி, இவை அறிவுக்குப் பொருந்துமா என்று நம்மை சிந்திக்கத் தூண்டியுள்ளார். தந்தை பெரியார் கூற்றில் நியாயமும், பகுத்தறிவும் இருக்கிறதா இல்லையா என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

சிந்திப்பதுதான் மனிதனுக்கு பகுத் தறிவு இருக்கிறது என்பதற்கு அடை யாளம்.

இந்த 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பூமிக்கும், பன்றிக்கும் கலவி நடந்தது _ பிள்ளை பிறந்தது என்பதை ஏற்றால், நாம் காட்டுமிராண்டிகள் அல்லவா! பக்தி என்று வந்துவிட்டால் சகலத்தையும் துறந்துவிட வேண்டுமா? மானமும் அறிவும் மனிதனுக்கு அழகல்லவா, சிந்திப்பீர்!

- விடுதலை  1-11-2013 நரகாசுரன் சிறப்பிதழிலிருந்து....

-  விடுதலை ஞாயிறு மலர், 3.11.18

வியாழன், 25 அக்டோபர், 2018

இந்திய நாட்டின் வரலாறு



4.10.2018 முரசொலியில் வந்த கலைஞரின் கருத்து எப்படிப்பட்டது என்று அறியும் முன்பு இந்திய தீபகற்பம் முழுவதும் திராவிட இனம் வாழ்ந்துவந்தது என்பதை வரலாறு ஒப்புக் கொண்டுள்ளது. இன்றளவும் ஆரியர்கள் இந்திய தீபகற்பத்தின் மண்ணின் மைந்தர் களை சூத்திரர்கள் என்றும், இம் மண்ணின் மைந்தர்களான திராவிடர்களுக் கும், தங்களுக்குமிடையே ஒரு கோட்டை நூல் கொண்டு பிரித்து வைத்துள் ளனர்.

1812ஆம் ஆண்டு இன்றைய பாகிஸ்தான், இமயமலையை ஒட்டிய தென் மேற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் அகழாழ்வு சில ஆங்கிலேய ஆர் வலர்களால் தனிப்பட்ட முறையில் மேற்கொள் ளப்பட்டது, இது அதி காரப்பூர்வ ஆய்வு இல்லை என்றாலும் அந்த ஆய்வில் இந்திய தீபகற்பம் பாகிஸ் தான், தென் மேற்கு ஆப் கானிஸ்தான் தொடங்கி, இன்றைய நேபாளத்தின் தெற்கு பகுதி, வங்கம் வரை ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்தை ஒத்த மனித இனம் வாழ்ந்து வந்தது என்பதை உறுதி செய்தனர். அது அதிகாரப்பூர்வமில்லாத ஆய்வு ஆகையால் அவர்களின் கூற்று பதிவாகவில்லை. இந்த நிலையில் 1908ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு அதிக்காரப் பூர்வமாக ஆய்வுகளைச் செய்ய அனுமதி அளித்தது,  அதனை அடுத்து அரப்பா, மொகஞ்சதாரோ பகுதிகளில் அகழாய்வுகள் 10 ஆண்டுகளாக தொடர்ந்தது, 1920, 21, 22 இந்த மூன்று ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வுகள்குறித்த ஆவணங்கள் வெளியாகிக்கொண்டே இருந்தன. அதில் ஆங்கிலேய ஆய்வாளர்களுக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன நாகரீகமாக தோன்றலாம், ஆனால் அக் குழுவில் உள்ள சிலர் இதே போன்று தென் னிந்தியாவில் இன்றளவும் பல அடை யாளங்கள் உள்ளன என்று கூறினர். அங்கிருந்துதான் தமிழகத்திற்கும் சிந்து வெளி நாகரீகத்திற்குமான உறவு வெளிப் படத் தொடங்கியது, தாய்வழி மரபு, இயற்கை வழிபாடு, வேதகலாச்சாரமல்லாத வாழ்க்கை முறை, இறந்தவர்களைப் புதைக்கும் முறை உள்ளிட்ட அரப்பா கலாச்சாரங்கள் என்ன என்ன வருகிறதோ அனைத்தும் 5000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போன்றே இன்றும் தமிழகத்தில் உள்ளது.

முக்கியமாக முதுமக்கள் தாழி இன்றும் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டு வருகிறது, அந்த முதுமக்கள் தாழி என்னும் இறந்தவர்களைப் புதைக்கும் முறை அதில் உள்ள பொருட்கள்    சிந்துவெளி நாகரிகம் மற்றும் வைகைக்கரை நாகரிகமும் ஒன்றே என்று சான்றுகளோடு கூறப்பட்டுள்ளது.  இன்றும் மதுரை, விருதுநகர், நெல்லை போன்ற தெற்கு மாவட் டம் மற்றும் வட தமிழகங்களில் பல்வேறு அகழ்வாய்வுகளில் சிந்து நாகரிகம் மற்றும் தமிழக நாகரிகம் இரண்டும் ஒன்று என்று உறுதிபடக் கூறியுள்ளது.

இந்த நிலையில் இதில் ஆரியம் அதாவது வேதகால கலாச்சாரம் என்பது இடையில் வெளியில் இருந்து வந்தவை என்பதும் உறுதியாகியுள்ளது.

வெளியில் இருந்து வந்த வேதகால கலாச்சாரம் அதை பின்பற்றும் மக்கள் ஆரம்பத்தில் இருந்தே இந்திய வரலாற்றை மாற்ற பல்வேறு வகையில் முயற்சி செய்துகொண்டிருக்கின்றனர். இன்றளவும் செய்கின்றனர். எடுத்துக்காட்டாக இல்லாத சரஸ்வதி நதிக்கரை நாகரிகத்தைத் தேடி கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழித்து வருகின்றனர். அரியானா ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் எங்காவது ஊற்றுநீர் பெருக்கெடுத்து வந்தாலும் அது மண்ணில் மூழ்கிப்போன சரஸ்வதி நதி என்று பொய்யுரை செய்துவருகின்றனர்.

இந்த நிலையில் இந்த வரலாற்றை கங்கை கரையிலோ, யமுனைக்கரையிலோ எழு தினால் அது வேதகாலத்திற்கு சாதகமாகவே அமையும் -  ஆகவேதான் கலைஞர் இந்திய தீபகற்ப வரலாற்றை கிருஷ்ணா நதிக்கரை பள்ளத்தாக்கிலோ, காவிரி நதிப்பள்ளத் தாக்கிலோ, அல்லது வைகை பள்ளத்தாக்கிலோ எழுத வேண்டும் என்று கூறியிருந்தார். அவர் கூறியது போன்றே வைகை நதிக்கரையில் உள்ள கீழடியில் பாரிய திராவிட நாகரீகச் சமூகம் ஒன்று வாழ்ந்த நகரத்திற்கான சான்றுகள் கிடைத்துள்ளன; ஆனால் அந்தச் சான்றுகளை வெளிக்கொண்டுவரவிடாமல் தடுக்கும் வேலையில் மத்திய அரசும் அதற்கு இசைபாடும் மாநில அரசும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

- சரவணா ராசேந்திரன்

- விடுதலை ஞாயிறு மலர், 13.10.18

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

ஹரப்பாவில் கால்பதித்த தமிழர்கள்! ஆரியர்களை அச்சம் கொள்ளச் செய்த ஆய்வு


Published:September 14 2018, 13:54 [IST]


இந்தியா என்று தோன்றியதோ அதற்கு முன்பு இருந்தே இந்த ஆரிய திராவிட பிரச்னைகளும் இருக்கின்றன. திராவிடத்தின் பெருமைகளை களவாடி, தன் முதலெழுத்தை இட்டு பல காரியங்களைச் செய்துள்ளது ஆரியம் என்ற குற்றச் சாட்டு பல ஆண்டுகளாகவே பலர் கூறி வரும் ஒன்று. இது திராவிடத்தை ஆதரிக்கும் அனைவருக்கும் தெரியும். திராவிடத்தின் செயல்பாடுகளை குறை சொல்லும் ஆரிய கட்சிகள் வேண்டுமென்றே சில பொய்க் குற்றச்சாட்டுகளை பரப்பி, தமிழர்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்தும் முயற்சியிலும் இருக்கின்றன. ஆனால் தமிழர்களின் பெருமையை உணர்த்தும் வகையில் உண்மையான ஆய்வு முடிவுகளும் அவ்வப்போது வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. அதன்படி இந்த முடிவுகள் சில சூழ்ச்சி ஆரியர்களை அச்சம் கொள்ளச் செய்கின்றன. வாருங்கள் உலகின் வரலாற்றை திரும்ப எழுதும் தமிழர்களின் பழமையை பற்றித் தெரிந்துகொள்வோம்.

ஹரப்பா நாகரிகம்

உலகின் மிகப் பழமையான ஒரு நாகரிகம் ஹரப்பா நாகரிகம். இது உலகுக்கே முன் மாதிரியான ஒரு இடம் என்று பலரால் நம்பப்படுகிறது. இங்கு வாழ்ந்தவர்கள் அந்த காலத்திலேயே நீர் மேலாண்மை, வடிகால் உள்ளிட்ட வசதிகளைப் பெற்றிருந்தார்கள் என்பதிலிருந்தே எந்த அளவுக்கு சிறப்பான நாகரிகம் கொண்டவர்கள் என்பதை புரிந்துகொள்ளலாம்.

   

சிந்துசமவெளியில் ஆரியர்கள்

சிந்து சமவெளியில் வாழ்ந்தவர்கள் ஆரியர்கள் என்பது சிலரின் கூற்று. ஆனால் ஆரியர்கள் வெளியிலிருந்து வந்து இங்கு தங்கினர் என்று பலர் தங்களை ஆராய்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். ஆனாலும் அந்த ஆராய்ச்சிகளை ஏற்க அவர்கள் தயாராக இல்லை.

   

திராவிடர்கள்

ஏற்கனவே, திராவிடர்கள் எனும் தென்னிந்திய இனம் அடக்கு முறைக்கு ஆளாக்கப்பட்டு கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக உயர்ந்து வரும் நிலையில் இப்படி ஒரு ஆய்வு ஆரியர்கள் என்று தங்களை கருதும் சிலருக்கு வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

   

என்ன ஆய்வு

உலகின் பழம்பெருமை வாய்ந்த இனங்கள் பற்றிய ஆய்வு, அவர்களின் நாகரிகம் பற்றிய ஆய்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. அதுபோல் இந்தியாவிலும் அகழ்வாய்வுகள் நடந்துவருகின்றன. சில சமயங்களில் மத்திய அரசு இதற்கு முட்டுக்கட்டை போட்டாலும், சில நல்ல அதிகாரிகளின் தீவிரமான முயற்சிகளினால் மெல்ல மெல்ல சில ஆய்வு முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

   

குஜராத்தே தமிழர்கள் கையில்

இந்த ஆய்வுகளின் படி, வடநாடுகளின் பெரும்பகுதியில் தமிழர்கள் எனும் ஆதி குடி மக்கள் வாழ்ந்து வந்ததாக நம்பப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமாக நிரூபிக்க சில தரப்பிலிருந்து அனுமதி மறுக்கப்பட்டு, மூடப்பட்டு கிடப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களின் தேசமான குஜராத் பூமியே தமிழர்களின் தேசம்தான்எனும் முடிவுகள் வெளிவந்தன.

   

எந்த பகுதியில் ஆய்வு நடந்தது

தற்போது ஹரியானாவின் ராகிகார்க்கி எனும் பகுதியில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டு, பல ஆண்டுகளுக்கு முந்தைய எலும்பு கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதுதான் தற்போது சில தரப்பினரை வியக்க வைத்துள்ளது. காரணம் அந்த எலும்புக் கூட்டின் ஜீன் அமைப்பு குறிப்பிட்ட இனத்தை சார்ந்து இருக்கிறதாம். அது யார் தெரியுமா?

   

தமிழர்கள் போற்றும் சமத்துவம்

தமிழர்கள் எப்போதுமே அண்டை மாநிலங்களுடன் சமரசமாக போய்விடுவார்கள். அவர்களின் சமத்துவம் இந்தியாவுக்கே முன்மாதிரியாக இருக்கும். அதனால்தான் இந்தியா முழுவதையும் ஆட்சி செய்யும் சில சக்திகள் தமிழகத்தில் காலடி எடுத்து வைக்க படாத பாடு படுகின்றன.

   

தமிழர்கள்தான் உலகின் முதல் குடி

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி மக்கள் என்ற வாக்குக்கேற்ப வெளியான இந்த முடிவுகள், அந்த எலும்புக் கூடு கண்டிப்பாக ஒரு திராவிட இனத்தவருடையது என்பது தெரியவந்துள்ளது.

Amrutha Sachin

   

யார் அந்த ஆராய்ச்சியாளர்கள்

பல்வேறு சிரமங்களுக்கு உட்பட்டு, அழுத்தங்களுக்கு மத்தியில், இந்த முடிவுகளை ஆராய்ச்சி செய்து வெளியிட்டது டாக்டர் வசந்த் எனும் ஆராய்ச்சி அதிகாரி தலைமையிலான குழு ஆகும். இவர்கள் சில ஆண்டு ஆராய்ச்சிக்கு பிறகு, இங்குள்ள எலும்பு கூடு ஒன்றை திராவிட இனத்தவரின் எலும்பு என்று குறிப்பிட்டுள்ளனர். இது மத்திய அரசு மட்டும் இல்லாமல், பல தரப்பினர்களிடையே வரவேற்பையும், ஆச்சர்யத்தையும் வரவழைத்துள்ளது.

asichennai.gov.in

   

எத்தனை வருட பழமை தெரியுமா

இங்கு கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக் கூடுகள் எத்தனை வருட பழமையானது தெரியுமா?

சுமார் 4500 ஆண்டுகள் பழமையான எலும்பு கூடு இது. அதன்படி, இந்த எலும்புக்கூடுகளை ஆய்வு செய்துள்ளனர்.

asichennai.gov.in

   

எப்படி செய்தனர் தெரியுமா

இந்த எலும்புகளின் உட்புறம் இருக்கும் சிறு சிறு திசுக்களை நவீன தொழில்நுட்பம் மூலம் பிரித்து எடுத்து அதைச் சோதித்துள்ளனர். அதில் இருக்கும் திசுக்களின் டிஎன்ஏவை எடுத்து அதை ஆராய்ச்சி செய்யும் முடிவை எடுத்துள்ளனர். பின் ஆராய்ச்சியில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

asichennai.gov.in

   

ஆரியர் இல்லை

இந்த முடிவுக்குப் பிறகு ஹரப்பாவில் வாழ்ந்த இனத்தவர்கள் ஆரியர்கள் இல்லை என்று முடிவுக்கு வந்துள்ளனர். இதை அவர்கள் பல்வேறு சோதனைகள் மூலம் உறுதி செய்துள்ளனர்.

asichennai.gov.in

   

பதப்படுத்தும் முறை

இந்த எலும்புக் கூடுகள் இத்தனை ஆண்டுகள் கழித்து கிடைத்ததில் ஒரு விசயம் தெளிவாகியுள்ளது. இது திராவிட முறைப்படி புதைக்கப்பட்ட ஒருவரின் எலும்புக்கூடு. விபத்திலோ இயற்கைச் சீற்றத்திலோ பலியானவர்கள் இல்லை. மேலும் ஆரியர்களைப் போல உடலுக்கு எரியூட்டவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

asichennai.gov.in

   

அறிவியல் முறை

இதன் அறிவியல் முறைச் சோதனையில் ஆரியரின் டிஎன்ஏவுடன் பொருந்திப் போகவில்லை என்பது தெளிவாகியதும் அடுத்தக்கட்ட முறையை ஆராயத் தொடங்கினார்கள். அதிலும் ஆரியரின் சம்பந்தம் துளி கூட இல்லை என்பது தெரியவந்துள்ளது.

asichennai.gov.in

   

மத முறைகள் ஏதும் இல்லை

ஆரிய வழிப்படி, எரியூட்டப்படவில்லை என்பதுடன், இந்த எலும்பு கிடைக்கப்பட்ட இடத்தில் மத முறைகள் எதுவும் இல்லை. கண்டுபிடிக்கப்பட்ட எந்த பொருளும் வேத முறைப்படி, அதனுடன் தொடர்பில் இல்லை. இது வேத கால பொருள்களுடன் பொருந்தவும் இல்லை.

asichennai.gov.in

   

சமக்கிருதம் இல்லை

அதே நேரத்தில் இந்தபொருள்களில் எதிலும் சமக்கிருத எழுத்துக்கள் இல்லை. ஆனால் இதில் எழுத்துக்கள் இருந்துள்ளன. அவை பார்ப்பதற்கு தமிழின் ஆதி வடிவ எழுத்துக்களை ஒத்து இருந்துள்ளன. ஆனால் அதற்கான பொருளை அறிய முடியாத வண்ணம் இருக்கின்றன.

wikimedia.org

   

கீழடியும், ஹரியானாவும்

மதுரை அருகிலுள்ள கீழடியில் சில மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்ட பொருள்களில் ஆதி தமிழ் எழுத்துக்கள் இருந்துள்ளன. அவற்றுடன் ஒப்பிட்டால், எந்த காலத்தில் மக்கள் சிந்து சமவெளியில் வாழ்ந்தார்கள் என்பதை துல்லியமாக கண்டறிந்துவிடலாம்.

VijayaVSR

   

தமிழர்களின் பழக்கவழக்கங்கள்

சிந்து சமவெளியில் வாழ்ந்தவர்கள் பலருக்கும் தமிழ் தெரிந்திருக்கவேண்டும். அவர்கள் நாம் சில ஆண்டுகளுக்கு முன்னர் பேச்சு வழக்கில் இருந்த தூய தமிழில் உரையாடியிருக்கவேண்டும் என்றே நம்பப்படுகிறது. அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை.

Paramatamil

   

கீழடி தமிழ்

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியுடன், பல பொருள்களிலும் தமிழ் அடையாள எழுத்துக்கள் இருந்துள்ளன. அதாவது அவைகள் எழுத்துக்கள் உருப் பெருவதற்கு முன்னர் அடையாளமாக குறிக்கப் படும் குறியீடுகள்.

அதே குறியீடுகளை ஒத்த எழுத்துக்கள்தான் தற்போது ஹரியானாவில் கண்டறியப்பட்டுள்ளன.

Paramatamil

   

உலமே வியக்கும் பிரம்மாண்ட ஆய்வு

ஹரியானாவில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துக்களுடன், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் முக்கியமாக கீழடி போன்ற பகுதிகளில் கிடைக்கப்பட்ட ஆதார எழுத்துகளை ஒப்பிட்டு பார்த்தால், ஓரளவுக்கு தமிழின் முதுமையை நாம் அறிய முடியும்.

ஆனால்....

ஆளும் அரசுகள் இதுபோன்ற ஆய்வுகளில் எந்த ஆர்வமும் காட்டாமல் இருப்பது, வேண்டுமென்றே தமிழர்களின் வரலாற்றை மறுக்கின்ற, திட்டமிட்டு மறைக்கின்ற செயலாக இருக்குமோ என்ற எண்ணம் தமிழ் ஆர்வலர்களிடம் இல்லாமல் இல்லை. எனினும், நம்பிக்கையுடன் காத்திருப்போம்...

கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே..

நன்றி!

https://tamil.nativeplanet.com/travel-guide/top-10-museums-haryana-002905.html

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

இதோ ஒரு ‘கொலம்பசு’



அரப்பா, மொகஞ்சதாரோ இந்து கலாச்சாரமாம், இந்த உணர்வில்லாதவர்கள் பிரிவினைவாதிகளாம்! சொல்லுகிறார்  மோகன்பகவத்.

அரப்பா, மொகஞ்சதாரோ கலாச்சாரம் இந்து கலாச்சாரம் என்றும், அது பாகிஸ்தான் பகுதியாகி விட்டதால் இந்துக்கலாச்சாரத்தை நம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் கூறிய மோகன் பகவத், இந்து என்ற உணர்வில்லாததால் பங்களாதேஷ் மக்கள் தனிநாடாக பிரிந்தன; எவர் இந்து என்ற உணர்வில்லாமல் இருக்கிறார்களோ அவர்கள் பிரிவினைவாதிகள் என்றும்  கூறியுள்ளார்.

தொடர்ந்து இட ஒதுக்கீடு, இந்துத்துவம், நாடு முழுவதும் இந்து பண்பாடு குறித்து பேசிவரும் மோகன் பகவத் தற்போது இந்து என்ற உணர்வில்லாதவர்கள் பிரிவினை வாதிகள் என குறிப்பிட்டுள்ளார்.

அசாம் மாநில தலைநகரான கவுகாத்தியில்  ஆர்.எஸ்.எஸ் சார்பில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் பகவத் “இந்தியா சுதந்திரம் அடைந்த போது தனி நாடு வேண்டும் என எழுந்த போராட் டத்தினால் பாகிஸ்தான் உருவானது. பாகிஸ்தானியர்கள் இந்துத்துவ சிந்தனையை ஏற்கவில்லை, ஆகையால் அவர்கள் தனித்து போய்விட்டனர். ஆனால் இந்தியா முழு வதும் இந்து என்ற உணர்வுடன் உள்ளனர். இதுதான் இந்துக்களுக்கும், மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு. இந்தியா ஒரு இந்து நாடு; அதை ஒப்புக்கொள்ள மனமில்லாததால் இந்தியாவை பாகிஸ்தான் எதிரியாக நினைக்கிறது.

மொகஞ்சதாரோ, அரப்பா ஆகியவை பண்டைய இந்துக்களின் நாகரிகத்தை பறைசாற்றும் இடங்கள் ஆகும். ஆனால் அவை இப்போது பாகிஸ்தானின் பகுதிகள் ஆகி விட்டன. அதனால் தான் நமது பண் டைய இந்துத்வா கலாச்சாரத்தை நம்மால் உலகுக்கு எடுத்துக் காட்ட இயலவில்லை. இந்துத்வா என்பது பலமொழிகள், கலாச் சாரங்கள், மதங்களை கடந்த ஒற்றை இந்தியா ஆகும்.  இந்துத்வா வேற்றுமையில் ஒற்று மையைக் காண்கிறது.   அதனால் தான் இந்தி யாவை ஒரு இந்து தேசம் என கூறுகிறோம்..

வங்கதேச மக்கள் இந்தியாவில் உள்ள வங்க மொழியை பேசினாலும் அவர்கள்  தனி நாடாக இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா?  அவர்கள் இந்துத்வாவை ஒப்புக் கொள்ள தயங்குவதாலும்,  இந்தியா ஒரு இந்து தேசம் என்பதாலும் தான்”  எனக் கூறி உள்ளார்.

அரப்பா மொகஞ்சதாரோ

இதுவரை திராவிட நாகரிகமான அரப்பா மற்றும் மொகஞ்சதாரோ குறித்து எந்த ஒரு பார்ப்பனர்களும், பார்ப்பன ஊடகங்களும் அதிகம் பேசவில்லை, இந்த நிலையில் மோகன் பகவத் திடீரென்று அரப்பா மொகஞ் சதாரோ குறித்து தனது பேச்சில் குறிப் பிட்டுள்ளார்.

அதுவும் அங்கு உள்ளது இந்துக்களின் கலாச்சாரம் என்பதாக அழுத்திக் கூறியுள்ளார். 2015ஆம் ஆண்டு ஜூலையில் தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நடைபெற்ற சமஸ்கிருத மாநாட்டில் பேசிய சுஸ்மா சுவராஜ் சமஸ்கிருதத்தின் பிறப்பிடம் சரஸ்வதி நதிக்கரை என்று குறிப்பிட்டி ருந்தார். அதே போல் பார்ப்பனர்கள் இந்துமதம், இந்து கலாச்சாரம், சமஸ்கிருதம் போன்றவை அனைத்தும் சரஸ்வதி நதிக்கரையில் இருந்து உருவாகியவை என்று கூறியுள்ளார்.

சரஸ்வதி என்ற ஒரு நதி இருந்ததற்கான அடையாளம் இன்றுவரை கண்டறியப் படவில்லை, மேலும் இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் சரஸ்வதி நதி, அது பாய்ந்த இடங்கள் குறித்து பல்வேறு குழப்பமான குறிப்புகள் உள்ளன. இந்திய வரலாற்று மற்றும் கலாச்சார ஆய்வுக்கழக தலைவர் எழுதிய நூலில் சரஸ்வதி என்ற நதி இன்றைய கோசி (பீகார்) நதியின் துணை நதியாக இருந்திருக்கலாம் என்று கூறுகிறார்.

ஆனால் சாமியார்கள் சரஸ்வதி நதி என்பது இன்றைய ராஜஸ்தான், அரியானா குஜராத் பகுதிகளில் பாய்ந்த நதி என்று கூறிவருகின்றனர். 2014-ஆம் ஆண்டு புதிதாக ஆட்சியில் அமரந்த அரியானா அரசு சரஸ்வதி நதியை தேடும் பணிக்கு பலநூறு கோடிகளை செலவு செய்து வருகிறது.

இப்படி ஒரு குழப்பமான சரஸ்வதி மற்றும் அதன் நதிக்கரையில் தோன்றிய மதம் இந்துமதம் என்று இதுவரை கூறிக்கொண்டு இருந்த இந்துத்துவ வாதிகள் தற்போது திடீரென்று அரப்பா, மொகஞ்ச தாரோ பற்றி பேசத் துவங்கியுள்ளனர். 1997ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக அரசினர் முக்கியமாக அருங் காட்சியகங்களில் இருந்த சிந்து சமவெளி நாகரிகம் குறித்த இடத்தில் இருந்த திராவிட நாகரிகம் என்பதை அழித்துவிட்டு அடையாளம் தெரியாத நாகரிகம் (Unknown Civilization)  என்று எழுதிவைத்தனர்.

தற்போது அந்த அடையாளம் தெரியாத நாகரிகம் என்பதையே இந்துக் கலாச்சாரமாக மாற்றும் வேலையைச் செய்து கொண்டிருக் கிறார்கள் என்றே தெரிகிறது. அதற்கான முகாந்திரமாக இதுவரை அரப்பா, மொகஞ்ச தாரோ பற்றி மோகன் பகவத் பேச ஆரம்பித் துள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களில் மேகாலயா, நாகலாந்து, திரிபுராவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது, இந்த மாநிலங்களில் இந்துக்கள் மிகவும் குறைந்த அளவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

- விடுதலை ஞாயிறு மலர், 4. 8. 18

இதோ... ஆதாரக் குவியல்கள்! திராவிடம் என்பது வரலாற்றுச் சொல்!

[17/8, முற்பகல் 7:34] Parthasarathy R: "நாமெல்லாம் தமிழர்கள். ஆனால் பெரியார் தான் திட்டமிட்டு "திராவிடர்"  என்கிற பெயரைப் பரப்பிவிட்டார்", எனும் குற்றச்சாட்டு இங்கே இருக்கிறது. அது உண்மையா?

இதோ... ஆதாரக் குவியல்கள்!

திராவிடம் என்பது வரலாற்றுச் சொல்!

ஆதாரக் குவியல்கள் - 1
நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர்.கலி.பூங்குன்றன்
https://goo.gl/uamsR6

ஆதாரக் குவியல்கள் - 2
நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர்.கலி.பூங்குன்றன்
https://goo.gl/2JyevR

திராவிடர் யார்? திராவிட நாடு என்பது எது?
நூல் : ஆரிய மாயை
ஆசிரியர் - அறிஞர் அண்ணா
https://goo.gl/8pBd7F
[17/8, முற்பகல் 7:34] Parthasarathy R: தமிழ்நாடு என்றால்திராவிடமே:
நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு  ஆசிரியர் : தந்தை பெரியார்
https://goo.gl/hSQvmV

திராவிட சரித்திரம்:
நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு ஆசிரியர் : தந்தை பெரியார்
https://goo.gl/gSUacA

திராவிட நாட்டின்  எல்லை சரித்திரம் கூறும்  உண்மை:
நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு: ஆசிரியர் : தந்தை பெரியார்
https://goo.gl/LcXs7V

திராவிடம்: நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு
ஆசிரியர் : தந்தை பெரியார்
https://goo.gl/1z8R4j

திரு இடம்  திராவிடமாக மாறியது:
நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு  ஆசிரியர் : தந்தை பெரியார்
https://goo.gl/w4si3U

திராவிடர் சமயம்:
நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு ஆசிரியர் : தந்தை பெரியார்
https://goo.gl/9M1KUo
[17/8, முற்பகல் 7:34] Parthasarathy R: திராவிடமும் தமிழும் (தமிழ்) 
நூல் - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்.  ஆசிரியர் -மஞ்சை வசந்தன்  https://goo.gl/Po2a6K

ஆங்கிலத்தை ஏற்றுத் தமிழைப் புறக்கணித்தாரா பெரியார்? நூல் -ஆரியத்தால் வீழ்ந்தோம்!  திராவிடத்தால் எழுந்தோம்
ஆசிரியர் - மஞ்சை வசந்தன்  https://goo.gl/3yRxC9

தமிழ்த் தேசியம் சிலவிளக்கங்கள்
சில வினாக்கள் நூல் - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்! ஆசிரியர் - மஞ்சை வசந்தன் - https://goo.gl/69X3gZ

இன வழித் தேசியமா?மொழிவழித் தேசியமா?  நூல் -ஆரியத்தால் வீழ்ந்தோம்!  திராவிடத்தால் எழுந்தோம்.   ஆசிரியர் - மஞ்சை வசந்தன் https://goo.gl/pXGSY9

திராவிடத்தால் தமிழன்எழுச்சிப்
பெற்றான் -தொல்.திருமாவளவன்!
நூல் : திராவிடத்தால்எழுந்தோம்!
ஆசிரியர் : திராவிடர் கழகத் தலைவர்  கி.வீரமணி
https://goo.gl/C3rDSC

தமிழ்நாடு என்றால்திராவிடமே:
நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு  ஆசிரியர் : தந்தை பெரியார்
https://goo.gl/hSQvmV

திராவிட சரித்திரம்:
நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு ஆசிரியர் : தந்தை பெரியார்
https://goo.gl/gSUacA

திராவிட நாட்டின்  எல்லை சரித்திரம் கூறும்  உண்மை:
நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு: ஆசிரியர் : தந்தை பெரியார்
https://goo.gl/LcXs7V

திராவிடம்: நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு
ஆசிரியர் : தந்தை பெரியார்
https://goo.gl/1z8R4j

திரு இடம்  திராவிடமாக மாறியது:
நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு  ஆசிரியர் : தந்தை பெரியார்
https://goo.gl/w4si3U

திராவிடர் சமயம்:
நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு ஆசிரியர் : தந்தை பெரியார்
https://goo.gl/9M1KUo

செவ்வாய், 31 ஜூலை, 2018

நூல்: ‘அறியப்படாத தமிழ்மொழி’

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்

நூல்: ‘அறியப்படாத தமிழ்மொழி’




இதை உலகம் மட்டும் செய்யவில்லை; நாமும் தான் செய்தோம்; நாம் எப்படி யவனம் என்கிறோமோ, அதுபோலவே அவர்கள் திராவிட என்கிறார்கள்! தொலெமி (Ptolemy) எனும் கிரேக்க மேதை, காலம் 150CE புவியியல் கணித அறிஞரான அவர், Dimirike என்றே தமிழகத்தைக் குறிப்பிடுகிறார், Geographike Hyphegesis  எனும் நூலில்!

அவருக்கும் முன்பே, 425 BCE--இல், Herodotus எனும் வரலாற்று ஆசிரியர், ‘திராவிடம்’ என்றே குறிக்கின்றார்; கீழே ஆவண வரிகளைக் காணுங்கள்;

“Dravidians (III, 100) having a complexion closely resembling the Aethiopians, and as being situated very far from the Persians, toward the south, and never subject to Emperor Darius”

உலகம், தமிழுக்கு வழங்கிய இதே திசைச் சொல்லைச் சமஸ்கிருத மொழியிலும் ‘பயன்படுத்திக்’ கொண்டார்கள். அவ்வளவே! சொல்லப் போனால், இந்த உலகச் சொல்லை வைத்து நம்மை இழிவு செய்தும் உள்ளார்கள், தென்மொழியான தமிழை/திராவிடத்தை காண்க, மஹாபாரதம் - அனுசாசன பர்வம்!

மேகலா, ‘திரமிடா’.. தாஸ் தா க்ஷத்ரிய ஜாதய

விருஷலத்வம் அனுபிராப்தா, பிராமணானாம் அதர்சனாத்

ந பிராமண விரோதேந, சக்யா சாஸ்தும் வசுந்தரா!

(Book 13, Chapter 35, Sloka 17-21)

“திரமிட (திராவிட) நாட்டு அரசர்கள், க்ஷத்ரிய அந்தஸ்து குறைந்து போய், சூத்திரர்கள் ஆகிவிட்டார்கள், பிராமணர்களைப் பகைத்துக் கொண்டதால்! உயர்ந்த அப் பிராமணர்களைப் பகைத்துக் கொண்டு, எவனாலும் நாடாள முடியாது!’’ - அனுசாசன பர்வம்; இதுவே நீங்கள் அறிந்திராத மஹாபாரதத்தின் இன்னொரு முகம்

அறிக: திராவிடம் = சமஸ்கிருதச் சொல் அல்லவே அல்ல! தமிழ்த் திசைச்சொல்! கிரேக்கம், உரோமானியம், எகிப்து எனப் பல இனங்களும் தமிழைக் குறித்த சொல்.

ஆழ்வார்களில், முதல்வர் நம்மாழ்வார்! (காலத்தால் அல்ல; கருத்தால்). 4-ஆம் வருணத்தைச் சேர்ந்த சூத்திர இளைஞன்; 32 வயதிலேயே இயற்கை எய்தியவன். அவன்(ர்) எழுதிய திருவாய்மொழி = ‘திராவிட’ வேதம் எனும் தமிழ்க் கவிதை! ‘திருவாய் மொழிக்கு உருகாதார், ஒருவாய் மொழிக்கும் உருகார்’ என்ற சிறப்பு.

அத் தமிழ்த் திருவாய்மொழியை (5th-7th CE கோயில்களில் பரப்பவேண்டி, நாதமுனிகள்/இராமானுசர் (10th-12th CE) போன்றவர்கள் ஓர் ‘உபாயம்’ செய்தனர்; அன்று (இன்றும் தான்) ஆலயங்களில் சமஸ்கிருத மொழிக்கு மட்டுமே ஏற்றம் என்பதால், அதை நைச்சியமாகத் தளர்த்த வேண்டி, நம்மாழ்வார் கவிதையின் மேல்,Sanskrit  போர்வை போர்த்துவது போல் போர்த்தி, மந்திரம் போலவே மெட்டமைத்து தமிழை ஒலிக்கச் செய்தனர்; அதில் ஓரளவு வெற்றியும் பெற்றனர்!

அது, தமிழ்மொழி சற்றே கருவறைக்குள் நுழைந்த காலம்! ‘தமிழ் வேதம்’ எனச் சொல்லி, ‘திராவிட வேதம்’ என்ற பெயர் சூட்டப்பட்டது நம்மாழ்வார் தமிழுக்கு!

சர்வ அர்த்ததம்; ஸ்ரீ சடகோப (நம்மாழ்வார்) வாங்மயம்,

சகஸ்ர சாகோ உபநிஷத் சம ஆகமம்,

நமாம்யஹம்; திராவிட வேத சாகரம்!

மகாபாரதம், ‘திராவிடம்’ என்ற சொல்லுக்குச் செய்த இழிவை பின்னாளில் இராமானுசர் போன்றோர் துடைத்தார்கள். அதே சமஸ்கிருத மொழியில், “ஹே, திராவிட வேதமே, உன்னை வணங்குகின்றேன்’’ என்று சுலோகம் எழுதப்பட்டது.

நம்மாழ்வார் தெலுங்கிலா எழுதினார்? அல்ல! ‘திராவிட’ வேதம் என்பது தமிழையே குறிக்க வந்த சொல்! பின்பு தான், திராவிட மொழிக் குடும்பமான தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, கொடவா.. அனைத்தும் ஆகி வந்தது!

‘திராவிடம்’ என்ற திசைச்சொல், சமஸ்கிருதம் மட்டுமே அல்லாமல்.. பிற வட இந்திய மொழிகளிலும், சற்றே மாறி மாறிப் பயில்கிறது. நமது இந்திய நாட்டின் தேசிய ‘கீதம்’, மனப்பாடமாய்த் தெரியுமா உங்களுக்கு? அதில் வரும் ‘திராவிட’ சொல், மூலமொழியான வங்காளத்தில் அப்படி இல்லை!

நமது நாட்டுப் பண் (தேசிய கீதம்); வங்காள மொழியில் ‘திராபிர’ என்றே குறிப்பு!

Jono gono mono odhi nayoko joyo he, Bharato bhagyo bidhata!


Punjab Sindhu Gujarat Maratha, Drabira Utkolo Banga


மூலமொழி வங்காளத்தில் சற்றே மாறினாலும், நாம் இன்று திராவிட உத்கல பங்கா என்றே பாடுகிறோம்! இதுதான் திசைச் சொற்கள் பரவிடும் விதம்!

‘தமிழம்’ என்ற நம்முடைய ஒரே சொல்..

·            •    Damirica/Drabira
             •    Dramida/Dravida

என்று பலப்பல திசை ஒலிப்பு; ஆயினும், அவை யாவும் ‘தமிழ்’ குறித்த ஒலிப்பே!!

தமிழ் மொழியை மட்டுமே குறித்த ‘திராவிடம்’ என்ற திசைச்சொல், எப்போது/எப்படி... தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மற்ற மொழிகளையும் குறிக்கத் துவங்கியது? அதையும் பார்த்து விடுவோமா?

‘ஒரு திராவிட’ (தமிழ்) மொழி, ‘பல திராவிட’ மொழிகளாய் ஆன கதை:

தமிழ் என்ற பெயர் எப்படித் திராவிடம் என்று திரிந்ததோ... தமிழ் என்ற மொழியும் திராவிடம் எனத் திரிந்து, பல மொழிகளாகக் கிளைத்தது!

தெலுங்கு மொழி கிளைத்த போது, அதை ‘ஆந்திர திராவிடம்’ என்று அழைக்க ஆரம்பித்தனர் வடநூலார் (குமரில பட்டர்)! பழைய திசைச்சொல் ‘திராவிடம்’ (தமிழ்). அதன் மேலேயே ஆந்திரம் எனும் மீஜ்tக்ஷீணீ றீணீதீமீறீ ஒட்டினர். ஆந்திரம் = சமஸ்கிருதம் + தெலுங்கு; நன்னய்யாவின் ‘ஆந்திர மகாபாரதம்’ எனும் காப்பியம், இவ்வகையே!

‘தெலுகு’ என்பதே மொழிப் பெயர்! அதன் மேல் ‘ஆந்திரம்’ என்ற சொல்லை ஏற்றினர். ஆந்திரம் = ரிக் வேதம், ஐதரேய பிராமணத்தில் வரும் ஓர் இனக்குழு!

தமிழும் தெலுங்கும் இயல்பிலேயே ஒத்துச் செல்பவை. ஆனால் அத் தெலுங்கோடு, சமஸ்கிருதம் கலக்கக் கலக்க, அது தமிழை விட்டு விலகிச் சென்று ஆந்திரம் ஆகும்! சில சங்கத்தமிழ்ச் சொற்களை, நாமே மறந்து விட்டோம். ஆனால் தெலுங்கில் பேச்சு மொழியில் வைத்துக் காத்து வருகிறார்கள் நகுதல் (சிரித்தல்) பொருட்டு அன்று நட்டல் எனும் திருக்குறளின் நகு  = நவ்வு எனும் ஆதிகாலத் தமிழை இன்றும் பேசி வருகின்றனர் தெலுங்கு மக்கள்!

·                      நகுதல் (நவ்வு)

·                      சால (உரிச்சொல்)

·                      செப்பு (தல்)

·                      வாவி (பாவி)

·                      பலுக்கு(தல்)

·                      அவ்வா (ஔவை) உள்ளி (வெங்காயம்)

·                      வங்காய் (வழுதுணங்காய்/கத்திரிக்காய்)

·                      வெள்ளு (வெளியேறல்)

பல ஆதி தமிழ்ச் சொற்கள், இன்றும் தெலுங்கில் உள! பட்டியல் நீளம்

இப்போது 2 தொகுதிகள் விளங்க ஆரம்பித்தன:

·                      தெலுங்கு அல்லாத பழைய தொகுதி = ‘தமிழ்/திராவிடம்’ என்றும்,

·                      புதிய தெலுங்கை = ‘ஆந்திர திராவிடம்’ என்று குறிக்கலாயினர்

தெலுங்கு, தமிழிலிருந்தே பிரிந்து சென்றது என்பதை, பல தெலுங்கு அன்பர்கள் இன்று ஒப்ப மாட்டார்கள் பேரே இல்லாத ஒரு Proto Dravidian எனும் ஆதிகுடி மொழியிலிருந்தே, தமிழும் தெலுங்கும் தனித்தனியாகக் கிளைத்தன என்பது அவர்களின் கருதுகோள்!

இருக்கட்டும்; பிற மொழிகளின் மேல் வலிந்து திணித்து.. “உன் சொல்லெல்லாம் என் சொல்லே; நீ எனக்கு அடிமை; உன் பண்பாடு நான் கொடுத்ததே!’’ என்றெல்லாம் தமிழ் ஒருநாளும் ஆதிக்கப் புத்தி கொண்டு இறங்காது. தன்னிடமிருந்து கிளைத்த மொழியோ/முற்றிலும் வேறு மொழியோ.. அந்த மொழியை, அதன் இனத்தை மதிக்கும், மனிதமுள்ள தமிழ்!

‘மொழிபெயர் தேயம்’ என்றே சங்க இலக்கியங்கள் காட்டும்; மிக அழகான காரணப் பெயர்! ஒரு மொழி, பெயரும் (நகரும்).. தேயம் (தேசம்) = மொழிப்பெயர் தேயம்.

ஒரு மொழி அதன் மையத்தை விட்டு விலகி, எல்லைகட்கு விரிய விரிய.. மொழியின் இலக்கணத்தோடு அன்றாடப் பயன்பாடும் விரிந்துவிடும். வாழும் சூழலுக்கேற்ப மக்கள்; அச் சூழலுக்கேற்பவே மொழி! அதுவே இயற்கை; நெகிழ்வு!

அந்த நெகிழ்வை மதிக்க வேண்டும்! அதை மதிக்காததால், சில பண்டிதாள் அன்றைய அரசர்களை அது போலவே நடத்துவித்ததால், மொழியே பிளவுபடும் அளவுக்குப் போய் விட்டது பிளந்த மொழிக்குள், சமஸ்கிருதம் செலுத்தப்பட்டு, பிளவு என்பதே நிலையாகிப் போனது!

சேரனின் தமிழில், ங ஞ ண ந ம ன மூக்கொலி மிகுதி! அவர்கள் வாழ்ந்த மலைச்சூழல் & மழைச்சூழல் அப்படி! அதை எள்ளுதல் அறமா? பின்னாளில், சேரர்களோ மாயோன் வழிபாட்டில் பெருக, சோழத் தமிழகமோ சைவத்தின் பிடியில் சிக்க, வேற்றுமை பேசிப்பேசிச் சேரர்களை எள்ள எள்ள, மொழிப் பிளவு!

 

இன ஒற்றுமை மொழி நெகிழ்வு = நம் தமிழர்கள் அனைவருக்கும் ஒரு பாடம்! வட்டார வேற்றுமைகளால் மொழி பெயரும் வட்டார வழக்கு மதிக்கப் பழகுவோம்!

வடக்குத் தமிழ் = வடுகு என்ற பெயரும் சங்கத் தமிழிலேயே காணலாம்! அருவா(ள்) நாடு (இன்றைய வடார்க்காடு)தான் வடக்கெல்லை. அதுதான் இன்றும் சில தெலுங்கு மக்கள் தமிழர்களை ‘அரவாடு’ எனும் காரணம் இகழ்ச்சி போல் தோன்றினாலும் அது இகழ்ச்சி அல்ல! நில வரலாறு!

¨                     அருவா நாடு = அரவாடு, தெலுங்கு எல்லையில்

¨                     கொங்கு நாடு = கொங்கா, கன்னட எல்லையில்

¨                     பாண்டி நாடு = பாண்டி, மலையாள எல்லையில்

எல்லை-_-ன்னாலே, எகத்தாளம் இருக்கத்தான் செய்யும் போல? பக்கத்து வீடே = அன்பும் சண்டையும்! கூட்டுக் குடும்பம் உடைந்து, தனிக் குடித்தனம் என்றான பின், அவரவர் வாழ்வு! தமிழக உரிமை = நீரும் வளமும் விட்டுக் குடுத்துற முடியாது; போராடணும்! ஆனால் ‘மொழிப்பகை’ ஆக்கி, இன வேர்களையே அழிச்சிறக்கூடாது!

தெலுங்கு கிளைத்த பிறகு, கன்னடமும் கிளைத்தது!

¨                     மனே (மனை)

¨                     காயி (காய்)

¨                     கேளு (கேள்)

¨                     நீனு (நீ)

¨                     நானு (நான்)

¨                     மக்களு  (மக்கள்)

¨                     ஊரு (ஊர்)

¨                     எல்லு (எல்லை)

இப்படி, பலப்பல தமிழ்ச் சொற்கள், இன்றும் கன்னடத்தில் உள!

இறுதியில்.. சேரன் தமிழும், மலையாளம் என்று கிளைத்தது; ஏற்கனவே கிளைத்த கன்னடத்தல் இருந்து, துளுவும் கிளைத்தது; தமிழ் மொழி சுருங்கிப் போனது... இன்று நாம் காணும் தமிழக எல்லைக்குள்!

ஆனால் நிலம் அதே தானே? மொழிகள் தானே புதுசா புதுசாக் கிளைப்பு! எனவே, தமிழுக்கு மட்டுமே வழங்கி வந்த திராவிட திசைச்சொல், கிளைத்த மொழிகளுக்கும் ‘திராவிட மொழிக் குடும்பம்’ என வழங்கப்படலானது;

இதுவே ஒரு திராவிடம் (தமிழ்) பல திராவிடம் ஆன கதை! அறிக; தமிழுக்கு மூலம் = திராவிடம் அல்ல! திராவிடத்துக்கு மூலமே = தமிழ்!

திராவிட மொழிகளும், தமிழும் = உடல்/ உயிர் போன்ற உறவு. அந்தப் பிரிந்த மொழிகளுள் மிகுதியாகக் காணப்படும் சமஸ்கிருதம்.... வெறும் மேலாடையே; தோலாடை (உடல்) அல்ல! திராவிட மொழிகளின் அடிப்படை இலக்கணம் & எண்ணுப் பெயர்களே, இதற்குச் சான்று காட்டிவிடும்!

(தொகுபடம் #7 : திராவிட மொழிக் குடும்பம் _- எண்ணுப் பெயர்கள் (பக்.164)

மேல் அட்டவணையில் 9ஆம் வரி பாருங்கள், 9 = தொண்டு எனும் ஆதி தமிழ் எண்! பின்புதான் ஒன்பது ஆனது! தொண்டு (ஆதி தமிழ்), தொம்மிதி (தெலுங்கு), தொன்பது, ஒன்பது, ஒம்பத்து என்று தென் மொழிகளில், ஆதி தமிழ்ச் சாயலே கொண்டு இருக்கும்! வடக்கே செல்ல செல்ல, குறுகு/பிராகுயி திராவிட மொழிகளில், நவம்/தசம் என்ற Sanskrit நகரலைக் காண்பீர்கள்! இந்த எண்ணுப் பெயர்கள் = தமிழ்/திராவிட அடித்தளச் சான்று!

திராவிட மொழிகள் = வெறுமனே தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளம், துளு மட்டுமேயல்ல! இன்னும் பல குடிகளின் மொழிகள்- குடகு, தோடா, குறும்பா, துருவா, செஞ்சு... மற்றும் கொடவா, கோண்டி, கொலாமி, குறுகு, பிராகுயி மொழிகளும் உண்டு!

சிந்து சமவெளி நாகரிகம் = தமிழ் நாகரிகமே! என்ற சான்று காட்டவல்ல, அங்கு இன்றும் நிலவும் திராவிட மொழி எச்சங்களை கிsளீஷீ றிணீக்ஷீஜீஷீறீணீ ஆய்வுகளில் வாசிக்க!

அயலகத் தமிழறிஞர், கால்டுவெல் (caldwell ) ஒப்பிலக்கணம் செய்தபோது, இதையே ‘பயன்படுத்தி’க் கொண்டார். அவராக திராவிடம் என்பதை ‘உருவாக்க’வில்லை! கிளைத்த மொழிகளின் தொகுதி = ‘திராவிட மொழிகள்’ என்று உலகம் வழங்கிய தமிழ்த் திசைச் சொல்லால் பரவலாக எழுதினார்.

கால்டுவெல் கருதுகோள்களில் சிற்சில தகவற்பிழை உண்டு.  ஆனால் அவரின் துணிபு, புதிய திறப்பாய் வெடித்தது, இந்திய மொழியியலுக்கு! எப்போதும் வடக்கிலிருந்தே, இந்திய_-இயல் தொடங்குவது வழக்கம்! அது வரலாறோ, மதமோ, மெய்யியலோ, தத்துவமோ எதுவாயினும்; சமஸ்கிருதமே இந்திய அடிப்படை என்ற Assumption-லேயே அறிஞர்களும் இயங்கி விடுவதால் ஒருவித மாயப் போர்வை!

அந்த Sanskrit போர்வையை விலக்கிப் பார்த்தது -= அறிஞர் கால்டுவெல் அவர்களே! அதனாலேயே, இன்று அவரைச் ‘சில பண்டிதாளு’க்குப் பிடிப்பதில்லை.

கால்டுவெலுக்கும் முன்பே தமிழ்க் காதலர் அறிஞர்,  F.W.Eills  (எல்லீசன்), ‘திராவிட மொழிகள்’ என்ற களத்தில் ஆய்வு தொடங்கியவரே! ஆனால் கால்டுவெல் பரவலாகச் செய்ததால், அவர் பெயரே நின்று போனது!

¨                     எல்லீஸோ/கால்டுவெலோ, உருவாக்கிய சொல் அல்ல திராவிடம்!

¨                     ஏற்கனவே இருந்த திசைச்சொல்லைப் பயன்படுத்திக் கொண்ட சொல்!

பின்னாளில் எழுந்த திராவிட இயக்கமும், இத்திசைச் சொல்லை, ஆரிய எதிர்ப்புச் சொல்லாய்ப் ‘பயன்படுத்திக்’ கொண்டதே தவிர, அவர்கள் உருவாக்கிய சொல் அல்ல, ‘திராவிடம்! பெரியார்/அண்ணாவுக்கும் முன்பே அயோத்திதாச பண்டிதரால், சிறிய அளவில் முன்னெடுக்ககப்பட்டதே. திராவிட அரசியல் களம் (திராவிட மகாஜன சபை) ‘திராவிட’ சபையோடு ‘ஒரு பைசாத் தமிழன்’ என்ற இதழும் நடத்தினார்; இதிலிருந்தே அறியலாம்: திராவிடம் = தமிழ்.

நாம் இங்கே.. திராவிட அரசியலுக்குள் செல்ல வேண்டாம்! திராவிட என்ற சொல்மூலம் மட்டும், வரலாற்று! அறிவியல் பார்வையோடு அணுகுவோம். அரசியல் பார்வையோடு அல்ல! அவரவர்க்கு ஆயிரம் அரசியல் பிடித்தங்கள் இருக்கலாம்; ஆனால் தமிழை = தமிழாக மட்டுமே காண்போம். மதம் & தற்பிடித்த அரசியல் கடப்போம்!

ஸ்ரமணம் = தமிழில் “சமணம்” ஆனதால் அது அருகனின் சமயமே அல்ல! என்பது எவ்வளவு மூடத்தனமோ... போலவே, உலக வழக்கில் தமிழ் = ‘திராவிடம்’ ஆனதால், அது தமிழே அல்ல! என்பதும்!

சிந்து சமவெளி நாட்டுக்கு = இந்தியா என்ற பேரே, உலகின் சொல் தானே? இதனால், இன்று இந்தியா என்ற பேரையே ஒழித்து விடுவோம்! என்று யாரேனும் கிளம்புவார்களா? இந்தியா   /indic/Indies/Indo  என்ற பெயரில் உள்ள, எத்துணை எத்துணை உலக வரலாற்று ஆவணங்கள் அழிந்து போகும்?

திராவிடம் = தமிழை, உலகம் குறித்த திசைச்சொல்!

பின்னாளில், திராவிடம் = ஒட்டுமொத்த மொழிக் குடும்பத்துக்கும் ஆகிவந்தது!

நாம், நம் மொழியை = திராவிடம் என்று ஒருநாளும் சொல்லப் போவதில்லை! அதற்காக, உலகத்தின் திசைச் சொல்லையெல்லாம் அழித்தால், தமிழ் மொழியின் உலகத் தொன்மம் யாவும் பாழ்பட்டுப் போய்விடும். ஏற்கனவே, கீழடித் தொன்மங்களை மறைத்து, “தமிழ் அவ்வளவு தொன்மை இல்லை; சமஸ்கிருதம் & தமிழ் = இரண்டும் 2 கண்கள்’’ என்றெலாம் போலிப் பரப்புரை செய்கிறார்கள். இதில், நமக்குக் கைக்கொடுக்க வல்ல கிரேக்கம் முதலான உலகத் ‘திராவி’ ஆவணங்களை இழந்துவிட்டால் சொல்லவும் வேணுமா?

அரசியல் காரணங்கள் வேறு! திராவிடம் என்பதைப் பெயரில் வைத்துள்ள சில கட்சிகள் செய்யும் தவறால், திராவிடமே தவறு செய்ததாக ஆகிவிடாது! அதை, அதே அரசியல் கொண்டு அணுகி, குறை தீர்த்துக்கொள்ள வேண்டுமேயன்றி, எலியை விரட்ட மனையைக் கொளுத்தல் அறிவுடைமை அன்று!

“திராவிடம் = தெலுங்கு; திராவிடம் = சம்ஸ்கிருதச் சொல்’’ என்றெல்லாம் மொழியியலே அறியாது, சார்பு அரசியலுக்காக, தமிழின் தொன்மம் சிதைப்பது, தமிழ் எனும் பசும் பயிரின் வேரிலேயே, வெந்நீர் ஊற்றி விடும். இப்படி அறிவற்றுச் செய்ய மாட்டோம் எனும் தமிழுறுதி கொள்வோம்!

நம் மொழி = தமிழே!

நம் நிலம் = தமிழ் நாடே!

நம் தேசிய இனம் = தமிழ் இனமே!

தமிழ் = Endonym/ திராவிடம் = ணிஜ்ஷீஸீஹ்னீ; அவ்வளவே!

தமிழோவும் தமிரிசயும் வேறு

த்ரமிளத் ரமில் எல்லாம் சாற்றின் - தமிழன்

திரிபே அவைகள்! செந்தமிழ்ச்சொல் வேர்தான்

பிரிந்ததுண்டோ இங்கவற்றில் பேசு

 

திரிந்தமிழ்ச் சொல்லும் தமிழ்ச்சொல்லே ஆற்றில்

பிரிந்தவாய்க்காலும் பிரிதோ? தெரிந்த

பழத்தைப் பயம் பளம் என்பார் அவைதாம்

தழைத்த தமிழ்ச்சொற்கள் தாம்

உரைத்த இவை கொண்டே உணர்க தமிழம்

திராவிடம்என் றேதிரிந்த தென்று! - திராவிடம்

ஆசிரியர்வாய்ப் பட்டுத் திரிந்தாலும் அந்தச்சொல்

ஆரியச்சொல் ஆமோ அறி

தென்குமரிப் பஃறுளியும் சேர்வடக்கு மாமலையும்

நன்கெல்லை கொண்ட நடுவிடத்தில் - மன்னும்

பொருள்கள் பலவாம்! பொலிந்தனவே அந்தப்

பொருள்கள் தமிழ்ப்பெயரே பூண்டு

பாவேந்தர் பாரதிதாசனின், தமிழ் = திராவிடம் கவிதையோடு நிறைவு செய்வோம்!

திராவிடம் = தமிழே! அது ஆரியச் சொல் ஆமோ? அறி!

எத் திசையும்(திசைச் சொல்லலாய்) இரு! பெருமைத் தமிழ் அணங்கே,

உன் சீர் இளமைத் திறம் வியந்து, வாழ்த்துதுமே! உலகத் தமிழ் வாழ்க!!

- உண்மை இதழ், 16-31.7.18