ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

திராவிடம் என்ற சொல்லுக்கு பெரியார் தந்தை அல்ல! மகன்!

 

 .திருமாவேலன்

இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்என்ற தலைப்பில் பத்திரிகையாளர் .திருமாவேலன் பெரியார் பற்றி எழுதி இருக்கும் நூல் விரைவில் வெளியாகிறதுதற்போதைய தமிழ்நாடு சூழலில் திராவிடம்தமிழ் தொடர்பான பல தத்துவார்த்த விவாதங்களில் இணையும் முகமாக உருவாகும் இந்நூல் பலத்த விமர்சனங்களையும் பாராட்டுகளையும் ஒருசேரப் பெறக்கூடும்நூலாசிரியரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

ஏன் இந்த நூல்?

தந்தை பெரியார் குறித்தும் திராவிடர் கழகம் குறித்தும்திராவிட இயக்கத்தின் மூலத்தத்துவம் குறித்தும் சில தப்பான பாடங்களை தமிழ்த்தேசியம் என்ற பெயரால் சிலர் செய்துவரும் அவதூறுகளுக்கான அடிப்படை பதில் தான் இந்தப் புத்தகம்பெரியாருக்கு தமிழைப் பிடிக்காதுஅவர் தெலுங்கர்களுக்கு சார்பானவர்மொழிவாரி மாகாணத்துக்கு எதிராக இருந்தார்ஏனென்றால் அவர் தெலுங்கர் என்றெல்லாம் இந்தச் சிலர் வாய்க்கு வந்ததை எல்லாம் வரலாறாகத் திரித்து எழுதியும் பேசியும் வந்தார்கள்வருகிறார்கள்இந்த அரைகுறைத்தனக் குற்றச்சாட்டுகளை ஜாதியவாதமதவாத சக்திகள் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் அதிகமாகப் பயன்படுத்திக் கொண்ட அவலம் நடக்கிறது.

திராவிடத்தை எதிர்க்க தமிழாயுதம் எடுத்து வருகிறார்கள்அதாவதுதிராவிடத்தை எதிர்க்கும் ஆரியத்துக்கு ஆயுதம் தயாரித்துத் தரும் வேலையைத் தான் இந்த தமிழ்த் தேசிய சக்திகள் செய்து வருகிறார்கள்அதற்கான பதிலை மனதளவில் நான் தேடித் தெரிந்து கொள்ள நினைத்தேன், 1995ஆம் ஆண்டு 'திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற பெங்களுரு குணாவின் நூல் வந்ததுஅதில் இருந்து செய்திகளைச் சேகரிக்கத் தொடங்கினேன்பின்னர்பெ.மணியரசன்மிகக்கடுமையாக பெரியாரை விமர்சிக்கத் தொடங்கினார்குணாமணியரசன் இருவரும் ஓரளவாவதுபெரியாரைக் தெரிந்து கொண்டு விமர்சித்தார்கள்அதன்பிறகு சில சில்லுண்டிகள் உருவானார்கள்இவர்களுக்கு பெரியார் தாடி வைத்திருப்பார் என்பதைத் தவிர எதுவும் தெரியாதுஇந்தக் குருட்டுக் கூட்டம்இணையத்தளங்களில் குருட்டாட்டம் ஆடி வரும் எரிச்சல் அதிகமானதால் இப்படி ஒரு நூல் காலத்தின் தேவையாக எனக்குப் பட்டது.

1600 பக்கங்கள் கொண்ட இந்நூலை உருவாக்கிய அனுபவம்?

புத்தகமாக எழுதுவதற்காக அல்லமுதலில் என்னளவில் தெளிவு பெற வேண்டும் என்பதற்காகவே நான் இதற்கான பதில்களைத் தேடத் தொடங்கினேன்குடி அரசுவிடுதலை ஆகிய இதழ்களை முழுமையாகப் படிப்பது என்று முடிவெடுத்தேன்சுமார் 20 ஆண்டுகாலம் (1925-45) வெளியானது குடி அரசு. 1937 இல் தொடங்கப்பட்ட விடுதலை நாளிதழை பெரியார் மறைந்த 1973 வரையில் பார்க்க வேண்டும் எனத் திட்டமிட்டேன்.

2000 ஆம் ஆண்டில் இதற்கான திட்டமிடுதல் தொடங்கி அது 2004 வரைக்கும்தான் படிக்க வாய்ப்பு கிடைத்ததுஇக்காலகட்டத்தில் 'குடி அரசுஇதழை முழுமையாக முடித்தேன்வார இதழ் என்பதால் அது கொஞ்சம் இலகுவாய் இருந்தது. 2005 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் இப்பணியை என்னால் மேற்கொள்ள முடியாத அளவுக்கு பணிச்சூழல் இருந்ததுமீண்டும் 2011 இல் தொடங்கினேன்கொஞ்சம் சுணக்கமான மனநிலை இருந்தது தொடக்கத்தில்ஆனால் 2014ஆம் ஆண்டு மத்தியில் நடந்த ஆட்சி மாற்றம்அது இந்தியச் சமூகத்தில் எதிர்காலத்தில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்களை உணர்ந்த நிலையில் இப்பணியை எவ்வளவு சீக்கிரம் விரைந்து முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடித்தாக வேண்டும் என்ற பதற்றத்தை என்னுள் ஏற்படுத்தியது. 1937 முதல் 1973 வரையிலான விடுதலையை முழுமையாகப் பார்வையிட்டு குறிப்புகள் எடுத்தேன்எனது பத்திரிகை வேலையை பார்த்துக் கொண்டே இந்த பணியைப் பார்ப்பது என்பது சுலபமாக இல்லை.

இது இலகுவாய் முடியும் வேலையாக இல்லை . இதற்கு இடையில்தான், 'ஆதிக்க ஜாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?' என்ற புத்தகத்தை முடித்துவிடலாம் என்று மனம் மாறியதுபெரியார் மீது தலித் சிந்தனையாளர்கள் வைக்கும் விமர்ச னத்துக்கான பதிலாக அது எழுதப்பட்டதுஅதனால் 2015-2017 அதில் போனது. 2018ஆம் ஆண்டு அந்த நூல் (382 பக்கங்கள்வெளியானதுஅது வெளியானதும்ஏற்பட்ட கூடுதல் உற்சாகம் இந்தப் புத்தகத்தை முடிக்கும் முயற்சியை விரைவுபடுத்தியதுஇப்படியாக 2021ஆம் ஆண்டையும் தொட்டு விட்டேன்.'

இத்தனை பக்கம் நீண்டு சென்றது எதனால்?

பெரியாரது வாழ்க்கையின் நீட்சிஅவரது உழைப்பின் நீட்சி தான் இந்தப் புத்தகத்தின் பக்கங்களையும் நீட்டித்துவிட்டதுகுடி அரசுவார இதழ், 'விடுதலைநாளிதழ் ஆகிய இரண்டையும் முழுமையாகப்பார்த்து விட்டு எழுத வேண்டும் என்று நினைத்தேன்அப்படி பார்க்க முடியும் போது இந்தப் புத்தகம் வெளியானால் போதும் என்பது தான் என்னுடைய எண்ணமாக இருந்தது.

இருபது ஆண்டுகள் வெளியாகி இருக்கிறது. 'குடி அரசு. 'விடுதலை'யில் நான் எடுத்துக் கொண்ட காலகட்டமானது சுமார் 36 ஆண்டுகள்எத்தனை பக்கங்கள் என்று கணக்குப் போட்டுப் பாருங்கள்ஒரு நாளைக்கு நான்கு பக்கம்ஓராண்டுக்கு 1460 பக்கம்என்றால் 36 ஆண்டுக்கு 52,560 பக்கங்கள் என்று தோராயமாகச் சொல்லலாம் (ஒரு சில மாதங்களின் விடுதலை இதழ் கிடைக்க வில்லை ). இவற்றில் இருந்து கிடைக்கும் தகவல்கள்மலையளவு இருந்தனஇவை அனைத்தையும் சேர்க்கச் சேர்க்க அது பக்கத்தை கூட்டிவிட்டது.

உதாரணத்துக்குமொழி வாரி மாகாணங்கள் பிரச்சினையை மட்டுமே பார்த்தால் அது 1930 முதல் 1963 வரையிலான பிரச்சினை. 'சென்னை எங்கே இருந்தால் என்னதிராவிட நாட்டுக்குள் தானே இருக்கிறது?' என்று பெரியார் சொன்னதாக .பொ.சிஒரு வரியில் சொல்லிவிட்டுப் போய்விட்டார்ஆனால் இந்த 'தமிழ்நாடுஉருவாக்கப்பட பெரியார் உழைத்த 25 ஆண்டு கால உழைப்பைச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறதுஅதனால் தான் புத்தகம் நீண்டு விட்டது.

'உனது தமிழ் இலக்கியத்தில் ஆரியம் புகாத இலக்கியம் எது?' என்று பெரியார் கேட்டுவிட்டுப் போய்விட்டார்தொல்காப்பியம் தொடங்கி தமிழ் இலக்கியம் அனைத்திலும் எங்கு எப்போது எப்படி ஆரியம் புகுந்ததுபுகுத்தப்பட்டது என்பதைச் சொல்லி பெரியாரின் குற்றச்சாட்டை நிரூபிக்கும் தேவை ஏற்படுகிறதுஅதனால் தான் இந்தப் புத்தகம் நீண்டு விட்டது.

இதற்கான செய்திகளை ஆதாரங்களைத் தேடிய கதைஉதாரணமாகநீண்டநாள் தேடி கடைசியில் கிடைத்த 'யுரேகாஆதாரம் ஏதும் உண்டா?

யாராலும் கண்டுபிடிக்க முடியாத புதையலை நான் கண்டு பிடித்துவிடவில்லைபெரியார் தான் வாழ்ந்த காலத்திலேயே தனது சிந்தனைகள் மொத்தத்தையும் புத்தகங்களாக ஆக்கிவிட்டுப் போய்விட்டார்அவர் நடத்திய 'விடுதலைதான் அவரது நாட்குறிப்புஇதனை முழுமையாகப் பார்த்தாலே

போதும் என்று நினைத்தேன்இவை அனைத்தும் சென்னை பெரியார் திடல் நூலகத்தில் முழுப்பாதுகாப்போடு இருக்கிறது.

இந்தப் புத்தகத்துக்கான களம் என்பது பெரியார் திடல் தான்ஆதாரங்களுக்காக அலையவில்லை . ஒரே இடத்தில்தான் இருக்கிறது.

யுரேகா’ போல ஆதாரம் உண்டா என்றால்இந்தப் புத்தகமே பலருக்கும் ‘யுரேகா போலத் தான் இருக்கும்.

பெரியார் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையா எனத் தேடிய நான்பெரியாரைப் படிக்கப் படிக்க மேலும் மேலும் அவர் மீது மரியாதை அதிகமாகியே வந்ததுஅதுதான் உண்மை!

பெரியாரைத் தெலுங்கர் என்று குற்றம் சாட்டும் குறுமதியாளர்களே அதிர்ச்சி அடையும் தகவல்கள் இதில் உள்ளன.

1941ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்பெஜவாடா போனார் பெரியார்அவரைக் கடுமையாக ஆந்திரர்கள் எதிர்த்தார்கள்ஆந்திர வைரிஆந்திரத் துரோகி என்று கண்டித்து முழக்கம் எழுப்பினார்கள். ‘ஆந்திர தேசத் துரோகி ராமசாமி வருகிறார்மறுபடியும் தமிழ் மாயையில் விழ வேண்டாம்‘ என்று துண்டு வெளியீடுகளை அச்சடித்து வழங்கினார்கள்அவர் தமிழ் சம்பிரதாயத்தில் பட்டு தமிழ் மாதாவைப் பூஜிப்பவராக இருக்கிறார்தெலுங்கு ஜில்லாக்களை திராவிட ஸ்தானமென்ற பேரில் தமிழ் ஜாதியார்களின் ஆதிக்கத்திற்கு உட்படுத்த சங்கல்பம் செய்து கொண்டிருக்கிறார்பிராமணர்கள் பரம துன்மார்க்கர் களென்றும் கூறி நமக்குள்ளேயே பேதம் கற்பித்து வருகிறார்உத்தியோகங்களனைத்திலும் தெலுங்கு பிராமணரல்லாதார்களுக்கு ஒன்றும் கிடைக்காமல் செய்து ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் எல்லா வற்றையும் தமிழ் பிராமணரல்லாதாராகிய முதலியார்கள்பிள்ளை களாகியவர்களுக்கு ஆக்கி வைத்து வருகிறார்.

ஜஸ்டிஸ் என்ற பெயரில் ஆந்திர தேசத்துக்கு அநியாயம் செய்துவரும் வேஷதாரிகள் சங்கமாகிய தென்னிந்திய நல உரிமைச் சங்கமென்னும் இயக்கத்தின் தலைவராக இந்த மகா துஷ்ட நாயக்கர் இருந்து வருகிறார். ....... என்ற அந்தத் துண்டறிக்கை மிக நீளமானதுஆந்திர மாதாவிற்கு ஜயம் உண்டாகுகஆந்திர மாதாதுரோகிகளுக்கு அபஜயம் கூடுக - என்று அது முடியும்பாண்டுரங்க கேசவராவ் என்ற ஆந்திரா பார்லிமெண்டரி தலைவர் அச்சடித்த துண்டறிக்கை இது. (விடுதலை, 12.2.1941)

இதையெல்லாம் பொருட்படுத்தாமல் பெரியார்ஆந்திர சுற்றுப்பயணம் முடித்துவிட்டு சென்னை திரும்பினார்இந்த நிலையில் பாண்டுரங்க கேசவராவ் ஒரு மிரட்டல் கடிதம் அனுப்பி வைத்தார். ‘மகிஷா சூரமர்த்தினி பலி கேட்பாள்’ என்று சொல்கிறது அந்தக் கடிதம்ஆறு மாதத்தில் உன் குடும்பத்தில் மகிஷா சூர மர்த்தினி பலி கேட்பாள் என்றும் ஆந்திர ரத்தம் உன்னிடம் இல்லையா என்றும்திராவிட நாடு பிரிவினை ஆந்திரர்க்கு எதிரானது என்றும் அதில் கூறப்பட்டதுஇந்தக் கடிதம் முன்னாள் முதல்வர் ரெட்டி நாயுடு குடும்பத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதுஇவர் நீதிக்கட்சியைச் சேர்ந்தவர், (விடுதலை 13.2.1941)

அதாவது பெரியார்யார் என்பதை 1940ஆம் ஆண்டே ஆந்திரர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள்ஆனால்தமிழர்கள் சிலருக்குத்தான் 2021ஆம் ஆண்டிலும் தெரியவில்லை.

பெரியாருடன் பயணித்த ஆளுமைகள் பத்து என்று ஒரு கட்டுரை உள்ளதாகப் பார்த்தேன்யார் யார்?

கப்பலோட்டிய தமிழன் ..சி... தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகள்தமிழ்த் தென்றல் திருவி.., நாவலர் சோமசுந்தர பாரதியார்முத்தமிழ்க்காவலர் கி..பெ.விசுவநாதம்புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்திராவிட மொழி நூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர்தனித்தமிழ் பேராசிரியர் இலக்குவனார்தனித்தமிழ் அரிமா அண்ணல் தங்கோதவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆகியோர் தான் அந்த பத்துப் பேர்இவர்களோடு பெரியாரின் பயணம் விரிவாக உள்ளது.

இவை போக திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் முதல் நன்னன் வரையிலான அய்ம்பது தமிழ்ப்புலவர்களுக்கும் பெரியாருக்குமான தொடர்பு குறித்த வரலாற்றுக் குறிப்புகள் உள்ளனதான் வாழ்ந்த காலத்துத் தமிழ்ப்புலவர்கள் அனைவரோடும் அவர் இணைந்து இருந்துள்ளார்அவர்களும் தங்களவராகப் பெரியாரை மதித்துப் போற்றி இருக்கிறார்கள்.

உண்மையாகவே பெரியாருக்கு தமிழ் இலக்கியங்கள் மீது

பற்று இல்லையா?

பெரியார் விரும்பியது ஆரியம் விலக்கிய தமிழ்’ உண்மையான தமிழ்ப்பற்று இருப்பதால் தான் தூய்மையான தமிழ்ச்சிந்தனையை தமிழில் எதிர்பார்த்தார்.

இராமாயணத்தை கொளுத்தச் சொன்னார்சங்க இலக்கியங்களை அல்லஅவர் கம்பரை எதிர்த்தார்வள்ளுவரை அல்ல. 'இராமாயணம் கொளுத்தப்பட்ட இடத்தில் திருக்குறளை வைக்க வேண்டும் என்றார்வள்ளுவரைத் தாண்டிய சிந்தனை பாரதிதாசனிடம் இருக்கிறதுஎனவே புரட்சிக்கவிஞரை அந்த இடத்தில் வைக்க வேண்டும் என்றார். 'தமிழில் இருந்து சைவத்தையும் ஆரியத்தையும் போக்கிவிட்டால் நம்மை அறியாமல் நமக்கு பழந்தமிழ் கிடைத்துவிடும்என்றார்ஆரியமும் சமயமும் தமிழரை ஆக்கிரமிக்க தமிழை கபளீகரம் செய்துவிட்டது என்று பெரியார் நினைத்தார்அதனாலேயே ஆரியச் சிந்தனை வயப்பட்ட தமிழ் இலக்கியத்தை விமர்சித்தார்.

.வே.சா.வையும் வையாபுரியாரையும் தான் அவர் விமர்சித்தாரே தவிரபாவாணரையும் இலக்குவனாரையும் அல்லஇந்த நுட்பத்தை அனைவரும் உணர வேண்டும்.

கபிலர்பாய்ச்சலூரார்வள்ளுவர்அவ்வை ஆகியோரைப் போற்றினார்கம்பர்சேக்கிழார்அருணகிரிநாதரை விமர்சித்தார்இந்த பாட வேறுபாடு உணராதவர் தான் பெரியாரை தமிழ் இலக்கியத்துக்கு எதிரியாகப் பார்ப்பார்கள்.

இந்த நூல் வாசிப்பவர்கள் இதன் மூலம் எதைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று கருதுகிறீர்கள்?

உண்மைப் பெரியாரைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்அவர் விரும்பியது ஆரியம் விலக்கிய தமிழ்ஆரியம் உள்ளடக்கிய தமிழை அவர் விமர்சித்தார்தமிழ் இலக்கியத்தை பகுத்தறிவு விமர்சன நெறிப் பார்வையுடன் பார்த்தார்இது ஒரு விமர்சனப் பார்வைஒப்பியல் நோக்கு போல இது பகுத்தறிவு நோக்கு.

அவரது சமூகநீதி என்பது தமிழன் அனைத்து இடங்களையும் கைப்பற்றி முன்னேறி விட வேண்டும் என்பதற்கான கதவுகோட்டை முதல் கோவில் வரை உள்ளே நுழைந்துவிடவேண்டும் தமிழன் என்று நினைத்தார்அதற்கான திட்டம் தான் சமூகநீதிதமிழ்நாடு தமிழருக்கே என்று  1938 இல் தொடங்கியவர் அவர்இறுதிவரை அந்த முழக்கத்தை விடவில்லைவாக்கு அரசியலில் புரண்டும் கிடக்கும் சிலர் தங்களை மாவீரர்களாகவும்பெரியாரை துரோகியாகவும் சித்தரிக்கும் அளவுக்கு இந்தத் தமிழ்ச்சமூகத்தின் சிந்தனையை சில டாலர் கரன்சி கரையான்கள் செல்லரிக்க விடக்கூடாது என்ற ஆற்றாமையின் விளைவு தான் இந்த நூல்!

பெரியாரின் எழுத்துகள் திராவிடர் கழகம்வே.ஆனைமுத்துபெரியார் திராவிடர் கழகம் ஆகியோரின் தொகுப்புகளாக உள்ளன.

இந்நூல் எப்படி வேறுபட்டது?

இது பெரியார் சிந்தனைகளின் தொகுப்பு நூல் அல்லகுடி அரசுவிடுதலை இதழ்களின் தொகுப்பும் பதிப்பும் அல்லபெரியார் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் மறுப்பு நூல் இது.

திராவிடம் என்ற சொல்லுக்கு பெரியார் தந்தையல்லமகன்தான் என்பதைச்சொல்லி இருக்கிறேன்பெரியாருக்கு முன்னாலே திராவிடம் என்பது மொழிஇனஇடச் சொல்லாக அடையாளப்படுத்தப்பட்டு வந்திருப்பதை பல்வேறு அகராதிகள் மூலமாக எடுத்துக் காட்டி இருக்கிறேன்பண்டித அயோத்திதாசர்திராவிடம் என்ற சொல்லை எந்த வகையில் கையாண்டார் என்பதை அவரது ‘தமிழன்’ இதழின் பக்கங்கள் மூலமாகச் சொல்லி இருக்கிறேன்.

1930-1945 காலகட்டத்தில் தமிழின எழுச்சிக்கு பெரியாரின் பங்களிப்புகளை முழுமையாக அறியலாம். ‘தமிழ்த்தேசியம்‘ என்பதற்கு சோழகந்த சச்சிதாநந்தன் ஆற்றிய பங்களிப்பு இன்றைய தமிழ்த்தேசிய மேதைகள் அறியமாட்டார்கள்அதே போல் இவர்களுக்கு பண்டித எஸ்.எஸ்.ஆனந்தரைத் தெரியாதுஇவர்கள் ‘விடுதலையில் அதிகமாக எழுதி உள்ளார்கள்இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்பெரியார் ‘தமிழிய ‘மே பேசினார் என்பதையும்அனைத்துத் துறைகளிலும் தமிழே இருக்க வேண்டும் என்பது குறித்து எழுதியதையும் விரிவாக எடுத்துக் காட்டி இருக்கிறேன்.

இறுதியாகதமிழீழமும் தந்தைப் பெரியாரும் என்ற கட்டுரை உள்ளதுதனித்தமிழீழம் காண அறவழியில் முயற்சித்த தந்தை செல்வாவையும்ஆயுதவழியில் அன்று போராடிய சத்தியசீலனையும் (இவரது அமைப்பில் தான் மாணவர் அமைப்பில் புலித்தலைவர் பிரபாகரன் இருந்தார்நேரில் சந்தித்து தனது ஆதரவை வழங்கியவர் பெரியார் என்பதையும் சொல்லி இருக்கிறேன்.

நன்றி: 'அந்திமழை', செப்டம்பர் 2021

புதன், 21 ஏப்ரல், 2021

தமிழின் திரிபே திராவிடம்

"திராவிடம்" 
என்பது தமிழின் திரிபே என்றால், திரிபை ஏன் ஏற்க வேண்டும் "தமிழ்" என்பதைத்தானே ஏற்க வேண்டும், நல்ல பால் இருக்க  திரிந்த பாலை புத்தியுள்ளவர் அருந்துவரா, அருந்தச் சொல்வரா?
எனவே திராவிடம் என்று கொம்பு சுத்த வேண்டாம், தமிழ் என்றே கூறுங்கள்...

என்று 'சே.ந.சீ' எனும் நண்பர் என்னைக் கேட்டுக் கொண்டார்.

ஒரு திராவிடனாகிய நான் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

பல்வேறு மொழியியல் அறிஞர்களின் ஆய்வின்படி  "வளமான தமிழ் மொழியே கூட ஒரு திராவிட மொழிக் குடும்பத்தின் கிளை மொழியே" எனும் போது 

திராவிடம்' தமிழ்ச்சொல்லா ?
என்று தொடர்ந்து கேட்பது "அறிவீனம்"
அல்லவா ?

பெரியார் முன்னெடுத்த திராவிட இயக்கம், போராடி வென்றெடுத்த

இன உணர்வு ,
மொழியுணர்வு
சுயமரியாதை, 
சமூக நீதி
பகுத்தறிவு, 
மத எதிர்ப்பு கொள்கை,
சாதிய எதிர்ப்பு, 
பெண் கல்வி,
பெண்கள் முன்னேற்றம்,
தேவதாசி முறையையும், குழந்தைகள் திருமணத்தையும் தடைசெய்தது,

போன்றவைகளைப் பற்றியெல்லாம் பேசமாட்டோம், வெறும் 
'திராவிடம்' 
என்ற சொல்லை மட்டுமே தூக்கிக் கொண்டு அலைவோம், அலைவதோடு மட்டுமின்றி, பிறரையும் அதையே நம்ப வைப்போம் என்ற உறுதியோடு போலி தமிழ் தேசியவியாதிகள் நீங்களே  இருக்கும் போது....

பெரியாரைப் படித்து, அவர் படிக்கச் சொன்ன நூல்களையெல்லாம் அறிவுக் கண் கொண்டு ஆராய்ந்தறிந்து படித்துக் கொண்டிருக்கும், திராவிட இரவிச்சந்திரன் அதை ஆதாரங்களுடன் மறுப்பது தானே சிறப்பு.

முதலில் தமிழ் என்ற சொல்லே திரி சொல் என நிரூபிக்கிறேன்..

'தமிழ்' என்ற சொல்லின் வேர்ச் சொல்  எது?
 தாய், தம்பி, தமக்கை, தங்கை , தந்தை போன்ற சொற்கள் எந்த வழிமுறையில் வந்ததோ, அதே வழியில் தான் 'தமிழும்' வந்தது.

'தம்' என்பது படர்க்கையை குறிக்கும் என்பது தொல்காப்பியன் கூறும் இலக்கணம்.

தம் + ஆய் = தாய்
தம் + ஐயன் = தமையன்
தம் + அக்கை = தமக்கை
தம் + கை = தங்கை
தம் + எந்தை = தந்தை

அதுபோல 

தம் + மொழி = தமிழ்

ஹஹ்ஹஹ்ஹா...

தம்+மொழி எப்படி அய்யா தமிழாகும்....
என அவசரப்பட வேண்டாம் 
'முன் +தெரி+ கொட்டைகளே'...அதாவது முந்திரிக் கொட்டைகளே!

தம்+மொழி = தம்மொழி > தமிழி > தமிழ் என நிலைத்தது.

அதுபோல் 'திராவிடம்' என்ற சொல்லும் நீங்கள் உளறுவது போல சமஸ்கிருத சொல்லல்ல ! அதுவும்
தமிழ்ச்சொல்லே!

தமிழம்- திரமிளம்-திராவிடம் என்று திரிபாயிற்று.
இதை மறுப்போர் ஆதாரங்களுடன் மறுத்தால் நான் பதிலளிக்கிறேன்.

'கூகுளை' மட்டும் தூக்கிக் கொண்டு வந்து ஆதாரம் எனக் காட்டவேண்டாம்.

இப்போது கூறுங்கள்...

நல்ல பால் இருக்க  திரிந்த பாலை புத்தியற்று அருந்துபவர், நீங்களா, நானா ?

ஆரோக்கியமான விவாதத்திற்கு காத்திருக்கும்....

பெரியாரின் பேரன் நான்.
- முகநூல் பக்கம், 22.4.20

திங்கள், 22 மார்ச், 2021

திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லே!

திராவிடம்

வியாழன், 28 ஜனவரி, 2021

திராவிடர் என்று ஏன் பெயர் வைக்க வேண்டியதாயிற்று?



 

தலைவர் அவர்களே! மாணவர்களே!
இவ்வூர் திராவிடர் கழகத்தின் சார்பாக நான் பேச வேண்டுமென்று சில மாணவர்களால் விரும்பப்பட்டேன்; அதுபற்றி மகிழ்ச்சியோடு பேச ஒருப்பட்டேன். எனினும் என்ன பேசுவது என்பது பற்றி நான் இதுவரைகூடச் சிந்திக்க வில்லை. மாணவர்களாகிய உங்களைப் பார்த்தால் நீங்கள் பெரிதும் 15 வயது 18 வயது உடையவர்களாகவே காண் கிறீர்கள்; உங்களுக்குப் பயன்படத்தக்கதும் பொருத்த மானதுமாக பேச வேண்டுமென்றால் மிகவும் கவனத்தோடு பேச வேண்டியிருக்கிறது. ஆனால், படிக்கும் சிறு குழந்தை களுக்குப் பாடப் படிப்பைத் தவிர, வேறு பேச்சு என்னத்திற்கு? என்ற காலம் மலையேறிவிட்டது. ஏனெனில், படிப்பே மோசமானதாக இருப்பதால் அப் படிப்பைத் திருத்துவதற்கு ஆவது உங்களிடத்தில் உணர்ச்சி தோன்ற வேறு பேச்சு அவசியமாகி விட்டது.
உங்கள் படிப்பின் தன்மை
முதலாவது உங்கள் படிப்புக்கு லட்சியமே இல்லை, லட்சியமற்ற படிப்பு என்பது ஒருபுறம் இருந்தாலும், என்ன படிப்புப் படிப்பது என்பது பள்ளிக்கூடத்தாருக்கும், ஆசிரியர் களுக்கும்கூட சம்பந்தமற்றதாகும்; இதனால் இப்படிப்பினால் ஏற்படும் பயன் என்ன என்றாலோ அதுவும் தானாக ஏதாவது ஏற்பட்டால் அதுதான் பயனே ஒழிய மற்றபடி நிச்சயமான பயன் என்ன ஏற்படும் என்று கருதுவதற்கில்லை. படிப்பது என்பது வெறும் பேச்சளவிற்கு அறிவுக்காக, அறிவு விருத்திக்காக என்று சொல்லப் படுகிறது. ஆனால், படித்தவர்களுக்கு அறிவு விருத்தி யாகிறதா? படித்தவர்கள் அறிவாளிகளாக இருக்கிறார்களா என்றால், ஆம் என்று சொல்ல முடிவதில்லை. இந்த அறிவு என்பது கூட ஒரு பொது அருத்தத்திற்குக் கட்டுப்பட்டதாய் இல் லாமல் எதைப் படித்தானோ அதில் அறிவுள்ளவர்கள் என்றுதான் சொல்லக் கூடியதாய் இருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட படிப்பில் அதா வது படித்த படிப்பில்; அறிவு ஆவது சரியாக இருக்கிறதா என்றால் அதுகூடச் சரியாக இல்லாமல் ஒன்றுக்கொன்று முரணான அறிவு ஏற்படும் படியாக இரண்டு கருத்துள்ள அதாவது முரண் கருத்துள்ள படிப்பேதான் கொடுக்கப்படு கின்றது. எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் மாணவர் களுக்கு அறிவுப் படிப்பும், மூடநம்பிக்கைப் படிப்பும் இரண்டும் கொண்டவர் களுமாகி விடுகிறார்கள். மாண வர்கள் மாத்திரமல்லாமல் படிப்பை முடித்த பெரியவர்களும், உபாத்தியாயர்களுங்கூட மூட நம்பிக்கையுடையவர் களா கவே இருக்க வேண்டிய வர்களா கிறார்கள். உதாரணமாக, சரித்திரம், பூகோளம், விஞ்ஞானம், வானசாஸ்திரம், உடற் கூறு, உலோக விஷயம் முதலியவைகளில் படித்துத் தேறியவர்களில் யாருக்காவது இது சம்பந்தமான மூட நம்பிக்கைக் கொள்கை இல்லாத சரியான அறிவு இருக்கிறது என்று சொல்லமுடியுமா? சரித்திரம் படித்தவன் இராமாயண பாரதம் முதலிய புராணக் கதையும், சரித்திரத்தில் சேர்த்துப் படித்து, இராமனும் பரதனும் இந்த நாட்டை ஆண்டான் என்றும், அது இன்ன காலம் என்றும், இந்த நாட்டுக்குப் பாரததேசம் என்பது பெயர் என்றும் கருதிக்கொண்டு அனுபவத்திலும் அதற்கு ஏற்றவண்ணம் நடந்து பாரதமாதாவை வணங்கிக் கொண்டு திரிகிறான். நிஜமாக நடந்த சரித்திர உண்மைகள் நிஜமான நபர்கள் அதன் காலங்கள் ஆகியவை சரித்திரம் படித்தவர்கள் என்பவர் களுக்கு சரியாகத் தெரிவதில்லை. நடவாததும், நடந்ததாக நம்ப முடியாததும், அதற்கும் காலம் நிர்ணயிக்க முடியாதது மான அறிவுக்குப் பொருந்தாத காரியங்களுக்கு அதிக விபரம் தெரிகிறது. ஆனால் நடந்தவைகளுக்குச் சரியான விபரம் தெரிவ தில்லை. சேர, சோழ,பாண்டியர், நாயக்கர் ஆகியவர் களும், அவர்களது வாரிசு, அண்ணன் தம்பிகளும், மனைவி மக்களும் ஆண்ட நாட்டெல்லை களும், முறைகளும், முடிவுகளும் சரித்திரம் படித்த 100-க்கு 90 மாணவர்களுக்கு விவரம் சொல்லத் தெரியாது. தசர தனுக்கும், ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும், பாண்டவருக்கும், துரியோதனாதிகளுக்கும், இரணியனுக்கும், பலிச் சக்கர வர்த்திக்கும், மனுநீதி கண்ட சோழனுக்கும் அண்ணன் தம்பிமார்கள், மனைவி மக்கள்கள், அவர்கள் கணவர்கள் இவ்வளவு என்று 100-க்கு 90 மாணவர் களுக்குத் தெரியும். பூகோளம் படித்தவனுக்கு உலகப் பரப்பு, அதன் பிரிவுகள் சரியாக ஞாபகத்தில் இராது. ஆனால் இல்லாததும் இருக்க முடியாததுமான மேல் ஏழுலோகம், கீழ் ஏழுலோகம், அதன் வர்ணனை பலன், தன்மை இருப்பதாக முழு ஞாபகமாகத் தெரியும், ஞான சாஸ்திரம் படித்தவனுக்கு சூரியன், சந்திரனின் உண்மைத் தன்மை, கிரகணங்களின் உண்மைத்தனம், இயக்கம், அதன் சீதோஷ்ண நிலைமைக் குக் காரணம் ஆகியவை சரியாகத் தெரியாது. ஆனால் சூரியனுக்கு 16 குதிரை, சந்திரனுக்குக் கலை வளரவும் தேயவும் சாபம், இவர்களது மனைவி மக்கள், அவர்களது விபசாரம், ராகு கேது விழுங்குதல். அதனால் கிரகணம், அதற்குப் பரிகாரம் என்பது போல கற்பனைக் கதைகள் யாவருக்கும் உண்மையென்ற காரணமும், அதை அனு சரித்த அனுபவமும், அதற்கு ஏற்ப நடப்பும் தெரியும். விஞ்ஞானத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. உதாரணம், விஞ்ஞானப் படிப்பின் இன்றைய நிபுணர் களைப் பார்த்தாலே விஞ்ஞானப் படிப்பின் தன்மையும், பலனும் நன்றாய் விளங்கும். இப்படியாகப் படிப்புக்கும், அறிவுக்கும், பெரும்பாலும் உண்மைக்கும், நடப்புக்கும் சம்பந்தமில்லாத மாதிரியான படிப்புத்தான் இன்று பள்ளிப் படிப்பாகப் போய்விட்டது.
படிப்பால் ஏற்படும் பயன்
இது தவிர, இனிப் படிப்பினால் ஏதாவது ஒழுக்கம், நாட்டுப்பற்று, இனப்பற்று, சமரச ஞானம் முதலியவை ஏதாவது ஏற்படுகிறதா? அல்லது படித்த மக்களிடம் இவை ஏதாவது இருந்து வருகிறதா? என்றால் அதுவும் சிறிதும் சரியானபடி இல்லாமல் வெறும் கற்பனைக் குணங்களும், பற்றுகளுந்தான் பெரிதும் காணப்படுகின்றனவே தவிர உண்மையானதும், இருக்க வேண்டியதுமானவைகள் அருமையாகவே இருக்கின்றன. இதை விரிக்கில் மிகமிக நீளும். ஆகவே, இம்மாதிரி படிப்பைப் படிக்கின்ற பிள் ளைகள் எவ்வளவு சிறிய பிள்ளைகளானாலும் இவை களைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள் என்று உங்களுக்கு சொல்லுவ தால் கேடு எதுவும் ஏற்பட்டுவிடும் என்று நான் கருதவில்லை. ஆசிரியருடன் விவாதம் புரியுங்கள். உங்களுக்கு உபாத்தி யாயர்கள் இப்படிப்பட்ட படிப்பைக் கற்றுக் கொடுக்கும்போது இந்தமாதிரியான காரியங்களைப் பற்றிச் சிந்தித்து, நீங்கள் இது சரியா என்று கேட்பதன்மூலம் உங்கள் ஆசிரியர்களால் உண்மை அறிவிக்கப்படுவீர்கள். பரீட்சையில் பாசாவதற்கு நீங்கள் படித்ததையும், சொல்லிக் கொடுத்ததையும், எழுதினாலும் உங்கள் அறிவுக்கும், அனுபவத்திற்கும் எது உண்மை என்பதாவது விளங்கக் கூடும். ஆதலால் முரண் வந்த இடங்களில் விளக்கம் விரும் புங்கள். கட்டுப்பாடாகவும் அதிகப்படியாகவும் மாணவர்கள் விளக்கம் பெற விரும்புவீர்களானால் ஆசிரியர்களும் உங்களுக்கு விளக்கம் சொல்லவாகிலும் பயன்படும்படி அறிவு பெறுவார்கள். இப்படிப்பட்ட விளக்கம் தெரிந்த ஆசிரியர்கள் பெருகுவார்களானால் மக்களுக்குப் படிப்ப தால் ஏற்படும் கடமையாவது காலப் போலக்கில் குறையும் என்று கருதுகின்றேன். இதை ஏன் உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் இதுவரை கல்வி இலாகாக்காரர்கள் இந்தக் குறைபாட்டைப் பற்றி சரியான படி சிந்தை செலுத்தவே இல்லை. படிப்பவர்களுக்கு இரட்டை மனப்பான்மை அதாவது சரியான தும், போலியும் கற்பனையுமானதுமான ஆகிய இரு முரண்பட்ட மனப் பான்மை உண்டாகும்படி யாகவே கல்வியால் செய்யப்பட்டு வந்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதற்கு ஆகத்தான். எனவே இதுவரை உங்களுக்கு படிப்பைப்பற்றி சில கூறினேன்.
திராவிடர் கழகம் ஏன்?
இனி உங்கள் கழகத்தைப் பற்றிச் சில கூற ஆசைப் படுகிறேன். திராவிடர் மாணவர் கழகம் என் பதில் திராவிடர் என்கின்ற பெயர் ஏன் வைக்க வேண்டியதாயிற்று? இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஏன் எங்கு பார்த்தாலும் திராவிடர் திராவிடர் என்று சொல்லப்படுகிறது. இதுவரை இருந்து வருகிற பிரிவுகள், பேதங்கள் ஆகியவைகள் போதாமல் இது வேறு ஒரு புதிய பிரிவா? என்றெல்லாம் நீங்கள் கேட்கப் படலாம். அவற் றிற்கு உங்களுக்கு விடை சொல்லத் தெரிய வேண்டும். அதை நீங்கள் தெரிந்துகொள்ளா விட்டால் திராவிடர்களின் எதிரிகள் இந்தத் திராவிடம் என்பது ஒரு புதுப் பிரிவி னையை உண்டாக்கக் கூடியது என்றும், இது மக்களுக்குள் துவேஷத்தையும், பேதத்தையும் உண்டாக்கக் கூடிய தென்றும் சொல்லி திராவிட மக்களின் மேம்பாடு முன்னேற்ற உணர்ச்சியையும், முயற்சியையும் கெடுக்கப் பார்ப்பார்கள். இதுவே எதிரிகளின் வழக்கம். திராவிடம் - திராவிடர் என்பது, திராவிடம் என்றும், திராவிடர் என்றும் சொல்லுவது நாமாக ஏற்படுத்திய புதிய கற்பனைச் சொற்கள் அல்ல. இது நம் நாட்டிற்கும், நம் மக்களுக்கும் குறிப்பிடும் ஒரு சரித்திர சம்பந்தமான பெயர்களாகும். இவை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வழங்கி வரும் பெயர்களுமாகும். உங்களுக்கு நன்றாய் இந்த உண்மை விளங்க வேண்டுமானால் நீங்கள் உங்கள் பள்ளியில் இன்று படிக்கும் இந்த நாட்டு (இந்துதேச) சரித்திரப் புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள். அதில் எந்த சரித்திரப் புத்தகத்தை எடுத்துக் கொண்டாலும் அதன் விஷய முதல் பக்கத்தில் திராவிடம், திராவிடர் என்கின்ற தலைப்புக் கொடுத்து அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். இவை முடிந்து அடுத்த பக்கத்தைத் திருப்பினீர்களானால் அதில் ஆரியம், ஆரியர் என்கின்ற தலைப்பு கொடுத்து சரியாகவோ தப்பாகவோ அவற்றின் வரலாறுகள் எழுதப் பட்டிருக்கும். எனவே இவை அதாவது திராவிடர், ஆரியர் என்பவை உங்கள் குழந்தைப் பருவத்தில் பள்ளிப்படிப்பில் உங்களுக்கு ஊட்டப்பட்ட சேதிகளும், வெகு காலத்திற்கு முன் ஏற்பட்ட உண்மை களும் ஆராய்ச்சிச் சுவடிகளில் காணப்படும் சேதிகளுந்தானே ஒழிய இன்று புதிதாக நானோ மற்றும் வேறு யாரோ கொண்டு வந்து புகுத்தியது அல்ல. இதுவேதான் இந்நாட்டுச் சரித்திரத்தின் நிலை ஆகும். இதிலிருந்து பார்த்தாலே நம்முடையவும் நம் நாட்டினு டையவும் தன் மைகள் ஒருவாறு நமக்கு விளங்கிக் கொள்ள முடியும் என்பதற்கு ஆகவே அதை ஞாபகப்படுத்தும் படியான மாதிரியில் அனுபவத்தில் வழக்கத்திற்கு நினை வுக்கு வரும்படி செய்ய இன்று அதைப்பற்றிச் (திராவிடத்தை பற்றி) சிறிது அதிகமாய் உங்களிடம் பேச வேண்டி இருக்கிறது.
இதுகூட ஏன்?
இதுகூட ஏன்? இன்று புதிதாகச் சொல்லப்படவேண்டும் என்று கேட்கப்படலாம். எத்தனையோ ஆயிரம் வருடங் களுக்கு முன்பு இருந்தே இருந்துவருகிற திராவிடர் ஆரியர் என்கின்ற வார்த்தையை நாம் இன்று அமலுக்கு - பழக்கத்திற்கு அதிகமாய்க் கொண்டு வருவதால் அந்தக்கால நிலைக்கு நாம் போ கவேண்டும் என்கின்ற கருத்து அதில் இருப்பதாக யாரும் கருதிவிடக்கூடாது. பிற்போக்குக்கு ஆக நாம் அப்படிச் சொல்லவில்லை. நமக்குச் சிறு பிராயத்தில் சரித்திர மூலம் படிப்பிக்கப் பட்டிருந்தும் அனுபவத்தில், உணர்ச்சியில் ஏன் நம் மக்களுக்குள் நினைவிலிருக்க முடியாமல் போய்விட்டது என்று நாம் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்ள வேண் டுமே ஒழிய, ஏன் நமக்கு இப்போது ஞாபகப்படுத்தப்படுகிறது என்ற கேள்விக்கு இடமே இல்லை. ஆனாலும் ஏன் என்றால், ஏற்பட்ட கெடுதி அதாவது, திராவிடர் என்ற நினைவில்லாததால் நமக்கு என்ன கெடுதி ஏற்பட்டது என்று கேட்டால் அந்த நினைவு நமக்கு இல்லாததால்தான் நாம் 4 ஆம், 5 ஆம் ஜாதியாய், சமுதாயத்திலும், தற்குறி களாய்க் கல்வியிலும், கூலிகளாய்த் தொழிலிலும், ஏழை களாய் வாழ்க்கையிலும் அந்நிய ஆதிக்கத்திற்கு உட்பட்ட வர்களாய் அரசியல், ஆத்மார்த்த இயல் என்பவற்றிலும் காட்டுமிராண்டி காலத்து மக்களாய் அறிவு, கலாச்சாரம், தன்மானம் ஆகியவைகளிலும் இருந்து வருகிறோம். இது இன்று நேற்றல்லாமல் நம்மைத் திராவிடர் என்பதையும் நம்நாடு திராவிடநாடு என்பதையும் மறந்த காலம் முதல் அதாவது சுமார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இருந்துவருகிறோம். நாம் நம்மைத் திராவிடர் என்று கருதினால், நினைவுறுத்திக் கொண்டால் உலக நிலையில் திராவிடர் (நம்) நிலைஎன்ன? தன்மை என்ன? நாம் எப்படி இருக்கிறோம்? என்பது உடனே தென்படும் ஏன் எனில், நாம் எப்படி இருக்க வேண்டியவர்கள்?
நாம் முன் கூறின இழிநிலையும் குறைபாடுகளும் இந்த நாட்டில், ஏன் உலகிலேயே திராவிடர்களுக்குத்தான் (நமக்குத் தான்) இருக்கிறதே தவிர திராவிட ரல்லாதவர்களுக்கு இல்லவே இல்லை. திராவிடமல்லாத வேறு நாட்டிலும் இல்லை. இந்நாட்டு மனித சமுதாயத்தில் ஒரு கூட்டம் அதாவது, ஆரியர்கள் பிறவி உயர்வாயும், பிறவி காரணமாய் உயர்வாழ்வாயும், மற்றொரு சமுதாயம் அதாவது, நாம் - திராவிடர் பிறவி இழி மக்களாயும், பிறவி காரணமாய்த் தாழ்ந்த இழிந்த வாழ்வாயும் இருப்பது இதுவரை மக்களுக்குத் தென்படாததும், தென் பட்டாலும் அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசிய மில்லாமலும், சிந்தித்தாலும் முயற்சி செய்யா மலும், முயற்சி செய்தாலும் வெற்றி பெறாமலும் போனதற்கு காரணம் என்ன? என்பதைச் சிந்தியுங்கள். நீங்கள் உங்களைத் திராவிடர்கள் என்று கருதாததினால், நினைவுறுத்திக் கொள்ளாததால் இன்றைய இழிவுக்கும், தாழ்மைக்கும், கீழ்நிலைமைக்கும் உரியவர்கள் என்று உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டி ஏற்பட்டு விட்டது. அக்கட்டுப் பாட்டை உடைக்க நீங்கள் திராவிடர்கள் என்று கருதி முயலாமல் அந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக ஆசைப்பட்டதால்தான் அக்கட்டு உங்கள் ஆசையை அனுமதிக்கவில்லை. இதுவரையில் இழிநிலை கட்டுப் பாட்டிலிருந்து தப்ப, மீள முயன்றவர்கள் நம்மில் எவர் களாவது இருப் பார்களானால் அவர்கள் அத்தனைபேரும் தோல்வி அடைந்து பழைய நிலையிலேயே இருப்பதற்குக் காரணம் இதுவேயாகும். சிறைச்சாலைக்குள் இருப்பவன் எந்த வழியில் சிறைக்குள் சென்றானோ அந்தவழியில் வெளிவர முயல வேண்டுமே ஒழிய சிறைக் கதவை, பூட்டை கவனியாமல் அது திறக்கப் படவும், உடைக்கப்படவும் முயலாமல் வெறும் சுவரில் முட்டிக் கொள்வதால் எப்படி வெளிவர முடியும்? திராவிடன் இழிவு, தாழ்வு என்னும் சிறைக்குள் சிக்குண்டதற்குக் காரணம் அவன் தன்னைத் திராவிடன் என்று உணராமல் ஆரியன் வசப்பட்டு ஆரியத்திற்கு, ஆரிய மதம், கலை, ஆச்சார அனுஷ்டானங் களுக்கு அடிமைப்பட்டதல்லாமல் வேறு என்ன காரணம் சொல்ல முடியும்? ஆரியத்தின் பயனாய் ஏற்பட்ட சிறைக் கூடத்தில், கட்டுப்பாட்டின் கொடுமையில் இருந்து வெளிவர விரும்புகிறவன் கையிலும், காலிலும் பூட்டியிருக்கும் ஆரிய பூட்டையும் விலங்கையும் தகர்த்தெறியச் சம்மதிக்க வேண்டாமா? அவைகளைத் தகர்த்தெறியாமல் எப்படி வெளிவர முடியும்? விலங்கோடு வெளிவந்தால்தான் பயன் என்ன? ஆகவேதான் ஆரியக்கொடுமை, ஆரியக் கட்டுப் பாட்டால் நமக்கு ஏற்பட்ட இழிவு நீங்க நாம் ஆரியத்தை உதறித்தள்ள வேண்டும். ஆரியத்தை உதறித் தள்ளுவதற்குத் தான் நம்மை நாம் திராவிடர் என்று சொல்லிக் கொள்ளுவ தாகும். அதற்குத் தூண்டுகோல்தான் திராவிடர் என்பது.
எப்படி ஒருவன் பறையனாய், சக்கிலியாய் இருப்பவன், அவன் இஸ்லாம் என்றாகிவிட்டால் அந்தப் பறத் தன்மை, சக்கிலித் தன்மை உடனே ஒழிந்துபோகிறதோ அதேபோல் அறியாமையால் ஆரியத்தில் சிக்குண்டு கீழ் மகனான மக்கள் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக் கொண்டாலே சரிசமமான மக்களாக ஆகிவிடுகிறார்கள். அதாவது எல்லா மேன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் உரிமையும் சமபங்குமுள்ள சுதந்திர மக்களாக ஆகிவிடுகிறார்கள். அப்படிக்கில்லாமல் தன்னை ஆரியத்தோடு பிணைத்துக் கொண்டு இருக்கிற எந்தத் திராவிடனும் கீழ்மகன் என்ற தன்மையை ஒப்புக் கொண்டவனேயாவான். எவ்வளவு முயற்சி செய்தாலும் மீள முடியாதவனே ஆவான். உதாரணமாக தோழர் சர். ஆர்.கே. சண்முகம் செட்டியார் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளுவதன் மூலம் எவ்வளவு பெரிய ஜாதி வைசியரானாலும், பிரா மணனுக்கு கீழ் ஜாதி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதுதான் இன்றைய அனுபவம். இதுதான் இதுவரை யார் பாடுபட்டும் வெற்றி பெறாததற்குக் காரணம். இதைக் கண்டிப்பாய் உணருங்கள். யுக்திக்கும், நியாயத்திற்கும், அனுபவத்திற்கும் ஒத்த உண்மையாகும். இது திராவிடர் என்பதின் கருத்து இனி திராவிடத் தன்மையைப் பற்றிச் சில கூறுகிறேன். நான் நம்மைத் திராவிடர் என்பதும், இது சரித்திர காலத் தன்மை என்பதும், உங்களை நான் அந்தக் காலத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகக் கருதாதீர்கள். அல்லது திராவிடர் - ஆரியர் என்று உடல் கூறு சாஸ்திரப் படி பரீட்சித்து அறிந்து பிரித்துப் பேசுவதாக கருதாதீர்கள். அல்லது திராவிடருக்கு என்று ஏதோ சில தன்மைகளை எடுத்துச் சொல்லி அதை சரித்திர ஆதாரப்படி மெய்ப் பித்துச் சொல்லுவதாகக் கருதாதீர்கள்.
என்ன மொழியாய் இருந்தால் என்ன?
இவைகள் எப்படி இருந்தாலும், இவை பிரிக்க முடியாதனவாய் இருந்தாலும் சரி, நம்மை இன்றைய இழிவிலிருந்து, தாழ்மையிலிருந்து, முன்னேற முடியாமல் செய்யும் முட்டுக்கட்டையிலிருந்து மீண்டு தாண்டிச் செல்ல நமக்கு ஒரு குறிச்சொல் வேண்டும். சுயராஜ்யம் என்றால் எதைக் குறிக்கிறது? பாகிஸ்தான் என்றால் எதைக் குறிக்கிறது? மோட்சம் என்றால் எதைக் குறிக்கிறது? வெள்ளையனே வெளியே போ என்றால் எதைக் குறிக்கிறது? என்று பார்த்தால் அவை ஒரு கருத்தை, ஒரு விடுதலைத் தன்மையை, ஒரு பயனை அனுபவிப்பதை எப்படிக் குறிப்பிடுகின்றனவோ அப்படிப் போல் நம்மை இழிவி லிருந்து விடுதலை செய்து ஒரு முற்போக்கை ஒரு பயனை அடைதலை, ஒரு மீட்சியைக் குறிப்பிட ஏற்படுத்தி இருக்கும் சொல்லாகும். ஆதலால் வார்த்தையின் பேரில் வழக்காட வேண்டியதில்லை. திராவிடம் என்பது என்ன மொழியாய் இருந்தால் என்ன? காப்பி(பானம்) என்னமொழி? அது காலை ஆகார (பான)த் திற்கு ஒரு குறிப்பு மொழி, அவ்வளவில்தான் பார்க்க வேண்டும். பாகிஸ்தான் என்னமொழி? இந்துக்கள் என்பவர்கள் ஆதிக்கத்தில் இருந்து மீள்வதற்கு ஒரு அறிகுறி மொழி; அவ்வளவில்தான் அதைக் கருத வேண்டும். கலந்துவிட்டது என்பது... ஆரியன் திராவிடன் என்பது கலந்துபோய்விட்டது, பிரிக்க முடியாதது, ரத்த பரீட்சையாலும் வேறுபடுத்த முடியாதது என்று சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சு என்றே சொல்லுவேன். ஆரிய திராவிட ரத்தம் கலந்துவிட்டிருக்கலாமே தவிர ஆரிய திராவிட ஆச்சார அனுஷ்டானங்கள் கலந்துவிட்டனவா? பிரா மணாள் ஓட்டல், பிராமணர்களுக்கு மாத்திரம்; பிராமணன், சூத்திரன், பறையன், சக்கிலி, பிராமணனல்லாதவன் ஆகிய பிரிவுகள் எங்காவது கலந்துவிட்டனவா? பேதம் ஒழிந்து விட்டதா? பிராமணர்கள் என்பவர்கள் உயர்வும் பாடுபடாமல் அனுபவிக்கும் போக போக்கியமும், சூத் திரர்கள், பறையர்கள், சக்கிலிகள் (திராவிடர்கள்) என்ப வர்கள் இழிவும், கஷ்ட உழைப்பும், ஏழ்மையும் தரித்திர வாழ்வும் எங்காவது சரிசரி கலந்து விட்டதா? பிரிக்க முடியாதபடி ஒன்றிவிட்டதா? அல்லது அறிவு, கல்வி, தகுதி திறமை கலந்து விட்டதா? எது கலந்துவிட்டது; இரத்தம் கலந்தாலென்ன கலவாவிட்டால் என்ன? வாழ்வு, போக போக்கியம், உரிமை கலத்தல் வேண்டாமா?
சட்டைக்காரர் என்று ஒரு கூட்டம் இருக்கிறது, இது வெள்ளை ஆரிய, கருப்பு திராவிட ரத்தக்கலப்பு என்பதில் எவருக்கும் ஆட்சேபனை கிடையாது என்றாலும், நமக்கும் அவர்களுக்கும் எதில் கலப்படம் இருக்கிறது. அவர்கள் தனிச் சமுதாயமாக வெள்ளை ஆரியர் (அய்ரோப்பியர்) போலவே ஆச்சார அனுஷ்டானங்களில் நம்மில் இருந்து பிரிந்து உயர்வாழ்வு வாழுகிறார்கள். இவர்களைப் பார்த்துக் கருப்புத் திராவிடன் இரத்தத்தால் பிரிக்க முடியாதவர்கள் என்று சொல்லுவதில் பொருள் உண்டா என்று பாருங்கள். ஆகவே, திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல், லட்சியச் சொல் ஆகும். எப்படி யாவது ஆரியக் கட்டுப் பாட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான இழிநிலை, முட்டுக்கட்டை நிலைமாறி மேன்மை அடையவேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது; திராவிடம் என்றால் மாற்றிக் கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவ மாகும். நாம் இந்தத் திராவிடர் என்ற பெயர் கொண்டு விடுவ தால் நமக்கு வேறு தவறுதல்கள் எதுவும் நேர்ந்துவிடாது. நம் எதிரிகள் சொல்லும் குறும்புத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு அதாவது கடவுள், மதம், சாஸ்திரம், ஒழுக்கம், கலை, தர்மம், புண்ணியம், பக்திவிசுவாசம் முதலியவைகள் எல்லாம் ஒழிக்கப்பட்டுப் போகும் என்பவை மிகவும் இழிவான குணத்தோடு நம்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளும் புகார்களுமாகும்.
நசித்துப் போய் விடாதா?
திராவிடர், திராவிட இனத்தவர், திராவிடக் கூட்டத்தவர் என்பதற்கும், இந்தக் குற்றச்சாட்டுக்கும், எவ்வித சம்பந்த முமில்லை, இவைகள் ஒன்றும் கெட்டு விடாது. ஆரியத்தால் தீண்டப்படாதவனான ஒரு பறையன், சக்கிலி தன்னை இஸ்லாமியன் என்று ஆக்கிக்கொண்டால் அவன்மீது இந்த இழி தன்மைகளுக்கு அருத்தம் உண்டா என்று பாருங்கள். அதோடு அவனுக்கு, அவன் பறையனாயிருந்தால் சூழ்ந்து கொண்டிருந்த அவனைப் பறையனாக்குவதற்குக் காரணமா யிருந்த கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம், புண்ணியம் முதலிய ஈனத்தன்மைகள் ஆரியருடையதுகள் கண்டிப் பாய் நசித்துப்போய்விடுகிறதா இல்லையா பாருங்கள். அதனால் அவன் நாஸ்திகன் ஆகிவிடுகிறானா? இல்லையே! அதற்குப் பதிலாக ஈனத் தன்மைக்குக் காரண மாயில்லாத இஸ்லாம் கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம் முதலியவைகள் அவனைச் சூழ்ந்து அவன் மீதிருந்த இழிவுகளை நீக்கிவிடும். உதாரணமாக ஆரிய னுக்கு உருவக் கடவுள், இஸ்லாமியனுக்கு உருவமில்லாத கடவுள் என்பதோடு உருவக் கடவுள் வெறுப்பும் உண்டு. ஆரிய மதத்துக்கு ஜாதிபேதம், இஸ்லாமிய மதத்திற்கு ஜாதி பேதம் இல்லை; இப்படிப் பல மாறுதல்கள்தான் திராவி டனுக்கு உண்டாகலாம். இதனால் கடவுள், மதம். சாஸ்திரம், கலை, ஒழுக்கம் ஒழிந்து விட்டதாகவோ ஒழிக்கப்பட்ட தாகவோ அருத்தமா? இங்கு தான் உங்களுக்குப் பகுத்தறிவு வேண்டும். ஜாக்கிரதை வேண்டும். இன்றைய உலகம் எல்லாத் துறையிலும் மாறுதல் ஏற்பட்டு முன்னேற்றம் அடைந்து வருகிறதே ஒழிய நாசமாய்விடவில்லை. பழையது களுக்கும், பயனற்றதுகளுக்கும் சிறிதாவது குறைந்த சக்தி கொண்டவைகளும் நசித்து தான் போகும்; கைவிடப்பட்டுத் தான் போகும். சிக்கிமுக்கியில் ஏற்பட்ட வெறும் நெருப்பு வெளிச்சம் மறைந்து படிப்படியாக மாறி இன்று எலக்டிரிக்(மின்சார விளக்கு) வெளிச்சம் வந்ததானது நாச வேலையல்ல என்பதும்; அது முற்போக்கு வேலை என்பதும் யாவரும் ஒப்புக்கொள்ளுவார்கள். ஆதலால், ஆரம்ப காலத்தில் - பழங்காலத்தில் தோன்றிய அல்லது தோற்று விக்கப்பட்ட கடவுள், மதம், சாஸ்திரம், இசை, ஒழுக்கம், பக்தி என்பவைகள் இன்றைக்கும் அப்படியே பின்பற்றப் படவேண்டும் என்றால் அது அறியாமையேயாகும். அறியாமை அல்ல என்றால், புத்தர், ஏசு, மகம்மது, ராஜா ராம்மோகன்ராய் ஆகிய கடவுள், மதம், கலை, ஒழுக்கம், பக்தி ஆகியவைகளில் மாற்றம் ஏற்படுத்திய வர்கள் நாச வேலைக்காரர்களா? எடிசன், மார்கோனி, டார்வின், சாக்கரடீஸ், லூதர், மார்க்சு, ஏங்கெல்ஸ் ஆகியவர்கள் நாச வேலைக்காரர்களா? இவர்கள் மனித சமுதாய ஒழுக்கத்தை சமுதாய அடிப்படையைக் கலைப்பவர்களா? என்று சிந்தியுங்கள்; மாறுதல் உணர்ச்சியால் அதுவும் முற்போக்கான பழைமையை உதறித்தள்ளின மாறுதலில் தான் பயன் உண்டாக முடியும். மாறுதல் என்று சொல்லி பழைமையைத் திருப்புவது, அதாவது ராட்டினம் கொண்டு வருவது, செல்லரித்து மக்கி ஆபாசமாகப் போன புராணங்களை உயிர்ப்பிப்பது, பழைய கோவிலைப் புதுப்பிப்பது, என் பவைகள் மாறுதல் ஆகிவிடா. எனவே மாறுதல் கருத்தால் வெகுகாலமாக இருந்து வரும் குறைகளை இழிவுகளை நீக்கிக் கொள்ளச் செய்யும் முயற்சியை நாசவேலை என்று கருதாதீர்கள். இவ்வித மாறுதலுக்கு நீங்கள்தான், அதாவது இளைஞர்கள், குழந்தைப் பருவமுள்ளவர்கள், ஆகியவர்கள் தான் பெரிதும் தகுதி உடையவர்கள் ஆவீர்கள். நன்றாய்ச் சிந்திக்கும் காலம் இது. சிந்தித்து வாது புரியுங்கள், விவகாரம் கிளப்புங்கள். அதனால் அனுபவம், அறிவு முதிர்ச்சி பெறு வீர்கள். உங்கள் வாதத்தால் உங்கள் ஆசிரியர்களுக்கும் சிந்திக்கும் சக்தியும் பகுத்தறிவும் தோன்றும்படி வாது புரியுங்கள். நீங்கள் காரியத்தில் இறங்க உங்களுக்கு இன்னும் சற்று அனுபவம் பெறுங்கள். யாவர் சொல் வதையும் காது கொடுத்துக் கேளுங்கள், கேட்டவைகளைச் சிந்தித்துச் சிந்தித்து உண்மை, நேர்மை கண்டு பிடிக்க வாதம் செய்து, கேள்வி கேட்டு அனுபவம் பெறுங்கள். எனவே, நான் இவ்வளவு நேரம் சொன்னவைகளில் உள்ள குற்றம் குறைகளை உங்கள் தலைமை ஆசிரியரும், இக் கூட்டத் தலைவருமான அறிஞர் திருத்துவார்.

- 9.7.1945ல் ஈரோடு மகாஜன அய்ஸ்ஸ்கூல் சரஸ்வதி ஹாலில்  திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு
 'குடிஅரசு' - 14.07.1945