திங்கள், 9 செப்டம்பர், 2019

சிந்துவெளிமக்களுக்கு தனித்துவமான மரபணு- அங்கு வாழ்ந்தவர்கள் ஆரியர்கள் அல்ல

ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்தின




புனே, செப்.9 சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் நாடோடிக் குழுக்கள் அல்ல; அவர்கள் தொடர்ந்து இந்திய தீபகற்பப் பகுதியில் முன்பிருந்தே வாழ்ந்த தனித்துவம் மிக்க மனித இனத்தவர்கள் என்று ஹரப்பா பகுதியில் கண்டெ டுக்கப்பட்ட சிந்துவெளி மனிதர்களின் எலும்புக்கூட்டின் மரபணுவை ஆய்வு செய்ததன் மூலம் தெரியவந்தது. சிந்துவெளி நாகரீகம் குறித்து இதற்கு முன்பு வந்த பல்வேறு ஆய்வுகள் மிகவும் குழப்பமானதாகவும் தெளி வற்றதாகவும் இருந்தன. இதளனை அடுத்து பலர் சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் பண்டைய மத்திய ஆசிய புல்வெளிப்பகுதிகளில் இருந்து ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு வந்தவர்களே சிந்துவெளியில் நிரந் தரமாக தங்கலாயினர். இவர்கள் பிற்காலத்தில் சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கினர் என்று கூறியிருந்தனர். இந்திய அரசும், பல்வேறு வரலாற்றாய்வுகளும் இதை ஆமோதிக்கும் வகையில் கட்டுரைகளை வெளியிட் டுள்ளது.

புனேவில் உள்ள டெக்கன் வரலாற்று ஆய்வியல் கல்லூரியின் அகழாய்வியல் துறைத்தலைவர் வசந்த் சிண்டே, ஹாவர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் ரியெச் மற்றும்  அகழாய்வியல் துறையில் புகழ்பெற்ற பேராசிரியர் நீரஜ் ராய் தலைமையிலான குழுவும் சிந்து வெளி நாகரிகம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்துவருகிறது.  இவர்களின் ஆய்வுகள் ஆரியர் என்ற இனப்பிரிவினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்  அல்ல,  அவர்கள் மத்திய ஆசியாவின் புல்வெளிப் பகுதி களில் இருந்து வந்தவர்கள் என்பதை வெளிப்படுத்தினர். அதை இந்திய அரசு வெளியிடாமலேயே வைத்திருக்கிறது. ஹரப்பா நாகரிகத்தின் ராகிகரி திட்டம் என்ற பெயரில் நடந்துவரும் தொடர் ஆய்வுகளின் முடிவுகளை வெளியிட்டு வருவதன் தொடராக தற்போது மரபணு தொடர்பாக ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மத்திய ஆசியாவில் இருந்து வந்தவர்களின் மரபணுக்கள் சிந்துவெளி நாகரிகத்தில் வாழ்ந்த மனிதர்களின் மர பணுக்களுடன் ஒத்துப் போகவில்லை என்றும், சிந்துவெளி மக்கள் இந்திய தீபகற்பத்தில் வாழ்ந்த தனித்துவம் மிக்கவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அரியானா மாநிலம் ராகிகரி என்ற பகுதியில் அகழ் வாய்வு நடந்த போது கிடைத்த சிந்துவெளி நாகரிக மனிதரின் எலும்புகளின் மரபணுவை ஆய்விற்கு அனுப்பினர்.

ராகிகரி பகுதிவாழ் மக்களின் எலும்புக்கூடுகளில் இருந்த மரபணுக்கள் மத்திய ஆசிய புல்வெளிகளில் இருந்து வந்தவர்களிடமிருந்து வேறுபட்டுள்ளது.   சிந்துவெளியில் வாழ்ந்த மக்களின் மரபணு மத்திய ஆசிய புல்வெளிப்பகுதிகளில்(ஸ்டெப்பி) இருந்துவந்தவர் களுடன் அல்லது பண்டைய ஈரானிய மேய்ச்சல் நில மக்களின் மரபணுவுடன் முற்றிலும் ஒத்துப் போகவில்லை. இது தனித்துவம் மிக்கதாக உள்ளது, இந்த தனித்துவம் மிக்க மக்கள் தான் சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கி யுள்ளனர்.  மத்திய ஆசியா மற்றும்  மெசபெடோமியா, எகிப்து, பாரசீக வளைகுடா போன்ற பகுதிகளின் பண்டைய கால மனிதர்களின் எலும்புகளில் கிடைத்த மரபணுக்களில் சிந்துவெளியில் கிடைத்த தனித்துவமான மரபணுக்கள் கிடைத்துள்ளது, இதிலிருந்து சிந்து வெளிமக்கள் உலகெங்கிலும் சென்று வாணிகம் செய்துவந்தனர் என்பது உறுதியாகிறது.

விவசாயத்தின் தோற்றம்


அய்ரோப்பாவில், பண்டைய- டி.என்.ஏ ஆய்வுகள், நவீன துருக்கியில், அனடோலியாவின் வம்சாவளியைக் கொண்ட மக்கள் வருகை மூலம் மக்கள் பரவலைக் பரவுவதாகக் காட்டுகின்றன. புதிய ஆய்வு ஈரான் மற்றும் கிழக்கு துருக்கியில் (தெற்கு மத்திய ஆசியா) இதேபோன்ற இடப்பெயர்வைக் காட்டுகிறது, அங்கு அனடோலியன் மக்களின் கால்நடை வளர்ப்பும், விவசாயமும் ஒரே நேரத் தில் நடந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஆனால் தெற்காசியா (இந்திய தீபகற்பத்தின்) மக்கள் இனம் தனித்தன்மை வாய்ந்தவை. இவர்களது மரபணுவில் அனடோலியன் தொடர்பான வம்சாவளியை ஆராய்ச்சி யாளர்கள்  கண்டுபிடிக்க முடியவில்லை என்பது மட்டு மல்லாமல், சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் பண்டைய மத்திய ஆசிய மக்களிடமிருந்து  தனித்தன்மையுடைய மரபணுவைப் பெற்றிருக்கின்றனர். சிந்துவெளியில் உள்ள மக்கள் குழு, உலக மக்கள் இடப்பெயர்விற்கு முந்தைய காலகட்டத்தில்  கிட்டத் தட்ட 9,000 ஆண்டுகளுக்கு முன்பு  வாழ்ந்தவர்கள் என்றும்  சிந்துவெளி மக்களின் வாழ்க்கை முறை கலாச் சாரம் போன்றவை மத்திய ஆசிய புல்வெளிகளில் இருந்து வந்தவர்களில் முற்றிலும் வேறுபட்டவர்கள் என்றும், பிற்காலத்தில் சிந்துவெளிமக்களின் சில குழுவினர் ஆசியாவில் இருந்து வந்தவர்களின்  கலாச் சாரத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்றும் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

முக்கியமாக சிந்துவெளியில் வாழ்ந்த மக்களின் மரபணு ஆசிய மைனர் பகுதியில் இருந்து வந்தவர்கள் அல்லது அவர்களது மூதாதையர்களான அனடோலியன் இனத்திலிருந்து வந்தவர்களின் மரபணுக்களுடன் முற் றிலும் வேறுபட்டு நிற்கிறது, என்று தங்களது ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர். இது குறித்து வசந்த் ஷிண்டே கூறும் போது, சிந்துவெளிமக்கள் மத்திய ஆசியப் பகுதியிலிருந்து 4000 ஆண்டுகளுக்கு முன்பு சிறு சிறு குழுக்களாக நகர்ந் துள்ளனர் என்பதும், அவர்களின் மரபணுக்கள் சிந்து வெளிமக்களிடமிருந்து தனித்தன்மை வாய்ந்தவை என்பதும் மரபணுக்களின் ஆய்வின் மூலம் உறுதியாகி உள்ளது என்று குறிப்பிட்டார்.

இது குறித்து ஆய்வாளர் டேவிட் ரிச் கூறும் போது மத்திய ஆசியப்பகுதியில் இருந்து பெரிய அளவில் எப்போது மக்கள் இடப்பெயர்வு நடந்தது? என்பது குறித்து நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்'' என்றார்.

-  விடுதலை நாளேடு, 9.9.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக