திங்கள், 20 ஜனவரி, 2020

திராவிடத்தின் பேரால் ஆட்சி உரிமை

வருடம் : கி.பி.1862
இடம் : ராமநாதபுரம் சமஸ்தானம்..
ஆண்ட மன்னர் : கிழவன் சேதுபதி ...

            இன்றைய இந்தியா எனும் நிலபரப்பு மொத்தமும்  ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சிக்கு கீழ்சென்ற பிறகு, பிரிட்டிஷ் மகாராணி ஒரு சட்டத்தை இங்கிலாந்தில் நிறைவேற்றுகிறார்.அது என்னவென்றால் தங்களின் ஆட்சி அதிகாரத்துக்குட்ப்பட்டு இருக்கும் இந்திய நிலப்பரப்பில் ஆளும் மன்னரோ,பாளையக்காரர்களோ,ஜமீன்களுக்கோ ஆண் வாரிசு இல்லையெனில் ஆளும் மன்னர் மற்றும் அவருடைய மனைவி இறந்தபின்பு அந்த நிலப்பகுதி பிரிட்டிஷ் அரசுக்கு சொந்தம் என சட்டமும் இயற்றினார்கள்.

      இப்போது மேலே சொன்ன ராமநாதபுர சமஸ்தானத்தின் மன்னர் இறந்துவிட, ராணியான பர்வதவர்த்தினி தன் சமஸ்தானத்தை ஆள முத்துராமலிங்கம் எனும் ஒரு ஆண்பிள்ளையை தன் உறவினர்களின் சம்மதத்தோடு தத்தெடுக்கிறார்.முத்துராமரலிங்கத்தை தத்தெடுத்து வளர்த்த பின் சிறிது காலத்தில் ராணி இறந்துவிட ராமநாதபுர சமஸ்தானத்தின் மன்னராக முத்துராமலிங்கம் பதவியேற்கிறார்..

 அன்றைய பிரிட்டிஷ் அரசின் ராமநாதபுரம், சிவகங்கை என எல்லாம் ஒன்றிணைந்த மதுரை மாவட்டத்தின் ஆட்சியரான ஆங்கிலேயர் மன்னர் இறந்த தகவலை லண்டனில் உள்ள மகாராணிக்கு தெரிவித்து,உடனடியாக  அவர் சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் அனுப்புகிறார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து ராமநாதபுரம் ராணி சார்பில் தாங்கள் முத்துராமலிங்கத்தை தத்தெடுத்தது சரியே என வாதாடினார்கள் சமஸ்தானத்தார்.  சென்னை ராஜதானி நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் தத்தெடுத்த முத்துராமலிங்கம் மன்னர் பதவியேற்றது சரியே என தீர்ப்பு வருகிறது...

அன்று பிரிட்டிஷ் அரசின் வெள்ளைய அதிகாரியான ஆட்சியருக்கு சட்ட ஆலோசனை தரும் சாஸ்திரம் கற்ற பார்ப்பனர்கள் இங்கு தான் தங்களின் விஷம விளையாட்டை ஆரம்பிக்கிறார்கள். மீண்டும் அந்த வழக்கு சமஸ்தானத்திற்கு எதிராக லண்டனில் உள்ள பிரிவிவ்யூ கவுன்சிலுக்கு வழக்கு எடுத்து செல்லப்படுகிறது. சாஸ்திர வேதவிற்பன்னர்கள் ஆட்சியருக்கு சொல்லி கொடுக்கிறார்கள், அன்றைய நாளின் ஹிந்து சட்டப்படி,பல ஸ்மிருதிகளின் படியும் ஒரு ஹிந்து விதவைபெண் தத்தெடுக்கவேண்டுமானால் ஆளும் மன்னர் இறக்கும் முன்பே மன்னரின் முன் பலருடைய சாட்சிகளின் முன்னிலையில் தத்தெடுக்கவேண்டும் என ஹிந்து சட்டத்தின் மூலமான ஸ்மிருதிகள் சொல்கின்றன,எனவே முத்துராமலிங்கம் பதவி ஏற்றது செல்லாது என கொள்ளையடிப்பதற்காக வந்த ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை தந்தனர்.

இந்த வழக்கு நடந்த 1867-ம் ஆண்டு லண்டன் பிரிவியூ கவுன்சிலில் சமஸ்தானம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் எங்களின் சட்டம் ஆரியன் ஸ்கூல் ஆப் லா-வின்( ARYAN SCHOOL OF LAW) கீழ் வராது.எங்களுடைய சட்டம் திராவிடியன் ஸ்கூல் ஆப் லா-வின் (DRAVIDIAN SCHOOL OF LAW) கீழ் வரும் என ஆணித்தரமாக வாதாடி தீர்ப்பு முத்துராமலிங்கத்திற்கு சாதகமாக அந்த வழக்கை வென்றது மிகமுக்கியமான திராவிட இயக்கத்தின் முன்னோடியான சட்ட வரலாறு..்.

முத்துராமலிங்கம் VS மதுரை ஆட்சியர் வழக்கு என மூர்ஸ் ஜர்னல் (MOORES JOURNAL) எனும் லண்டன் பத்திரிக்கையில் புகழ்பெற்ற வழக்குகளின் அடிப்படையில் இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த வழக்கு இடம்பெற்றது.நம் இந்திய ஒன்றியத்தின் சட்ட புத்தகத்தில் "ஹிந்து குடும்ப சட்டத்திலும்" இடம்பெற்றிருக்கிறது.

அந்த திராவிடியன் ஸ்கூல் ஆப் லா-வின் வழியே தான் பிற்காலத்தில் திராவிட இயக்க முன்னோடிகளும்,பெரியாரும் திராவிடர் கழக அமைப்பை நிறுவி தமிழர்களின் நலன்களுக்காக தங்களின் பெரும் உழைப்பை செலுத்தினார்கள்.

இந்த வரலாற்றை எல்லாம் அறியாமல் திராவிடத்தால் வீழ்ந்தோம் என அறியாமையால் அலறும்,திராவிடம் என்ற சொல்லே கிடையாது என உளரும் கும்பலுக்குமான பதில் இதுதான்...

👍👍👍
-  கட்செவி வழியாக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக