புதன், 31 ஆகஸ்ட், 2016

மொகஞ்சதாரோ ஆரிய நாகரிக நகரமாம்!

பார்ப்பனர்களின் தகிடுத்தத்தம்!
மொகஞ்சதாரோ
ஆரிய நாகரிக நகரமாம்!

மின்சாரம்
பிரபல இந்தி திரைப்பட இயக்குநர் அசுதோஷ் கோவரிகர் சிந்து சமவெளி நாகரிகத்தில் முக்கிய இடம் பிடித்த மொகஞ்சதாரோ  பெயரில் திரைப் படம் ஒன்றை தயாரித்து முடித்துள்ளார் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் முழுக்க முழுக்க திராவிட கலாச்சாரம் என்பதை மறைத்து வேத காலத்தின் உச்சத்தில் இருந்த நகரமென்று நம்ப வைக்க ஆரியக் கலாச்சாரம் முழுவதும் திரைப்படத்தில் காண்பித்தி ருக்கின்றனர். இதன் பின்னணியில் பார்ப்பன சக்திகள் இருக்கின்றன.
1997 ஆம் ஆண்டு பாஜக முதல் முத லாக ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்தே திராவிட அடையாளங்களை முற்றிலும் சிதைக்கும் வேலையை தீவிரமாக நடத்திக் கொண்டு வந்தது. 1999 ஆம் ஆண்டு மத்தியில் வாஜ்பாய் மற்றும் மகாராஷ்டி ராவில் சிவசேனா-பாஜக ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது இந்தியாவின் மிகப் பெரிய அருங்காட்சியகமான பிரின்ஸ் வேல்ஸ் மியூசியத்தில் (தற்போது சத்திரபதி சிவாஜி) வைக்கப்பட்டிருந்த சிந்து சமவெளிப் பொருட்கள் அடங்கிய பகுதி யில் திராவிட நாகரிகத்தின் எச்சங்கள் என்ற பெயரை நீக்கிவிட்டு அடையாளம் தெரியாத நாகரிக மக்கள் வாழ்ந்த இடம் என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டது. இன்றுவரை அது அப்படியே உள்ளது.
ஆரியக் கலாச்சாரத்தின் தொட்டில்
தற்போது சிந்து சமவெளி நாகரிகம் குறித்து அது ஆரியக் கலாச்சாரத்தின் தொட்டில் என்று காண்பிக்கும் வேலை திரைப்படங்கள் மூலம் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு விமானம் என்பது வேத காலத்தில் கண்டறியப்பட்ட ஒன்று என்று கூறி, சில கட்டுகதைகளை வைத்து ஹவாய்ஜாதா என்ற திரைப்படமே எடுக்கப்பட்டுவிட்டது. அதில் ரைட் சகோதரர்களுக்கு முன்பே இந்தியாவில் விமான சாஸ்திரம் என்ற வேதகால நூல் ஒன்றை வைத்து மராட்டிய இளைஞன் ஒருவன் விமானத்தை தயாரித்ததாகவும், அதை மும்பை கடற்கரையில் வெற்றி கரமாக பறக்கவிட்டதாகவும் காட்டப்பட் டிருந்தது.
தற்போது திராவிட பண்டைய கலாச்சாரத்தின் சின்னமாகத் திகழும் மொகஞ்சதாரோ என்னும் அழிந்து போன நாகரிக நகரை ஆரியர்களின் நகரமாகக் காண்பித்துள்ளனர். இந்தத் திரைப்படத் தின் பின்னணியில் மாடு பூட்டிய அலங் கார வண்டி, பருத்தியினால் செய்யப்பட்ட ஆடைகள், உலோக ஆயுதங்கள், உழவுக்கருவிகள் போன்றவை அன்றைய கால கட்டத்தில் (கி.மு.3000) கிடைத்த புதை பொருட்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டவையாகும் என்று கூறிய அசுதோஷ் கோவரிகர் நாங்கள் வேதகால மொகஞ்சதாரோவை மக்களின் கண் களுக்கு முன்பாக கொண்டு வந்துள்ளோம் என்று கூறியிருந்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே இந்தியாவில் உள்ள சிந்து சம வெளி நாகரிக எச்சங்களை ஆரியக் கலாச் சார நாகரிகம் என்று காண்பிக்கும் பணி களை பார்ப்பனர்கள் மிகத் தீவிரமாக நடத்தி வந்தனர். தங்களது அடையாளங்களைத் திணிக்க முடியாத இடங்களை அழித்து குடியிருப்புகளாக உருவாக்கிவிட்டனர். அதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக குஜராத்தில் உள்ள தொலவீரா என்ற இடத்தைக் கூறலாம், ஆங்கிலேயர் காலத் தில் மிகப்பெரிய அளவு அகழ்வாராய்ச் சிக்கு உட்பட்ட இந்த இடத்தை சுதந்திரத் திற்குப் பிறகு முற்றிலும் அழித்து தற்போது ஒரு சிறுபகுதியை விட்டு விட்டு மற்ற பகுதிகள் அனைத்துதையும் தனியார் களுக்கு சுண்ணாம்புப் பாறைகளை வெட்டி எடுக்க ஒப்பந்தத்தில் விட்டுவிட்டார்கள்.
சிந்து வெளியில் குதிரைகள் எங்கே வந்தன?
இதன்மூலம் சுமார் 3000 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்த அந்தப் பகுதி 20 ஆண்டுகளுக்குள் முற்றிலும் அழித்தொழிக் கப்பட்டு விட்டது. இந்தப் படத்தில் குதிரை கள் காட்டப்பட்டுள்ளன. சிந்து சமவெளி நாகரிகத்தில் எந்த இடத்திலும் குதிரைகள் இல்லை. அகழ்வாராய்ச்சிகளில் சில இடங்களில் கட்ச் கழுதைகளின் எலும்புகள் கிடைத்துள்ளன. இவை விவசாயத்திற்கும், ஏற்றம் இறைக்கவும் பயன்படுத்தப்பட்டிருக் கலாம் என்று ஒரு கருத்தை ஜெர்மானிய அகழ்வாராய்ச்சியாளர்  (1858-1931) என்பவர் கூறியிருந்தார்.
ஆனால் அந்தக் கழுதை எலும்புகள் கிடைத்த காலம் குறித்து இன்றுவரை சரியான முடிவுகள் இல்லை. அப்படி இருக்க அந்தப் படத்தில் குதிரைகளைக் காண்பிப்பது ஏன் என்றால்  ரிக் வேதத்தில் குதிரை முதன்மையான விலங்காக காட்டப் பட்டுள்ளது. முக்கியமாக அசுவமேத யாகத்தில் குதிரைதான் மன்னருக்கெல்லாம் மன்னன் சக்கரவர்த்தி என்று குறிப்பிடப்பட் டுள்ளது. அந்த வாசகங்களை உண்மை யாக்க இந்த தந்திரங்களை திரைப்படத்தில் புகுத்தியுள்ளனர்.
திரைப்படத்தில் பல இடங்களில் சிவ லிங்கங்களை காண்பித்துள்ளனர். இந்த சிவலிங்கங்கள் அனைத்தும் சமலா நதிக் கரையில் (கர்நாடகா) நேர்த்திக்கடன் என்ற பெயரில் பக்தர்கள் செதுக்கிவைத்த சிவ லிங்கங்களை காண்பித்து அந்த பகுதி மொகஞ்சதாரோ மக்கள் அனைவரும் சிவபக்தர்கள் என்று காண்பித்துள்ளார்கள்.
சிந்து சமவெளியில் சமஸ்கிருதமாம்
மிகவும் முக்கியாக அங்கு வாழ்ந்த மக்கள் பேசிய மொழி சமஸ்கிருதம் என்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. சமஸ்கிருதம் இந்தோ அய்ரோப்பியன் மொழி என்றும் திராவிட நாகரிகத்தில் சமஸ்கிருதமோ அல்லது இந்துமத வழிபாடோ எங்கும் காணப்படவில்லை என்றும் வரலாற்று உண்மைகள் இருக்கும்போது மிகப்பெரும் பொருட்செலவில் திரைப்படம் எடுத்து சரஸ்வதி நதி, சமஸ்கிருதம் சனாதன மதம் என்று பல்வேறு புரட்டுக்களை திணித்து திராவிட நாகரிகத்தை அழிக்கும் செயலை மொகஞ்சதாரோ என்ற திரைப்படம் வாயிலாக காவி அமைப்புகள் பிரச்சாரம் செய்ய முன்வந்துள்ளன.
முக்கியமாக இந்தத் திரைப்படத்திற்கு சனாதன பிரச்சார அறக்கட்டளை என்ற வெளிநாட்டு அமைப்பு பல்வேறு வகையில் நிதி உதவி செய்ததாக திரைப்பட நிகழ்ச்சி தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த இத்திரைப்பட இயக்குநர்  அசுதோஷ் கோவரிகர் கூறியிருந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜோதா அக்பர் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் அக்பர் ஒரு இஸ்லாமிய மன்னராக இருந்தாலும் இந்து மதத்திற்கு முக்கி யத்துவம் கொடுத்திருந்தார் என்றும் அவர் சைவ உணவுப் பிரியர் என்றும் படத்தில் காட்டி இருந்தனர். மேலும் பசுவதை செய் பவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுப்பவராக இருந்தார் என்றும் படத்தில் காட்டியிருந்தனர்.
வரலாற்றைத் திரிப்பது, உருமாற்றுவது என்பதெல்லாம் பார்ப்பனர்களுக்குக் கைவந்த கலையே! வாஜ்பேயி பிரதமராக இருந்த காலத்தில், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராகவிருந்த முரளி மனோ கர் ஜோஷி, கணினியைப் பயன்படுத்தி சிந்து சமவெளிபற்றிய கல்வெட்டுகளைத் திரிக்கும் வகையில் காளையை குதிரை யாக்கிக் காட்டினார் என்பது நினைவில் இருக்கட்டும்.
ஆரியராவது, திராவிடராவது என்று நம்மிடம் பேசுவார்கள்; அதேநேரத்தில், பார்ப்பனர்கள் தாங்கள் ஆரியர்களே என்ற உள்ளார்ந்த உணர்வோடு செயல்படுவார் கள் என்பதற்கு இந்தத் திரைப்படமும் ஓர் எடுத்துக்காட்டே!

கல்வெட்டு: மொகஞ்சதாரோ - அரப்பா...

மொகஞ்சதாரோ அரப்பா தொல் நகரங்களில் காணப்படும் சித்திர எழுத்துக்களை முன்னரே பலர் ஆராய்ந்து அங்கு வாழ்ந்தோர் திராவிடரே எனச் சொல்லியுள்ளனர். 1980 ஆம் ஆண்டில் அவ்விரு எழுத்துக்களைப் புதுமுறை எந்திரங்களின் துணை கொண்டு நன்காராய்ந்து அவை திராவிடர் புழங்கியதே என்று உருசியப் பேரறிஞர் குனோரோசோன் உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போது வால்டர் பேர் செர்வி என்ற அமெரிக்க மாந்தவியலறிஞரும் அவை திராவிடர்களின் மொழியே என்று மறுவுறுதிப்படுத்தி உள்ளார். அவர்தம் ஆய்வுக் கட்டுரை அறிவியற் துறை அமெரிக்கன்(Scientific American) எனும் மாதவிதழில் (மார்ச் 1983) வெளிவந்துள்ளது.
- தமிழ்த் தென்றல் திரு.வி.க. நூற்றாண்டு விழா மலர்,
வெளியீடு: தமிழர் முன்னேற்றக் கழகம், இலண்டன்

சிந்துவெளி நாகரிகம்
திராவிட மொழியைச் சார்ந்தது
- அய்ராவதம் மகாதேவன்

சிந்துவெளி நாகரிகம் திராவிட மொழியைச் சார்ந்தது என்று கல் வெட்டு ஆய்வாளரும், தினமணி முன்னாள் ஆசிரியருமான அய்ராவதம் மகாதேவன் கூறினார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் தில் கடல்சார் வரலாறு, கடல்சார் தொல் லியல் துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற முனைவர்கள் எ.சுப்ப ராயலு, செ.ராசு அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
சிந்துவெளி நாகரிகம் திராவிட சமுதாயத்தைச் சார்ந்தது. மொகஞ்ச தாரோவில் கிடைத்த முதுகைக் காட்டி உட்கார்ந்த நிலையிலான விலங்கு, கொக்கி, நாற்சந்தி, குவளை வடிவ முத்திரைகள் ஆய்வு செய்யப்பட்டன.
இவற்றில் விலங்கு வடிவம் பண்டமாற்று முறை, கொக்கி வடிவம் வாங்குதல், எடுத்துக் கொள்வது, நாற்சந்தி வடிவம் தெருக்கள் அடங்கிய நகரம், கிராமம் என்பதை உணர்த்து கிறது. குவளை வடிவம் சிந்துவெளியில் அதிகம் காணப்படுகிறது. சொல்லின் இறுதியில் காணப்படும் இந்த வடிவம் அன், நகரத் தலைவன், பாண்டி, பாண்டியன் போன்றவற்றைக் குறிக் கிறது.
இதற்கு இணையான வார்த் தைகள் பழந்தமிழிலும் உள்ளன. இந்த 4 எழுத்துகளையும் சேர்த்து வாசிக்கும் போது நகர வணிகன் என்ற வாக்கியம் கிடைக்கிறது. இதை, மாற செழிய வழுதிபாண்டியன் எனவும் வாசிக்க முடியும்.
இதையெல்லாம் ஆராய்ந்து பார்க் கும்போது சிந்துவெளியில் பேசியது ஒரு திராவிட மொழி. அங்கு வாழ்ந்த மக்கள் புலம்பெயர்ந்து தென்னகத்துக்கு வந்ததால், சிந்துவெளி மொழிக் கூறுகள் பழந்தமிழ் மொழியில் காணப்படு கின்றன என்பது என் கருத்து.
பாண்டியர்களின் மூதாதையர்கள் சிந்துவெளியில் வணிகத்தில் ஈடு பட்டிருக்கலாம். அவர்கள் தெற்கு நோக்கி நகர்ந்து, திராவிட மொழி பேசியிருக்கலாம். குறிப்பாக, பண்டைய தமிழைப் பேசியிருக்கலாம்.
வெளியிலிருந்து வந்த ஆரியர்கள் சிந்துவெளியில் குடியேறியதால் அங்கு இந்திய- ஆரிய சமுதாயம் உருவாகியி ருக்கலாம். இந்திய ஆரியப் பண் பாட்டில் இருந்த ரிக் வேதத்தில் உள்ள வார்த்தைகள் சிந்துவெளியில் இருந்து கடன் மொழியாகப் பெறப்பட்டிருக் கின்றன. ரிக் வேதத்தில் வரும் பூசன் என்ற கடவுளின் பெயர் சிந்துவெளி மக்களிடம் இருந்து எடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது.
எனவே, சிந்துவெளி நாகரிகம் வேதப் பண்பாட்டைவிட காலத் தால் மிகப் பழைமையானது. சிந்துவெளிக் குறியீடுகளுக்கும், பண்டைய தமிழ் வார்த்தைகளுக்கு மான தொடர்பு அதிகமாக இருப் பதை சங்க காலத் தமிழ்ச் சொற்கள் மூலம் அறியலாம். எனவே, சிந்துவெளி நாகரிக மொழி தொல் திராவிட வடிவம் கொண்டது என்பது எனது முடிவு என்றார் அய் ராவதம் மகாதேவன்.
(தினமணி, 29.1.2015)

20-08-2016 விடுதலை ஞாயிறு மலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக