ஞாயிறு, 22 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு திராவிடர் நாகரிகமே! சி.பி.எம். பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி




தமிழக மக்களின் வாழ்வோடு ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக பொங்கல் விழாவோடு பிணைந்துள்ள ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதை எதிர்த்து நடக்கும் தமிழக இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டத்தை வரவேற்கிறேன். 4,500 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டெடுக்கப்பட்ட இந்திய நாகரிகச் சின்னமான ஹரப்பாவில் கிடைத்த அடையாளங்களில் எருதுடன் கூடிய மனிதர்களைக் காண முடிகிறது.

அந்த நாகரிகம் திராவிட நாகரிகமே.

பழைமைவாய்ந்த மரபுரீதியானவிளையாட்டுக்களை,பிராணி களை வதை செய்யக்கூடாது என்று சொல்லி தடை செய்வது நியாயமா? இப் போராட்டங்களில் மதம், ஜாதி கடந்து லட்சக் கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்டிருப்பது வரவேற்க வேண்டிய அம்சமாகும். தமிழக இளைஞர்களின் உணர்வுகளை மோடி புரிந்து கொள்வாரா?
-விடுதலை,22.1.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக