திங்கள், 16 மே, 2016

சமஸ்கிருதத் துணைவேண்டாத் திராவிடத் தனித்தன்மை


- டாக்டர் கால்டுவெல்

திராவிட மொழிகள் வட இந்திய மொழிகளி லிருந்து பற்பல இயல்பு களில் வேறுபடுகின்றன. அவ்வாறிருந்தும், அத் திராவிட மொழிகள், வட இந்திய மொழிகளைப் போலவே, சமற்கிருதத்திலிருந்து பிறந் தனவாகச் சமற்கிருதப் பண்டிதர்களால் கருதப்பட்டன.
தாங்கள் அறிந்த எப் பொருளுக்கும் பார்ப்பன மூலம் கற்பிக்கும் இயல்பினர் அப்பண் டிதர்கள். அவர்கள் கூறும் அம்முடிவை, முதன் முதலில் வந்த அய்ரோப்பிய அறி ஞர்களும் அவ்வாறே ஏற்றுக் கொண் டனர்.
தங்கள் கருத்தை ஈர்த்த ஒவ் வொரு திராவிட மொழியும் சமற்கிருதச் சொற்களை ஓரளவு பெற்றிருப்பதை அவர்கள் காணாதிருக்க முடியாது. அவற்றுள் சில இவை எம்மொழிச் சொற்கள் என்பதை அரும்பாடுபட்டே அறிந்து கொள்ள வேண்டிய நிலையில் பெரிதும் சிதைவுண்டிருக்கும்.
எனினும் சில சிறிதும் சிதைந்து மாறுபாடுற்றிரா என்பது உண்மை. ஆனால், அம்மொழி ஒவ்வொன்றும் சமஸ்கிருதம் அல்லாத பிறமொழிச் சொற்களையும், சொல்லுரு வங்களையும் அளவின்றிப் பெற்றிருப் பதையும் அவர்கள் தெளிவாகக் காண்பர் என்றாலும், அச்சொற்களே அம்மொழி வடிவில் பெரும் பகுதியை உருவாக் குகின்றன;
அச் சொற்களிலேயே அம் மொழியின் உயிர்நாடி நிற்கிறது என்ற உண்மையை உணர்ந்திருக்க மாட் டார்கள். அவ்வறியாமையின் பய னாய், அம்மொழிகளில் காணலாகும் அச்சமற் கிருதப் புறத்தன்மைகளுக்குக் காண முடியாத யாதோ ஒரு சில மூலத்திலி ருந்து தோன்ற வேற்று மொழிக் கலவை யாம் என்ற பெயர் சூட்டி அமைதி யுற்றனர்.
உண்மையில் சமற்கிருத மொழிச் சிதைவுகளாய் கௌரிய இனத்தைச் சேர்ந்த வங்காளம் போலும் மொழிகளிலும், சமற்கிருதத்திற்குப் புறம்பான சில சொற்களும் சொல்லுரு வங்களும் இடம் பெற்றுள்ளன; அப் பண்டிதர்கள் கருத்துப்படி, திராவிட மொழிகளுக்கும் அக்கௌரிய மொழி களுக்கிடையே மதிப்பிடத்தக்க வேறு பாடு எதுவும் இல்லையாதல் வேண்டும்.
இவ்வாறு, திராவிட மொழியில் காண லாகும் சமற்கிருதப் புறத்தன்மைகளை, வேற்று மொழிக் கலவையாக மதித்து ஒதுக்குவது, உண்மை நிலையிலிருந்து உருண் டோடி வீழ்வதாகும். மேலும், திராவிடம் சமற்கிருதத்திலிருந்து பிறந்தது என்ற கருத்து முந்திய தலைமுறையின ராக மொழி நூல் வல்லுநர்க்கு ஏற் புடையதாய் விளங்கினும், இக்காலை அறவே அடிப்படையற்றுப் போன கட்டுக்கதையாகி விட்டது.
மேலே கூறிய பண்டிதர்கள் சமற்கிருத மொழியை ஆழக் கற்று, வட இந்திய மொழிகளை விளங்க அறிந்தவரே எனினும் அவர்கள் திராவிட மொழிகளை அறவே கண் டறியாதவராவர்; அல்லது, ஒரு சிறிதே அறிந்தவராவர்.
ஒப்பியல் மொழி நூல் விதி முறைகளில் ஒரு சிறு பயிற்சியும் பெறாத எவரும், திராவிட மொழி களின் இலக்கண விதிகளையும் சொற்களையும் நன்கு கற்றுத் தேர்ந்து, அவற்றைச் சமற்கிருத இலக்கண முறைகளோடும் ஒப்புநோக்க அறியாத எவரும், திராவிட இலக்கண அமைப்பு முறையும், சொல் லாக்க வடிவங்களும், இன்றியமையாச் சிறப்பு வாய்ந்த அவற்றின் எண்ணற்ற வேர்ச் சொற்களும், எத்தகைய சொல் லாக்க, சொற்சிதைவு முறைகளினாலேயா யினும், சமற்கிருதத்திலிருந்து தோன்றி யனவாகும் என்று கூற உரிமையுடையவராகார்.
(திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் -
தமிழாக்கம்: புலவர் கா. கோவிந்தன்)
-விடுதலை ஞா.ம.,10.1.15

சுதந்திரத் திராவிடத்தில் ஆரியர் கதி என்ன?

- அறிஞர் அண்ணா
திராவிடநாடு பிரிவினை ஏற்பட்ட பின்பு, ஆரியர்கள் எங்கு செல்வது என்பது பற்றி, ஆரியர்களேதான் முடிவு செய்ய வேண்டும்.
ஆங்கிலோ - இந்தியர்கள் முதலிய மைனாரிட்டிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகள் ஆரியர்களுக்கும் அளிக்கப்படும்.
ஆனால் மூடப்பழக்க வழக்கங்களும், பிறவியில் உயர்ந்தவன் என்பதும், வைதீகமும், வர்ணாச்சிரமமும் இருக்க இடங்கொடுக்க மாட்டோம்.
ஆரியர்களை எங்கும் ஓடிப்போகும்படி சொல்லவில்லை ஆனால், ஆரியர்களுக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லையானால் மேலே பல ஆரியவர்த்தத்திற்கு போகலாம்.
ஆரியர்கள் இந்நாட்டை விட்டு வெகு சுலபத்தில் போய் விட மாட்டார்கள். ஜெர்மனியில் யூதர்கள் விரட்டப்பட்ட போதுதான் வெளியேறினார்கள்.
ஆனால், நாங்கள் ஹிட்லராக இருக்க விரும்பவில்லை.
-விடுதலை ஞா.ம.,10.1.15

திராவிடர்கள் பரம போக்கிரிகளா?


யார் கண்களில் யாருக்கு?
பண்டைப் பாரசிகர் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தே ஒரு தனிப்பெருங்கடவுளை வழிபடுபவர்கள். அவர்கள் மொழியில் அஹூர அல்லது அசுர என்றால் கடவுள், அஹூரமஜ்த அல்லது மகா அசுர என்றால் தனி முதல் கடவுள்.
அஹூர அஹூர மஜ்த, அஹூர மஜ்த அஹூர என்று முழந்தாளிட்டுப் பயபக்தியுடன் பிரார்த்தித்துக் கொண் டிருந்தார் ஒரு பெரியார்.
அவருக்குப் பக்கத்திலிருந்த ஒரு வாண்டுப் பயல் அவர் உருவத்தையும் சொற்களையும் பார்த்துச்சிரித்துக் கொண்டிருந்தான். சிறுவருடன் சிறுவர் கூடிக்குறும்பு செய்யத் தொடங்கினர். படித்த பெரியமனிதர் ஒருவர் அவர் களைப் பார்த்தார். அவர் அவர்களைக் கண்டித்தார்.
செய்வது தவறு என்ற உயரிய நோக்கத்துடனல்ல. அந்தப் பெரியாரைத் தொடுவதே பாவம் என்ற கருத்துடன், அவரை அவமதிக்கும் பாவத்துடன்!,
போங்களடா, அந்தச் சண்டாளன் பக்கம் நிற்காதீர்கள்! அவன் அசுரவித்து, சூனியக்கரன், தெய்வத்துரோகி! என்றார் அந்தப் படித்தவர்.
பாரசிகப் பெரியார் நிஷ்டை கலைந்தது. ஏனப்பா, பிள்ளைகள் தான் தெரியாமற் சிரிக்கிறதென்றால், படித்தவ ராகிய நீர் அதைவிட மோசமா யிருக்கிறீரே! என்று அவர் கேட்டார்.
படித்தவருக்கு அவருடன் சரி சமமாகப் பேசக்கூடப் பிடிக்கவில்லை முதுகைத் திருப்பிக் கொண்டு போய் விட்டார். ஆனால் அருகிலிருந்த அரைகுறைப்படிப்புச் சீடர் ஒருவர் சற்று ஆத்திரத்துடன் பேசினார்.
என்னய்யா! போம், போம்! இருந்திருந்து அசுரரையும், பேய் களையும் துதிக்கிறீரே! பிள்ளைகள் சிரிக்காமல் என்ன செய்யும்? பெரிய வர்கள் இத்தகைய சண்டாளக் கர்மங்களைப் பார்த்து வெறுத்து ஒதுக்காமல் என்ன செய்வார்கள்! என்றார்.
நான் எல்லாரையும் படைத்து அளித்துக் காக்கிற மகா அசுரனைத் தானே வணங்குகிறேன், இதில் என்ன சண்டாளத்தனம்?
எல்லாரையும் படைத்தளித்துக் காக்கும் அசுரனா? அடபாவி! அசுரர் என்றால் கடவுளின் பகைவர்! பேய்! எல் லாரையும் படைத்தளித்துக் காப்பவனைத் தேவன் மகாதேவன் என்று சொல்லு!
பாரசிகப் பெரியார் இரு காதுகளையும் பொத்திக்கொண்டு அஹூர அஹூர மஜ்தா! அஹூர மஜ்தா அஹூர! அபசாரம், அபசாரம் என்று கூவிக் கொண்டு பேசாது அப்பால் சென்றார்.
அசுர என்ற சொல்லுக்கு ஆரிய மொழியாகிய சமஸ்கிருதத்தில் பேய் என்று பொருள். ஆரிய வைதிகர் பண் டைப் பாரசிகர் அல்லது பார்சிகளைச் சண்டாளர் என்றது இதனால் தான். ஆனால் தேவ என்ற சொல்லுக்குப் பாரசிக மொழியில் பேய் என்று பொருள். இதனால் தான் பாரசிக வைதிகர்கள் அந்தப் பெயரை வணங்குபவரைச் சண்டாளர் என்று கருதிக் காதைப் பொத்திக் கொள்கின்றனர்.
இங்கே சண்டை கடவுளை வணங்குவதைப் பற்றியல்ல கொள்கை பற்றியல்ல, கடவுளின் பெயரைப்பற்றிய போராட்டம், மொழியைப் பற்றிய, இனத்தைப் பற்றிய போராட்டம் இது. ஒரு இனம் இன்னொரு இனத்தின் மீது கொண்ட பகை, ஒரு நாகரிகம் இன்னொரு நாகரிகத்தின் மீதுகொண்ட முரண்பாடு ஒருவர் தெய்வத்தை, பழக்கவழக்கங்களை இன்னொருவர் பழிப்பதாக வந்து விடிந்தது.
அசுர, தேவ என்ற பெயர் வேற்றுமை மொழி வேறுபாட்டையும், இன வேறுபாட்டையும் மட்டும் குறிப்பதல்ல. மொழி பகைமையையும், இனப்பகைமையையும் குறிப்பதாகும். அதுமட்டுமல்ல. இரண்டு நாகரிகங் களுக்கிடையிலும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடும், பாம்புக்கும் கீரிக்கும் உள்ள முரண்பாடும் இருந்தன.
அசுர வழிபாட்டாளர்கள் இரத்த வெறி கொண்ட யாகங்களை வெறுத் தார்கள். தேவ வழிபாட்டாளர்கள் அதையே தெய்வநெறியாகக் கொண் டார்கள். அசுர வழிபாட்டாளர்கள் மதுவை வெறுத்தார்கள். தேவ வழிபாட் டாளர்கள் மதுவை அருந்தாதவன் மனிதத்தன்மை உடையவனல்ல, ஆரியனல்ல என்று கருதினார்கள். அசுர வழிபாட்டாளர்கள் ஒரே ஒரு கடவுள் தான் உண்டு என்றார்கள். மின்னலுக்கு ஒரு பெண் தெய்வம் உண்டு என்றார்கள்.
தேவ வழிப்பாட்டாளர்கள் இடிக்கொரு ஆண் தெய்வம் உண்டு என்றார்கள். ஆளுக்கு இரண்டு தெய்வங்களாகக் கணக்கிட்டார்கள். விலங்குகளுக்குக் கூடத் தனித்தெய்வங்களே உண்டு பண்ணி, அந்த தெய்வீக விலங்குகளைப் பலியிட்டு உண்டார்கள்.
மனிதருக்கு மனிதர் ஒற்றுமை காண முடியும்! ஆனால் நன்மையும் தீமையும் போல, தீயும் தண்ணீரும் போல, உடல் நலமும் நோய்க் கிருமியும் போல ஒன்றுக் கொன்று மாறுபட்ட இந்த இரண்டு நெறிகளும் எப்படி ஒன்றாக முடியும்?
அசுர என்ற சொல்லை ஆரியன் ஏற்க மாட்டான். அதற்காக அசுர வழி பாட்டாளர் தங்களைத் தேவ வழிபாட் டினர் ஆக்கிக் கொள்ள மாட்டார்கள். அது போலவே தேவ என்ற சொல்லை பார்சிகள் ஏற்க மாட்டார்கள். அதற்காக ஆரியனும் தன்னை அசுர வழிபாட் டாளன் ஆக்கிக் கொள்ளப் போவ தில்லை. அன்புச் சமரசம் போதிக்கும் திரு.வி.க. போன்ற மகான்கள்கூட இவற்றிடையே சமரசம் செய்து வைக்க முடியாது. ஏனென்றால் அவை சொல் வேற்றுமை, மொழி வேற்றுமை மட்டுமல்ல.
இனவேற்றுமை மட்டுங்கூட வல்ல பண்பாட்டு வேற்றுமை, நன்மை தீமைப்பகுத்தறிவிலேயே வேற்றுமை உடைய இரண்டு நாகரிக இனங்களின் பண்பாட்டுச் சின்னங்கள்.
பார்சி இனம் ஆரிய இனம் ஆகிய வற்றைப் போன்ற வேறுபாட்டையே திராவிட இனமும் ஆரிய இனமும் கொண்டுள்ளன. இங்கே ஒரு இனத்தை ஒருவர் பழிப்பதுடன் நிற்கவில்லை. தெய்வப் பெயரைப் பழிப்பதுடனும் நிற்கவில்லை. ஓர் இனம் தன்னைத் தெய்வ இனமாக்கி மற்ற இனத்தின் பெயரையும் உரிமையையும், அதை என் றென்றைக்கும் அடிமைப்படுத்திச் சுரண் டக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது.
ஆரிய இனத்தவர் மொழியில் ஆரியர் என்ற சொல்லுக்கு மேலானவன் என்று பொருள். திராவிட இனத்தவர் பெய ராகிய திராவிடம் என்ற சொல்லுக்கு அவர்களிடையே சிலர் ஓடுபவர் போக்கிரிகள் என்ற அர்த்தங்கள் கூற முயன்றதுண்டு. ஆனால் அது போலவே திராவிட மொழியில் திராவிடர் என்ற சொல்லுக்குத் திருஅவா விடுபவர் என்று பொருள்.
ஆனால் ஆரியர் என்ற சொல்லுக்கு நாகரிகமற்றவர், மிலேச்சர் என்ற பொருளைத் திராவிடர் கூறு கின்றனர். இனத்துக்கு இனம் பெயரால் பழிக்கிறது. இதற்காக இரண்டு இனமும் தம் பெயரை மாற்றிக்கொள்ள முடியுமா? மாற்றிக் கொள்ளப் போவதில்லை.
வேண்டுமென்றால் ஆரிய இனத்தில் ஆரிய இயக்கத்தை எதிர்க்கும் அரைகுறை ஆரியர்கள் சிலர் ஆரியர் என்றால் மிலேச்சர் என்று தமிழ் நிகண்டு கூறுகிறது. ஆகவே ஆரியர் என்ற பெயர் நமக்கு வேண்டாம் என்று கூறக்கூடும். அதுபோல திராவிட இனத்திலும் திராவிட இயக்கத்திலிருந்து எக்காரணத்தினாலோ ஒதுங்கி நிற்கும் ஓரிருவர் திராவிடர் என்ற பெயர் நமக்கு வேண்டாம்.
ஏதோ புறம்போக்கு ஆரியர்கள் அதற்குப் பரம போக்கிரிகள் என்ற பொருள் கூறுகிறார்கள் என்று கூறக்கூடும். பெரும்பாலான ஆரியரோ, திராவிடரோ இந்தச் சிறுகுரல்களைப் பொருட்படுத்தப் போவதில்லை.
திராவிடர்கள் என்றால் பரம போக் கிரிகள் என்பது எந்த மொழியாராய்ச் சிக்காரர்கள் முடிவும் அல்ல. எந்த உயர் நூலின் மேற்கோளும் அல்ல. யார் யாரோ கூறிய வெறுப்புரை அது. ஆனால் அதை நமக்கு எடுத்துக் கூறுபவர் திராவிடர் - திராவிடருள் மதிப்புக்குரி யவர் வீர மறத் தமிழர் -_- அறிஞர்! நாவலர், திரு.சோமசுந்தர பாரதியார் அவர்கள்.
நாவன்மை மிக்க அப்பெரியார் இச்சிறு கூற்றை எடுத்துக் கூறவில்லை யானால், இதனை யாரும் பொருட் படுத்தமாட்டார். அவர் கூறினார் என்ற தற்காகத் தான் இந்த அளவு விளக்கம்.

திராவிடர் என்ற பெயரை நாவலர் அவர்கள் வெறுப்பது நமக்குத்தெரியும். ஆனால் அவர் திராவிட இனத்தை, மொழியை, நாகரீகத்தை வெறுப்பவ ரல்லர், போற்றுபவர், சொல்லை வெறுப்பதற்கு அவர் உள்ளத்தில் அவர் காணும் காரணம் ஒன்றே ஒன்று  அது ஆரிய மொழிச்சொல் என அவர் நம்பு வதே. ஆனால் அது ஆரிய மொழிச் சொல் அன்று! தமிழ் தன் ஆரிய மொழி வடிவு மட்டுமே.
தமிழ் மொழியின் பெயர் திருப்பதிக்கும் குமரிமுனைக்கும் குடமலைக்கும் இடையே குறுகிவிட இன்றைய தமிழ் மொழிப் பெயராக வழங்குகிறது. முன்னைய விரிவான முத்தமிழ் மொழியின் பெயராக அது சொல் பயன்படாது முத்துக்கூட அந்தப் பொருளில் இன்று வழங்கவில்லை.
அப்பொருள் ஆரிய அறிஞராலும், உலக கலைஞராலும் வழங்கப்பட்டு மறைமலை யடிகளார் போன்ற தனிதமிழறிஞரால் ஏற்கப்பட்ட சொல்லே திராவிடம். வட சொல், வட சொற் பொயர்களை வழங் காத தனித் தமிழ் வீரமறைமலையார் அதை ஏற்றுக் கொண்டபோது, இன்னும் வடசொற் பெயர் கொண்ட நாவலர் அதை ஏற்கத் தயங்குவது ஏன் என்பது தான் நமக்குப் புரியவில்லை.
-விடுதலை ஞா.ம. 10.1.15

திராவிடம் - ஒரு பார்வை

தமிழர்கள் தங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் போற்றப்பட வேண்டி யவர்கள் அறுவர். 1) அயோத்திதாசப் பண்டிதர் (1845 - 1914), 2) டாக்டர் சி.நடேசனார் (1875 - 1937), 3) டாக்டர் டி.எம்.நாயர் (1888 - 1919), 4) சர்.பிட்டி .தியாகராயர் (1852 - 1925), 5) தந்தை பெரியார் (1879 - 1973), 6) பேரறிஞர் அண்ணா (1909 - 1969).
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் ஆமைகளாய் ஊமைகளாய் அடங்கிக் கிடந்த கண்மூடிக் கொள்கைகளால் காலமெலாம் குருடராய் வாழ்ந்த தமிழ்ச் சமுதாயம் கண் திறப்பு ஏற்பட உரிமைக்குரல் கொடுத்தவர்கள் இந்த அறுவர் ஆவர்.
மிகவும் தொன்மையானதும் இந்து மதத்திற்கு முற்றிலும் மாறுபட்டதுமான திராவிடக் கருத்துகள் வேரூன்றி உள்ள தற்கு ஆயிரம் சான்றுகள் உள்ளன. 1856இல் திராவிட மொழிகளின் ஒப் பிலக்கணம் எனும் நூலை எழுதிய இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழி பேசும் மக்கள் எல்லோரும் ஒரே திராவிட இனத்தவர் என்னும் கருத்தை முன் வைத்தார்.
கி.பி.ஏழாம் நூற் றாண்டில் வாழ்ந்த வடமொழி ஆசான் குமாரிலபட்டர் ஆந்திர - திராவிட பாஷா எனும் சொற்றொடரை முதன் முதலாகப் பயன்படுத்தியதைக் கால்டு வெல் குறிப்பிடுகின்றார்.
1891ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கு பிராமணர், மராட்டியர்,  குடியேறிய முசல்மான் தவிர்த்து சென்னை மாகாணத்து மக்கள் முற்றிலும் திராவிடர்கள் என மக்கள் தொகை கணக்கெடுப்புப் பதிவில் (Census of India, 1891 Madras Report)
இடம் பெற் றுள்ளது.
கி.பி. 800இல் வச்சிர நந்தியால் திராவிடச்சங்கம் மறைத்திரு.ஜான் ரத்தினம் என்பரை இந்தியராகக் கொண்டு திராவிடப் பாண்டியன் என்னும் இதழை அயோத்திதாசப் பண்டிதர் நடத்தினார்.
1891இல் அயோத்திதாசர் பிராமண என்ற அமைப்பை நிறுவினார். 1909இல் இதனை திராவிட மகாஜன சபை என் றும் மாற்றினார். ஆரியன் என்றொரு மொழி இருந்ததும் இல்லை. அதற்கு அட்சரமும் இல்லை என்று உறுதிபட வாதிட்டு ஆரியத்தின் அடித்தளத் தையே ஆட்டம் காணச் செய்தார்.
1907ஆம் ஆண்டு அயோத்திதாசப் பண்டிதர் ஒரு பைசாத் தமிழன் என்ற பெயரில் இதழ் நடத்தி தமிழ் மொழி பேசுவோர் திராவிடர் என வழங்கி விடுதலை குறிப்பிட்டு நிலை நாட் டினார். 21.10.2005 அன்று மத்திய அரசு அயோத்திதாசப் பண்டிதருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு பெருமைப்படுத் தியது.
ஒரு பைசாத் தமிழன் இதழின் நூற்றாண்டு விழாவை 2.7.2008 அன்று சென்னை சர்.பிட்டி.தியாகராயர் அரங்கில் அந்நாள் முதல்வர் கலைஞர் பெருமகனார் மிகப்பெரும் அளவில் அரசு விழாவாகக் கொண்டாடி சிறப்பு சேர்த்தார். அயோத்திதாசப் பண்டிதர் திராவிடக் கருத்தியலின் முன்னோடி யாகத் திகழ்ந்தார். இக்கருத்தைத் தொடர்ந்து 1812இல் மாசத்தினைச் சரிதை என்னும் இதழ் தோன்றியது.
திராவிடன், ஆதிதிராவிடன் எனும் பெயர்களில் இதழ்கள் வரத்தொடங்கி யதையடுத்து, திராவிட தீபிகை (1845), திராவிட வர்த்தமானி (1822), திராவிட அபிமானி (1884), திராவிட மித்திரன் (1885), திராவிட ரஞ்சினி (1886), திராவிட நேசன் (1891), திராவிட மந்திரி (1893), திராவிட பானு (1906), திராவிட கோகிலம் (1899), திராவிடாபிமானி (1906), திராவிட மித்திரன் (1910 - இலங்கை) போன்ற இதழ்கள் 1912ஆம் ஆண்டிற்கு முன்பு வெளிவந்து திராவிடக் கருத்தியலை மக்கள் மத்தியில் பரப்பி வந்தன.
பிராமணர் அல்லாத அரசு ஊழியர்களை ஒன்று திரட்டி 1912ஆம் ஆண்டில் மெட்ராஸ் யுனைட்-டெட்-லீக் என்ற அமைப்பை உருவாக்கினர். 1913ஆம் ஆண்டு மெட்ராஸ் யுனைட்டெட் லீக்கின் முதலாவது ஆண்டு விழா டாக்டர் நடேசனாரின் தோட்டத்தில் நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் மெட்ராஸ் யுனைட் டெட் லீக் என்னும் பெயரை திராவிடர் சங்கம் என மாற்றிட தீர்மானம் நிறைவேறியது. அதுவே திராவிட இயக்கம் எனப் பெயர்பெற்றது.
இப்பெயர் மாற்றத்திற்குக் காரணமாக இருந்த டாக்டர் சி.நடேசனார் திரா விட இயக்க நிறுவனராக கருதப் பெற்றார். 1916ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 20ஆம் நாள் டாக்டர் சி.நடேசனார், டாக்டர் டி.எம்.நாயர், சர்.பிட்டி. தியாக ராயர் ஆகியோரால் பிராமணர் அல்லாதோர் நலன் காத்திட தென் னிந்திய நல உரிமைச் சங்கம் என்னும் கட்சி தொடங்கப் பெற்றது. அதுவே திராவிட இயக்கத்தின் தலைமகன் எனப் பெருமை பெற்ற நீதி கட்சியாகும். கண்மூடித் தமிழருக்கு கண் திறப்பு ஏற்பட்டது.
மனிதரில் வேற்றுமை விளைவித்த மனுநீதியை மாற்றிச் சமுதாய நீதி கேட்டுச் சண்ட மாருதம் எழுந்தது. 1916ஆம் ஆண்டில் தான் என முரசொலி மாறன், தமது திராவிட இயக்க வரலாற்று நூலில் குறிப்பிடு கின்றார்.
1920 முதல் 1936 முடிய 16 ஆண்டுகள் சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சி தான் நடைபெற்றது. பெண் களுக்குத் தகுதி அடிப்படையில் வாக்குரிமை, தேவதாசி முறை ஒழிப்பு, பால்ய மணத்தடுப்பு ஆகியன நிகழ்ந்து, வகுப்பு வாரி பிரதிநிதித்துவ முறை (சிஷீனீனீஸீணீறீ நி.ளி.) அமுலுக்கு வந்தது.
இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சட்டம், பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பகல் உணவுத்திட்டம் ஆகியனவற்றால் சாதனைச் சரித்திரம் படைத்தது. சர்.றி.ஜி. இராஜன் முயற்சியால் நீதிக்கட்சியின் பொன்விழா 1968இல் நிகழ்ந்தது. அன்றைய முதல்வர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் பொன்விழா மலரை வெளி யிட்டு உரை நிகழ்த்தினார்.
2003ஆம் ஆண்டு திராவிட இயக்கத்தின் 90 ஆம் ஆண்டுவிழா, இயக்க நிறுவனர் டாக்டர் சி.நடேசனாரின் 66வது நினைவு நாள் விழா, சென்னை சிந்தாதிரிப்பேட்டை சிங்கண்ணச் செட்டித் தெருவில் நிகழ்ந்தது.
டாக்டர் சி. நடேசனாரின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து தளபதி மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆற்றிய நிறைவுரை திராவிட இயக்கத்தின் புதிய விழிப்புணர்வை உண்டாக்கியது. திராவிட இயக்க நூற்றாண்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் சிறப்பான தலைமையில் நிகழ்வுற்றது.
திராவிடம் என்ற கருத்தியலை ஆந்திரர் ஏற்கவில்லை. கன்னடர் கண்டு கொள்ளவில்லை. கேரளர் செவியில் கேட்கவில்லை எனும் கருத்து அன்றும் இன்றும் முன்வைக்கப் பெறுகிறது. தாகூர் அவர்களால் வங்க மொழியில் எழுதப்பெற்று இன்று தேசிய கீதமாக நடுவண் அரசு ஏற்று, அனைத்து மாநிலங்களும், ஏற்றுக்கொண்டு பாடப்பெறுகின்ற ஜனகணமன என்ற பாடலில் திராவிட உத்சல வங்க என்று திராவிடம் எனும் சொல் இடம் பெற் றுள்ளது.
இந்தியாவிலுள்ள அனைத்து இன மக்களையும் இணைத்துப் பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலை யாளம் ஆகிய நான்கு மொழிகளைப் பேசும் மக்களைக் குறிப்பிடும் சொல் லாக திராவிட என்ற ஒரே சொல் தேசிய கீதத்தில் பயன்படுத்தப் பெற் றுள்ளது. தெலுங்கு, கன்னடம், மலை யாளம் ஆகிய மூன்று மொழிகளைப் பேசும் மக்கள், தங்கள் இனம் தேசிய கீதத்தில் இல்லையே என்று இன்று வரை எவ்வித எதிர்ப்புக்குரலும் எழுப்பவில்லை.
ஏன்? மனோன்மணியம் ஆசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் தமிழ்மொழி வாழ்த்துப்பாடலில் கன்னடமும் களி தெலுங்கும், கவின் மலையாளமும் உன் உதரத்துதித் தெழுந்து ஒன்று பல ஆயிடினும் என்று கூறும் அகச்சான்றிலிருந்து தமிழி லிருந்து கிளைத்த மொழிகளே கன் னடம், தெலுங்கு, மலையாளம் என்ற போதிலும். ஆதிநாளில் அனைவரும் தமிழைப் பேசும் திராவிடரே.
பின்னாளில் மொழி கிளைத்துத் தனித்தனி பிரிவு ஆயினர். கன்னடர், தெலுங்கர், மலையாளி ஆகியோர் ஒன்றாய் இருந்து தமிழ்ப்பேசினர். அந்நாளில் அவர்கள் திராவிடரே. அரண்மனையிலே இருந்த நீதிக் கட்சியை ஆலமரத்தடிக்குக் கொண்டு வந்தவர் தந்தை பெரியார். அதை மேலும் மேலும் விரிவாக்கி வெட்ட வெளிக்கு விரிவான திடலுக்குக் கொண்டு வந்து மக்கள் மன்றத்தில் கலந்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
11.8.1957 அன்று பேரறிஞர் அண்ணா மதுரையில் ஆற்றிய உரையில்தான் இந்த அரண்மனை - ஆலமரம் - வெட்டவெளி என்ற விளக்கத்தைத் தந்தார் என்பதை முரசொலிமாறன், தமது திராவிட இயக்க வரலாற்று நூலில் தெளிவுபடுத்துகிறார். ஆகவே திராவிடம் என்பது காலாவதி ஆகிவிட்ட ஒன்று அன்று என்பதை உணர வேண்டும். அது பற்றிய கருத்தியலைப் பார்ப்போம்.
சிந்தனைக்கு:
திராவிட இயக்கம் பற்றி கவியரசு வைரமுத்துவின் வைர வரிகள்:
திராவிட இயக்கம் என்ன தான் செய்தது தமிழனுக்கு?
இந்தியர் அல்லாத அரசுகள் எழுந்ததும் விழுந்ததும் தான் இந்தியா வின் வரலாறு என்றார் காரல் மார்க்ஸ். தமிழர் அல்லாதவர்கள் தமிழர்களை ஆண்டதுதான் தமிழர்களின் வரலாறு என்பது அதன் உண்மை.
மண்ணின் மக்களை ஆலயத்துக்குள் அனுமதிக்காமல் பூக்களுக்கும் வரிவிதித் துப் புண்ணியம் தேடிக்கொண்டது பல்லவர் அரசு. வருணாசிரமத்தை நெறியென்று கொண்டு சாதிவாரியாய் வீதி அமைத் தது மத இயக்கத்தின் மடியில் கிடந்த மாமன்னன் இராசராசன் அரசு. மேல் சாதி மன்னனுக்கு கருவூலத் தங்கம் காணிக்கை கொடுத்து விட்டு தறிகளுக்கும் மாட்டு வண்டிகளுக்கும் வரி விதித்தது நாயக்கர் அரசு.
கீழ் ஜாதி என்று கருதப்பட்ட சாதி இந்து ஒருவர் கோயிலுக்குள் நுழைவது குற்றம் என்று நீதிமன்றத்தில் தீர்ப் பளித்தது பிரிட்டிஷ் அரசு (1874).
இப்படி நூற்றாண்டுகளின் செருப் படியில் லாடமாய்த் தேய்ந்து கிடந்த தமிழனைத் தொட்டுத் தூக்கி நிறுத் தியது திராவிட இயக்கம். மண்ணுக்கும் மனிதனுக்குமான உறவை உணர்த்தியது திராவிட இயக்கம். தொலைந்து போன விழுமங்களை மீட்டெடுத்தது திராவிட இயக்கம். உயர்வு - இழிவு என்பன பிறப் பால் உருவானதில்லை என்று வர லாற்று ரீதியாக வாதிட்டு வென்றது திராவிட இயக்கம்
- (மானுட வெளிச்சம் செங்குட்டுவன்)
-விடுதலை ஞா.ம.10.1.15

அரப்பன் நாகரிகம் யாருடையது?

-முனைவர் நடன காசிநாதன்
உலக அளவில் மிகப் பழைமையான நாகரிகம் என்று மெசபொடோமிய நாகரிகத்தையும் (இன்றைக்கு 5100 ஆண்டுகளுக்கு முந்தையது) இதற்கடுத்த நிலையில் எகிப்திய நாகரிகத்தையும் (5000 ஆண்டுகளுக்கு முந்தையது), தொடக்க எலமைட் நாகரிகத்தை அதற் கடுத்த நிலையிலும் (5000 ஆண்டுகள் பழைமையுடையது) தொல்லியலா ளர்கள் கணித்துள்ளனர்.
மேற்கூறிய வற்றுக்கு அடுத்த நிலையில் சிறந்து விளங்கிய நாகரிகம் தான் அரப்பன் (ஹரப்பன்) நாகரிகம் என்று கூறிவந்தனர்.
ஆனால் இந்தியத் திருநாட்டை யடுத்து வடமேற்குப் பகுதியில் அமைந் துள்ள பலுசிஸ்தான் நாட்டு மெஹர் கரில் அகழாய்வு மேற்கொண்டதில் அங்கு அரப்பன் நாகரிகத்தின் தொடக்க நிலை இன்றைக்கு 9000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஏற்பட்டிருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. ஆதலால் உலகி லுள்ள அனைத்து நாகரிகங்களிலும் அரப்பன் நாகரிகம்தான் பழமையான நாகரிகம் என்றாகி விட்டது.
இதுவரை கண்டறியப்பட்டுள்ள அரப்பன் நாகரிக இடங்களைக் கணக் கில் கொண்டு பார்த்தால், அரப்பன் நாகரிகம் பரவியுள்ள இடமானது பரப் பளவில் எகிப்திய நாகரிகமும், மெச பொடோமிய நாகரிகமும் பரவியுள்ள இடங்களைக் காட்டிலும் இரு மடங்கு உள்ளதாகவும், உலகிலுள்ள பிற நாகரிக இடங்களின் பரப்பை ஒப்பிடுகையில் அரப்பன் நாகரிகப் பரப்பளவு அதிக மானது என்றும் கருதப்பெறுகிறது.
ஆனாலும், அரப்பன் நாகரிகம் உள்நாட்டிலே தோன்றிய நாகரிகம்தான் என்றும், இது ஆரியரல்லாதாரின் நாகரிகம் என்றும் பிற சான்றுகளைக் கொண்டு அறிய முடிகிறது என்று அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது தமிழர்தம் நாகரிகம்தான் என்பதும் சில தடயங்களால் உறுதிப்படுகிறது.
முதலில் இந்நாகரிகம் ஆரியருடை யது அல்ல என்பதற்குக் கீழ்க்காணும் காரணங்கள் கூறப்படுகின்றன.
1) இது நகர நாகரிகம் ஆரியருடையது போன்று கிராமிய, நாடோடி நாகரிக மல்ல.
2) அரப்பன் நாகரிகக் களிமண் தகடுகளில் பலவித விலங்குகளின் உரு வங்கள் காணப்பெறுகின்றன. ஆனால் குதிரை உருவம் காணப்பெறவில்லை.
3) குறுக்குக் கால்களையுடைய சக் கரங்கள் பொருத்தப் பெற்று இரதங்கள் காணப்படவில்லை. ஆரிய நாகரிகத் துக்குக் குதிரையும், குறுக்குக் கால்களை யுடைய சக்கரம் பொருத்தப்பெற்ற இரதங்களும்தாம் முக்கிய அடை யாளங்கள்.
4) ஆரியரின் முக்கிய வழிபாட்டு முறையான தீக்குண்டம் (ஹோமகுண் டம்) வழிபாடு காணப்பெறவில்லை.
அரப்பன் நாகரிகம் தமிழர்களின் நாகரிகம் தான் என்பதற்கான கார ணங்கள் பின்வருமாறு:-
1) எருமைக் கொம்புகள் போன்ற தலையணியுடன் காணப்பெறும் ஆண் உருவம் (இவ்வுருவம் பிற்கால மூஇலைச் சூல வழிப்பாட்டுக்கு முன்னோடியாக லாம்).
2) பெண் தெய்வங்கள் பல வடிவங்களில் காணப்பெற்றுத் தாய் வழிபாட்டு முக்கியத்துவம் தெரிவது.
3) தமிழர்கள் இன்றும் வழிபட்டு வரும் அரச மரம் மற்றும் பாம்பு வழிபாடு.
4) முக்கால் வட்ட கட்டடப் பகுதி (பனாவலி, அரியானா), (தமிழ்நாட்டில் பல்லவர் காலத்தில் கட்டப் பெற்றுள்ள பெரும்பாலான கோயில்கள் முக்கால் வட்ட வடிவிலேயே உள்ளன).
5) இலிங்க வழிபாடு.
6) சுடுமண் உருவங்கள் (குறிப்பாகப் பெண் உருவங்கள்) (,இவையும் தாய் வழிபாட்டின் சிறப்பையே உணர்த்து வனவாகக் கருதப்பெறுகின்றன).
7) மதகுருக்கள் சிற்பங்கள் காணப் படுபவை.
8) நீரில் மூழ்கி வழிபடுதல் (தமிழ் நாட்டில் கோவில்களின் முன்புள்ள குளங்களில் மூழ்கி வழிபட்டு வருதல்)
9) நகர அமைப்புகளில் இரு பகுதிகள் காணப்படுபவை (பூம்புகார், மருங்கூர்ப்பட்டினம் போன்ற நகரங்கள் போன்று).
10) சிற்ப அமைப்புகளில் திராவிடர் கலைப்பணி காணப்பெறுதல்.
11) தமிழ்நாட்டுக் கணித முறை அரப்பன் நாகரிகத்தில் காணப்பெறுதல்.
12) கோவில் இறைவன் முன்பாக அரசர் உருவங்கள் அமைந்திருப்பது. (மாமல்லை குடைவரைக் கோவில்களி லும், பிற கட்டுமானக் கோயில்களிலும் உண்ணாழிக்கு முன்பாக அரசர்கள் உருவங்கள் இறைவனை வணங்கும் நிலையில் காணப்படுகின்றன.
மேலே கூறியவற்றுக்கு மேலும் அரண் சேர்ப்பது போன்று, தமிழ் நாட்டில் அண்மைக்காலங்களில் கண்டறியப்பட்டுள்ள தொல்லியல் சான்றுகள் விளங்குகின்றன.
1) அரப்பன் நாகரிக உருவ எழுத்துக்கள் பொறிக்கப் பெற்றுள்ள புதிய கற்காலக் கருவி (நாகை மாவட் டம், செம்பியன் கண்டியூர்),
2) விழுப்புரம் மாவட்டம், கீழ் வாலை, இரத்தப் பாறையில் தீட்டப் பட்டுள்ள அரப்பன் நாகரிக உருவ எழுத்துகள்.
3) கோவை மாவட்டம், சூலூரில் கண்டறியப்பட்டு தற்போது பிரித் தானிய அருங்காட்சியகத்தில் (British Museum) காட்சிக்கு வைக்கப்பெற் றுள்ள சுடுமண் தட்டில் காணப்பெறும் அரப்பன் நாகரிக உருவ எழுத்துக்கள்.
4) கரூரில் கிடைக்கப்பெற்ற மோதி ரத்தில் காணப்பெறும் அரப்பன் உருவ எழுத்துகள்.
5) தமிழ்நாட்டில் வெளிப்படுத்தப் பட்டுள்ள பெருங்கற்காலப் பானை யோடுகள் மீது காணப்பெறும் கீறல் உருவங்கள் (இவற்றில் 89 விழுக்காடு அரப்பன் உருவ எழுத்துகள் போன்றே உள்ளன),
6) இராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளத்தில் மேற்கொண்ட அகழாய்வில் கிடைக்கப்பெற்றுள்ள பானையோட்டில் காணப்பெறும் உருவ எழுத்து மற்றும் தாயக் கட்டையில் காணப் பெறும் அரப்பன் நாகரிக எண் உருவங்கள்.
7) இலங்கை யாழ்ப்பாணத்துக்கு அருகிலுள்ள ஆனைக்கோட்டையில் கிடைத்த செப்பு முத்திரை மீதுள்ள உருவ எழுத்துகள் மற்றும் கேரள மாநிலம் எடக்கலில் காணப்பெறும் தொன்மைத் தமிழ்க் கல்வெட்டோடு காணப்பெறும் அரப்பன் நாகரிக உருவ எழுத்து.
8) தமிழகத் தொன்மைத் தமிழ்க் கல்வெட்டுகளோடு காணப்பெறும் உருவ எழுத்துகள் ஆகியவையாகும்.
இவ்வனைத்துக்கும் மேலாகத் திருநெல்வேலி மாவட்டம், ஆதிச்ச நல்லூரில் சென்ற ஒரு நூறு ஆண்டுக் காலத்தில் நான்கு அல்லது ஐந்து முறை நிகழ்த்தப் பெற்ற அகழாய்வுகள், தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர் வரை அரப்பன் நாகரிகம் பரவியிருந்திருக்கும் என்ற உண்மையைப் புலப்படுத்தும் வகையில் பல சான்றுகளை வெளிப் படுத்தியிருக்கிறது. அவற்றின் பட்டியல் கீழ்வருமாறு:
1) இதுவும் ஒரு ஆற்றோர நாகரிகம்.
2) இதுவும் நகர நாகரிகம், தொழில் மலிந்த நகரம்.
3) பெருங்கற்காலத்தைச் சாராத புதிய வகைப் பானையோடுகள். இவை கி.மு, 2000-த்தின் இறுதிக்காலத்தைச் சார்ந்தவை.
4) மண் குவளைகளின் தோள் பகுதி யில் துளையுடையவை (Spouted vessels).
5) வெண்கலப் பொருள்கள் (தாய்த்தெய்வம் மற்றும் விலங்குகளின் உருவங்கள்),
6) அரப்பன் நாகரிகத்தைச் சேர்ந்த வெண்கலப் பொருள்களிலும் (டைமா பாத்), ஆதிச்சநல்லூர் வெண்கலப் பொருள்களிலும் ஒரே அளவுள்ள ஆர் செனிக் (Arsenic) கலவை.
7) பானையோடுகளில் அரப்பன் உருவக் குறியீடுகள்.
8) துர்க்கை என்று கருதப்பெறும் தாய்த் தெய்வ மண் ஓட்டுருவம்.
9) ஆதிச்சநல்லூர் நாகரிகம் காலம் சுமார் கி.மு. 1500 - 500 (optically stimulated Luminiscence date conducted at Manipur) மேலே கூறப்பெற்றுள்ள அனைத்து வகைக்காரணங்களைக் கொண்டும் பார்க்கையில் தமிழகத் துக்கும், அரப்பன் நாகரிகத்துக்கும், குறிப்பாக ஆதிச்சநல்லூர் நாகரிகத் துக்கும் நெருங்கிய தொடர்பு இருந் திருக்கும் என்பது உறுதியாகிறது. ஆதலால் அனைத்து வகைச் சான்று களாலும் (அரப்பன் நாகாக உருவ எழுத்து அமைப்பு உட்பட) அரப்பன் நாகரிகம் தமிழரின் நாகரிகமே என்பது குன்றின் மேலிட்ட விளக்காகிறது.
-விடுதலை ஞா.ம.,10.1.15