புதன், 2 செப்டம்பர், 2020

திராவிட இயக்கங்களில் பார்ப்பனர்களின் பங்கு

#திராவிட_இயக்கங்களில் #பிராமணர்களின்_பங்கு.

வ.ரா.1889-1951

திங்களூரில் ஆச்சாரமான ஐய்யங்கார் குடும்பத்தில் பிறந்தவர்.
முழு பெயர் #வரதராஜ_ராமசாமி.

காந்தி காங்கிரஸ் மேல் பற்று கொண்டவர். ஒருகட்டத்தில் 
இந்த நாட்டின் சாபக்கேடு சாதி என்று உணர்ந்தார். சாதிக்கு எதிராக தன் வாழ்வை அர்ப்பணித்தார்.
குல ஆச்சாரங்களை கைவிட்டார்.

குறிப்பாக #பூணுலைஅறுத்து_எறிந்தார்.
குடுமியை துறந்தார்.

சாகும் வரை சடங்குகளுக்கும் 
மூட பழக்கங்களுக்கும் 
எதிராக செயல்பட்டார். பெரியார் மீது பற்று கொண்டார். திராவிட இயக்கங்களை தூக்கி சுமந்தார்.

ஏ.எஸ்.கே. 1907-1978

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஆச்சாரமான ஐயங்கார் குடும்பத்தில் பெங்களூரில் பிறந்தார்.

1934ல் சென்னை வந்தவருக்கு சிங்காரவேலருடனும் 
தந்தை பெரியாருடனும் நட்பு ஏற்ப்பட்டது.

பொதுஉடமை சிந்தனை உடைய இவர் சாதிகொடுமைகள்
ஏற்ற தாழ்வுகளையும் கண்டு 
மனம் குமுறினார்.

விளைவாக பெரியாருடன் கைகோர்த்தார்.

#ஆவியூர்சீனிவாசகிருஸ்ணமாச்சாரி 
எனும் தன் பெயரை 
ஏஎஸ்கே என மாற்றிக்கொண்டார்.

இவருடைய ‘பகுத்தறிவின் சிகரம் பெரியார்’ என்னும் நூல் இந்திய தத்துவ ஞான மரபில் பெரியாரின் இடம் எப்படி மறுதலிக்க முடியாதது 
என்பதை விளக்க கூடியது.

ஏஎஸ்கே அண்ணன்கள் துரைசாமி 
சாதி கடந்த மணமும், 
பார்த்தசாரதி மதம் கடந்த மணமும் செய்து கொண்டனர்.

ஏஎஸ்கே மணம் செய்து கொள்ளாதவர்.
                   #ந_சுப்பிரமணியன்.1915-2013

சிதம்பரத்தில் ஆச்சாரியமான ஐய்யங்கார் குடும்பத்தில் பிறந்தார்.

சாதிக்கொடுமைகள் உண்டாக்கிய கோபம் தான் இவரையும் 
திராவிட இயக்கம் சாதி ஒழிப்பு பிரச்சாரத்தில் சேர்த்தது.

தந்தை பெரியார் ஆசிரியர் வீரமணி மீது மரியாதை கொண்டு இருந்தார்.

தான் இறந்தால் தன் உடலுக்கு அருகில் தானும் வீரமணியும் உள்ள படத்தை வைக்ககோரினார்.

#விபி_இராமன்.1932-1991

சென்னையில் ஆச்சாரமான ஐயர் குடும்பத்தில் பிறந்தவர் 

#வேங்கடபட்டாபிராமன் சட்டவல்லுனர் திராவிட இயக்கத்தின் பால் கொண்ட நாட்டமும் மாநிலங்கள் உரிமையில் கொண்டிருந்த அக்கரையும் 
திமுகவில் இணைத்தது.

திமுகவுக்கான சாசனத்தை உருவாக்க பேரறிஞர்அண்ணா தேர்ந்தேடுத்த மூவர் குழுவில் 
ஈ.வெ.கி.சம்பத், இரா.செழியன், இவர்களுடன் வி.பி.ராமனும் 
இணைந்து பணி செய்தார்.
                ***
#சின்னக்குத்தூசி.1934-2011

திருவாரூர் ஆச்சாரமான அய்யர் குடும்பத்தில் பிறந்தார்.

இயற்பெயர் #ரா_தியாகராஜன் இளமையிலே சாதிக்கு எதிரான உணர்வை பெற்றவர்.

திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியின் தொடக்க ஆண்டில் 
படித்த மாணவர்களில் ஒருவர்.

பெரியாரியத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவர். குத்தூசியின் எழுத்தால் கவரப்பட்டு தன் பெயரை சின்ன குத்தூசி என்று மாற்றிக்கொண்டார்.

பின்னாளில் திமுகவின் இதழியல் குரல் ஆனார். முரசொலியில் இவரின் எழுத்துக்களுக்கு தனி வாசகர் வட்டமே இருந்தது.
                 *****
நன்றி: திரு.Napa #fb Lakshmanan SK

m.facebook.com/story.php?stor…

#பெரியார்

(பிராமணர் என்ற சொல்லில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் பார்ப்பனர்கள் எதார்த்த நிலையை புரிந்து கொண்டு இவர்களைப் போல வாழ்ந்தால் நாம் மதித்து ஏற்றுக் கொள்வோம். எப்படியிருப்பினும் திராவிடர் கழகத்தில் உறுப்பினர் ஆக முடியாது. Isai Inban)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக