ஞாயிறு, 16 அக்டோபர், 2016

.திராவிடர்-திராவிடத் திமிர்(முகநூல் பக்கம்)

................திராவிடர்................
இந்த துணைக் கண்டம் முழுவதும் பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்களான நாகர்கள் தான் என்பதை உரைக்கும் சொல் "திராவிடம்"
நாங்கள் தான் இந்த மண்ணின் பூர்வ குடிகள் என்பதை நிறுவும் சொல் "திராவிடம்"
இந்த துணைக் கண்டம் முழுவதும் பேசப்பட்ட மொழி தமிழ் தான் என்பதை பறைசாற்றும் சொல் "திராவிடம்"
அப்படி இருந்த தமிழ் மொழியை,,சமசுகிருதம் வந்து சிதைத்ததால் தான் மற்ற மொழிகள் உருவானது என்பதை உரக்கச் சொல்லும் சொல் "திராவிடம்"
இந்த துணைக் கண்டத்தின் வரலாறு என்பதே ஆரியர் vs திராவிடர் போர் தான் என்பதை கூறும் சொல் "திராவிடம்"
இந்த இத்தனை அடையாளங்களையும்,,பெருமைகளையும் "திராவிடம்" என்ற அரசியல் சித்தாந்தம் தான் தாங்கி நிற்கிறது என்பதை உணர்வோம்,,,
ஏன்?? இந்த அடையாளங்கள் எல்லாம் தமிழர் என்ற சொல்லை வைத்து நிறுவ முடியாதா என்ற கேள்வி எழலாம்??
பெருமைக்கு,,,ஆசைக்கு பயன்ப்படுத்தலாமே ஒழிய எதிரியை வீழ்த்த பயன்படுமா??
நம் எதிரியான ஆரியத்தை வீழ்த்த எது போர் கருவியோ ,அதை தானே நாம் எடுக்க வேண்டும்???
இங்கே தமிழ் இலக்கியங்களில் ஆரிய ஆதிக்கம் உட்புகுந்து பல நூறாண்டுகள் ஆகின்றன,,,ஆரிய பார்ப்பனிய சிந்தனையை பல வடிவங்களில் இங்கே புகுத்தி,,,அதுவும் தமிழின் ஒரு அங்கம் தான் என நிற்கிறது,,,
ஆரிய பார்ப்பானும் இங்கே தமிழ் பேசிக் கொண்டு,,,தானும் தமிழன் என நிற்கிறான்,,,
இந்த அத்தனை இடைச் சொருகள்களையும் "திராவிடம்" என்ற சொல் அப்புறப்படுத்தி,,,நம்மை மண்ணின் மைந்தர்களாக,,,பூர்வகுடிகளான நிலைநிறுத்தும்,,,
இதனால் தான் எந்த ஒரு பாப்பானும் தன்னை திராவிடன் எனச் சொல்லிக் கொள்ள மாட்டான்,,,ஆனால் தமிழன் என பல்லை காட்டிச் சொல்வான்,,,
காரணம் தமிழன் என்பது வெறும் வாய்வழியே வரும் மொழியை கொண்டு கண்டறியும் ஒரு விசயமாக மாறிப்போனது,,,
இந்த குலறுபடிகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தான் ஆரிய பார்ப்பனியம்,,,,
தற்போதைய தனது கைக்கூலியான சீமானை விட்டு "" பார்ப்பனர்கள் சுத்த தமிழர்கள்,,அவன் வீட்டிலும்,நாட்டிலும் ,வெளிநாட்டிலும் போய் தமிழ் தான் பேசறான்"" என கூவ விட்டு,,,தன்னை தமிழர்களோடு ஐக்கியப்படுத்திக் கொண்டு,,,,நம்மை அழிக்கத் துடிக்கறது,,,
அரப்பா,மொகஞ்சதாரோவில் முதல் நாகரீகம் படைத்த நம்மை இன்று தமிழ்நாடு என்ற குறுகிய நிலப்பரப்பில் அடைத்தது பத்தாது என முழுவதும் அழிக்கத் திட்டமோ என்னவோ??
இந்த பண்டை பெறுமைகளை,,,நம்மின் தனிச் சிறப்புகளை காக்கும் கவசமாக இங்கே "திராவிடர்" என்ற போர்ச்சொல் நிற்கிறது,,,
ஆனால் திராவிடம் என்ற சொல்லை அப்புறப்படுத்த துடிப்பவர்கள்,,,
தமிழர்கள் இந்தியாவின் ஒரு மாநிலத்தின் மக்கள் தான் என்ற முத்திரை குத்த விரும்புபவர்கள்,,,
இந்தியாவில் உள்ள மொழிகளை போல தமிழும் ஒரு மொழி எனக் கூற முயல்பவர்கள்,,,
தமிழ்நாட்டின் வரலாறே 1956 ஆம் ஆண்டில் இருந்து தான் எனக் கூறத் துடிப்பவர்கள்,,,
தமிழன் இங்கே உள்ள ஏனைய மொழி பேசும் மக்கள் போல ஒரு குழு என்ற கூற முயல்பவர்கள்,,,
ஆக மொத்தம்,,,ஆரிய பார்ப்பனியத்தோடு கைக்கோர்த்து,,,நம்மை காட்டிக் கொடுக்கும் இனத் துரோகிகள்,,,
ஆனால் இந்த துரோகத்தை நேரடியாகச் செய்யாமல்,,,தமிழ் மொழி ,இனப் பற்றாளர்கள் போல காண்பித்துக் கொண்டு,,,தமிழர்களின் வரலாற்றை தமிழ்நாட்டோடு புதைக்கத் துடிக்கும் கருங்காலிகள்,,,
Manoj kumar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக