வெள்ளி, 2 செப்டம்பர், 2016

இந்து புராண புரட்டுகள் மூலம் அசுரனாக்கப்பட்ட மகிஷன் ஒரு பவுத்த அரசன்



மைசூரு அல்லது மகிஷ மண்டலா ராஜாங்கத்தின் மிகச் சிறந்த ஆட்சியா ளராக இருந்தவர் மகிஷா. புத்தமத கலாச்சாரத்திலும் மரபிலும் வந்த மகிஷா, மனிதநேயத்தையும் ஜனநாயக கொள்கைகளையும் தனது ஆளுமையில் பின்பற்றினார். ஆனால், கர்நாடகத்தின் கலாச்சார மற்றும் அறிவுசார் தலை நகரமான மைசூருவை,
புராணங்கள் மூலம் பார்ப்பன சக்திகள் திட்ட மிட்டே புதைத்தன என்கிறார் பேரா சிரியர் மகேஷ் சந்திர குரு. விரைவில் வெளிவரவிருக்கும் (MAHISHASUR BRAHMANIZING A MYTH) என்ற நூலிலிருந்து இந்த கட்டுரையை ஃபார்வர்டு பிரஸ் வெளியிட்டுள்ளது. அதன் தமிழாக்கம் இங்கே:
மைசூரு, கர்நாடகத்தின் இரண் டாவது மிகப் பெரிய நகரமாக இருக்கிறது. பெங்களூருவிலிருந்து 130 கிமீ தென்கிழக்கில் அமைந்துள்ளது. பண்டைய வரலாற்றில் அசோக அரசரின் காலத்தில் அதாவது கி.மு. 245இல் மைசூர் அல்லது மகிஷூர் என குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாவது புத்தமத பட்டமேற்பு விழாவுக்குப் பிறகு, மகாதேவா என்னும் பெயர் கொண்ட புத்தத்துறவியை அசோகர், புத்தமத கொள்கைகளைப் பரப்பி மக்கள் நலன்சார்ந்த அரசை நிறுவும்படி அனுப்பிவைத்தார்.
மகாதேவா, மகிஷா என பின்னர் அழைக்கப்பட்டு, மகிஷ மண்டலா எனும் ராஜ்ஜியத்தை நிறு வினார். கர்நாடகாவின் வடக்குப் பகுதி களில் அசோகரின் சில அரசாணைகள் கிடைத்துள்ளன. மகிஷனின் அரசாட் சிக்கு சான்றாக வரலாற்று நினைவுச் சின்னங்கள், காப்பக ஆவணங்கள் இந்தப் பகுதியில் கிடைத்துள்ளன.
கி.பி. 1399 ஆம் ஆண்டு மைசூரு, யது வம்சம் ஆட்சியின் கீழ் வந்தது. விஜயநகர அரசின் எதிரிகளாக யது வம்சத்தினர் இருந்தனர். மைசூரு மாகாணத்தின் வளர்ச்சியில் அவர்களும் முக்கிய பங்காற்றியுள்ளனர். மைசூரு வின் ராஜாவாக இருந்த பெட்டத காமராஜ உடையார், கி.பி. 1584ஆம் ஆண்டு சிறிய கோட்டை ஒன்றைக் கட்டினார். தனது தலைநகரமாக மைசூருவை மாற்றிய ராஜா, அதை மகிஷாசுர நகர என அழைத்தார். 17 -ஆம் நூற்றாண்டின் காப்பக ஆவணங் கள் பலவற்றில் மைசூரு, மகிஷுரு எனவே குறிப்பிடப்படுகிறது. ராஜா உடையார் தனது தலைநகரை மைசூரு விலிருந்து சிறீரங்க பட்டணாவுக்கு கி.பி. 1610-ஆம் ஆண்டில் மாற்றினார்.
ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் மைசூருவின் சிறந்த ஆட்சியாளர்களாக இருந்தார்கள். ஹைதர் அலி, மைசூரு ராஜாங்கத்தை விரிவுபடுத்தினார். அவருடைய மகன் திப்பு சுல்தான், தனது சர்வதேச தொடர்புகள் மூலம் ராஜாங் கத்தை மேலும் முன்னேற்றினார். இந்தியாவை ஆண்ட பிரிட்டீசாருடன் அவர் எவ்வித சமரசங்களையும் செய்து கொள்ளவில்லை.
ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போரிட்டு 1799-ஆம் ஆண்டு அவர் உயிர் துறந்தார். அவருடைய பெயர் நவீன இந்திய வரலாற்றில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. திப்பு சுல்தான் இறந்த பிறகு, மைசூரு, உடையார்களின் தலைநகராக மீண்டும் உருவானது. பிரிட்டீசார், உடையார்களை  அரி யணை ஏற்றி, தங்களுடைய கூட்டாளி களாக ஆக்கிக் கொண்டார்கள். மைசூரு சுதேசி மாகாணமாக மாறியது.
சிறுநகரமாக இருந்த மைசூரு, நவீன நகரமாக உருமாறியது 2-ஆம் கிருஷ்ண ராஜா உடையார் காலத்தில். 4-ஆம் கிருஷ்ணராஜா உடையார், புதிய கட்டு மானங்களை நிர்மாணித்து, பொரு ளாதாரா ரீதியில் விரிவுபடுத்தி மைசூ ருவை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வந்தார். அவர் ஜனநாயகவாதி, மனித நேயம் மிக்கவர், வளர்ச்சியை முன் வைத்த நிர்வாகி. 1947-ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடையும் வரையிலும் உடை யார்களின் ஆட்சி இங்கே தொடர்ந்தது. அதன் பிறகு ஒருங்கிணைந்த இந்தி யாவின் அங்கமானது மைசூரு.
பவுத்தத்துக்கும், பார்ப்பனியத்துக்கும் இடையேயான மோதலின் வரலாறே இந்திய வரலாறு என அம்பேத்கர் இந்திய வரலாறு குறித்து சொல்லுவார். பார்ப்பனியம், ஜாதி அமைப்பையும் ஜாதிய ஆதிக்கத்தையும் வலியுறுத்தியது. பவுத்தம், மனிதநேயத்தை அறம் சார்ந்த ஜனநாயகத்தையும் பேசியது. ஆரியர்கள், இந்தியாவின்மீது படையெடுத்து மண்ணின் மைந்தர்களை ஜனநாயக மற்ற முறைகளில் ஒடுக்கினார்கள். அதுபோல, பவுத்த அடித்தளத்தை சிதைத்து பார்ப்பனியத்தை நடைமுறைப் படுத்தினார்கள்.
ஆரியர்களின் புரட் டுகள் மூலம் மண்ணின் மைந்தர் களான, மகிஷா போன்ற ஆட்சியா ளர்கள் தூக்கி எறியப்பட்டார்கள்.
மைசூரு, மகிஷ மண்டலா, மகிஷாசுரநாடு, மகிஷநாடு, மகிஷபுரா என பலப் பெயர்களில் வழங்கப்பட்டது. வேளாண்மையை முதன்மையாகக் கொண்ட மாகாணமாக திகழ்ந்த மகிஷ மண்டலத்தில் எருமைகள் உழவுக்கும், பால் தேவைக்கும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. மைசூரு, எருமைகளின் நாடு எனப் போற்றும் வகையில் எருமையூர் (பேரா.குரு எருமையூரன் என்கிறார், அன் விகுதி மகிஷனை குறிக்கலாம்) என்று அழைக் கப்பட்டது. பவுத்த மற்றும் ஹொய்சால இலக்கியங்களில் மகிஷ மண்டலம் குறித்து ஏராளமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அந்தக் காலகட் டத்தில் இந்த மாகாணத்தில் ஏராள மான நகரங்கள் இருந்திருக்கின்றன.
பிறப்பில் திராவிடர்களாக இருந்த நாகர்கள், தென் இந்தியாவை ஆண் டனர். பேராசிரியர் மல்லேபுரம் ஜி. வெங்கடேஷ் நாகர்களுக்கும் மகிஷ மக்களுக்கும் தொடர்பிருப்பதை கண்டறிந்திருக்கிறார். நாகர்கள் தங்களுடைய கலாச்சாரம் மதிப்புமிக்கது என்பதை உணர்ந்து ஆரிய ஊடுரு வலைத் தடுக்க போரிட்டார்கள். மானுடவியலாளர் எம் . எம். ஹிராமத், கர்நாடகத்தில் நாகர்கள், மகிஷர்கள் என்ற இரண்டு மிகச் சிறந்த இனங்கள் இருந்ததாகச் சொல்கிறார்.
ஆரியர்கள் புராணங்கள் மூலம், பவுத்த அரசர்களை சிறுமைப்படுத்தி னார்கள். அவர்கள்விட்ட ஒரு புரட்டுதான் இந்தக் கதை: ஒரு மனிதன், எருமையுடன் உறவுகொண்டதால் பிறந்தவனே மகிஷன் என்ற கதை. வரலாற்றாசிரியர் மஞ்சப்ப ஷெட்டி (The palace of mysore - -- என்ற நூலின் ஆசிரியர்)யின் கூற்றுப்படி, மக்களைக் காப்பாற்றும் பொருட்டும், நீதியை நிலைநாட்டும் பொருட்டும் சாமுண்டி என்ற பெண்கடவுள், மகிஷனைக் கொன்றதாக பூசாரிகளே பொய்க் கதையைப் பரப்பினர் என்கிறார். மகிஷன் ஒரு அசுரன் என்பதை வேண்டுமென்றே ஊன்றினார்கள்.
சாமுண்டீஸ்வரிதான் மகிஷனைக் கொன்றாள் என்கிற இந்து புராணக் கதைக்கு எவ்வித ஆதாரமும் இல்லை.  மகிஷன் உண்மையில் பவுத்த- பகுஜன் அரசன்; நீதி, சமத்துவத்தின் குறியீடு. ஒரு கையில் வாள் ஏந்தியும் மற்றொரு கையில் பாம்பொன்றை பிடித்திருப்ப தாகவும் உள்ளது மகிஷனின்  உருவம். மகிஷனின் வீரத்தை வாளும், நாகா கலாச்சாரத்தில் பவுத்தம் வலியுறுத்திய இயற்கையின் மீதான அன்பை பாம்பும் குறிக்கின்றன.
நாட்டுப்புறவியல் நிபுணர் காலே கவுடா நாகாவார், தற்போது மைசூரு என வழங்கப்படும்  மகிஷ மண்ட லத்தை மகிஷன் ஆண்டார். அவர் ஓர் உன்னதமான பவுத்த அரசராக இருந்தார். முற்போக்கான நிர்வாகி யாகவும் சமூகத்தின் எல்லா பிரிவினரின் அதிகாரத்தை நிலைநாட்டியவராகவும் இருந்தார். உண்மைகள் திரிக்கப்பட் டன. மக்கள் உண்மைகளைத் தெரிந்து கொள்ளவேண்டும். இந்து புராணங் கள் மகிஷனை எதிர்மறையாகக் காட் டின. இந்த மாகாண மக்கள் தசரா விழாவை மகிஷ மண்டலத்தின் கீழ் வேறுவிதமாகக் கொண்டாட வேண்டும் என்கிறார்.
பிரபல எழுத்தாளர் (கன்னட) பன்னூர் ராஜா, சாமுண்டி மலை, முன்பு மகாபலேஸ்வரம் என அழைக் கப்பட்டது. இப்போதும் இந்தக் குன்றின் மீது, மகாபலேஸ்வரா கோயில் உள்ளது. யது வம்ச ஆட்சியின் போது சாமுண்டி என இந்த மலை பெயர் மாற்றம்பெற்றது.  பூசாரிகளுடன், ஆட்சியாளர்களும் சேர்ந்துகொண்டு சாமுண்டீஸ்வரி, மகிஷாசூரனைக் கொன்றாள் என்ற கதையைப் புனைந் தார்கள். இது ஆதாரமற்றது; கண்டிக் கத்தக்கது என்கிறார்.முற்போக்கு சிந்தனையாளரும் மகிஷ மண்டலா என்னும் நூலின் ஆசிரியருமான சித்தஸ்வாமி சொல்கிறார்: மகிஷா என்பதே மைசூரு என்பதன் வேர்ச் சொல். அசுரன் என்று எழுதிய குழுவாத எழுத்தாளர்களின் சூழ்ச்சிக்கு அவர் இரையானார். புத்தர் மற்றும் அசோகரின் கொள்கைகளை நடை முறைப்படுத்திய மகிஷா, ஓர் சிறந்த ஆட்சியாளர் என்று சொல்கிறார்.
வரலாற்றை மீட்டெடுத்தல்
மைசூரு மாகாணத்தின் மண்ணின் மைந்தர்கள், மகிஷாசன ஹப்பா (மகிஷனின் விழா) என்கிற பெயரில் இந்த நகரத்தின் வரலாற்றை மாற்றி எழுத ஒன்றிணைந்திருக்கிறார்கள். இந்நகரத்தைச் சேர்ந்த பகுத்தறிவாளர் கள் சாமுண்டி மலையில் தசரா கொண்டாட்டங்கள் நடந்து கொண் டிருந்தபோது மகிஷனுக்கு 2015 அக்டோபர் 11,  அன்று விழா எடுத்தோம். இந்நிகழ்வு கர்நாடாக தலித் வெல்ஃபேர் டிரஸ்டின் மூலமும் மேலும் பல முற்போக்கு அமைப்பு களின் துணையுடனும் நடந்தது.
இதில் நூற்றுக்கணக்கான சிந்தனையாளர்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், செயற்பாட்டாளர்கள் பங்கேற்றனர். கர்நாடக தலித் வெல்ஃபேர் டிரஸ்டின் தலைவரான சாந்தராஜு, மைசூரு மக்கள் தங்களுடைய  நகரத்தின் தோற்றம் குறித்து தெளிவாக அறிந்து வரலாற்றின்படி இந்த நகரத்தைத் தோற்றுவித்தவரான மகிஷனுக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும் எனக்கேட்டுக் கொண்டார். விழாவின் போது மகிஷனின் சிலைமீது சரமாரி யாக கற்களை வீசினார்கள். ஆனால் மண்ணின் மைந்தர்கள் மகிஷனை உயர் விக்கும் வகையில் தசராவைக் கொண்டாடுவார்கள். (ஜூன் 20 பார்வர்டு பிரஸ் வெளியீடு)
யார் இந்த மகேஷ் சந்திரகுரு
இந்தியாவில் தலித் பவுத்தத்தை சேர்ந்த ஒரே இதழியல் பேராசிரியர் தான் மகேஷ் சந்தர குரு. மைசூரு பல்கலைக்கழகத்தில் 30-ஆண்டு களுக்கும் மேல் பணியாற்றி வருகிறார். கர்நாடக பணியாளர் தேர்வாணையம், மத்திய பணியாளர் தேர்வாணையம், யூ.ஜி.சி. குழுக்களிலும் உறுப்பினராக உள்ளார். மகிஷா சூர இயக்கத்தை நடத்தி வருகிறார்.
-விடுதலை ஞா.ம.6.8.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக