சனி, 13 ஜூன், 2020

திராவிடர் தளபதி ஏ.டி.பி


திராவிடர் இயக் கத்தைப் பற்றி குறை சொல் வதைச்சிலர் தொழிலாக்கிக் கொண்டு இருக்கின்றனர். இன்னும் சில அதிகப் பிர சங்கிகள், கேரளாவில் அதிகம் படித்து இருக் கிறார்களே. அதற்கெல்லாம் திராவிடர் இயக்கம் தானா காரணம்? என்று அதி மேதாவித்தனமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு உளறியும் வருகின்றனர்.
ஒவ்வொரு மாநிலத் திலும் ஒவ்வொரு வகை யான சூழல் உண்டு. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை கல்வி உரிமைக்காக குரல் கொடுத்தவர்கள் யார்? போராடியவர்கள் யார்?
கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடஒதுக் கீடுக்கான ஆணைகளைப் பிறப்பித்தவர்கள் யார்? குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து அரை நேரம் படித்தால் போதும், அரை நேரம் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்ற முதல் அமைச்சர் ஆச்சாரியாரின் (ராஜாஜியின்) வருணாசிரம நோக்கத்தை ஒழித்துக் கட்டிய தலைவர் யார்? இயக்கம் எது? என்று அடுக்கடுக்கான கேள்வி கள் உண்டு.
அரசு அமைந்தால் பள்ளிகளைத் திறப்பார்கள் - ஆனால் ராஜாஜி இரு முறை ஆட்சிக்கு வந்த போதும் 1937களில் 6000 கிராமப் பள்ளிகளையும் 1952இல் 8000 பள்ளி களையும் மூடினாரே - இது கேரளாவில் நடந்ததா? தமிழ்நாட்டில் தானே நடந் தது? அதனை எதிர்த் ததோடு - அதனைக் கொண்டு வந்த ஆச்சாரி யாரையே பதவியை விட்டு விரட்டினோமே - வரலாறு புரியாமல் உளறலாமா?
இன்று திராவிடர் தள பதி ஏ.டி. பன்னீர்செல்வம் பிறந்த நாள் (1888) அவர் தஞ்சாவூர் மாவட்டக் கழகத் தலைவராக (டிஸ் டிரிக்ட் போர்டு பிரசிடன்ட் 1924-1930) இருந்தபோது எத்தகைய கல்விச் சாத னைகளை முத்திரையாகப் பொறித்தார்?
உரத்தநாடு, இராசா மடம் ஆகிய இடங்களில் மன்னர்களால் கட்டப்பட்டு இருந்த சத்திரங்கள் முழுக்க முழக்கப் பார்ப்பன சிறு வர்களுக்குப் பயன்பட் டதை மாற்றி அமைத்தவர் அவர் தானே?.
திருவையாற்றில் ஒரு கல்லூரி - சமஸ்கிருத கல் லூரியாக மட்டும் இருந் ததை மாற்றி - தமிழ்ப் புலவர் பட்டப்படிப்புக்கும் வழி வகுத்து சமஸ்கிருதக் கல்லூரி என்றிருந்த பெயரை மாற்றி அரசர் கல்லூரி என்று புதுப் பெயர் சூட்டினாரே!
பார்ப்பனர்களுக்கு மட்டும் இருந்த விடுதியை அனைவருக்கும் பொது வானதாக மாற்றினாரே!
இதுதான் தமிழ் நாட் டுச் சூழல் - வாய்ப் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்று உளற வேண்டாம்.
- மயிலாடன்

திங்கள், 8 ஜூன், 2020

பார்ப்பனர் ஆரியர் என்பதற்குச் சான்றுகள் - பாவாணர்

பாவாணர்

பார்ப்பனர் ஆரியர் என்பதற்குச் சான்றுகள்

(1) உருவம் - நிறம் : பார்ப்பனர் வடக்கேயுள்ள குளிர்நாட்டி னின்றும் வந்தவராதலின், தமிழ்நாட்டிற்கு வந்த புதிதில் மேனாட் டாரைப்போல் வெண்ணிறமாயிருந்தனர்; பின்பு வெயிலிற் காயக் காயச் சிறிது சிறிதாய் நிறமாறி வருகின்றனர்.

‘கருத்தப் பார்ப்பானையும் சிவத்தப் பறையனையும் நம்பக் கூடாது’ என்பது பழமொழி. பார்ப்பனருக்குரிய நிறம் வெள்ளை யென்பதும், வெயிலிற்காயும் பறையனுக்குரிய நிறம் கருப்பென் பதும் இவர் இதற்கு மாறான நிறத்தினராயிருப்பின் அது பிறவிக்குற்றத்தைக் குறிக்குமென்பதும் இதன் கருத்து.

குடுமி : பண்டைத் தமிழருள் ஆடவர் (புருஷர்) குடுமி வைத்திருந் தனரேனும், பார்ப்பனரைப்போல மிகச் சிறிய உச்சிக்குடுமி வைத்திருந்ததாகத் தெரியவில்லை. பெண்டிர் இன்றுபோலத் தலைமயிர் முழுவதையும் வளரவிட்டனர். ஆடவர் சுற்றிவரச் சிறிது ஒதுக்கிக்கொண்டனர். ஆடவர் முடி சிறிதாயும் பெண்டிர் முடி பெரிதாயுமிருந்ததினால், இவை முறையே குஞ்சியென்றும் கூந்தலென்றும் கூறப்பட்டன. குடுமி என்பது உச்சிப் பாகத்தி லுள்ளதைக் குறிக்கும்.

அன்னாய் வாழிவேண் டன்னை நம்மூர்ப்
பார்ப்பனக் குறுமகப் போலத் தாமுங்
குடுமித் தலைய மன்ற
நெடுமலை நாட னூர்ந்த மாவே (ஐங். 202)

என்னும் ஐங்குறுநூற்றுச் செய்யுளில், குதிரையின் தலையாட் டத்திற்குப் பார்ப்பனச் சிறுவனின் குடுமியை உவமை கூறி யிருப்பது, அது தமிழ்ச் சிறுவனின் குடுமியினும் மிகச் சிறிதா யிருந்தமைபற்றியே.

மீசை : மீசையைச் சிரைத்துக்கொள்ளும் வழக்கம் ஆரியரதே. தமிழரிற் சிலர் மேனாட்டாரியரைப் பின்பற்றி இப்போது மீசையைச் சிரைத்துக்கொள்கின்றனர்.

(2) உடை : பார்ப்பனருள் ஆடவர் பஞ்சகச்சம் கட்டுகின்றனர்; பெண்டிர் தாறு பாய்ச்சிக் கட்டுகின்றனர். இவை தமிழர் வழக்க மல்ல. விசுவப் பிராமணரென்று தங்களைக் கூறிக்கொள்ளும் கம்மாளர், பார்ப்பனரோடு இகலிக்கொண்டே சிலவிடத்து அவரது உடுமுறையைப் பின்பற்றுகின்றனர்.

நூல் : பூணூலணிதல் பார்ப்பனர்க்கே உரியது, ‘நூலெனிலோ கோல்சாயும்’ என்னுஞ் செய்யுளும், ‘ஊர்கெட நூலைவிடு’ என்னும் பழமொழியும் இதனை வற்புறுத்தும்.

தமிழ்நாட்டு வணிகரும் ஐவகைக் கம்மியரும் பூணூல் பூண்டது, அறியாமைபற்றி ஆரிய முறையைச் சிறந்ததாகக் கருதிய பிற்காலமாகும்.

ஆரியம் தமிழ்நாட்டில் வேரூன்றிப் பார்ப்பனருக்குத் தலைமை யேற்பட்டபின், பல தமிழ் வகுப்பினர் தங்களுக்கு ஆரியத் தொடர்பு கூறுவதை உயர்வாகக் கருதினர். ஆரியக் குலமுறைக் கும் திராவிடக் குலமுறைக்கும் இயையு இல்லாவிடினும், ஆரியரல்லா தவரெல்லாம் சூத்திர வகுப்பின் பாற்பட்டவர் என்னும் தவறான ஆரியப் பொதுக்கொள்கைப் படி, தமிழ ரெல்லாருக்கும் சூத்திரப் பொதுப்பட்டம் சூட்டின பிற்காலத் தில், தமிழ் நாட்டிலுள்ள வணிகர் தங்களை வைசியரென்று சொல்லிக் கொண்டால், சூத்திரப்பட்டம் நீங்குவதுடன் ஆரியக் குலத் தொடர்புங் கூறிக்கொள்ளலா மென்று, ஆரிய முறையைப் பின்பற்றி வைசியர், சிரேஷ்டி (சிரேட்டி - செட்டி) என்னும் ஆரியப் பெயர்களையும், பூணூலணியும் வழக்கத்தையும் மேற்கொண்டனர். வணிகர் செல்வமிகுந்தவராதலின் அவரது துணையின் இன்றி யமையாமையையும், தமிழர்க்குள் பிரிவு ஏற்பட ஏற்பட அவரது ஒற்றுமை கெட்டுத் தங்கட்குத் தமிழ்நாட் டில் ஊற்றமும் மேன்மையும் ஏற்பட வசதியாயிருப்பதையும், பார்ப்பனர் எண்ணித் தமிழ் வணிகருக்குத் தாராளமாய் வைசியப்பட்டம் தந்தனர்.

ஆரியர்க்குள், பூணூலணிவது பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் என்னும் மேல் மூவரணத்தார்க்கும் உரியதேனும், அது ஆரியரொடு தொடர்பில்லாத தமிழர்க்குச் சிறிதும் ஏற்பதன்று. ஒவ்வொரு நாட்டிலும் மறையோர், அரசர், வணிகர், உழவர் என்னும் நாற்பாலார் உளர். அவரையெல்லாம் (சிறிது வேறு பட்ட) ஆரிய முறைப்படி முறையே பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று கொள்ளின், இங்கிலாந்திலுள்ள கந்தர்புரி (Canterbury) அரசக் கண்காணியாளரைப் (Arch Bishop) பிராமணரென்றும், மாட்சிமை தங்கிய ஆறாம் ஜியார்ஜ் மன்னரை க்ஷத்திரியரென்றும், அங்குள்ள வணிகத் தொழிலா ளரை வைசியரென்றும், உழவரையும், கூலிக் காரரையும் சூத்திர ரென்றும் கூறவேண்டும். ஆங்கிலேயர் ஒரு கலவைக் குலத்தா ரேனும், உறவுமுறையில் எல்லாரும் ஒரே குலத்தார் என்பது சரித்திரமறிந்த அனைவர்க்கும் தெளிவாய்த் தெரிந்ததே. பிராம ணர்கள் பிற நாடுகளிலுள்ளவர்களையும் ஆரியக்குல முறைப் படி பகுத்தாலும் பிராமணக் குலத்தன்மை மட்டும் தங்கட்கே யுரியதாகக் கொள்வர். அதோடு கூடியவரை எல்லாரை யும் சூத்திரரென்று பொதுப்படச் சொல்லி, பின்பு ஒரு பயனோக்கி அரசரை க்ஷத்திரியரென்றும், வணிகரை வைசியரென்றும் முன்னுக்குப்பின் முரண்படக் கூறுவது அவர் வழக்கம்.

கம்மியர் (கம்மாளர்) நெடுங்காலமாகப் பிராமணரொடு இகல்கொண்டு வருவதனால், தாமும் பிராமணரும் சமம் என்று காட்டுவதற்காகப் பூணூலணிந்து வருகின்றன ரேயன்றி வேறன்று.

தமிழ்நாட்டில் பூணூலணியும் தமிழரெல்லாம் ஏதேனும் ஒரு வணிகத் தொழிலராயும், கம்மியத் தொழிலராயுமே இருப்பர்.

தமிழரின் நாகரிகத்தையும், சரித்திரத்தையும் அறியாத தமிழர், ஆரிய நாகரிகத்தை உயர்ந்ததென மயங்கி, இக்காலத்தும் ஆரிய வழக்கத்தை மேற்கொள்வதால் உயர்வடையலாமென்று கருது கின்றனர். சில ஆண்டுகட்குமுன் சிவகாசி, சாத்தூர் முதலிய சில இடங்களிலுள்ள தனித் தமிழரான நாடார் குலத்தினர், புதிதாகப் பூணூலணிந்து கொண்டதுடன், தங்களை க்ஷத்திரியரென்றும் கூறிக்கொண்டனர். நாடார் குலத்தினர் வணிக குலத்தைச் சேர்ந்தவரென்பது உலக வழக்காலும், நூல் வழக்காலும் தெளிவாயறியக் கிடக்கின்றது. வைசியர், க்ஷத்திரியர் என்னும் பெயர்கள் வடசொற்களாயிருப்பதுடன், க்ஷத்திரியர் என்னும் பெயர் நாடார் குலத்திற்கு ஏற்காததாயு மிருக்கின்றது.

நூல் என்பது புத்தகத்திற்கும் இழைக்கும் பொதுப் பெயராத லின், நூலோர் என்னும் பெயர் அறிஞரையும் பார்ப்பனரையுங் குறிக்கும் இடம் நோக்கி யறிந்து கொள்க.

(3) நடை : தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில், 12ஆம் சூத்திர வுரையில், “தன்மையென்பது சாதித் தன்மை; அவையாவன பார்ப்பாராயிற் குந்திமிதித்துக் குறுநடை கொண்டு வந்து தோன்றலும்” என்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். இத் தன்மையை இன்றும் ஆங்கில நாகரிகம் நுழையாத சிற்றூர்களிற் காணலாம்.

(4) மொழி : பார்ப்பனரின் முன்னோர் பேசிய மொழி கிரேக்கத்தையும் பழம் பாரசீகத்தையும் வேத ஆரியத்தையும் ஒட்டியதாகும். வேத ஆரியர் மிகச் சிறுபான்மையரா யிருந்ததனாலேயே, கடல்போற் பரந்த வடஇந்தியப் பழந்திராவிட மக்களுடன் கலந்து தம் முன்னோர் மொழியைப் பேசும் ஆற்றலை இழந்தனர். அதனால், அவர் வழியினர் இன்று எம் மாநிலத்தில் உள்ளனரோ அம் மாநிலமொழியையே தம் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். ஆயினும் வேத ஆரிய மொழியுடன் அக்காலத்து வட்டார மொழிகளாகிய பிராகிருதங்களைக் கலந்து செயற்கையாக அமைத்துக்கொண்ட சமற்கிருதம் என்னும் வடமொழிமீது வரையிறந்த பற்றும், தாம் பேசும் வட்டாரமொழிகளில் இயன்ற வரை சமற்கிருதத்தைக் கலப்பதும், அவரெல்லார்க்கும் பொது வியல்பாகும்.

வடமொழி செயற்கையான வடிவில் மிக முதிர்ந்ததாதலின் வழக்குறாது போய்விட்டது. ஆனாலும், பிராமணரின் வழியினரான பார்ப்பனர் இன்று வடமொழியைத் தம்மாலியன்ற வரை பாதுகாத்து வருகின்றனர். பிராமணர் இந்தியாவில் எந்த இடத்திலிருந்தாலும், எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் வடமொழிப் பயிற்சியை மட்டும் விடார். மற்ற வகுப்பாரோ பெரும்பாலும் தத்தம் தாய்மொழிகளையே அறிந்திருப்பர். வடமொழியின் கடினம்பற்றிச் சில பார்ப்பனர் அதைக் கல்லாதிருப்பினும், அதன்மேல் வைத்திருக்கும் பற்றில் மட்டும், அதைக் கற்றவரினும் எள்ளளவும் குறைந்தவராகார். பார்ப்பனர் பிற மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டிருப்பதும், வடமொழி வழக்கற்றவிடத்து வேறு போக்கின்றியே யன்றி வேறன்று.

பார்ப்பனர் வடமொழியைப் பேசாவிடினும் வளர்ப்பு மொழியாகக் கொண்டுள்ளமையின், அவர்க்கு வடமொழியாளர் என்று பெயர்.

மணிமேகலையில், ‘வடமொழியாளர்’ (5 : 40) என்று பார்ப்பனர்க் கும், ‘வடமொழி யாட்டி’ (13 : 78) என்று பார்ப்பனிக்கும் வந்திருத் தல் காண்க.

வடமொழிக்குத் தமிழ் நூல்களில் ஆரியம் என்னும் பெயரும் வழங்குகின்றது. இப் பெயரொன்றே பார்ப்பனரைத் திராவிடரி னின்று வேறான ஆரியராகக் கொள்ளப் போதிய சான்றாகும். ஆரிய நாடு, ஆரியபூமி, ஆரியாவர்த்தம் என்று சொல்லப்படுவது பனி (இமய) மலைக்கும் விந்திய மலைக்கும் இடையிலுள்ள பாகமாகும். இதுதான் ஆரியர் இந்தியாவில் முதலாவது பரவி நிலைத்த இடம். இங்கு வழங்கினதினால்தான் ஆரிய மொழிக்கு ‘வடமொழி’ யென்றுபெயர்.

வடநாட்டில், ஆரியரும் ஆரியர்க்கு முந்தின பழங்குடிகளும் பெரும்பாலும் கலந்துபோனமையின், பிற்காலத்தில் வட நாட்டார்க்கெல்லாம் பொதுவாக ‘வடவர்’ ‘ஆரியர்’ என்னும் பெயர்கள் தமிழ் நூல்களில் வழங்கிவருகின்றன.

ஆரியம் என்னும் பெயரால் தமிழ்நாட்டில் கேழ்வரகு தவிர வேறு ஒரு பொருளுங் குறிக்கப்படுவதில்லை. ஆரியக் கூத்து என்பது தமிழ்நாட்டில் இசைத் தமிழும் நாடகத் தமிழும் வழக்கற்றபின், வடநாட்டார் வந்து ஆடிய நாடகத்திறமேயன்றி, பல்கலைக்கழக அகராதியிற் குறிக்கப்பட்டுள்ளபடி கழைக் கூத்தன்று.

ஆரியன் என்னும் பெயருக்கு, ஆசிரியன், பெரியோன், பூசாரியன் முதலிய பொருள்களெல்லாம் தமிழில் தோன்றினது தமிழ் நாட்டில் பார்ப்பனத் தலைமை ஏற்பட்ட பிற்காலத்தேயாகும். இப் பொருள்களும் நூல் வழக்கேயன்றி உலக வழக்காகா.

வடமொழி, தென்மொழியின் செவிலித்தாயென்றும், நற்றா யென்றும், இந்தியப் பொதுமொழியென்றும் ஆராய்ச்சியில்லாத பலர் கூறி வருகின்றனர். உலக மொழிகளில், ஆரிய மொழிகளும் திராவிட மொழிகளும் மொழிநிலையில் மிக வேறுபட்டன வாகும். திராவிடக் குடும்பம் மிக இயல்பானதும் ஆரியக் குடும்பம் மிகத் திரிந்ததுமாகும். அவற்றுள்ளும், இயல்பிற் சிறந்த தமிழும் திரிபில் முதிர்ந்த வடமொழியும் மிக மிக வேறு பட்டனவாகும்.

பார்ப்பனர் தமிழ்நூற்கன்றித் தமிழ்மொழிக் கதிகாரிக ளாகாமை

இப்போதுள்ள முறைப்படி, பார்ப்பனர் தமிழ்நூல்களைக் கற்றுச் சிறந்த புலவராகலாமேயொழியத் தமிழ்மொழிக்கும் தமிழ்க் கருத்துகட்கும் அதிகாரிகளாக முடியாது. அதற்குக் காரணங் களாவன:

(1) ஆரிய மனப்பான்மை

ஒவ்வொரு நாட்டார்க்கும் ஒவ்வொரு மனப்பான்மை யுண்டு. அதனால் சில கருத்துகள் வேறுபடும். கருத்து வெளிப்பாடே மொழி. ஒவ்வொரு மொழியின் அமைதியும், இலக்கணம் (ழுசயஅஅயச), மரபு (ஐனiடிஅ) என இருவகைப்படும். ஒரு மொழியின் இலக்கணத்தையும் அதிலுள்ள நூல்களையும், எவரும் அம் மொழியை எழுதப் படிக்கத் தெரிந்தவுடன், தாமே கற்கலாம்; ஆனால், அம் மொழியின் மரபையும், அம் மொழியாரின் விதப்புக் கருத்துகளையும் தாமே அறியமுடியாது.

பார்ப்பனர் தமிழ்நாட்டிற்கு வந்து பல நூற்றாண்டுகளாகியும், தமிழரோடு கலவாமல், தமித்தே யிருந்துவந்தமையின், தமிழ் மரபையும் தமிழ்க் கருத்துகளையும் முற்றும் அறிந்தாரில்லை.

பார்ப்பனர் எப்போதும் வடநாட்டையே தங்கள் முன்னோரின் நாடாகவும், வடமொழியையும் தங்கள் முன்னோரின் மொழி யாகவும் கருதிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், தமிழரோ எப் போதும் தென்னாட்டையே தங்கள் முன்னோரின் நாடாகவும், தமிழையே தங்கள் முன்னோரின் மொழியாகவும் கருதிக் கொண் டிருக்கின்றனர். இவ்வொரு வேறுபாடே இவ்விரு வகுப்பாரை யும் எவ்வளவோ பிரித்துக்காட்டும்.

நூல் என்னுஞ் சொல் முதலாவது, ஒரு சூத்திரத்தாலும் பல சூத்திரத்தாலும் ஆன இலக்கணத்தையும், இலக்கணம் போன்ற கலை (ளுஉநைnஉந)யையுங் குறித்ததாகும். இப்போது, அது புத்தகத் திற்கு வழங்கினும், புத்தகத்தின் பொருளைக் குறிக்குமேயன்றி, அதன் தாள்தொகுதியைக் குறிக்காது. புத்தகம் என்னும் பெயரே தாள் தொகுதியைக் குறிக்கும். இது பல பார்ப்பனருக்கு விளங்குவ தில்லை.

நண்டுக்குட்டி, கம்பவைக்கோல் என்பனபோன்ற மரபுவழு பார்ப்பனர்க்குள் மிகப்பொது.

(2) நாட்டுப்புறத்தாரோடு தொடர்பின்மை

ஒவ்வொரு மொழியிலும், சொற்கள் உலகவழக்கு, நூல் வழக்கு என இருபாற்படும். உலகவழக்கு பொதுமக்கட்கும், நூல்வழக்கு புலவர்க்கும் உரியனவாகும். பொதுமக்களிலும், நகர்ப்புறத் தாரினும் நாட்டுப்புறத்தாரே உலக வழக்கிற்குச் சிறந்தாராவர். உலகவழக்கு ஒரு மொழிக்கு உயிரும் நூல்வழக்கு அதற்கு உடம்புமாகும்.

பார்ப்பனர் தங்களை நிலத்தேவராக எண்ணிக்கொண்டு, குடியானவருடனும் தாழ்ந்தோருடனும் நெருங்கிப் பழகாமை யால், தமிழ்ச்சொற்கள் பலவற்றை அறிந்திலர்.

(3) வடமொழிப்பற்றும் தமிழ்ப்பற்றின்மையும்

வீணாக வடசொற்களை வழங்குவதினாலும், மணிப்பவள நடையிலும் தற்சம நடையையே பின்பற்றுவதாலும், ஆங்கிலச் சொற்கள் மொழிபெயர்க்காதே தமிழில் எழுதுவதாலும், ஒருகால் மொழிபெயர்ப்பினும் வடசொற்களாகவே பெயர்ப் பதாலும், தனித்தமிழை விலக்குவதாலும், தென்சொற்களை வடசொற்களென்று கூறுவதினாலும் பார்ப்பனருக்குத் தமிழ்ப் பற்றில்லையென்பது வெட்டவெளியாம்.

“ஸ்ரீய: பதியான ஸர்வேஸ்வரனது கிருபையால் ஸம்ஸாரி சேதநர்களின் உஜ்ஜீவனத்தின் பொருட்டு,” `யூநிவர்சிட்டி’ (பல்கலைக்கழகம்), லெக்சரர் (சொற்பொழிவாளர்), கமிட்டி (குழு), ஸ்கூல் பைனல் (பள்ளியிறுதி), ஆகர்ஷண சக்தி (இழுப் பாற்றல்), நிரக்ஷரேகை (நண்கோடு), மத்தியதரை (நண்ணிலம்), தசாம்சம் (பதின்கூறு), சதவீதம் (நூற்றுமேனி), வியாசம் (விட்டம்) முதலிய வழக்குகளால், தமிழ்ப்பற்றின்மை வெளியா தல் காண்க. (தேவநேயம் தொகுதி -10) (பக் 140-164)
- முத்துச்செல்வன் முகநூல் பதிவு, 4.6.20

ஞாயிறு, 7 ஜூன், 2020

திராவிடம் என்ற சொல் வந்தவழி

1) 1857 இல் ஆதி திராவிட அறிஞர்கள் பலர்கூடி
"ஆதிதிராவிடர் மகா சன சபை"
என்ற சமுதாய அமைப்பைத்
தொடங்கினர்.

2) 1883 ஆண்டிலே "திராவிடப் பாண்டியன்" எனும் இதழ்
மறைத்திரு டி. ஜான் இரத்தினம்
என்பாரை ஆசிரியராகக் கொண்டு நடத்தப்பட்டது.

3) 1890 இல் அயோத்திதாசர்
"திராவிடர் கழகம் " என்ற அமைப்பைத் தோற்றுவித்தார்.

4) 1890 இல் "திராவிட மகாசன சபை தொடங்கப்பட்டது.

5) 01.12.1891 அன்று உதகையில் "திராவிட மகாசன சபையின்" முதல் மாநாடு நடைபெற்றது.

6) 1892 இல் "ஆதி திராவிடர் மகா சன சபை தொடங்கப்பட்டது.

7) 1928 இல் "அகில இந்திய
ஆதி திராவிடர் மகாசன சபை"
எனப் பெயர் மாற்றம் பெற்றது.

8) 1944 இல் சேலம் மாநாட்டில்
நீதிக்கட்சியை "திராவிடர் கழகம்" என்று பெயர் மாற்றி
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செய்தித் தாள்கள் :

1) திராவிட மித்திரன் - 1885
2) திராவிடப் பாண்டியன் - 1885
3) திராவிட கோகிலம் - 1907
4) ஆதி திராவிடன் - 1919
5) ஆதி திராவிட மித்திரன் - 1939

"ஆரியரல்லாத ஆரியக்
கலப்பில்லாத மண்ணின்
மைந்தர்களான தமிழர்களைக்
குறிப்பதுதான் ' திராவிடர் '
என்னும் சொல் (பக்கம் 60)
என்கிறார் அயோத்திதாசப் பண்டிதர்.

சான்று : பக் 35 - 60.
'தமிழன்' அயோத்திதாசப் பண்டிதர்.
ஆசிரியர்:கோ.தங்கவேலு
வௌியீடு: நளினி பதிப்பகம்
சென்னை 600 080

"தமிழம் என்னும் பெயரின்
திரிபே திரவிடம்."

தமிழ்நாட்டின் பண்டைப்
பெயர் தமிழகம் என்பது.

இதைக் கிரேக்கரும், உரோமரும் " டமரிக்கே (Damarice) எனத் திரித்து வழங்கினர் .

வடநாட்டார் அல்லது ஆரியர் , "த" வை "த்ர"  என்றும் தமக்கு ழகரமின்மையால் ழகரத்தை ளகரமாகவும் திரித்துத் தமிழை முதலாவது த்ரமிளம் என வழங்கினர் .

பின்பு அது த்ரமிடம் - த்ரவிடம்
என மருவி, இன்று தமிழில்
திரவிடம் என வழங்குகின்றது.

இவ்வடிவங்களுள் த்ரமிளம்
என்பதே முந்தியதாதலாலும், 
அதற்கு முன்பும் தமிழ் என்னும்
பெயரே தமிழ் நாட்டில் வழங்கியதாலும், அன்று ஆரியக் கலப்பின்மையாலும், தமிழம்  என்னும் தனித் தமிழ்ப் பெயரே வடமொழி வழியாய் திரவிடம் என்று
திரிந்து வழங்குகின்றதென்க.

தமிழ் என்னும் பெயர் எங்கனம்
திரவிடம் என்று திரிந்ததோ ,
அங்கனமே தமிழ் மொழியும்
பிற திரவிட மொழிகளாய்
திரிந்ததென்று அறிக .

சான்று : பக்கம் 131 - 132.
சொல்லாராய்ச்சி கட்டுரைகள்.
தேவநேயப் பாவாணர்.
வௌியீடு : ஐந்திணைப் பதிபபகம்,
சென்னை - 5

தோழர்களே!

"திராவிடம்" எனும் சொல்லையே பலவாறு இழித்தும், பழித்தும் பேசும்,
தமிழர்கள் தமிழம், திராவிடம் என்பன ஒன்றே என்பதை அறிய வேண்டும்.

திராவிடர் என்ற சொல்லைப்
பெரியார் புகுத்தினார் என்று கருதுவோர் மேற்கண்ட கருத்துகளைச் சிந்திப்பீராக!
   - வி.சி. வில்வம்

வெள்ளி, 5 ஜூன், 2020

டாக்டர் டி.எம்.நாயரின் சீற்றம்!

ஒற்றைப் பத்தி - டாக்டர் டி.எம்.நாயரின் சீற்றம்!
June 5, 2020 • Viduthalai • மற்றவை

‘‘சில ஆண்டுகளுக்கு முன் ஒரு குளத்தில் ஒரு கனவானைச் சந்தித்தேன். அவரைப்பற்றி அவரையே விசாரித்தபோது அவர் பெரிய தனவந்தர், பல உயர்ந்த பதவிகளில் இருக் கிறவர். கல்வி கேள்விகளில் திறமை வாய்ந்தவர். பெரிய மனிதர்க்கு வேண்டிய யோக்கியதைகள் பூராவும் இருந்தன. எனினும், இவற் றையெல்லாம் கூறியதால் மட்டும் தன்னுடைய உயர் வான நிலைமையைச் சொல்லி விட்டதாக அவர் மனதுக்குச் சமாதான மில்லை. ஆதலால், எல்லாம் சொல்லியான பிறகு, அப் பக்கத்தில் மிகவும் செல் வந்தரான நம்பூதிரிப் பார்ப் பானுடைய பெயரைச் சொல்லி அவரைத் தெரி யுமா என்று கேட்டார். நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

‘‘ஹ! ஹா!! இப்பக்கங் களில் அவரைத் தெரியாத வர் இருக்கவே மாட்டார்கள். அத்திருமேனி குடும்பத்துக் கும், எங்கள் வீட்டுக்கும் பரம்பரையாய் ‘சம்பந்தம் உண்டு' எனச் சொல்லி மகிழ்ந்தார். தன்னுடைய செல்வத்தாலும், படிப்பாலும் மச்சு மாளிகை, காலால்  - கையாட்களாலும், உயர்ந்த உத்தியோகத்தாலும், தன் குடும்பத்திற்கு உயர்வு மேம்படவில்லை; ஆனால், ஒரு பார்ப்பான்  ..................ல் அப்பªருமை பூர்த்தியாகிற தென்ற எண்ணமும், வழக் கமும் கொண்ட வாழ்க்கை யாகயுள்ள ஹிந்து மதத்தை என்ன செய்வது.''

- கோவை அய்யாமுத்து கட்டுரைகள், நூல் பக்கம் 15

விவேகானந்தர் கேரளா வைப் பைத்தியக்காரர்களின் விடுதி என்று சொன்ன துண்டு. அவர் எந்தப் பொருளில் சொல்லியிருந் தாலும், எவ்வளவு மோசமாக நம்பூதிரிகளின் காமக்களி யாட்டம் கூத்தாடியது என்பது விளங்கும்.

நம்பூதிரி குடும்பத்தில் மூத்த மகன்தான் திருமணம் செய்துகொள்வான். மற்றவர்களுக்கு நாயர் வீட்டுப் பெண்கள்தான் - தன் விருப்பப்படி!

நீதிக்கட்சியின் முக்கிய மூளையான டாக்டர் டி.எம்.நாயர் கிளர்ந்து எழுந்தார்; வெகுண்டு கிளம்பினார் என்றால், இந்தக் கேவல மான நம்பூதிரிகளின், பார்ப் பனர்களின் ஆதிபத்திய - ஆபாச அட்டகாசத்தை எதிர்த்துதான் - கண்டுதான் என்பதை ஞாபகத்தில் வையுங்கள்!

 - மயிலாடன்

வியாழன், 4 ஜூன், 2020

திராவிட இயக்கத் தலைவர் நடேசனார்


சி. நடேசனார், 
திராவிட இயக்கத் தலைவர். 

சென்னை 
தியாகராய நகர் 
திருப்பதி 
தேவஸ்தானத்திற்கு 
எதிரே இருக்கும் 
நடேசன் பூங்காவில் 
நடந்து செல்வோர்க்கு 
டாக்டர் நடேசனை தெரியுமா 
என்ற கேள்விக்கு 
விடை தெரியல்லை!!. 

ஒரு நூற்றாண்டு காலம் 
தமிழ் நிலப்பரப்பின், 
தமிழ் நிலத்தின் 
வாழ்வியல் கூறுகளில், உரிமைகளில், 
என எல்லாவற்றிலும் 
புரட்சியை ஏற்படுத்திய இயக்கம் 
திராவிட இயக்கம்.

இன்று ஆலமரமாய் 
விழுது விட்டு 
வேப்பேரியில் 
பெரியார் திடல், 
தேனாம்பேட்டையில் 
விழுப்புரம், திருச்சி என, 
அண்ணா அறிவாலயங்கள் 
மாவட்டம் தோறும் 
முகவரிகளோடு 
திராவிட இயக்கம் 
உழைத்துக் கொண்டிருக்கிறது!

ஆனால் மொத்த 
திராவிட இயக்கத்தின் 
ஆதி முகவரி எதுவென்றால் 
வரலாற்றின் கைகளில் 
No. 13 
அக்பர் சாஹிப் தெரு, திருவல்லிக்கேணி.  
என்ற முகவரியைத்தான் காட்டும். 

பார்ப்பனரல்லாத,  பிற்படுத்தப்பட்ட 
திராவிட இன 
மாணவர்களுக்காக 
டாக்டர் சி. நடேசனார் 
நடத்திய 
திராவிட இல்லத்தின் 
முகவரிதான் அது. 

1908 மின்டோ-மார்லி 
அரசியல் சீர்திருத்த சட்டம் 
அமல் படுத்தப்பட்ட பின்பும் 
கல்வி நிறுவனங்களிலும், விடுதிகளிலும் 
பிராமணர் களுக்கு மட்டுமே 
இடம் ஒதுக்கப்பட்டது.

பிராமணரல்லாத 
பிற்படுத்தப்பட்ட
திராவிட இன 
மாணவர்களுக்கு 
இடம் மறுக்கப்பட்டது. 

அதனால் மாணவர்கள் 
மன உளைச்சலுக்கு 
ஆளாவதை தடுக்கவும் 
தங்கி படிக்கவும் 
தனியொரு மனிதனாக
டாக்டர் நடேசன் அவர்கள் 
1914ல் 
உருவாக்கியது தான் 
திராவிட இல்லம் 
(DRAVIDIAN HOME)

சென்னை 
திராவிட சங்கம் என்ற பிராமணரல்லாத 
அரசு ஊழியர்கள் சங்கமும் 
நடத்தி வந்தார். 
அந்த அமைப்பு 
திராவிட இல்லத்தில் வாரந்தோறும் விடுதியில் 
கூட்டம் நடத்தி 
விவாதமும் நடந்து வந்தது!  

இங்கு 
ம. வெ. சிங்காரவேலர், 
அன்னிபெஸண்ட் அம்மையாரும், 
சர். பிட்டி. தியாகராயரும், 
டி. எம். நாயரும் சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார்கள்!

இங்கு தங்கி படித்த 
R. K. சண்முகம் செட்டியார் 
சுதந்தர இந்தியாவின் 
முதல் நிதி அமைச்சராக இருந்தார். 
S. சுப்பிரமணியம் அவர்கள், 
நீதிபதியாகவும், 
நாராயணசாமி அவர்கள், 
அண்ணாமலை 
பல்கலை கழகத்தின் 
துணை வேந்தராகவும் ஆனார்கள்!

மனக்கசப்புகளால் பிரிந்திருந்த 
சர். பிட்டி. தியாகராயரையும் 
டி. எம். நாயரையும், 
இங்கு வைத்துதான் 
சமாதானம் 
செய்து வைத்தார்
டாக்டர். நடேசன். 

நீதிக்கட்சி என்ற 
தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை துவக்குவதற்கு 
டாக்டர் நடேசன் அவர்கள் தன்னோடு 
இரு நண்பர்களையும் இணைத்துக் கொண்டு 
அடித்தளம் அமைத்தார். 

1916 நவம்பர் 20ம் தேதி 
எத்திராஜ் கல்லூரி அதிபர் 
சர் எத்திராஜ்  அவர்களின் இல்லத்தில் பார்ப்பனரல்லாத தலைவர்கள் கலந்து கொண்டு ஒரு மனதாக 
நீதிக்கட்சியின் 
முதல் தலைவராக 
டாக்டர். நடேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

சென்னை நகர 
குடித்தனக்காரர் 
பாதுகாப்புச்  சட்டம் 
கொண்டு வந்து நிறைவேற்றியவர்
டாக்டர். நடேசன்.

இந்தச் சட்டம்தான் 
பின்னாளில் தி. மு. க.
குடிசை மாற்று வாரியம் 
அமைத்து 
ஏழைகளுக்கு வீடு கட்டி தந்ததற்கான 
முன்னோடி சட்டம். 

வாக்குரிமை என்பது,  
சொத்து, படிப்பு 
வரிசெலுத்துவோர்களுக்கு மட்டுமே இருந்தது.   
ஏழைகள் வரி செலுத்தாமல் இருக்கலாம், 
ஆனால் ஏழைகளின் உழைப்பால்தான் 
செல்வந்தர்கள் 
வரி செலுத்துகிறார்கள் 
என்று வாதாடினார்.  

வாக்குரிமை என்பது அனைவருக்கும் 
பிறப்புரிமையாக இருக்கவேண்டும் 
என்கிற 
டாக்டர் நடேசனாரின் 
சிந்தனை தான் 
பனகல் அரசரின் ஆட்சியில் பெண்களுக்கு 
வாக்குரிமை வழங்கியது. 

பெண்களுக்கு 
வாக்குரிமை வழங்கியதில் 
இந்தியாவிலேயே 
முதன்மை மாநிலமாக 
திகழ்ந்தது. 

கல்வி, வேலைவாய்ப்பு சட்டமன்றத்தில் 
இட ஒதுக்கீடு வேண்டும் 
என்று முதன்முதலில் 
குரல் கொடுத்தவர் 
நடேசனார். 

1921ல் தாக்கல் 
செய்யப்பட்டு 
தோல்வியடைந்த 
வகுப்பு வாரி 
பிரதிநிதித்துவ சட்டத்தை,
மீண்டும் 
1928ல்  
மந்திரியாக இருந்த 
தனது நண்பர் 
சர்.முத்தையா முதலியாரை அணுகி 
உறுப்பினர் அவையில் 
தாக்கல் செய்து 
வெற்றி அடைந்தார். 

இந்திய 
துணைக்கண்டத்தில் முதன்முறையாக 
இட ஒதுக்கீடு 
என்ற முறை 
சென்னை மாகாணத்தில்தான் அமல் படுத்தப்பட்டது. 

இத்தகைய 
அரும்பெரும் 
சாதனைகள் செய்த 
டாக்டர். சி. நடேசன் 
1938ம் ஆண்டு 
தேர்தலில் போட்டியிட்டு 
தேர்தல் முடிவுகள் வருமுன்பே 
தன் இன்னுயிரை இழந்தார். 

திராவிட இயக்கத் 
தலைவர்களின் 
இறுதி ஊர்வலத்தில் 
நன்றியுள்ள 
தொண்டர்களின் 
உணர்ச்சி பொங்க நடைபெறுவதில்  
முன்னோடி 
டாக்டர். சி. நடேசன் 
அவர்களின் 
இறுதி ஊர்வலம் தான். 

வாசிப்பு அறிவை மேம்படுத்தும், 

ART.நாகராஜன் 
புத்தக வாசல், மதுரை. 
9894049160.
05.06.2020.

Kandasamy Kandasamy