செவ்வாய், 23 ஜூலை, 2019

வரலாற்று ரீதியாக வங்க மாநிலத்தில் வசிக்கும் மக்கள் திராவிடர்களே!

மக்களவையில் திரிணமுல் காங். உறுப்பினர் பேச்சு


தமிழர் தலைவர் பாராட்டு கடிதத்தை கழக வெளியுறவு செயலாளர் நேரில் வழங்கினார்




புதுடில்லி, ஜூலை 19 மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் மாற்றம்குறித்து திரிணமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பேசியபோது வரலாற்று ரீதியாக வங்க மாநிலத்தில் வசிக்கும் மக்கள் திராவிடர் களே என்று பெருமிதத்துடன் குறிப் பிட்டார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்...


மேற்கு வங்கம் என்ற மாநிலப் பெயரை, வங்கா மாநிலம் என மாற்ற வேண்டும் என திரிணாமுல் காங்கிரசு உறுப்பினர் சுகேந்து சேகர் ரே அவர்கள்,  27.6.2019 அன்று  நாடாளுமன்ற மாநி லங்களவையில் பேசுகையில், வரலாற்று ரீதியாக வங்க மாநிலத்தில் வசிக்கும் மக்கள் திராவிடர்களே; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வந்து குடியேறி உள்ளார்கள். நாட்டின் தேசிய கீதத்திலும், ரவீந்திரநாத் தாகூர், திராவிட, உத்கல, வங்கா என்று எழுதி யுள்ளார் எனக் குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் படித்ததும், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சுகேந்து சேகர் ரே அவர் களுக்கு, வரலாற்றுச் செய்தியினை நினைவு கூர்ந்து மாநிலங்களவையில் பதிவு செய்ததைப் பாராட்டி வாழ்த்துக் கடிதம் அனுப்பினார். வாழ்த்துக் கடிதம் 12.7.2019 அன்று, திரு.ரே அவர்களிடம் புதுடில்லியில் அவரது இல்லத்தில் நேரடியாகத் தரப்பட்டது. அத்துடன் தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் என்ற ஆங்கில நூலும் தரப்பட்டது.

வாழ்த்துக் கடிதத்தையும் நூலையும் பெற்றுக் கொண்ட திரு. சுகேந்து சேகர் ரே அவர்கள் தனது நன்றியையும் மரியாதையையும் ஆசிரியர் அவர்களுக் குத் தெரிவிக்கச் சொன்னதுடன், சென் னைக்கு விரைவில் வருவதற்கும் ஒப்புக் கொண்டுள்ளார்.

- விடுதலை நாளேடு, 19 .7 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக