செவ்வாய், 9 ஜூலை, 2019

உலகில் மனிதன் தோன்றியது எங்கே ?? ஆசியாவின் பூர்வ குடிகள் யார் ? இந்தியாவின் மற்றும் அமெரிக்காவின் ஆதி மக்கள் யார் ??

தி இந்து நாளிதழ் கட்டுரை ஒவ்வொரு பிராமணின் வயிற்றிலும் புளியை கரைத்து ஒவ்வொரு பிராமணனும் Bjp காரனும் திட்டித்தீர்க்கும்  பெயர்கள் . . .
.
ஏன் ?? எதனால் ?? வாருங்கள் பார்ப்போம்

Richard Martin மற்றும் Tony Joseph இந்தப் பெயர் உலகில் உள்ள வரலாற்று ஆய்வாளர்களும் அறிஞர்களும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் பெயர்கள்.
.
Professor Richard Martin மற்றும் Tony Joseph உலகப்புகழ்பெற்ற Oxford பல்கலைக்கழகத்தின் வரலாறு தொல்லியல் மற்றும் மரபணுவியல் (genetical) துறையின் பேராசிரியர்கள் . .
.
இவரின் ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் பல நாட்டவர்களின் அடிப்படை சித்தாந்தங்களை தகர்த்து எறிந்திருக்கிறது . . . .
.
குழுவினர் கடந்த நான்கு ஆண்டுகளாக . . .
.
உலகில் மனிதன் தோன்றியது எங்கே ?? ஆசியாவின் பூர்வ குடிகள் யார் ? இந்தியாவின் மற்றும் அமெரிக்காவின் ஆதி மக்கள் யார் ??

என்று  இந்திய துணைக்கண்டம் மற்றும் ஈரான் ஈராக் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பர்மா மலேசியா நேபாளம் பங்களாதேசம் ஆகிய நாடுகளில் மக்களிடம் லட்சக்கணக்கான மரபணுக்களை ஆராய்ச்சி செய்தனர் . .

இந்தியாவில் மட்டும்
16500 க்கும் மேற்பட்ட மரபணுக்கள் ஆராய்ச்சி செய்தனர்
.
அந்த ஆராய்ச்சி முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிட்டனர்
.
அந்த ஆய்வறிக்கை தான் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பிராமணின் வயிற்றிலும் புளியை கரைத்திருக்கிறது
.
அப்படி என்ன விஷயம் ??
.
இந்தியாவுக்குள் நாடோடிகளான ஆரியர்கள் மாடுகளோடு ஈராக் ஈரான் வழியாக ஆப்கானிஸ்தானில் நுழைந்து இந்தியாவில் பரவினர் என்றும்
.
ஆரிய வருகையின் போது இந்தியாவில் சிந்துசமவெளி நாகரிகம் அழியும் தருவாயில் இருந்தது அந்த நேரத்தில் தான் ஆரியர்கள் உள்ளே வந்தார்கள் அது சரியாக ரிக் வேதம் எழுதப்பட்ட காலகட்டம்...
.
அப்போது ஒரு இனம் இங்கே வீடுகள் கட்டி நகர நாகரீகத்துடன் வாழ்ந்து வந்தனர்
.
அவர்கள் பூர்வகுடியான  தமிழர்கள் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபித்தும் இருக்கிறார்கள்.
.
இப்போது நமக்கு சொல்லப்பட்ட பல வரலாறுகள் பொய்யென்றாகிறது
.
அதாவது  சிந்துசமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் என்று நமக்கு சொல்லப்பட்டது பொய்.
.
ஏனென்றால் அவர்கள் அப்போது தான் உள்ளேயே வருகிறார்கள் .
.
அப்போது அவர்கள் நாகரிகமடையாத நாடோடிகளாக இருந்தார்கள். அப்படி இருந்தவர்கள் எப்படி நகர நாகரிகத்துடன் வாழ முடியும் ??
.
இரண்டாவது சமஸ்கிருதம் ஆதி மொழி என்று நமக்கு சொல்லிக்கொடுத்தது பொய் . .
.
ஏனென்றால் அதுதான் உலகமொழிகளிலேயே இளைய மொழி என்று இப்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
.
அதனால் அதற்கு கொடுக்கப்பட்ட செம்மொழி அந்தஸ்து தவறு,
மேலும்

இப்போது தான் நமக்கு புரிகிறது . . மதுரை கீழடி ஆராய்ச்சியை ஏன் தடுக்கிறார்கள் என்று. . ...

ஆதிச்ச நல்லூர் அகழ்வாராய்ச்சி ஏன் மூடி மறைக்கப்பட்டுள்ளது என்றும் இப்படி பல கேள்விகளுக்கு இந்த ஆராய்ச்சி முடிவுகள் விடை சொல்கின்றன
.
மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றுகிறது அப்போது இந்திய துணைக்கண்டம் ஆப்பிரிக்காவுடன் ஒட்டியிருந்தது என்றும்
.
கடல்கோள்களால் இந்திய நிலப்பரப்பு பிரிந்தது என்றும் . .
.
இந்த மண்ணில் தமிழர்கள் தான் முதலில் இருந்தனர் என்றும்
.
அவர்கள் முப்பது அல்லது நாப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்றும்
இந்த ஆராய்ச்சி திட்டவட்டமாக உரக்கச் சொல்லுகிறது
.
இனிமேல் நெஞ்சை நிமிர்த்திச் சொல்லுவோம் இது எங்கள் மண் . . . வந்தேரிகள் வாலாட்டினால் குரல் உயர்த்துவோம் . . . தமிழன் என்பதில் மட்டற்ற பெருமை கொண்டு மார் தட்டுவோம் என்று.....

அவசியம் அதிகம் ஷேர் செய்யுங்கள்.
#Chinniah_Kasi

How genetics is settling the Aryan migration

https://www.thehindu.com/sci-tech/science/how-genetics-is-settling-the-aryan-migration-debate/article19090301.ece

சனி, 6 ஜூலை, 2019

திராவிடமா! தமிழா!

#மணியரசம்_டோஸ்_நெ_8

"தமிழர்” என்ற வரலாற்று வழிப்பட்ட நம் இனப்பெயரை நீக்கி நமக்கு “திராவிடர்” என்று புதிதாக ஒரு இனப்பெயரைச் சூட்டுவதற்கு இவர்களுக்கு என்ன அதிகாரம்? என்ன வரலாற்று அறிவு?
திராவிடம் என்பதற்கு சமற்கிருதச் சான்றுகளைத்தான் காட்டினார்கள்.
சங்க இலக்கியம்,  காப்பிய இலக்கியம், பக்திக்கால இலக்கியம், சித்தர் இலக்கியம் எதிலும் தமிழில் “திராவிட” என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. அக்காலத்தில் தமிழர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக்கொள்வதை இழிவாகக் கருதினார்கள்.
                                      - மணியரசன்

எந்த இலக்கியத்திலும் பயன்படுத்தப் படாத தங்களுக்கு தொடர்பே இல்லாத "திராவிடர்" என்றச் சொல்லை அக்காலத்தில் தமிழர்கள் எதற்காக இழிவாக கருதவேண்டும்? ஆக இழிவாகவோ,பெருமையாகவோ எப்படியிருந்தாலும் "திராவிடர்" என்றச் சொல்  தமிழர்களிடம் புழக்கத்தில் இருந்திருக்கிறது. பெரியாரால் திட்டமிட்டு திணிக்கப்பட்டதல்ல!
என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் அய்யா மணியரசன்.
ஆனால் "அக்காலத்தில்" என்று  சொல்பவர் எக்காலத்தில் என்று குறிப்பிட்டால்தானே யாரால்,எதற்காக, எப்போது "திராவிடர்" என்றச் சொல் எப்படி இழிவாக்கப்பட்டது என்பது தெரியும்?

பல்லாயிரம் ஆண்டு வரலாறு கொண்ட தமிழினத்திற்கு இன்று ஈராயிரமாண்டு சங்க இலக்கியம் மட்டும்தான் எஞ்சி இருக்கிறது.
இருக்கின்ற தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்கள் அல்லது அவர்களது அடிவருடிகள். இதைப் பற்றிக் கொண்டுதான் தனது ஜாதிக்கும், தனது கடவுளுக்கும், தனது வழிபாட்டு முறைக்கும், தனது நெறிக்கும் சங்க இலக்கிய சான்று தேடுகிற பரிதாப நிலையில் நாம் இருக்கிறோம். வேறு வழியில்லை நமக்கு!

சங்க இலக்கியத்தில் திராவிடர் இல்லை என்பதற்கும் அதே இலக்கியத்தில் என் ஜாதி இருக்கிறது, என் கடவுள் இருக்கிறது என்பதற்கும் என்ன பெரிய வேறுபாடு? இரண்டுமே தற்கால தமிழர் நிலையை, தமிழர் அரசியலை, தமிழர் வாழ்வியலை பற்றி எந்தவிதக் கவலையுமற்ற பழம்பெருமை தற்புகழ்ச்சிதானே?

அதற்கு முன்பாக நமக்கிருந்த இலக்கியங்கள் எங்கே போயின?
இப்போதிருக்கும் இலக்கியங்கள் பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பிற்கு உள்ளானவைதானே?
திராவிடர் என்கிற உணர்ச்சியை கைவிட்டதால்தானே இந்த பண்பாட்டு படையெடுப்பு நிகழ்ந்தது!
திராவிடர் என்பது கிடக்கட்டும்.வரலாற்று வழிப்பட்ட தமிழர்,தமிழ்நாடு என்பதை தமிழ் இலக்கியங்களில்  பூதக் கண்ணாடி வைத்து தேடியல்லவா எடுக்க வேண்டும்?

தமக்கான அடையாளங்கள் தம்மிடத்தில் தொகுக்கப்பட்ட வரலாறாக இல்லாத நிலையில் நாடோடிக் கதைகளில், வாய்மொழிப் பாடல்களில், தலைமுறை கடந்து வழங்கப்படும் செவிவழிச் செய்திகளில் இருந்து வரலாற்றை தேடியெடுப்பது உலகெங்கும் உள்ள நடைமுறைதான்.இந்த மண்ணிற்குள் நுழைந்த பார்ப்பனர்கள் இங்கு ஏற்கனவே இருந்தவர்களை எவ்வாறு சூழ்ச்சியாக வென்றோம் என்பதை தமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல நாடோடிக் கதைகளாக தொகுத்து வைத்திருக்கிறார்கள். அதுதான் வேதங்கள், இராமாயணம், பாரதம், மற்ற புராணங்கள். இதை ஏற்றுக் கொண்டு வழிமொழிந்தவைதானே நமது இலக்கியங்கள்?

வடமொழி இலக்கியங்களில் சங்க இலக்கிய குறிப்புகள் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் சங்க இலக்கியத்தில் இராமாயணச் செய்திகள் உள்ளன.பாரதம் பாடிய பெருந்தேவனார் இருக்கிறார்.அப்படியானால் எது முன்னது? எது பின்னது? என்ற கேள்விகளுக்கு ஊகமான காலக் கணக்குகளை வைத்து பதில் தேடவேண்டிய நிலையில்தானே நாம் இருக்கிறோம்?
சங்க இலக்கியத்திற்கு முன்பான நூல்கள் கிடைக்கவில்லை என்பதனால் அதுவே முடிந்த முடிவாகி விடுமா?

பார்ப்பன பண்பாட்டு தாக்குதலில் சிக்கி தாக்குண்ட நிலையில்தான் இப்போதிருக்கும் நம் இலக்கியங்கள் இருக்கின்றன. அதற்கு எதிரான குரல் எங்கோ ஒன்றிரண்டு இடங்களில் மெலிதாக ஒலிக்கிறது. ஆனால் நாம் தீரத்துடன் எதிர்த்து நின்ற வரலாற்றை எதிரிகள்தான் வைத்திருக்கிறார்கள் திராவிடர் என்ற பெயரில்!
பார்ப்பனர்களுக்கு பணிந்து நின்று பாதம் தாங்கிகளாக இருந்த மன்னர்களின் வரலாறுதான்
நம்மிடத்தில் இருக்கிறது. ஆரியத்தை எதிர்த்து நின்று உயிர் விட்ட இராவணன்,இரணியன்,தாடகையை பற்றி அவர்கள்தானே தெரிந்து வைத்திருக்கிறார்கள்?

பார்ப்பனர்கள் தங்களை மொழியின் பெயரால் " சமஸ்கிருதர்" என்று அடையாளப்படுத்திக் கொண்டால் நாமும் தமிழர் என்று மொழியின் பெயரால் மட்டும் அடையாளப்படுத்திக் கொள்ளலாம். இங்கே தமிழர், தெலுங்கர், வங்காளி,மலையாளி,மராட்டியர்,
கன்னடர் என பல மொழி அடையாளம் கொண்ட மக்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்தியா முழுவதும் பிராமணர்கள் மட்டும் ஒற்றை அடையாளத்துடன் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் தமிழ் பிராமணர்கள், ஆந்திராவில் தெலுங்கு பிராமணர்கள், வங்காளத்தில் வங்காள பிராமணர்கள்,
கர்நாடகாவில் கன்னட பிராமணர்கள்.
இப்படி அந்தந்த மாநில மொழியை தங்கள் பிராமண பெயருடன் இணைத்துக் கொள்கிறார்கள்.
(தமிழ்பிராமணர் என்ற வரையறையை பல தமிழ் தேசிய கட்சிகள் ஏற்றுக் கொண்டிருக்கின்றன.)
             
அப்படியானால் பிராமணர் என்றச் சொல்லுக்கு எதிர்ச் சொல் என்ன? பிராமணர் அல்லாதார்  என்பதா? அல்லது சூத்திரர் என்பதா? அரக்கர் என்பதா?
வேதம் படிக்கிற உரிமை பெற்றவன், பிறரை வேதம் படிக்க கூடாது என்பதை சட்டமாகவே வைத்திருந்தவன் தன்னை "வேதியன்" என்று அழைத்துக் கொள்கிறான். அப்படியானால் வேதத்தை எதிர்த்தவனுக்கு, வேதம் படிக்க தடை செய்யப்பட்டவனுக்கு என்ன பெயர்? "வேதியன் அல்லாதவர்"
"அசுரர்" என்பதுதானா?

தொன்னூறு விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் திரளுக்கு பத்து விழுக்காடு கூட இல்லாத மக்களை குறிப்பிட்டு "அவர்கள் அல்லாதார்" என்று குறிப்பிடுவதா அடையாளம்? இந்தியா முழுவதும் எந்த மொழியிலும் அதற்கு எதிர்ச் சொல் இல்லையா?திராவிடர் என்றச் சொல்லை அதிதீவிரமாக ஆராய்ந்து கொண்டிருக்கும் இந்த ஆராய்ச்சியாளர்கள் ஆரியர், பிராமணர், வேதியர்,பூதேவர் என்றச் சொற்கள் குறித்து என்றைக்காவது ஆய்வு செய்ததுண்டா?

மற்ற மக்களெல்லாம் தங்கள் மொழியின் பெயரால்,ஜாதியின் பெயரால் அடையாளப்படுத்தப் படும்போது இந்தியா முழுவதும் பிரமாணர் அடையாளம் மட்டும் எப்படி செல்லுபடியாகிறது?
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பிராமணர்களுக்கு ஒரே மாதிரியான மரியாதை எப்படி கிடைக்கிறது?
தமிழ்நாட்டில் உள்ள ஆண்டபரம்பரை ஜாதிகளில் எவருக்காவது இந்தியா முழுவதும் சத்ரியருக்கு உண்டான ஒரே மாதிரியான மரியாதை நடைமுறையில் கிடைக்குமா? இதுவரை கிடைத்திருக்கிறதா?

தமிழ்தேசியம் பேசுவோரில் சிலர் இதுவெல்லாம் வடநாட்டில் நிகழ்ந்தவை.
தமிழர்கள்  பிராமணத் தலைமையை ஏற்கவில்லை.எனவே எங்களுக்கு இது பொருந்தாது, திராவிடர் என்பது தேவையில்லை என்று தங்கள் கண்களை இறுக மூடிக்கொள்ளலாம்! ஆனால் உலகம் இருண்டு விடாதே?

பிராமணத் தலைமையை ஏற்றுக் கொண்டதால்தான் ஆண்ட மன்னர்கள் அனைவரும் மனுதர்மத்தின் படி ஆண்டார்கள். தங்களை திருமாலின் வம்சமாகவும், தங்கள் ராணிகளை மகாலட்சுமி அம்சமாகவும் கல்வெட்டு அடித்து பெருமைப் பட்டார்கள்.
தங்களை சத்திரிய வம்சம் என்றும், வைசிய குலம் என்றும் நிறுவிக்கொள்வதில் அரசாட்சி காலத்திலிருந்து இன்றுவரை நம்மவர்கள் பெருமிதத்துடன் போட்டி போடுகின்றனர்.
பிராமணர்கள், சத்ரியர்கள்,வைசியர்கள் என்ற மூன்று வர்ணமும் பல நூறு ஆண்டுகளாக இந்த தமிழ் மண்ணில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில் "சூத்திரர்" என்பதை மட்டும் ஈ.வெ.ரா தமிழர்கள் மேல் திணித்துவிட்டார் என்பது திடீர் தமிழ்தேசியர்களின்ஆகச் சிறந்த  நகைச்சுவை கண்டுபிடிப்பாகும்.

1871 வரை சென்னை மாகான மக்கள் தொகை கணக்கெடுப்பில் பிராமணர், சத்ரியர்,வைசியர்,சூத்திரர் என்று வருணப் பாகுபாடு செய்யப்பட்டதையும்,
ஒரு நூற்றாண்டிற்கு முன்பு வரை அரசு ஆவணங்களில் "சூத்திரர் "  "சற்சூத்திரர்" என்று குறிப்பிடப்பட்டதையும் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொண்டவர்கள் நாம். எவராவது மறுத்தார்களா?
இதை மாற்றியது திராவிடர் இயக்கத்தின் அளப்பரிய பணியல்லவா?

1901ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் வேளாளர்களை "சற்சூத்திரர்" வருண பட்டியலில் அரசு சேர்த்ததை கண்டித்து கிளர்ச்சி நடந்தது.
வேளாளர்களின் கோரிக்கை என்ன தெரியுமா? சூத்திரர் என்ற இழிவை நீக்கிடுக என்பதல்ல,வேளாளரை வைசிய வருணத்தில் சேர்த்திடுக என்பதுதான்! இந்த போராட்டத்திற்கு அன்றைக்கிருந்த தமிழறிஞர்கள் பலர் தலைமையேற்றனர்.
வேளாளர்கள் வைசியரே என்று மெய்ப்பிக்க தமிழ் இலக்கியங்களையெல்லாம் கரைத்துக் குடித்த தம் புலமையைக் கொண்டு பல கண்டன நூல்களையும் அந்த அறிஞர் பெருமக்கள் எழுதிக்குவித்தனர். அப்படி வெளிவந்த "வருண சிந்தாமணி" என்ற நூலுக்கு பாயிரம் பாடியவர் தேசியக்கவி சுப்ரமண்யபாரதி!

தமிழர் என்று சொல்லும்போது
இந்த நிலையில்தான் நால் வருணத்தை ஏற்றுக் கொண்டு இருந்தோம்.
இந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் நிமிர்ந்து நிற்கிறோம் திராவிடராக!

வில்லியம் ஜோன்ஸ் ஆரியக் கலாச்சாரமே உயர்ந்தது என்று வேதங்களை உயர்த்திபிடித்தபோது
கால்டுவெல் திராவிட மொழிக்குடும்பம் என்பதை ஓங்கி ஒலித்தார்!
ஆரியர்கள் உலகை ஆளப்பிறந்தவர்கள் என்ற ஹிட்லரின் குரல் ஒலித்த அதே காலகட்டத்தில் "நான் ஸ்பெயின் தேசத்திலிருந்து வந்திருக்கும் திராவிடன்" என்று முழங்கினார் பாதிரியார் ஈராஸ்!

ஆரியர்க்கு எதிரான கலகக் குரலாக வரலாறு நெடுக "திராவிடர்"என்பது ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது!
இந்தச் சொல் உங்களுக்கு பிடிக்கலாம் அல்லது பிடிக்காமல் போகலாம்.
நீங்கள் வசைமாரி பொழியலாம், அல்லது கண்டும் காணாமல் கடந்து போகலாம்.
திராவிடர் என்பது குறித்து வாழ்நாளெல்லாம் ஆராய்ச்சி செய்து எழுதிக் குவிக்கலாம். ஆனால் திராவிடர் என்ற குரலை எவராலும் அடக்கவோ-தடுக்கவோ முடியாது!
                                          #தொடரும்...
   பதிவு     Viduthalaiarasu Viduthalaiarasu

புதன், 3 ஏப்ரல், 2019

திராவிடர் என்ற சொல்லை பெரியார் நுழைத்தாரா?

- மஞ்சை வசந்தன் Manjai vasanthan

தமிழர் என்ற சொல்லை வேண்டுமென்றே விலக்கி, திராவிடர் என்ற சொல்லை பெரியார் நுழைத்தார். காரணம் அவர் கன்னடர் என்று சிலர் பெரியார் மீது பழி கூறுகின்றனர்.

இது உண்மையா? அல்லது மோசடிப் பிரச்சாரமா?
ஆதாரங்களுடன் விளக்க விரும்புகிறோம்.

1892இல் ஜான் ரெத்தினம் அவர்கள் திராவிடர் கழகம் என்றே ஓர் அமைப்பைத் தொடங்கினார். பண்டிதர் அயோத்திதாசர் ஆதி திராவிட மகாசன சபை என்ற அமைப்பைத் தொடங்கினார். திராவிட என்ற சொல்லை திரு.ஜான் ரத்தினம் அவர்களும் பண்டிதர் அயோத்திதாசரும் ஒடுக்கப்பட்ட, இம்மண்ணுக்கு உரிமையான மக்களை விளிப்பதற்காகப் பயன்படுத்தினர். பின்பு 1912இல் பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை ஒருங்கிணைக்கும் குறியீடாக டாக்டர் நடேசன் அவர்கள், திராவிடர் சங்கம் தொடங்குகிறார். 1916இல் பிட்டி தியாகராயர் அவர்களாலும் டாக்டர் டி.எம்.நாயர் அவர்களாலும் பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்ற தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் தொடங்கப்பட்டது. திராவிடன் என்ற பெயரில் இதழும் தொடங்கப்பட்டது. அப்போது காங்கிரசில் இருந்த தந்தை பெரியார் பின்னாளில்,  திராவிடர் என்ற குறியீட்டைப் பயன்படுத்துகிறார்.

1892இல் ஜான்ரெத்தினம் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு முன், கி.மு. முதல் நூற்றாண்டிலே மனுஸ்மிருதி, பத்தாம் அத்தியாயத்தில், 43, 44ஆவது சுலோகத்தில் திராவிட என்ற சொல் கையாளப்பட்டுள்ளது.

ஜாதி தர்மத்தை அனுசரிக்காதவர்களுக்குப் பிறந்தவர்கள் திராவிடர்கள்... திராவிட தேசத்தை ஆண்டவர்கள் சூத்திரர்கள் என்கிறது மனுஸ்மிருதி.

கி.பி. 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாயுமானவர் எழுதிய, கல்லாத பேர்களே நல்லவர்கள் என்னும் பாடலில் திராவிடம் என்ற சொல் மொழியைக் குறிக்க ஆளப்பட்டுள்ளது.

திருஞானசம்பந்தர் திராவிட சிசு என அழைக்கப்பட்டார். இங்கு திராவிடம் என்பது தமிழைக் குறிக்கப் பயன்பட்டது.

1856இல் வெளியிடப்பட்ட கால்டுவெல் என்பவரின் திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பங்களின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar in Dravidian or South Family of Languags)  என்ற நூலிற்குப்பின் திராவிடம் என்ற சொல் பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்தது.

எனவே, திராவிடம் என்ற சொல்லை நீதிக் கட்சியினரோ, பெரியாரோ, திராவிடர் கழகத்தினரோ, திராவிட முன்னேற்றக் கழகத்தினரோ உருவாக்கவில்லை. குறிப்பாக பெரியார் திணித்தார் என்பது தவறு; மோசடி!
அறிஞர் இராம. சுந்தரம் அவர்கள் இது குறித்து, கால்டு வெல்லுக்கு முன்பே, திராவிட என்ற சொல் தென்னிந்தியர்களை, தென்மொழிகளைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளது என்கிறார்.

குமாரிலபட்டர் (கி.பி. 7ஆம் நூற்றாண்டு) திராவிட பாஷைகள் பற்றிக் குறிப்பிடுகிறார்  (tadyatha dravidadi bhassyam ever.... so in the Dravida and other languages. (ச. அகத்தியலிங்கம், திராவிட மொழிகள், 22).

கியர்சன்  (Linguistic Survey of India Vol.I) தனக்குத் தெரிந்தமட்டில் அட்சன் (Dr.Hodgson)   என்பவர்தான் திராவிடன் (Dravidan)  என்ற சொல்லை முதன்முதலாகத் தென்னிந்திய மொழிகளைக் குறிக்கப் பயன்படுத்தியதாகக் கூறுகிறார்.

உண்மை வரலாறு இப்படியிருக்க பெரியார்தான் திராவிடர் என்ற சொல்லை வலிய, உள்நோக்கத்தோடு நுழைத்தார் என்பது பித்தலாட்ட பிரச்சாரமாகும்.

இந்த நாட்டைப் பொறுத்தவரையில் இதுவரையில் இருந்துவரும் போராட்டமெல்லாம் ஆரியர்-திராவிடர் பேராட்டமே ஒழிய, வடமொழி தென்மொழிப் போராட்டமல்லவே! இதற்கு எவ்வளவோ ஆதாரங்கள் காட்டலாமே!

தமிழ் என்பது மொழிப்பெயர். திராவிடர் என்பது இனப்பெயர். தமிழ் பேசும் மக்கள் யாவரும் தமிழர் என்ற தலைப்பில் கூட முடியும். ஆனால் தமிழ் பேசும் அத்தனை பேரும் திராவிடர் ஆகிவிட முடியாது. இனத்தால் திராவிடனான ஒருவன் எந்தச் சமயத்தைச் சார்ந்தவனாயிருந்தாலும், எந்த மொழி பேசுபவனாய் இருந்தாலும் அவன் திராவிடர் என்ற தலைப்பில்தான் சேருவான். ஆகையால், திராவிட மொழி தமிழ் என்ற காரணத்திற்காக, தமிழ் பேசும் திராவிடன் அல்லாத ஒருவன் மொழி காரணமாக மட்டுமே தன்னைத் திராவிடனென்று கூறிக்கொள்ள முடியாது. தமிழர் என்றால் பார்ப்பானும் தன்னை தமிழனென்று கெடுக்கப் பார்ப்பான். திராவிடர் என்றால் எந்தப் பார்ப்பானும் தன்னைத் திராவிடன் என்று கூறிக்கொண்டு நம்முடன் சேர முற்படமாட்டான்...

... தமிழர் என்று பொதுவாக அழைக்கும்போது, இவ்வளவு நிபந்தனை (தடை) உண்டா? ஆகவேதான் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். மற்றபடி திராவிடர் என்பதில் எங்களுக்கு வேறென்ன உள்ளெண்ணம் இருக்க முடியும்?

தமிழர் என்பதில் நான் சேர்க்க நினைத்த அத்தனை பேரையும் சேர்க்கவும், நான் விலக்க நினைத்த _ நமக்கு மாறுபட்ட கலாச்சாரமுடைய கூட்டத்தை விலக்கவும் வசதி உண்டா? இழிவுக்கும் தாழ்வுக்கும் கட்டுப்பட்டுள்ள மக்களையும், இதற்கு நேர்மாறக _ இவ்விழிவுக்கே காரணமான உயர்ஜாதி மக்களையும் ஒன்றாக்கிக் கொண்டால், அதில் இவ்விழிவு நீங்க வழி ஏற்படுமா? முதலில் இவ்விழிவு நீங்கட்டும்! பிறகு எல்லோரும் ஒன்றாவோம்!
.... சூத்திரர் என்பவர்களுக்குத் திராவிடர் தவிர்த்து வேறு பொருத்தமான பெயர் யாராவது கூறுவார்களானால் அதை நன்றியறிதலுடன் ஏற்றுக் கொண்டு, என் அறியாமைக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவும் தயாராயிருக்கிறேன்.

நீங்கள் கொடுக்கும் பெயரில் மேலே சொன்ன அத்தனை பேரும் ஒன்று சேர வசதி இருக்க வேண்டும். அதில் சூத்திரனில்லாத ஒரு தூசி கூட புகுந்து கொள்ளாமல் தடுக்க ஏதாவது தடையிருக்க வேண்டாமா? என்றார் பெரியார். (மொழியாராய்ச்சி எனும் நூலில் பெரியார் எழுதியதிலிருந்து.)

ஆரிய ஆதிக்கத்தின் விளைவாய், இந்த மண்ணின் பெரும்பான்மை மக்கள் (97% மக்கள்) தாங்கள் சூத்திரர்கள் என்று அழைக்கப்படுவதை மறுத்து, திராவிடர்கள் என்ற சொல்லால் தங்களை அழைத்து, ஆரிய பார்ப்பனர்களிலிருந்து மாறுபட்டவர்கள் தாங்கள் என்பதைக் காட்டிக்கொள்ள திராவிடர் என்ற சொல்லாட்சியே பொருத்தமாய்ப் பயன்பட்டது.

தமிழர் என்னும்போது தாங்களும் தமிழர்கள்தான் என்று ஆரிய பார்ப்பனர்கள் உள்ளே நுழைந்து இனப் பகுப்பை சிதைத்துவிடுகின்றனர்.

தமிழினத்தின் பரம்பரைப் பகையினமான ஆரிய பார்ப்பனர்களுள் தமிழர்கள் என்றால், இதைவிட இன மோசடியும், இன கட்டின் தகர்ப்பும் வேறு என்ன இருக்க முடியும்?

ம.பொ.சி. காலத்திலிருந்து சீமான் காலம் வரை ஆரிய பார்ப்பனர்களும் தமிழர்கள்தான் என்று உள்ளடக்கி, ஆரியத்திற்கு துணைநிற்கக் கூடியவர்களே திராவிடத்தை எதிர்க்கின்றனர்.

பெரியார் ஈ.வே.ரா முதலில் தமிழரைப் பிளவுபடுத்தும் பிராமணர் _ பிராமணர் அல்லாதார் கூச்சலுக்கு முற்றுப் புள்ளி வைக்கட்டும். அப்பொழுதுதான் தமிழகத்தில் தமிழர் அல்லாதாரின் ஆதிக்கத்தை ஒழித்துத் தமிழினத்துக்கு வாழ்வு தேட முடியும் (தமிழன் குரல் அக்டோபர் 1954 இதழில் ம.பொ.சி.)

ஆக, மலையாளி, கன்னடர், தெலுங்கர்தான் தமிழர்களுக்கு எதிரியே தவிர, ஆரியப் பார்ப்பனர்கள் அல்ல என்பதே இவர்கள் கொள்கை.

திராவிடர் என்பதை விலக்கி தமிழர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ள விரும்புகின்றவர்கள் ஆரிய பார்ப்பனர்களை அறவே விலக்கித் தமிழர்களை கடமைக்கு அணியாக்கிக் காட்ட வழி சொன்னால் அய்யா பெரியார் சொல்வதுபோல அதை அட்டியின்றி ஏற்க நாம் யாராகவுள்ளோம் என்பதை ம.பொ.சி.  வாரிசுகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே, பெரியார், தான் கன்னடர் என்பதால் தமிழர் என்ற சொல்லை நீக்கி, திராவிடர் என்ற சொல்லைப் புகுத்தினார் என்ற குற்றச்சாட்டு அற்பத்தனமானது _ அபத்தமானது ஆகும்.

என்னுடைய தாய்மொழி கன்னடமாக இருந்தபோதிலும், அதனை நான் தினசரி பேச்சு வழக்கத்தில் கொண்டிருக்கவில்லை. எல்லா வற்றிற்கும் தமிழ்மொழியைத்தான் பயன்படுத்தி வருகிறேன். எனக்குக் கன்னடத்தைத் தவிர தெலுங்கிலும் கொஞ்சம் பயிற்சி உண்டு. எப்படி என்றால், வியாபார முறையிலும் நண்பர்களின் பழக்கத்தாலுமேயாகும். (விடுதலை 21.5.1959)

என்று தன்னைப் பற்றி வெளிப்படையாகப் பேசிய பெரியார், தமிழின், தமிழரின் மேம்பாட்டிற்கு மட்டுமே பாடுபட்டார். அவர் என்றைக்குமே கன்னடர்களுக்காகப் பாடுபட்டதில்லை.
====================================

உண்மை அறியுங்கள்

- மற்றவர்களுக்கும் பகிருங்கள்

மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
-  கட்செவி பதிவு