வியாழன், 10 நவம்பர், 2016

தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்தான திராவிட இயக்கத்தின் கொள்கை என்ன?

பெரியார் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமான தலைவரா?

தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்தான திராவிட இயக்கத்தின் கொள்கை என்ன?
-----------------------------------------------------------------

நம் நாட்டில் திராவிட மக்களுக்குள்ளாகவே திராவிடர் , ஆதித்திராவிடர் என்கிற ஒரு பிரிவு இருக்கிறது என்பதோடு, ஆதித்திராவிட சமூகம் மிகப்பெரும் எண்ணிக்கை கொண்ட சமூகமாக இருந்து வருகிறது. திராவிட நாட்டில் எப்படி வெளியிலிருந்து வந்த ஆரியர்களுக்குத் திராவிட மக்கள் தீண்டப்படாதவர்களாக இருக்கிறார்களோ, அப்படி திராவிடர்களுக்கு ஆதித் திராவிடர்கள் அதைவிட மேம்பட்ட தீண்டத்தகாதவர்களாய் இருக்கிறார்கள். இந்த நிலைமை திராவிட சமுதாயத்துக்கே ஒரு பெரும் மானக்கேடான நிலைமையாகும் என்பதோடு, திராவிடர்களை ஆரியர்கள் தீண்டப்படாத மக்கள் என்று வகுத்திருப்பதையும், நடத்துவதையும் அரண் செய்கிறது. ஆகையால், ஆதிதிராவிடர் என்ற பெயரே மாற்றப்பட்டு, இருவரும் திராவிடர்கள் அல்லது தமிழர்கள் என்கின்ற பெயராலேயே வழங்கப்பட வேண்டுமென்பதும், திராவிடருக்கும் ஆதிதிராவிடருக்கும் சமுதாயத்துறையிலுள்ள எல்லா வித்தியாசங்களும் பேதங்களும் ஒழிந்து, ஒரே சமூகமாக ஆகவேண்டும் என்பதும் எனது ஆசை. இந்த இரு நோக்கங்களும் ஜஸ்டிஸ் கட்சியின் நோக்கங்களில் பட்டதென்பது எனது அபிப்பிராயமாதலால் கட்சியின் பேரால் இவைகளைச் சொல்லுகிறேன்.

உத்தியோகம், கல்வி முதலிய விஷயங்களில் ஆதித் திராவிடர்கள் என்பவர்களுக்கு தனிச் சலுகை காட்டி, சீக்கிரத்தில் நம்மோடு சரி சமத்துவம் அடையும்படிக்கான நிலைமையை ஏற்படுத்த வேண்டியது நம் கட்சியின் தனிப்பட்ட கடமைகளில் ஒன்று.

- தந்தை பெரியார்
(குடியரசு 25.08.1940)

புதன், 9 நவம்பர், 2016

ஆரியத்திற்கு முந்தியது சிந்து சமவெளி நாகரிகம்!


இந்தியாவிற்கு அதற்கே உரித்தான முற்றிலும் பாரதீய மான ஒரு நாகரிகம் உண்டு. அதனுடைய அடிப்படை, வேதங் களும் உபநிஷத்துக்களுமாகும், இந்த வேத நாகரிகத்தை ஆக்கிரமித்து அழிப்பதைத் தான் முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்களும் பிறகு கிறிஸ்தவர்களும் செய்தனர்- இவை கள்தானே இந்து வகுப்புவாதிகளான சரித்திர ஆசிரியர்களின் வாதங்கள்.
இந்து சரித்திரத்தின் அடிப்படையில் தான் பாரதீய மயமாக்குவது என்ற கோஷத்தை ஜனசங்கத்தினர் (இன்றைய பாஜகவினர் எழுப்பியுள்ளனர்.
இந்த வாதத்திற்கு சரித்திர உண்மை களுடன் எவ்விதப் பொருத்தமுமில்லை என்பதை இதுவரை எடுத்துக்காட்டிய விஷயங்கள் தெளிவுபடுத்துகின்றன. வேதங்களும், உபநிஷத்துக்களும் எழுதப் படுவதற்கு முன்னாலேயே, அவைகளின் மூலம்வெளிப்படுத்தப்பட்டிருப்பதைவிட உயர்ந்த ஒரு சமுதாயமும் நாகரிகமும் சிந்து சமவெளிப்பிரதேசங்களில் வளர்ந்து இருந்தது என்று மறுக்க முடியாத முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தொல் பொருள் ஆராய்ச்சிகளின் விளைவாக இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் இத்தகைய தடயங்கள் கிடைக்காது என்று கூறமுடியாது (சமீப காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டவைகளில் ஏதாவது ஆரியர்களின் வருகைக்கு முன்னால் இருந்தவையா என்பதை பரிசீலிக்க வேண்டியுள்ளது) எப்படியிருந்தாலும் வேத நாகரிகத்தை விட புராதனமானதும் அதைவிட உயர்ந்த நிலையை அடைந்தது மான ஒரு பாரதீய நாகரிகம் சிந்து நதியின் பிரதேசத்தில் உருவாகியிருந்தது என்பது மறுக்க முடியாது.
அப்படியானால் பாரதீய மயமாக்குவது வேத நாகரிக காலம் வரை பின் சென்றால் போதாது. சிந்து சமவெளி நாகரிகம் வரையாவது செல்ல வேண்டும் என்றாகிறது.
சிந்து சமவெளி நாகரிகம்தான் ஆரம்ப கால பாரதீய நாகரிகம் என் பதை மட்டுமல்ல வரலாறு நிரூபிப்பது மிகப் புராதனமானதென்றும் சிறப்பிக்கப்படுகின்ற வேத நாகரிகம் கூட பின்னால் வந்த இஸ்லாமிய நாகரிகத்தையும் கிறிஸ்தவ நாகரிகத் தையும் நவீன பூர்ஷ்வா நாகரிகத்தை யும் போலவே அந்நியர்கள் இந்தியா வில் இறக்குமதி செய்த சரக்கு என் பதைக்கூட சரித்திர உண்மைகள் தெளிவு படுத்துகின்றன.
பாரதீய மதவாதக்காரர்களின் கடுமையான எதிர்ப்புக்கு இரையானவர்களல்லவா. அன்னிய மதங்களான இஸ்லாமையும் கிறிஸ்தவ மதத்தையும் பின்பற்றக் கூடியவர்கள். ஆனால் வேத நாகரிகத்தை உருவாக்கிய மக்கள் பகுதியினரும்பிறகு இஸ்லாமிய கிறிஸ்தவ மதங் களை உருவாக்கியவர்களும் எல்லாம் ஆரம்ப சரித்திர கால கட்டத்தில் ஒரே நிலப்பரப்பில் வாழ்ந்தவர்கள்தான் ஆரியர்கள் என்ற பொதுப்பெயரில் அறியப்படுகின்ற மக்கள் பகுதியினரில் ஒரு பிரிவினர் மேற்கு நோக்கிச் சென்றனர்.
அவர்கள்தான்   புராதன கிரீஸினுடைய வும், ரோமினுடையவும் நாகரிகங்களை உருவாக்கியவர்கள். வேறொரு பிரிவினர் கிழக்கு நோக்கிச் சென்றனர். சிந்து சமவெளி நாகரிகத்தை அழித்து தங்களது வேத நாகரிகத்தை உருவாக்கினர் மேற்கு நோக்கிச் சென்ற முதல் பிரிவினரிலிருந்து அய்ரோப்பாவும் கிழக்கு நோக்கிச் சென்ற இரண்டாவது பிரிவினரிலிருந்து இந்தியாவும் உருக் கொண்டது.  இவை இரண்டிற்குமிடையில்  மேற்காசியாவில் இஸ்லாமிய நாகரிகமும் வளர்ந்து வந்தது. இது தான் உண்மை.
- இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்
(இந்திய வரலாறு ஒரு மார்க்சிய கண்ணோட்டம்)
-விடுதலை ஞா.ம.,6.2.16

திங்கள், 7 நவம்பர், 2016

சிந்துவெளியில் மலர்ந்த தமிழ்!

மொழியியல் வல்லுநர் சாத்தூர் சேகரன், பல எம்.ஏ. பட்டங்கள் பெற்றவர். சிந்துவெளியில் மலர்ந்த தமிழ்பற்றிஅவர் சொல்லும் அரிய தகவல்கள் இதோ:
சான்று:
“1923-_24இல் ரெயில் பாதை போடுவதற்காக ஆங்கில கம்பெனியார், மொகஞ்சதரோ பகுதியில் வேலை செய்தபொழுது, அதிக நீள - அகல - உயரமான கனத்த செங்கல்களை பழைய கட்டட இடிபாடுகளில் கண்டனர். சதுப்பு நிலங்களில் பதித்திட அவை உதவும் என்று அறிந்தனர். பின்னர்தான் அவர்களுக்கே தெரிய வந்தது. இவை அழிந்துபோன சிந்துவெளி நாகரிகத் தின் இடிபாடுகள் என்று! இதற்குள் இந்திய அகழ்வாய்வுத் துறைக்கு செய்தி பறந்தது. இதன் பயனாக அரசு இதற்கான அகழ்வாய்வுத் துறையை வலுப்படுத்தியது.
இதன்பின் இரண்டாம் உலகப் போர் தொடங்கியதால், ஆய்வுப் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. ஆங்கிலேய அரசு போரில்தன் கவனத்தைச் செலுத்தியது. எனவே, கி.பி. 1936 முதல் 1945 முடிய பெரிய பணிகள் எதுவும் நடக்கவில்லை.
இந்தத் தேக்க நிலை, இரண்டாம் உலகப் போர் நின்றதுவும் முடியத் தொடங்கியது. இந்தியா -_ பாகிஸ்தான் இரு நாடுகளும் 1947இல் விடுதலை பெற்றன என்ற போதிலும் மக்களின் அறியாமையாலும், மதவெறியாலும் மூண்ட சில்லறைச் சண் டைகள் 1948_49 முடிய நடை பெற்று வந்தன.
பாகப் பிரிவினையில் - _ பாகிஸ்தான் வசம் 40 அகழ்வாய்வுக் களங்களும், இந்தியப் பகுதியில் வெறும் 10 அகழ்வாய்வுக் களங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், தொன்மையான நாடு இந்தியா என்ற காரணத் தால், இதற்குத் தொன்மை யான அகழ்வாய்வுக் களங்கள் கிட்டும் என்று அன்றைய பிரதமர் நேரு முதல் அகழ்வாய்வு அதிகாரிகள் அனைவரும் நம்பினர்.
2008_2009 ஆண்டளவில் இந்தியப் பகுதியில் தோண்டிய மொத்த அகழ் வாய்வுக் களங்கள் 1,000-க்கும் மேல் ஆகும். உலக நாகரிகங்களில் முதல் நாகரிகம் இந்திய (தமிழ்) நாகரிகம் என்ற கருத்துக்கு ஒவ்வொரு அகழ்வாய்வுக் குழிகளும் சான்றுகளைத் தந்து கொண்டே இருந்தன.
தொன்மை
மொகஞ்சதரோ, ஹரப்பா ஊர்களில் இருந்து 1,000_1,500 கிலோ மீட்டருக்கு அப்பாலும் சிந்துவெளி நாகரிகத்தை யொத்த பல அகழ்வாய்வுக் களங்கள் கிடைத்தன. அவற்றைச் சுற்றியுள்ள பல ஊர்களும் ஊர், பூர், புரி, புரம், கோட்டை, நகர், பாடி போன்ற தமிழ்ப் பாணிகளைக் கொண்டுள்ளன. எனவே, அகழ்வாய்வுக் களங்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள ஊர்களிலும் தமிழர்களே வாழ்ந்திருக்க வேண்டும் என்பதற்கு அசைக்க முடியாத சான்றுகளாக இவை திகழ்கின்றன.
தமிழகத்து அனைத்து நகர்களிலும் பெரிய தெப்பக் குளங்கள் உண்டு. வடக்கே செல்லச் செல்ல அவை சிறிய அளவாகி உள்ளன. சிந்துவெளி நாகரி கம் மட்டும்தான் உலகில் தொன்மை யான நாகரிகமாகிறது. சிந்துவெளி மட்டுமின்றி அகன்ற இந்தியாவிலும் 1,000 இடங்களில் நாகரிக நகர்களை அமைத்துள்ளான் தமிழன் என்ற செய்தி வெளியாகி உள்ளது.
வட இந்தியாவில் 2005-_2006 காலக் கட்டத்தில் 10க்கு மேற்பட்ட தோண் டப்பட்ட அகழ்வாய்வுகள் ஒரு பிரள யத்தையே தோற்றுவித்துவிட்டன. இங்கு கிடைத்த பல பொருட்களைச் சோதனை யிட்ட பொழுது - இங்கு நாகரிகம் தோன்றி 30 ஆயிரம் ஆண்டுகளைக் குறித்தன.  வேறு சில இடங்களில் நாக ரிகத் தொன்மை 33 ஆயிரம் ஆண்டு களுக்கும் அதிகமாக செல்கிறது.
பண்டைத் தமிழ்ச் சான்றோர் குமரிக் கண்ட காலம் கி.மு. 50 ஆயிரம் ஆண்டு களுக்கு முன் என்பர். தமிழர்கள் குமரிக்கண்ட மேரு மலைக் கடவுளை வணங்கினர். அது அழிந்த பின், இமய மலையை மேரு மலை  என்றனர். சிந்து வெளி நாகரிக மக்கள் சுமேரியப் பகுதியில் குடியேறியபொழுது - தம் சொந்த கடவுள் மலை நினைவாக அப்பகுதியைச் ‘சு-_மேரு’ என்று அழைத்தனர். அது ‘சுமேரியா’ ஆயிற்று. தமிழுக்கும், சுமேரிய மொழிக்கும் பல ஒற்றுமை உண்டு என்கிறார் அறிஞர் சதாசிவம். ஆம்..  சிந்துவெளி நாகரிகத்துத் தமிழர்களே சுமேரிய நாகரிகத்தைப் படைத்தனர்.
“சிந்து சமவெளி நாகரிகத்தை உருவாக்கியவர் யார்? என்பது தொன்று தொட்டு கேட்கப்படும் கேள்வியாகும். ஆனால், அங்கு சுக்கூர், மோகூர், ஜம்பு, பாலகோட், காந்தகோட், மூலைத்தானம், மான்கரை, ராஜன் நகர், மலைகண்டு, கண்டலாறு, கலாமாக்கம், மண்டி, சந்திரமான் போன்ற ஊர்ப் பெயர்களும் ஈதன், அணங்க மன்னன், அறவன், அந்தன், கோவன், திங்களன், நத்தன், உதயன், அதிகன், கூத்தன், மாசானன், சேயன், காளத்தி என மக்கள் பெயர் களும் உண்டு. இனியேனும் சிந்துவெளி நாகரிகம் தமிழருடையது என்று எவ்வித ஐயமும் இல்லாமல் உலகம் ஏற்றுக் கொள்ளும் என்று நம்பலாம்’’
நன்றி: ‘ராணி’ 14.11.2010
-விடுதலை ஞா.ம.23.1.16

சுதந்திரத் திராவிடத்தில் ஆரியர் கதி என்ன?


-விடுதலை ஞா.ம.,9.1.16

சிந்துச் சமவெளி திராவிடர் நாகரிகமே! தமிழகத்தின் புதிய கற்கால கோடரி- கண்டுபிடிப்பு

சிந்து சமவெளி நாகரிக எழுத்து களுடன் புதிய கற்காலக் கோடரி தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. நம் நாட்டில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு பொறிக்கப்பட்ட கல் ஆயுதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழரின் எழுத்துத் தொன்மையை உறுதிப்படுத்தும் மிகச் சிறந்த சான்று இது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். நாகப்பட்டினம் மாவட் டம் மயிலாடுதுறை வட்டம் செம்பியன் கண்டியூரில் கடந்த பிப்ரவரியில் மேற்கொண்ட கள ஆய்வில் இரண்டு புதிய கற்காலக் கைக்கோடரிகள் கண்டெடுக்கப்பட்டன.
அவற்றில் ஒன்றில் 3,500 ஆண்டு களுக்கு முற்பட்ட (கி.மு.15,00) மொஹஞ் சதாரோ - _ ஹரப்பா பண்பாட்டுக் கால எழுத்துகள் பொறிக்கப்பட்டுள் ளது தெரிய வந்துள்ளது என்று தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் சிறப்பு ஆணையர் சிறீதர் தெரிவித்தார்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற சிறப்புச் சொற்பொழிவில் பேசிய அவர் இது குறித்து கூறியது.
இதுவரை இதுபோன்ற குறியீடுகள் தமிழகப் பாறை ஓவியங்களிலும் இரும்புக்கால ஈமச்சின்னங்களில் இருந்து கிடைத்த பானை ஓடுகளிலும் மட்டுமே கிடைத்துள்ளன.
தற்போது கற்கருவி கிடைத்த செம்பியன் கண்டியூரில் இரும்புக் காலத்தைச் சேர்ந்த தாழிகள், கருப்பு -_ சிவப்பு மட்கலன்கள், குறியீடு பொறிக் கப்பட்ட பானை ஓடுகள் மற்றும் எலும்புத் துண்டுகள், சாம்பல் நிற மட் கலன்கள் ஆகியவையும் கிடைத் துள்ளன.
கருவியில் நான்கு பொறிப் புகள் உள்ளன. முதற்பொறிப்பு குத் திட்டு அமர்ந்த நிலையில் உள்ள மனித வடிவுடையதாகவும். அடுத்த பொறிப்பு கோப்பை வடிவிலும், மூன்றாவது பொறிப்பு ஏறத்தாழ முத்தலைச் சூலம் போன்ற அமைப்பிலும், நான்காவது பொறிப்பு குத்திட்ட பிறை வடிவின் நடுவில் ஒரு வளையத்தை இணைத்தது போலவும் உள்ளது.
தொல்லியல் ஆய்வாளர் அய்ராவ தம் மகாதேவன் ஆய்வின்படி, முதலிரு பொறிப்புகளுக்கும் முரு என்றும் அன் என்றும் பொருள் கொள்ளலாம்.
புதிய கற்காலக் கற்கருவியில் இவ்வெ ழுத்துப் பொறிப்புகள் கிடைத்ததன் மூலம் புதிய கற்காலத் தமிழக மக்கள் ஹரப்பா பண்பாட்டு மற்றும் நாகரிகக் கூறுகளைத் தொடர்ந்து பின்பற்றிய வர்கள் என்பது உறுதியாகிறது என்றார் சிறீதர்.
இக்கண்டுபிடிப்பின் மூலம் சிந்துவெளி நாகரிகமும், தொல் தமிழ் நாகரிகமும், திராவிட நாகரிகம் என உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ‘தினமணி’யின் முன்னாள் ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான அய்ரா வதம் மகாதேவன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் சிந்துவெளி எழுத் துகள் பொறித்த ஒரு கற்கால கருவி என்பதுதான் இக்கண்டுபிடிப்பின் முக்கியத்துவமாகும். இப்புதிய கற்காலக் கருவி சுமார் கிமு.1,500-க்கு மேற்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
கி.மு. 1,000த்துக்குப் பிறகு, இரும்பு வந்த பிறகு இக்கருவிகள் உருவாக்கப்படவில்லை. இதில் ஒரு பீடத்தில் உட்கார்ந்து இருக்கும் உருவத்தை அக்காலக் கடவுள் என்றும்,  அது முருகனைக் குறிக்கிறது என்றும் கூறுகிறார் அவர். இதே உருவங்கள் பொறித்த பெருங்கற்கால பானைகள் திண்டிவனம் சானூர், திருநெல்வேலி மாங்குடி கேரளத்தில் முசிறி ஆகிய இடங்களில் கிடைத்துள்ளது என்று அய்ராவதம் மகாதேவன் தெரிவித்தார்.
(‘தினமணி’ 2.5.2006)
குறிப்பு: சிந்துசமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமே என்று பொய்ப் பிரச்சாரம் செய்யும் பார்ப்பனர்களுக்கு இந்த ஆதாரம் மரண அடியாகும்.
-விடுதலை ஞா.ம.,9.1.16

மகிசாசுரன்- துர்காதேவி நவீன ஆரிய தாக்குதல்


மைசூர் நகரின் பழைய பெயர் மகிசாசூர் என்பது அனைவருக்கும் தெரியும், பிரிட்டீஷ் இந்தியா ஆட்சி யின் போது மைசூர் மகாராஜா அரண்மனையில் இருந்து திருட்டு போன ஒரு ஓவியம் இங்கிலாந்தில் உள்ள ஒரு செல்வந்தரிடம் பல கோடி ரூபாய்க்கு கைமாறபப்ட்டது. அந்த ஓவியத்தில் மகிசாசுரன் துர்காதேவி யுடன் உடலுறவு செய்வது போன்று வரையப்பட்டிருந்தது.
டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மகிசாசுரன் துர்கா புராணக்கதைதொடர்பான விவாதங் களும் கிளம்பியது, முக்கியமாக நாடா ளுமன்றத்தில் ஒரு புராணக் கதையை மய்யப்படுத்தி பேசிய ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தை தொலைக்காட்சி படப்பிடிப்பு அரங்கமாக மாற்றியதை நாம் அனைவரும் கண்டோம். தலித், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அனைவரும் மகிசாசுரன் வீரவணக்க நாள் கொண்டாடியதைக் கூறி அவர்கள் துர்கா தேவியை மிகவும் கேவலமாக வர்ணித்தார்கள் என்று கூறி கதை ஒன்றை நாடாளுமன்றத்தில் வாசித்தும் காண்பித்தார்.

மகிசாசுரன் இந்து மதப்புராணங் களின் படி கொடுமையான அரக்கன் என்று கூறப்பட்டுள்ளது, அவனை கொலைசெய்ய பல்வேறு உருவங்களை எடுத்து இறுதியில் கொன்றதாக கூறப்பட்டுள்ளது. இந்திரா காந்தி ஆட்சியில் பீகாரைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர் ஒருவர் பிகார் மாநி லத்தில் ஒரு அமைப்பினர் வெளியிட்ட நூல் ஒன்றில் துர்க்காதேவி மது அருந்துபவராக சித்தரிக்கப்பட்டிருப்ப தாக கூறி நாடாளுமன்றத்தில் பிரச் சினையை எழுப்பினார். இதற்கு பதிலளித்த அப்போதைய உள்துறை அமைச்ச்ர் பிரணாப் முகர்ஜி போரின் போது களைப்படையாமல் இருக்க துர்காதேவி தொடர்ந்து மது அருந்திய தாகவும், இதன் காரணமாக சூரி யனைப் போன்று சிவப்பு நிறத்தில் துர்க்காவின் கண்கள் மாறிவிட்டது என்று சண்டிபாட் துர்கா சரித்திர மானஸ்சில் (துர்கா வழிபாட்டு மாலை) உள்ளதாகவும் அதைத்தான் அவர்கள் தங்கள் நூலில் கொடுத்துள் ளார்கள் என்று கூறினார்.
2014-ஆம் ஆண்டு பார்வேர்ட் பிரஸ் பத்திரிகையில் இந்தியா முழுவதும் சொல்லப்பட்டுவரும் மகிசாசுரன் துர்காதேவிக் கதைகள் அச்சாகியது, இதில் மகிசாசுரனுக்கும் துர்க்காதேவிக் குமிடையே நடந்த உடலுறவு மற்றும் அதன்  மூலம் பிறந்த குழந்தைகள் பற்றிய ஜார்கண்ட் மக்களின் நம் பிக்கை கதையும் வெளியானது, இந்த நிலையில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த தொடர் குறித்து புகார்கள் வந்ததாக கூறியதை அடுத்து அந்த தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் டில்லியைச் சேர்ந்த ஒரு நபர் பார்வார்ட் பிரஸ் இதழில் வெளியாகும் இந்த தொடரின் மூலம் பாப்பனர்கள் மற்றும் பார்ப்பனர்கள் அல்லதவர்கள் இருபிரிவினருக்கு மிடையே கடும்பகையை ஏற்படுத்தும் விதமாக உள்ளது ஆகவே இதை எழுதியவர்களைத் தண்டிக்கவேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்றும் நீதிமன்றத்தில் நிலு வையில் உள்ளது.

இந்தியா முழுவதும் கொண்டாடப் படும் நவராத்திரிக்கும் வங்காளத்தில் கொண்டாடப்படும் துர்காபூஜாவிற் கும் வேறுபாடு உண்டு ராபர்ட் கிளைவ் பிளாசி போரில் இஸ்லாமிய சுல்தானை தோற்கடித்த பிறகு கொல்கத்தா நவாப் அந்த வெற்றியை விழாவாக கொண்டாட உத்தரவிட் டார். 1757--ஆம் ஆண்டு உருவாக இந்த விழா விரைவில் துர்காபூஜாவாக மாறி மகிசாசுரன் கதையும் அதில் சேர்ந்து கொண்டது. ஆரம்ப கால துர்காபூஜா இஸ்லாமியர்களை எதிரிகளாக கொண்டே கொண்டாடப்பட்டது. பிற்காலத்தில் உழைக்கும் வர்க்கம் வணங்கும் மகிசாசுரன் கொலை செய்வதைக் கொண்டாடும் பாணியில் மாறிவிட்டது.

ஆயிரம் ஆண்டுகளாக இந்தியா முழுவதும் வாழ்ந்த திராவிடர்கள் மகிசாசுரனை தெய்வமாக வணங்கி வருகின்றனர். அவர்களின் தலைமுறை யினர் மகிசாசுரனை கேவலப்படுத்தும் பார்ப்பனியச்சூழ்ச்சியை புரிந்து கொண்டு மக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக மகிசாசுரன் வீரவணக்க நாள் 2010-திற்குப் பிறகு கொண்டாடப்பட்டு வருகிறது.
2011-ஆம் ஆண்டு முதல் முதலாக ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மிகவும் பெரிய அளவில் மகிசாசுரன் வீரவணக்க நாள் கொண் டாடப்பட்டது, இந்த விழாவில் அன்றைய சட்டமன்ற உறுப்பினரும், இன்றைய பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான உதித்ராஜ் கலந்து கொண்டார். இந்தியா மட்டுமல்ல பாகிஸ்தானில் உள்ள பழங்குடியின ரும் மகிசாசுரனை குலதெய்வமாக வணங்கும் விபரம் தற்போது ஊட கங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இது வரை சுமார் 300 வகையான பழங் குடியினரிடையே மகிசாசுரன் தெய்வ மாக வணங்கப்படுவது தெரிய வந்துள்ளது

மதுரையில் புதூரில்  உள்ள பூங்காவில் மகிசாசுரனின் சிலை மிகப் பெரிய அளவில் உள்ளது. பூங்காவில் அழகிய சிற்பங்கள், விளையாட்டு சாதனங்கள் இருக்கலாம் ஆனால் அங்கே கையில் ஆயுதமும் கோடூரப் பார்வையும் கொண்ட மகிசாசுரன் சிலை பிரமாண்டமாக உள்ளது. அங்குள்ள மகிசாசுரன் சிலை தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது, மகிசாசுரன் கோவில் நீண்டகாலமாக அந்தப் பகுதியில் உள்ள மக்களால் வணங்கப்பட்டு வந்ததாகவும், பூங்கா அமைக்க திட்டமிட்ட போது பூங்காவினுள் கோவில் வருவதால் அதை இடிக்க மதுரை மாநகராட்சி திட்டமிட்டது, ஆனால் நூற்றாண்டாக வழிப்பட்டு வரும் ஒரு கோவிலை இடிக்க அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து கோவிலை இடித்து சிறிய மகிசாசுரன் சிலைக்கு பதிலாக மிகபெரிய அளவில் மகிசாசுரன் சிலையை வைக்கும் திட்டத்தை எதிர்ப்பாளர்களிடம் மதுரை மாநகராட்சி வைத்தது, அதன் பிறகு அந்தச் சிலை அங்கே நிறுவப் பட்டு இன்றுவரை பிரமாண்டமாக காட்சி தருகிறது. புதிதாகக் கட்டப்படும் தெருப்பிள்ளையார் கோவிலுக்கு எல்லாம் எதிர்சேவை செய்யும் அழகர் நூற்றாண்டு காலமாக சாலைக்கு அருகில் உள்ள மகிசாசுரன் கோவி லுக்கு எதிர்சேவை ஏன் செய்வதில்லை என்பதில் இருந்தே பாகிஸ்தானில் இருந்து மதுரை வரை ஆரிய திராவிட பகைமை இன்றும் தொடர்வது கண்கூடாக தெரியவரும்  பார்வேர்ட் பிரஸ் தொடர் வந்துகொண்டிருந்த போது நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப் பட்ட இயக்கத்தில் தலைவர்கள் உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் நடக்கும் மகிசாசுரன் வணக்கம் பற்றி தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் பார்க்கும் போது மகிசாசுர வதம் என்பது பார்ப்பனர்கள் இந்த நாட்டில் புகுந்து இங்குள்ள புகழ்பெற்ற மன்னர் ஒருவரை சூழ்ச்சியின் மூலம் கொலை செய்ததை கொண்டாடுகின்றனர் என்பது தெரியவரும்.

ஆரியர்களுக்கு மகிசாசுரன் ஒரு கொடிய அரக்கன், திராவிடர்களுக்கு ஒரு புகழ்பெற்ற தலைவன் ஆகும். புராணக் கதைகளை வரலாற்று ஆதா ரமாக எடுத்துக் கொள்ளமுடியாது. புராணங்களே உண்மைக்கு எதிராக இருக்கும் போது அதில் உள்ள  வர்ண னைகளை வரலாற்றில் நடந்த சம்பவ மாக எக்காலத்திலும் எடுத்துக் கொள்ள முடியாது. அதாவது தீயதை (மகிசாசுரனை) நல்லது(துர்கா) வென்றதாக நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.மனித உடலும் எருமைத்தலையும் கொண்ட ஒரு அசுரன் அவனை ஆண்களால் வெல்ல முடியாதாம், ஆகையால் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்களது சக்திகளையெல்லாம் திரட்டி துர்கா விற்கு கொடுத்தார்களாம் அந்த துர்கா தேவி மகிசாசுரனைக் கொலை செய்தாளாம்.
நாடாளுமன்றத்தில் ஸ்மிருதி இரானி அவசரத்தில் ஓர் உண்மையை போட்டுடைத்து விட்டார். புராணக் கதையில் துர்கா ஒரு பரத்தை என்றும், அவள் மகிசனிடமிருந்த அளவுகடந்த செல்வத்தைப் பெற அவனைத் திருமணம் செய்வது போல் நாடகம் நடித்து 7 நாட்கள் அவனுடன் உட லுறவு கொண்டு 8 ஆவது நாள் அவன் களைப்புற்று உறங்கும் போது அவனைக் கொலைசெய்தாள் என்று உள்ளது. மைசூர் அரண்மனையில் இருந்து களவு போன ஓவியத்தில் மகிசாசுரன் துர்கா உடலுறவுக் கோலத்தில் உள்ளதாக இருக்கிறது.  இதனடிப்படையில் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் கூறிய கதைக்கும் அந்த ஓவியத்திற்கும் ஏதோ தொடர்பு உள்ளது உண்மையாகிறது.  துர்கா அல்லது தேவி வரலாற்றை எடுத்துக் கொண்டால் அது மார்கண்டேய புராணத்தில் இருந்து தொடங்குகிறது. மார்கண்டேய புராணம் கிபி 300-லிருந்து கிபி 500- காலகட்டத்தில் எழுதப்பட்டதாகும். அந்தப் புராணத் தில் ஸ்மிருதி இரானி கூறியதை விட நாகூசும் அளவிற்கு மிகவும் ஆபாச வருணனையில் மகிசாசுரனுக் கும் துர்காவிற்கு மிடையே நடந்த உடலுறவு பற்றி எழுதப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் தான் காமசூத்திரத்தில் சில இயற்கைக்கு மாறான உடலுறவுகள் வர்ணனை செய்து எழுதப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
இந்துமதப் புராணங்கள் அனைத் தும் ஒன்று ஆபாசங்கள் நிறைந்தி ருக்கும், மற்றொன்று மனசாட்சி களுக்கு இடமில்லாமல் எதையும் செய்யலாம் என்று எழுதப்பட்டி ருக்கும், முக்கியமாக எளியவர்களை தீயவர்களாக சித்தரித்து அவர்கள் கடவுளர்களால் கொலை செய்ய படுவதாக காட்டப்படும் வர்ணனை கள் நிறைந்திருக்கின்றன.
தமிழகத்தில் தந்தை பெரியார், மராட்டியத்தில் டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர், மகாத்மா பூலே போன்ற பெரும் தலைவர்கள் ஆரிய  புரா ணங்கள் அனைத்தும் மண்ணின் மைந்தர்களை அடிமைகொள்ளவும் அவர்களை ஒருவித பயப்போதை யில் வைக்கவுமே இயற்றப்பட்டன என்று தொடர்ந்து கூறிவந்தனர். அதற்காக பல்வேறு சான்றுகளையும் அவரக்ள் எழுதிய புராண இதிகாசங் களில் இருந்தே எடுத்துரைத்தனர்.
அர்த்தசாஸ்திரம், காமசாஸ்திரம், இரண்டுமே ஆர்யர்களால் மிகவும் நீண்டகால நரித்தந்திர யோசனை யுடன் எழுதப்பட்டதாகும். காம சாஸ்திரத்தை காண்பித்து இம் மண்ணை ஆண்ட மன்னர்களை வசப்படுத்தி கொலைசெய்தனர். அல்லது அவர்களை கைப்பாவை களாக்கினர் என்று மகாத்மா பூலே கூறினார்.
தந்தை பெரியார் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் உள்ள புரட்டுக்களை வெளிக்கொண்டு வந்தார். தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் எழுதிய மகாபாரதத்தின் கீதையின் மறுபக்கம் என்ற நூலுக்கு இன்றுவரை மறுப்பு எதுவும் கூற முடியாமல் பார்ப்பனர்கள் தவித்து வருகின்றனர்.
இந்துத்துவ அரசியல் ராமன் என்ற ஒன்றை மய்யமாக வைத்தே நடக்கிறது. எந்த ராமனை தந்தை பெரியார், பாபாசாகிப் அம்பேத்கர், மகாத்மா பூலே போன்றோர் தீவிரமாக எதிர்த்தார் களோ அதே ராமன் இன்று அரசியல் மய்யமாகி இருக்கிறான் என்றால் பார்ப்பனியம் மீண்டும் தங்களது அடிமைகளாக மண்ணின் மைந்தர் களை மாற்ற முயற்சித்து வருகிறது என்று தானே பொருள். மகிசாசுரன், ராவணன், போன்ற கதாபாத்திரங்களின் மூலம் மண்ணின் மைந்தர்களை தீயகுணம் கொண்டவர்களாகவும், அவர்கள் அழிந்தே தீரவேண்டும் என்ற நோக்கோடு கதைகளாக புனையப் பட்டது என்பதும் இதனை மக்களி டையே எந்த வகையில் கொண்டு சென்றால் சமூகத்தில் பிளவை ஏற்படுத் தலாம் என்ற சூழ்ச்சியில் பார்ப்பனியம் கைதேர்ந்த ஒன்றாக உள்ளது என் பதைக் கண்கூடாகக் காண முடியும்.
இந்த மண்ணிற்கு வெளியில் இருந்து வந்த ஆரியர்கள் எழுதிய அத்தனை கதைகளுமே ஆரியர்களின் தலைவனை ஒரு நாயகனாகவும் திராவிடர்களை அரக்கர்களாகவுமே சித்தரித்துள் ளார்கள் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக கைப்பற்றிய இடங்களில் தங்களது அரசாட்சியை ஏற்படுத்துவது ஒரு வழி அது வீரர்களின் வழி, ஆனால் கோழைகள் தாங்கள் உழைப்பின்றி வாழ கலாச்சாரசீரழிவை ஏற்படுத்தி அதன் மூலம்  குழம்பங்களை விளை வித்து மக்களைப் பிரித்து சுகவாழ்வு வாழ்வதும் ஒருவழி இதைத்தான் முன்பு ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டு நுழைந்த ஆரியர்கள் செய்துவந்தனர்.
இந்த இடத்தில் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும் திராவிட இலக்கி யங்களில் அன்பு, இரக்கம், கருணை, பாசம், பரிவு, விட்டுக்கொடுத்தல், சமாதானம் போன்றவற்றிற்கு மிகவும் அதிக இடம் கொடுக்கப்பட்டுள்ளது. பார்ப்பனர்களைத் தவிர்த்த மற்றவர்கள் அனைவரும் சூத்திரர்கள் என்று மனு எழுதுவதற்கு பலநூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றிய கணியன் பூங்குன் றனார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றார். வள்ளுவர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார்.
பார்ப்பனர்களுக்கு இன்றுவரை திராவிடர்களின் விழிப்புணர்வு எட்டிக் காயாக கசக்கிறது, அதனால் தான் தொலைக்காட்சிகளில் சிறப்பாக நடித்த ஸ்மிருதி இரானியைக் கொண்டு நாடாளுமன்றத்திலும் துர்காவிற்கு ஜே.என்.யு மாணவர்களால் அவமானம் ஏற்பட்டுவிட்டது என்று கூறவைத்தனர். இதன் மூலம் தங்களுக்கு எதிராக புறப்படும் எந்த ஒரு சக்தியையும் அவர்களின் கையைக் கொண்டே கண்ணைக் குத்தும் தந்திரத்தை இந்துத் துவக் கும்பல்கள் செய்துகொண்டு இருக்கின்றன.
- சரவணா ராஜேந்திரன்
-விடுதலை ஞா.ம.9.4.16

ஞாயிறு, 6 நவம்பர், 2016

“ஆரியன், திரவிடன் என்பது - ரத்த கலப்பல்ல!


“ஆரியன், திரவிடன் என்பது கலந்து போய் விட்டது, பிரிக்க முடியாதது, ரத்த பரீட்சையாலும் வேறுபடுத்த முடியாதது என்று சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறி வற்ற பேச்சு என்றே சொல்லுவேன். ஆரிய - திராவிட ரத்தம் கலந்து விட்டிருக்கலாமே தவிர, ஆரிய திராவிட ஆச்சார அனுஷ்டா னங்கள் கலந்து விட்டனவா...  ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இட மில்லாது, திராவிடம் என்றால் மாற்றிக் கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவமாகும்”
- தந்தை பெரியார்
(‘குடிஅரசு’ 14.7.1945)
-விடுதலை ஞா.ம.9.4.16

வியாழன், 3 நவம்பர், 2016

அரப்பா நாகரிகம் சுனாமியால் அழிந்திருக்கலாம்

அரப்பா நாகரிக தோலாவீரா நகரம்
சுனாமியால் அழிந்திருக்கலாம் ஆய்வில் தகவல்
குஜராத் மாநிலத்தில் உள்ள அரப்பா நாகரிக காலத்தைச் சேர்ந்த தோலாவீரா துறைமுக நகரம், சுனாமி எனும் ஆழிப் பேரலையால் அழிந்திருக்கலாம் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தோலாவீரா நகரம் குறித்து கோவா மாநிலத்தைச் சேர்ந்த தேசிய கடலியல் ஆய்வு நிறுவன(என்அய்ஓ) விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
அவர்களது கண்டுபிடிப்புகள் குறித்து என்அய்ஓவின் இயக்குநர் டாக்டர் நக்வி, கோவா தலைநகர் பனாஜியில் கூறிய தாவது:
சிந்து சமவெளி நாகரிகம் எனப்படும் அரப்பா நாகரிகத்தின் 5 ஆவது மிகப் பெரிய அகழ்வாய்வுப் பகுதியான தோலா வீரா, அரப்பா மக்களின் மிகப் பெரிய துறைமுக நகரமாகவும் இருந்துள்ளது.
தற்போதைய அகழ்வாய்வுப்படி, 1500 ஆண்டுகளுக்கு தழைத் தோங்கி, வளமாக இருந்த தோலாவீரா குடியிருப்புப் பகுதி, 3 பகுதிகளைக் கொண்டது. அவை அரண் மனை, மத்திய நகரம், கடை நகரம் ஆகும்.
சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன் பிருந்த அந்த நகரத்தின் தனித்தன்மையே அதன் தடிமனான சுவராகும். சுமார் 14 முதல் 18 மீட்டர் உயரம் கொண்ட தடிமனான அந்த சுவர், புயல் காற்று, சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளில் இருந்து அரப்பா மக்கள் தங்களைக் காத்துக் கொள்வதற்காக கட்டப்பட்டது தெள்ளத் தெளிவாகிறது.
தோலாவீராவில் உள்ள தடிமனான சுவரைக் காணும்போது, அரப்பா மக்கள், சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்கள் குறித்து அறிந்திருப்பதோடு, அவர்கள் கடலோர பேரிடர் மேலாண்மையில் முன்னோடிகளாகத் திகழ்ந்திருந்தனர் என்பதும் தெரியவருகிறது.
வரலாற்றுச் சிறப்புமிக்க போர் மற்றும் பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்திய காலத்தில்கூட இதுபோன்ற தடிமனான சுவர் இருந்ததில்லை. ஆகவே, சுனாமி குறித்து மக்கள் அறிந்து கொண்டு, பாது காப்புச் சுவரை அமைத்திருந்ததாகவே கருதப்படுகிறது.
மேலும் தோலாவீரா நகரத்தின் குறைந்தபட்சம் ஒரு பகுதியாவது சுனாமியால் அழிந்திருக்கக் கூடும் என்று தெரிய வருவதாக நக்வி கூறினார்.
-விடுதலை ஞா.ம.,3.9.16