சனி, 17 அக்டோபர், 2015

ஹிந்துஸ்தானும் சமஸ்கிருதமும்


பொறியாளர்
ப. கோவிந்தராசன்
BE, MBA,MA(History)MA(Linguistics)
ஹிந்துஸ்தான் எங்கே உள்ளது ?
வடஇந்தியாவில் உள்ள சிந்து சம வெளியும் கங்கைச் சமவெளியும் அடங்கிய நிலப்பரப்புக்கு இநதுஸ்தான்  அல்லது ஆரிய வர்த்தம் என்று பெயர். விந்திய மலைக்கு தெற்கே திராவிடர்கள் வாழ்ந்த பகுதி (குஜராத் உள்பட) திராவிடஸ்தான் அல்லது திராவிடம் என்று அழைக்கப்பட்டது.
ஹிந்துஸ் தானில் இருந்த சிந்து சமவெளியின் பெரும்பகுதி தற்போது பாகிஸ்தானில் உள்ளது ஒரு பகுதி ஆப்கானிஸ்தானில் உள்ளது. கங்கைச் சமவெளியின் கிழக்குப்பகுதி தற்போது பங்களா தேஷில் உள்ளது. எனவே ஹிந்துஸ் தான் தற்போது மிகவும் சுருங்கி விட்டது.
ஹிந்துஸ்தான் என்ற பெயர் துரக்மேனிஸ்தான் கஜகிஸ்தான போன்று அந்நியரால் பாரசீகர்களால் வைக்கப்பட்ட பெயர் அதை ஜம்புத் தீபத்தில் (நாவலந்தீவு) உள்ளவர்கள் பயன்படுத்துவது மதப்பற்று அல்ல ஏனென்றால். ஹிந்துஸ்தான் மதம் சார்ந்த பெயர் அல்ல. மேலும் ஹிந் துஸ்தான் என்ற பெயர் நமது தேசிய கீதத்தில் இல்லை. ஆனால் திராவிடம் என்ற பெயர் தேசிய கீதத்தில் உள்ளது.
இந்துஸ்தானும் சமஸ்கிருதமும்
பாஜக மத்திய அரசில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் ஹிந்துஸ்தான் என்ற பெயர் இந்தியாவிற்குப் பதிலாக பாஜக தலைவர்களால் பேசப்படு கின்றது. கங்கைச் சமவெளியில் ஆரியர் கள் குடியேறிய பின் யாகங்கள் நடந்தன. யாகங்களில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டன. விவ சாயம் பாதிக்கப்பட்டது. அந்த விவ சாயிகள் ஆரியர்களை எதிர்த்தனர்.
இதனால் விவசாயிகள் சூத்திரர்கள் என்று ஆரியர்களால் அழைக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டனர். இதன் விளைவாக புத்த சமண மதங்கள் தோன்றின. இநத மதங்களால் ஆரியர் களின் வேதமதம் ஹிந்துஸ்தானில் வழக்கு ஒழிந்தது
பின்னர் கிரேக்க வீரர் அலெக் சாண்டரின் ஆட்சி ஹிந்துஸ்தானில்  கிமு-326-ல் ஏற்பட்டது. அப்போது இலக் கண அறிஞர் பாணினி இஸ்லாமாபாத் அருகே அட்டாக் மாவட்டத்தில கிமு300-ல் பிறந்தார் அவர் தன் கிராமத்தில் உயர் வகுப்பினரால் (எலைட்) பேசப்பட்ட மொழிக்கு இலக்கணம் அமைத்தார். அப்போது சமஸ்கிருத மொழி தோன்றவில்லை.
மௌரியர்கள் புத்த மதத்தையும் பாலி மொழியையும் ஆதரித்தனர். ஆனால் சமஸ்கிருதத்தை ஆதரிக்கவில்லை. கிமு 200ல் பதஞ்சலி என்ற அறிஞர் பாணினி உரை (மஹா பாஷ்யம்) எழுதினார். இதற்குப்பின் தான் சமஸ்கிருதம் செய்யப்பட்டிருக்கவேண்டும்.
கிபி 150-ல் திராவிடஸ்தானில் சௌராஷ்டிரா பகுதியில் (குஜராத்தில்)  ஜூனாகட் ராஜ்ஜியத்தில சமஸ்கிருத கல்வெட்டு முதன் முதலாக ஆராயச்சி யாளர்களுக்கு கிடைத்தது. இது ருத்ரா தாமன் என்ற மன்னன் காலத்தில்தான் நடந்தது. இது ஹிந்துஸ்தானில் சமஸ் கிருதம் போதிய வளரச்சியைப் பெற வில்லை என்பதினைக் குறிக்கின்றது.
வேதமொழியும் சமஸ்கிருதமும்
வேத மொழி பாரசீக மொழியான அவெஸ்தன் மொழியுடன் கலந்து உருவான மொழி. இந்த மொழியில் ரிக் வேதம் எழுதப்பட்டது. ரிக்வேதத்தின ஒரு பகுதி இந்தியாவிற்கு வெளியே எழுதபட்டது என  கம்யூனிஸ்ட் தலைவர் இ எம் எஸ் நம்புதிரிபாட் தன் நூலில் (இந்திய வரலாறு- பக்கம்-28இ-ல்) கூறுகிறார்.
இந்துத்வா கொள்கைகளைப் பரப்பிய தலைவரான பால கங்காதர திலகர் ரிக் வேதத்தை ஆய்வு செய்தார். அதற்காக திலகர் அவெஸ்தன் மொழி கற்றார். தன் ஆய்வின் முடிவில் ஒரு நூல் (-தி ஆர்க்டிக் ஹோம் .இன் த வேதாஸ்--) எழுதினார். அதில் ஆரியர்கள்  ஆர்க்டிக் துருவப் பிரதேசத்திலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள் எனத் தெரிவித்தார்.
இத்தகைய வேத மொழியை சந்தஸி என்று பாணினி குறிப்பிட்டுள்ளார். புத்த மதம் பாலி மொழியை ஆதரித் தது. சமண மதம் அரத்த மாகதியை ஆதரித்தது. இவ்விரு மதங்களும் வேதமதச் சடங்குகளை எதிர்த்ததால் வேதமதம் அழிந்தது.
பின்னர் குப்தர்கள் காலத்தில் வைணவ மதம் செல்வாக்குப் பெற்றது. அப்போது செயற்கையாக உருவாக்கப்பட்ட சமஸ்கிருதம் வளர்ந்தது. அப்போது இராமாயணம் மகாபாரதம் மற்றும் புராணங்கள் உருவாகின. இந்த நூல்கள் வைணவ மதத்தை வளர்க்க பெரிதும் உதவின.
பாணினியும் சமஸ்கிருதமும்
பாணினி எழுதிய இலக்கண நூலைப் பின்பற்றி பாணினி காலத் திற்குப் பின் சமஸ்கிருதம் செயற்கை யாக உருவாக்கப்பட்டது. சமஸ்கிருதம் என்றால் பல மொழிகள் சேர்ந்து உருவாக்கப்பட்டது என்று சமஸ்கிருத நூல்கள் பொருள் தருகின்றன.
பாணினி காலத்துக்குப் பின் சமஸ் கிருதம் செயற்கையாக உருவாக்கப் பட்டது.
சாகித்ய அகாடெமி வெளியீடு சமஸ்கிருதம்பற்றி கூறுவதென்ன?
டாக்டர் சரோஜ் பாட்டே என்ற அம்மையார் புனே பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதத்துறைப் பேராசியர். இவர் பாணினி இலக்கணத்தைப்பற்றி ஒரு நூல் எழுதியுள்ளார். அதை சாஹித்ய அகாடெமி வெளியிட்டுள்ளது.   அந்த நூலில் தெரிவிக்கப் பட்டுள்ள கருத்துக்கள் கீழே கூறப்பட்டுள்ளன.
1. பாணினி தான் இலக்கணம் அமைத்த மொழியின் பெயரை சமஸ்கிருதம் என்று குறிப்பிடவே இல்லை. பாஷா என்று தான் குறிப்பிடுகிறார். (ஏனென்றால் பாணினி காலத்தில் சமஸ்கிருதம் என்ற மொழி இல்லவே இல்லை. கிமு 100-க்குப் பின்தான் பல மொழிகளைச் சேர்த்து கலவை மொழியாக செயற்கையாக உரு வாக்கப்பட்டது).
2. பாணினி தன்னுடைய நூலுக்கு அஷ் டத்யாயி என்று பெயரிடவில்லை. பாணினி தனது நூலை எட்டு  அத்தியாயங்களாகப் பிரிக்கவில்லை. பிற்காலத்தில் உரையாசிரியர்கள் பிரித்திருக்கலாம் (பக்கம் 12).
3. பாணினி தனது மாடல் இலக்கண நூலில் மொத்தம் 3995 சூத்திரங் களை எழுதியுள்ளார். அதில் 300 சூத்திரங்கள் மட்டும் வேத மொழி யுடன் (சந்தஸி) தொடர்பு உடையது.
4.    உயர் வகுப்பு பேச்சு மொழியாக விளங்கிய மொழிக்குத்தான் பாணினி இலக்கணம் அமைத்தார் என்று கூறப்படுவதால் பாணினி பேச்சு வழக்கற்ற சமஸ்கிருதத்திற்கு இலக் கணம் அமைக்க வில்லை என அறியலாம்.
5.    மெட்டாலாங்வேஜ் (சமஸ்கிருதம் அல்லாத) மொழியில் இலக்கணம் அமைத்தார். இந்த மொழி கருவி மொழி என்று அழைக்கப்படுகிறது. இந்த மெட்டா லாங்வேஜ் சமஸ் கிருதத்தைச் சேராத சொற்களையும் வாக்கிய அமைப்பையும் கொண்டது என கூறுகிறார் (பக்கம் 26).
6.    பாணினி தன் நூலை மிகவும் சுருக்க மாக அமைத்துள்ளதால் எழுத்து வடிவில் எழுதப் படவில்லை எனக் கருதப்படுகின்றது.
7.    பாணினி இலக்கணத்தை அடிப் படையாக கொண்டவை கன்னட, தெலுகு, மராத்தி, மலையாளம் மொழிகளின் இலக்கண நூல்கள் ஆகும். ஆனால் தமிழ் மொழியின் இலக்கணம் தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டது. தொல்காப்பியம் பாணினி காலத் திற்கு முந்தியது.
8.    பாணினி இலக்கணத்தைப் பயன் படுத்தி உருவாக்கப்பட்ட சமஸ் கிருதத்தில் இலக்கியம் இதிகாசம் மற்றும் புராணங்கள் உருவாக்கப் பட்டன.
9.    பாணினி இலக்கணத்தை சமஸ் கிருதம் பயன்படுத்தியதால் பேச்சு வழக்கற்ற மொழி ஆனது என சமஸ்கிருத மொழி அறிஞர்கள் சிலர் கருதுகிறார்கள்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியீடு சமஸ்கிருதம் பற்றிக் கூறுவதென்ன?
இந்த நிறுவனம் பாணினி எழுதிய அஷ்டாத்தியாயி என்ற இலக்கண நூலை தமிழாக்கத்தில் வெளியிட்டுள் ளது. இதன் ஆசிரியர் முனைவர் கு. மீனாட்சி ஆவார். அவர் இந்த  நூலில் பாணினி எந்த மொழிக்கு இலக்கணம் அமைத்தார் என்பதினை கீழ்க்கண்ட வாறு கூறுகிறார்.
வேத மொழிக் கூறுகளை  சமஸ் கிருதம் என்ற பெயரால் கூறாமல் சந்தஸி என்ற பெயரால் பாணினி கூறு கிறார். இதனால் வேதம் இயற்றப்பட்ட வேத மொழியை சந்தஸி என்று பாணினி அழைக்கிறார் எனக் கூறலாம்
உதாரணம் ------
1.1. சந்தஸி  பரே அபி (அத்தியாயம்--- 1இல் சூத்திரம்- -4.81) முதல் பாகத்தில்.
1.2. கிதேஸ் சந்தஸி----அத்தியாயம் 6இல் சூத்திரம்-- 1.52 (மூன்றாம் பாகம்).
1.3. யத்திது பரம் சந்தஸி---அத்தியாயம்- 8இல்- சூத்திரம் 156 (மூன்றாம் பாகம்).
1.4-. ---சந்தஸிடஞ்---- அத்தியாயம் 4-இல் சூத்திரம் 1.இல் 19. (இரண்டாம் பாகம்)
1. இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் மேல் வகுப்பினரால் (எலைட்) பேசப்பட்ட ஒரு மொழிக்கு பாணினி இலக்கணம் வகுத்தார் என்று நம்பப்படுகின்றது. எனவே சமஸ் கிருதத்திற்கு இலக்கணம் பாணினியால் அமைக்கப்படவில்லை
2. பாணினி தான் இலக்கணம் அமைத்த மொழி சமஸ்கிருதம் தான் என்று தனது நூலில் எந்த இடத்திலும் கூறவில்லை. (ஆனால் அவ்வாறு முதன் முதலாக இராமாயணத்தில்தான் கூறப்பட்டுள்ளது.)
3. பாணினி தான் இலக்கணம் அமைத்த மொழியை பாஷா என்றே குறிப்பிடுகின்றார்.
4. பாணினி தனது இலக்கணத்தை விளக்க சமஸ்கிருதத்திலிருந்து வேறு பட்ட மொழியை மாதிரியாகக் கொண்டு விளக்கினார். இந்த மொழி கருவி மொழி அல்லது மெட்டாலாங்வேஜ் என்று அழைக்கப்படுகின்றது
5. மேலும் பாணினியின் இலக் கணத்தைப் புரிந்து கொள்ள கீழ்க்கண்ட நூல்களையும் படிக்க வேண்டும்
1) கார்த்தியாயனரின் வார்த்திகம் 2) பதஞ்சலியின் மஹாபாஷ்யம் 3) வாமனரின் ஜயாதித்தரின் காஸிகா மற்றும் 4) பாணினி காலத்துக்கு முற்பட்ட பத்துக்கு மேற்பட்ட பழைய இலக்கண நூல்கள். 5) துணை நூல்கள் -ஏழு (சிவ சூத்திரம், தாது பாடம், கண பாடம், உணாதிசூத்திரம், சூத்திரம் லிங்கானுஸாஸனம் மற்றும் சிசஷா).
இதிலிருந்து பாணினி இலக்கணம் எவ்வளவு கடினமானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.  மேலும் ஒரு மொழி பேச்சு வழக்கில் இருந்தால்தான் இலக்கணம் எளிதாக அமையும்.
முடிவுரை
1. ஹிந்துஸ்தான் என்பது இமய மலைக்கும் மற்றும் விந்திய மலைக்கும் இடைப்பட்ட சமவெளி பகுதி ஆகும். எனவே ஹிந்துஸ்தானத்தின் பொருளா தார வளர்ச்சியை ஒட்டு மொத்த இந்தி யாவின் வளர்ச்சியாகக் கருதமுடியாது
2. ரிக் வேதம் சந்தஸி என்ற மொழி யில் உருவாக்கப்பட்டது.
3. பாணினி இலக்கணம் அமைத்தது வேத மொழிக்கு இல்லை
4. பாணினி (கிமு. 300) எழுதிய இல்க்கண நூலுக்குப் பின்தான் சமஸ்கிருதம் உருவாக்கப்பட்டது.
5. புத்த மதம் இந்தியாவில் தோன்றி உலகமெலாம் பரவிய பின் தோன்றிய மொழி சமஸ்கிருதம் ஆகும். இத்தகைய சமஸ்கிருத மொழி உலக மொழிகளின் தாயாக விளங்கக்கூடிய வாய்ப்பு சிறிதும் இல்லை.
-விடுதலை,28.2.15
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக