ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

ஆரியர், திராவிடர் விவாதம்

ஆரியர்,  திராவிடர்  ஒரு விவாதம் என்ற தலைப்பில் “தி இந்து” நாளிதழில் கடந்த மூன்று நாட்களாக வந்த கட்டுரைகளைப் படித்தேன். இந்துத்துவ வாதிகளின் வரலாற்றுத் திரிபு வேலைகளை தோலுரித்துக் காட்டி உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது என்றே கருதுகிறேன்.


இந்துத்வவாதிகளின் முயற்சியே உண்மையான வரலாற்றைத் திரித்து ஆதாரமற்ற கட்டுக்கதைகளை வரலாறாக ஆக்கி காட்டவேண்டும் என்பது தான். சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர்கள் இந்நாட்டில் அடியெடுத்து வைப்பதற்கு முற்பட்ட நாகரிகம் என இந்திய அய்யோப்பிய வரலாற்று ஆசிரியர்கள் திட்ட வட்டமாகவும் தெளிவாகவும் நிலை நாட்டியுள்ளனர்.

ஜிலீமீ ஞிமீநீவீஜீலீமீக்ஷீமீபீ வீஸீபீus sநீக்ஷீவீஜீt  என்ற தலைப்பில் என்.எஸ். இராசாராம்,   மருத்துவர் நட்வர்ஜா ஆகிய இருவரும் எழுதிய நூலில் சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட பானைத் தகடு ஒன்றில் ரிக்வேதத்தில் காணப்படும் சரசுவதி நதியைப் பற்றி குறிப்பிட்டு சில சின்னங்கள் அதில் உள்ளதாக கூறினர். ரிக்வேதம் தோன்றிய காலத்திற்கு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது இந்தப் பானையோடு. மேலும் முத்திரைகளில் குதிரை முத்திரை இருப்பதாகவும் அந்நூலில் எழுதியிருந்தனர். ஹார்வர்டு பல்கலைகழக பேராசிரியர் மய்கேல் விட்செல் மற்றும் சில ஆராய்ச்சியாளர்கள் ஒற்றைக் கொம்புடைய காளை பொறிக்கப்பட்ட உடைந்த முத்திரையை கணினி மூலம் திரிக்கப்பட்டு குதிரை என இராசாராம் மோசடி செய்திருந்ததை அவர்கள் அம்பலப்படுத்தினார்கள். வரலாற்று அறிஞரான ரோமிலா தாப்பர் “இந்துத்துவாவும் வரலாறும்” என்ற கட்டுரையில் “இந்துத்துவா தத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்கள் ஆரியர்கள் அன்னியப் படையெடுப்பாளர்கள் என்பதை மறைக்க விரும்புகிறார்கள்” எனத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கட்டுரைகள் இதுவரை புறக்காரணிகளால் ஆரியர்கள் அன்னியப் படையெடுப்பாளர்கள் என்று நிரூபணமாயிருந்த நிலையில் அறிவியல் காரணங்களாலும் மரபணு சோதனைகளின் மூலமாகவும் அது மேலும் உறுதி செய்யப்பட்டுவிட்டது. இனி மேலும் இந்துத்வவாதிகள் வரலாற்றுத் திரிபு வேலைகளில் ஈடுபடமாட்டார்கள் என நம்பலாமா?

- பொ. நடராசன் நீதிபதி (பணி நிறைவு)

"தமிழகம்"  ராசீவ் காந்தி நகர், உலகநேரி,   மதுரை 62517

-விடுதலை,8.7.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக