ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

சிந்தனைக் களம் : சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர் நாகரிகமா?

ஜனவரி 16-31,2022, உண்மை இதழ்

 சிந்து சமவெளி நாகரிகம்  ஆரியர் நாகரிகமா?

கவிஞர் கலி.பூங்குன்றன்

 குடுமியை அவிழ்த்து விட்டுக் கூத்தாடும் காரக்பூர் அய்.அய்.டி

அய்.அய்.டி காரக்பூர் நாட்காட்டியில் ஆரியர்கள் வருகை தொடர்பான தவறான தகவல் இடம் பெற்றுள்ளது வரலாற்று ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவில் முக்கிய தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக காரக்பூர் அய்.அய்.டி தனது நாட்காட்டியில் பிப்ரவரி மாதப் பகுதியில் ஆரியர்கள் குறித்து சான்று-களே இல்லாத கற்பனைத் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் ‘சுவஸ்திக்’ என்ற சின்னம் வேதகாலத்தில் வாழ்ந்த முனிவர்-களால் உருவாக்கப்பட்டது என்றும், சிந்துவெளி நாகரிகத்தில் மிகவும் முக்கியமான முத்திரையாக இதை அங்கு வாழ்ந்த மக்கள் பயன்படுத்தினார்கள் என்றும் உண்மைக்குப் புறம்பாக கூறப்பட்டுள்ளது.

 இதுகுறித்து கேள்விப்பட்ட அறிவியல் ஆய்வாளர்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் தங்களின் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

 ஆரியர்கள் மத்திய ஆசியாவின் ஸ்டெபி புல்வெளியிலிருந்து வந்தவர்கள் என்பது அறிவியல் சான்றுகளோடு உறுதி செய்யப்-பட்டுள்ளது. மேலும் சிந்துப் பகுதி மக்களுக்கும் ஆரியர்களின் எந்த ஒரு பழக்க வழக்கங்களுக்கும் எள்ளளவும் தொடர்பில்லை. சிந்துவெளி நாகரிகத்தின் போது ஆரியர்களின் வருகை இல்லை. சுமார் 200 ஆண்டுகளாக ஹரப்பா, மொகஞ்சதாரா (பாகிஸ்தான்), ராகிகாடி, தொலவீரா (இந்தியா) உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்த ஆய்வில் ஆரியர்-களுக்கும் சிந்துவெளி மக்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பது உறுதியானது.

 ஆனால், அறிவியல் பூர்வமாக செயல்பட வேண்டிய காரக்பூர் அய்.அய்.டி.யின்

 (அய்.அய்.டி. என்றால் அய்யர், அய்யங்கார் டெக்னாலஜிதானே!) காலண்டரில் “இழந்துபோன இந்திய அறிவுத் தளத்தை மீட்கும் தொழில் நுட்பம்’’ என்ற தலைப்பில் சிந்துவெளி நாகரிகத்தில் கிடைத்த பொருள்களை ஆரிய நாகரிகத்தோடு சேர்த்து “பெருவெளி மற்றும் காலம், அண்டத்தின் ஒளி மற்றும் யுகங்கள், பெருவெளியின் காலத்திற்-கான விதிகள்’’ என பல முட்டாள்தனமான தலைப்புகளில் சிந்துவெளி நாகரிகத்தில் கிடைத்த பொருள்களோடு ஒப்பிட்டு, தலைப்பிட்டு நாள்காட்டியில் எழுதியுள்ளனர்.

 மேலும் சிந்துவெளியில் வேதத்தின் 12 ரகசிய அடையாளம், சிந்து சமவெளி நாகரிகத்தின் சின்னங்களின் உண்மையான அடையாளம், ஆரியப் படையெடுப்பு என்பது கட்டுக்கதை, சிந்துவெளி மக்கள் ஆரியர்களே இந்த மண்ணின் மக்களே போன்ற தலைப்புகளில் நாட்காட்டி முழுவதும் கற்பனைக் கதைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். மேலும் சில முத்திரைகளைக் காட்டி ஆரியர்கள் தான் இந்தியாவை அறிவின் ஆற்றல் தளமாக மாற்றிக் காண்பித்தனர் என்றும் கதைத்துள்ளனர்.

 தற்போது சமூகவலைதளங்களில் எழுதி-வரும் கற்பனைக் கதைகளை அப்படியே ஒரு பெரிய தொழில் நுட்ப நிறுவனம் நாட்காட்டியில் கொண்டுவந்து அனைவரையும் படிக்கவைப்பது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 இது தொடர்பாக அய்.அய்.டி பேராசிரியர் ஜாய் சென் கூறும் போது, “நாம் மறைக்கப்பட்ட வரலாற்றை இதுவரை படித்து வந்தோம், தற்போது உண்மைகளை அறியும் நேரம் வந்துவிட்டது. இந்த நாட்காட்டி  உண்மை-களை வெளிப்படுத்திட ஓர் ஆரம்பப் புள்ளி என்று கூறினார். மேலும் ஆரியர்களின் வருகை என்பது கற்பனைக் கதை, ஆரியர்கள் இந்த மண்ணுக்கானவர்களே என்ற புரட்டுகளின் மீதான குறித்த நீண்ட ஆய்வை இந்த நாட்காட்டியின் மூலம் துவக்கி உள்ளோம்’’ என்று கூறினார்.

 இது தொடர்பாக மும்பை ஹோமிபாபா அறிவியல் வரலாற்று நிறுவனப் பேராசிரியர் சுலே கூறும் போது, “அய்.அய்.டி போன்ற கல்வி நிறுவனங்கள் இது போன்ற கற்பனைக் கதைகளை அறிவியல் வரலாறு என்ற பெயரில் வெளியிடும் போது அதன் தாக்கம் மக்களிடையே வெளிப்படும். உண்மைகளை என்றுமே மறைக்க முடியாது ஆனால் இவர்கள் உண்மைக்குப் புறம்பானவற்றை ஆவணப் படுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது’’ என்று ஊடகம் ஒன்றில் காலண்டர் குறித்த கேள்விக்குப் பதிலளித்தார்.

வரலாற்றைத் திரிப்பது, உருட்டல், புரட்டல் செய்வது என்பது ஆரியர்களுக்கே உரித்தான ‘தனிக்கலை’. கீழடி ஆய்வைக்கூட நடத்த விடாமல் முட்டுக்கட்டை போட்டதற்-கெல்லாம் கூட உண்மை வெளிவந்தால், அது திராவிடர்களின் தமிழர்களின் தொன்மை வெளிச்சத்துக்கு வந்துவிடுமே என்ற அச்சம்தான். எடுத்துக்காட்டுக்காக சில இங்கே:

நாகசாமி என்ற முன்னாள் தொல்பொருள் துறை இயக்குநராக இருந்த பார்ப்பனர் எழுதுகிறார் _ திராவிட நாகரிகம் என்ற ஒன்றே கிடையாதாம் (துக்ளக் _ 27.11.2019)

“திராவிடக் கண்ணாடியும் கீழடி ஆய்வும்’’ என்ற தலைப்பில் துக்ளக்கில் ஒரு கட்டுரை இடம் பெற்றுள்ளது.(25.10.2017) திராவிடம் என்பது எல்லாம் திராவிடர் கட்சிகளின் கண்டுபிடிப்பாம். ஆனால், உண்மை வரலாறு என்ன? சிந்துச் சமவெளி குறித்த ஆய்வுகள் என்ன கூறுகின்றன? ஏராளமுண்டு என்றாலும், எடுத்துக்காட்டுக்கு சில இங்கே….

சிந்துவெளி – தமிழி (தென்பிராமி) எழுத்தாய்வுப் பயிலரங்கம் (Indus – Tamil (Brahmi) script study workshop)

பழங்காலத் தமிழ் எழுத்துகளின் தோற்றம் வளர்ச்சி குறித்த ஆய்வில் 2007 முதல் சிந்துவெளி எழுத்தாய்வு நடுவம் ஈடுபட்டுள்ளது. சிந்து வெளி எழுத்தாய்வு நடுவமும் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்மொழித் துறையும் இணைந்து 23.08.2014 முதல் 10 காரி (சனி)க்கிழமைகள் (முற்பகலில்) சிந்துவெளி – தமிழி (தென்பிராமி) எழுத்தாய்வுப் பயிலரங்கம் நடத்தியது.

இதற்கு முன் பத்து பயிலரங்குகள் நடத்தப்பட்டு 500 மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். பயிலரங்கின் நிறைவுவிழா நவம்பர் திங்களில் நடைபெற்றது.

தொன்முது நாகரிகங்களில் முன்முது நாகரிகமான சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் எனப் பின்லாந்து அறிஞர் அசுகோ பர்பலோ, அறிஞர் அய்ராவதம் மகாதேவன் போன்றோர் உலக அரங்கில் நிலைநாட்டியுள்ளனர். மூன்று தமிழ்ச் சங்க வரலாற்றின்படி முதல் தமிழ்ச் சங்க காலத்தில் ஓவிய எழுத்தும் இரண்டாம் தமிழ்ச் சங்க காலத்தில் சிந்துவெளி எழுத்தும் மூன்றாம் தமிழ்ச் சங்க காலத்தில் தென்பிராமி எனப்படும் தமிழி எழுத்தும் அதிலிருந்து வட்டெழுத்தும் சோழர் காலத்தில் இன்றைய தமிழ் எழுத்துமாக வளர்ந்த தமிழ் எழுத்துகளின் வளர்ச்சி வரலாறு தமிழ் எழுத்துகளின் சங்கிலித் தொடர் போன்று தொடர்பு அறாத 5000 ஆண்டுக்காலத் தமிழ் எழுத்தின் தொன்மையைப் புலப்படுத்துகிறது.

 பயிரலங்கம் வாயிலாகப் புலப்பட்ட உண்மைகள்

 சிந்துவெளி எழுத்தும் தமிழி எழுத்தும் தமிழர்களால் தமிழுக்காகத் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டவை.

தமிழர் நாகரிகம், சிந்துவெளி நாகரிகம் என்னும் பெயரில் தெற்கிலிருந்து வடக்கே பரவியது. மிகத் தொன்மையான சிந்துவெளி எழுத்து தமிழ்நாட்டில் தான் செம்பியன் கண்டியூர் கற்கோடரியில் (கோகாங்கன் என்னும் பெயர் சிந்துவெளி எழுத்தில்) கிடைத்துள்ளது.

சிந்துவெளி எழுத்தின் மிகமிகத் தொன்மையான எழுத்துச் சான்றுகளும், கீறல் எழுத்து எனப்படும் (Graffiti) சிந்துவெளி கையெழுத்து வரிவடிவ வேறுபாடுகளும், அதன் பின்னர்த் தோன்றிய தமிழி (பிராமி) எழுத்து படிப்படியாக வளர்ந்த வளர்ச்சியும், விடுபட்ட இணைப்புகளும் தமிழ்நாட்டு அகழாய்வில் கிடைத்துள்ளன. இந்தப் படிமுறை வளர்ச்சி சிந்துவெளியில் கிடைக்கவில்லை.

சிந்துவெளி எழுத்துக் குறியீடுகள் இன்றும் நாட்டுப்புற மட்பாண்டத் தொழிலாளர், சலவைத் தொழிலாளர் உள்ளிட்ட 18 வகை பல்வேறு தொழிற் பிரிவினரிடை வெறும் அடையாள எழுத்துகளாக வழங்கிவருகின்றன.

சிந்துவெளி எழுத்தும் தமிழி (தென்பிராமி) எழுத்தும் இந்தியாவின் (Pan Indian Script) ஒரே பொது எழுத்தாக நின்று நிலவின என்பது நன்கு உறுதிப்படுகிறது.

தமிழ் எழுத்து 5000 ஆண்டுத் தொன்மையுடையது. தமிழிலக்கியம் 2000 ஆண்டுத் தொன்மையுடையது.

Language is fossil history and fossil, poetry as well. (R.C.Trench)
All of Indian civilization is built on an underlying base of Dravidian language and culture. (S.A.Tyler -1973

மெய்யெழுத்து ஒலிக் குறியீட்டொடு உயிர் எழுத்து ஒலிக் குறியீடுகளை எந்த இடத்தில் எந்தத் திசையில் சேர்த்து எழுதுவது என்பது சிந்துவெளி எழுத்துகளின் காலத்திலிருந்து தமிழ் பிராமி எழுத்து வடிவங்களின் காலம் வரையிலும் தொடர்ந்து ஒரே முறையில் பெரும்பாலும் அமைக்கப்பட்டுள்ளது.

 «««

சிந்து சமவெளி திராவிடர் நாகரிகமே!

தமிழ்நாட்டில் புதிய கற்காலக் கோடரி – கண்டுபிடிப்பு

சிந்து சமவெளி நாகரிக எழுத்துகளுடன் புதிய கற்காலக் கோடரி தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் முதன்முதலாகக் கண்டு-பிடிக்கப்பட்ட கல்வெட்டு பொறிக்கப்பட்ட கல் ஆயுதம் இது என்பது குறிப்பிட்டத்தக்கது.

தமிழரின் எழுத்துத் தொன்மையை உறுதிப்படுத்தும் மிகச் சிறந்த சான்று இது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் செம்பியன் கண்டியூரில் கடந்த பிப்ரவரியில் மேற்கொண்ட கல் ஆய்வில் இரண்டு புதிய கற்காலக் கைக்கோடரிகள் கண்டெடுக்கப்பட்டன.

அவற்றில் ஒன்றில் 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட (கி.மு.1500) மொஹஞ்சதாரோ – ஹரப்பா பண்பாட்டுக் கால எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது என்று தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் சிறப்பு ஆணையர் ஸ்ரீதர் தெரிவித்தார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற சிறப்புச் சொற்பொழிவில் பேசிய அவர் இது குறித்துக் கூறியது. இதுவரை இதுபோன்ற குறியீடுகள் தமிழ்நாட்டுப் பாறை ஓவியங்களிலும் இரும்புக்கால ஈமச்சின்னங்களில் இருந்து கிடைத்த பானை ஓடுகளிலும் மட்டுமே கிடைத்துள்ளன.

தற்போது கற்கருவி கிடைத்த செம்பியன் கண்டியூரில் இரும்புக் காலத்தைச் சேர்ந்த தாழிகள், கருப்பு – சிவப்பு மட்கலன்கள், குறியீடு பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் மற்றும் எலும்புத் துண்டுகள், சாம்பல் நிற மட்கலன்கள் ஆகியவையும் கிடைத்துள்ளன.

கருவியில் நான்கு பொறிப்புகள் உள்ளன. முற்பொறிப்பு குத்திட்டு அமர்ந்த நிலையில் உள்ள மனித வடிவுடையதாகவும். அடுத்த பொறிப்பு கோப்பை வடிவிலும், மூன்றாவது பொறிப்பு ஏறத்தாழ முத்தலைச் சூலம் போன்ற அமைதியிலும், நான்காவது பொறிப்பு குத்திட்ட பிறை வடிவின் நடுவில் ஒரு வளையத்தை இணைத்தது போலவும் உள்ளன.

தொல்லியல் ஆய்வாளர் அய்ராவதம் மகா தேவன் ஆய்வின்படி, முதலிரு பொறிப்புகளுக்கும் முரு என்றும் அன் என்றும் பொருள் கொள்ளலாம்.

புதிய கற்காலக் கற்கருவியில் இவ்வெழுத்துப் பொறிப்புகள் கிடைத்ததன் மூலம். புதிய கற்காலத் தமிழ்நாட்டு மக்கள் ஹரப்பா பண்பாட்டு மற்றும் நாகரிகக் கூறுகளைத் தொடர்ந்து பின்பற்றியவர்கள் என்பது உறுதியாகிறது என்றார் ஸ்ரீதர்.

இக்கண்டுபிடிப்பின் மூலம் சிந்துவெளி நாகரிகமும், தொல் தமிழ் நாகரிகமும், திராவிட நாகரிகம் என உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ‘தினமணி’யின் முன்னாள் ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான அய்ராவதம் மகாதேவன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் சிந்துவெளி எழுத்துகள் பொறித்த ஒரு கற்காலக் கருவி என்பதுதான் இக்கண்டுபிடிப்பின் முக்கியத்துவமாகும். இப்புதிய கற்காலக் கருவி சுமார் கி.மு. 1500க்கு மேற்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். கி.மு.1000த்துக்குப் பிறகு, இரும்பு வந்த பிறகு இக்கருவிகள் உருவாக்கப்படவில்லை, இதில் ஒரு பீடத்தில் உட்கார்ந்து இருக்கும் உருவத்தை அக்காலக் கடவுள் என்றும், அது முருகனைக் குறிக்கிறது என்றும் கூறுகிறார் அவர். இதே உருவங்கள் பொறித்த பெருங்கற்காலப் பானைகள் திண்டிவனம் _ சானூர், திருநெல்வேலி _ மாங்குடி கேரளத்தில் முசிறி ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன என்று அய்ராவதம் மகாதேவன் தெரிவித்தார். (‘தினமணி’ -_ 02.05.2006)

குறிப்பு : சிந்துசமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமே என்று பொய்ப் பிரச்சாரம் செய்யும் பார்ப்பனர்களுக்கு இந்த ஆதாரம் மரண அடியாகும்.

 

– தமிழாலயம் – மார்ச் – ஏப்ரல் – 2010

 

«««

 

சிந்துச் சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகமே!

கல்வெட்டு ஆய்வாளர் அய்ராவதம் மகாதேவன் உறுதி

சிந்துச் சமவெளி நாகரிகம், திராவிடர்களின் நாகரிகம் என்பதை, ரிக் வேதத்தின் வழியாக, பிரபல கல்வெட்டு ஆய்வாளர் அய்ராவதம் மகாதேவன் விளக்கினார். சென்னை, தரமணி ரோஜா முத்தையா ஆராய்ச்சி மய்யத்தில், சிந்துச் சமவெளிக் குறியீடுகளை விளக்கும், ‘டிராவிடியன் ப்ரூஃப் ஆஃப் தி இண்டஸ் ஸ்க்ரிப்ட் வையா தி ரிக் வேதா’ என்ற புத்தகத்தின் வழியாக, அய்ராவதம் மகாதேவன் அளித்த விளக்கம்:

சிந்துச் சமவெளி முத்திரைகளைத் தொடர்ந்து ஆராய்ந்து, அவற்றை அடையாளம் கண்டால், ஒன்றுக்கொன்று தொடர்புடைய, திராவிட மொழியின் அர்த்தங்கள் கொண்டதாக உள்ளன என்பதை அறிய முடிகிறது. அவை, தொல் திராவிட வடிவங்களே என்பதும் உறுதியாகிறது.

சிந்துச் சமவெளி முத்திரைகளை வாசிப்பதன் மூலம், சிந்துச் சமவெளி மரபுகள், இரண்டு நீரோடைகளாகப் பிரிந்துள்ளதாக சான்றுகள் அறிவிக்கின்றன. அவை, முந்தைய திராவிட மரபின் வேர்கள், பண்டைய தமிழகத்திற்குள்ளும், சிந்துச் சமவெளியிலும் இருப்பதை, சிந்துவெளி முத்திரைகள் உறுதிப்படுத்துகின்றன.

பாண்டியர்களின் மூதாதையர்கள், சிந்துச் சமவெளியில் வணிகத்தில் ஈடுபட்டவர்களாக இருந்திருக்கலாம். அவர்கள், தெற்கு நோக்கி நகர்ந்து, திராவிட மொழி பேசியிருக்கலாம். குறிப்பாக, பண்டைத் தமிழ் பேசியவர்களாக இருந்திருக்கலாம். முந்தைய இந்திய _- ஆரியப் பண்பாட்டுக்குள் உள்ள (ரிக் வேதம்) வார்த்தைகள், சிந்துவெளியில் இருந்து, கடன் மொழியாக நுழைந்திருக்கின்றன. ரிக் வேதத்தில் வரும், ‘பூசன்’ என்ற கடவுளின் பெயர், சிந்துவெளி மக்களிடம் இருந்து எடுக்கப் பட்டதாக அறிய முடிகிறது. சிந்துச்சமவெளி நாகரிகம், முன் வேதப் பண்பாட்டை விட, காலத்தால் மிக முந்தையது என்பது, இதனால் விளங்குகிறது. சிந்துச்சமவெளி குறியீடுகளுக்கும், பண்டைத் தமிழ்ச் சொற்களுக்குமான தொடர்பு அதிகம் இருப்பதை, சங்க காலத் தமிழ்ச் சொற்கள் மூலமாக அறியலாம். சிந்துவெளிக் குறியீடுகளில், மாற்றுதல், பெறுதல், சாலைகள் சந்திக்கும் தெருக்கள், வணிகன் உள்ளிட்ட குறிகளுக்கு இணையான வார்த்தைகள், தொல்தமிழில் உள்ளன. எனவே, சிந்துச் சமவெளி நாகரிகம், திராவிடர்களின் நாகரிகம் என்பதை அறிய முடிகிறது. இவ்வாறு, அவர் விளக்கம் அளித்தார்.

(‘தினமணி’ – 29.01.2015)

 «««

கல்வெட்டு

மொகஞ்சதாரோ, அரப்பா, தொல்நகர்களில் வாழ்ந்தோர் திராவிடரே!

மொகஞ்சதாரோ, அரப்பா தொல் நகர்களில் காணப்படும் சித்திர எழுத்துகளை முன்னரே பலர் ஆராய்ந்து அங்கு வாழ்ந்தோர் திராவிடரே எனச் சொல்லியுள்ளனர். 1980ஆம் ஆண்டில் அவ்விரு எழுத்துகளைப் புதுமுறை எந்திரங்களின் துணை கொண்டு நன்காராய்ந்து அவை திராவிடர் புழங்கியதே என்ற உருசியப் பேரரறிஞர் குணோரோசோவ் உறுதிப்-படுத்தியுள்ளார். தற்போது வால்ட்டர் பேர்செர்விசு என்ற அமெரிக்க மாந்தவியலறிஞரும் அவை திராவிடர்களின் மொழியே என்ற மறுவுறுதிப்படுத்தியுள்ளார். அவர்தம் ஆய்வுக் கட்டுரை அறிவியல்துறை அமெரிக்கன் (Scientific American) எனும் மாதவிதழில் (மார்ச்சு 1983) வெளிவந்துள்ளது.

(தமிழ்த்தென்றல் திரு.வி.க. நூற்றாண்டு விழா மலர்,

வெளியீடு: தமிழர் முன்னேற்றக் கழகம் – இலண்டன் – பக்கம் 11 )

«««

 ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் என்ன கூறுகிறார்?

“இந்திய வரலாற்றைப் பொறுத்தவரையில் ஆரியர்களின் வருகையுடன்தான் இந்திய வரலாறு துவங்குகிறது என்ற கருத்தைத்தான் ஒரு காலத்தில் நமது சரித்திர ஆசிரியர்கள் கூறிவந்தனர். ஆனால், ஆரியர்களுடையதைவிட உயர்வான ஒரு கலாச்சாரம் திராவிட மக்களுக்கிருந்தது என்றும், அது ஆரியர்-களுடையதைவிட பழமை வாய்ந்தது என்றும், தென் இந்திய வரலாற்று ஆசிரியர்கள் அக்காலத்திலேயே வாதாடினார்கள். 1922இல் கண்டுபிடிக்கப்பட்ட மொஹஞ்சதாரோ, ஹரப்பா என்னும் நகரங்களின் தடயங்களும் இவைகளை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று ஆசிரியர்கள் செய்துள்ள நிர்ணயிப்புகளும் திராவிடக் கலாச்சாரம் பற்றிய வாதத்தைப் பெருமளவுக்குப் பலப்படுத்தி யுள்ளது. இவ்வாறு ஆரிய சார்பினர், திராவிட சார்பினர் என்ற இரு பிரிவுகள் வரலாற்று ஆசிரியர்களிடையே தோன்றின.

சிந்து சமவெளி நாகரிகத்திற்கு ஆதாரமான விவசாயத்தில் விசேஷ தன்மைதான் இதற்குக் காரணமென்று கருத வேண்டியுள்ளது. இதர பல நதிக் கரைகளிலும் _ -பிற்காலத்தில் சிந்து சமவெளியிலும் _ உருவாகிய நீர்ப்பாசனக் கால்வாய்கள் சிந்துச் சமவெளி மனிதர்களுக்கு இருக்கவில்லை. அதற்குப் பதிலாக அணைக் கட்டினால் நதியிலிருந்து தண்ணீர் கிடைக்கக் கூடிய பகுதிகளில் மட்டும் அவர்கள் விவசாயம் செய்தனர். ஆகவே விவசாயத்திற்குத் தகுதியான நிலம் மிகக் குறைவாக இருந்தது.

குறைந்த அளவிலான இந்த விவசாயத்திலிருந்து உபரி தானியத்தை அடிப்படையாகக் கொண்ட சமுதாய கலாச்சார வாழ்க்கையின் எல்லை மிகக் குறுகலானது. புதிய தொழில்நுணுக்க முறைகளைப் பின்பற்றி உற்பத்தியைப் பெருக்கவோ, அதிகரித்த உபரியை அடிப்படையாகக் கொண்டு சமுதாய கலாச்சார வாழ்க்கையை உயர்த்தவோ சிந்துச் சமவெளி மனிதர்-களுக்கு ஊக்கமூட்டும் தூண்டுதல் இல்லாமல் இருந்தது. தலைமுறை தலைமுறையாக ஒரே விதமான விவசாயத்தையும் கைத்தொழில்களையும், வியாபாரத்தையும்தான் அவர்கள் செய்துவந்தனர். அந்தச் சமுதாயமும், நாகரிகமும் வளர்ச்சி குன்றியிருந்ததற்கு இது தான் காரணம்.

வளர்ச்சி குன்றி நின்றிருந்த இந்த சமூக கலாச்சார வாழ்க்கைகூட, ஆரியர்களுடைய முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்தது. விலங்கினத்தை வளர்ப்பதை அடிப்படையாகக் கொண்ட ஆரியர்களின் வாழ்க்கைக்கு சிந்துச் சமவெளி மக்கள் கட்டி உருவாக்கியிருந்த அணைகள் தடைகளாக இருந்தன. அணைகளை உடைத்து நதிகள் அவற்றின் போக்கில் விட்டால் மாத்திரமே ஆரியர்களுக்கு தங்களுடைய வளர்ப்பு மிருகங்களுடன் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்குச் செல்ல முடியும். அதனால் அவர் களுடைய யுத்த முயற்சிகளில் முதன்மையானது நதிகளை சுதந்திரமாக்குவதாக இருந்தது. (அவர்களுடைய வீர புருஷனான இந்திரன், விருத்திரனைக் கொன்றான் என்ற ரிக் வேத கதையின் வரலாற்று ரீதியான உள்ளடக்கம், சிந்து நதியின் மீது கட்டியிருந்த அணைகளை உடைத்தது பற்றியதாகும் என்று சில நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.)

அணைகளை உடைப்பதென்ற இந்த நாசவேலையின் மூலம் ஆரியர்கள் சிந்துச் சமவெளி நாகரிகத்தின் அடிப்படையையே தகர்த்துவிட்டார்கள். சிந்துச் சமவெளி நகரங்களைத் தீக்கிரையாக்கியதைவிடக் கொடுமையான ஒரு நாச வேலையாக இருந்தது இது. இத்துடன் சிந்துச் சமவெளி நாகரிகத்தின் அழிவு முழுமையாயிற்று.

(“இந்திய வரலாறு – ஒரு மார்க்சிய கண்ணோட்டம்’’ – ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்)

தோழர் பி.இராமமூர்த்தி இவ்வளவு விரிவாக ஆரியர் _ திராவிடர் பற்றியும், சிந்து சமவெளி நாகரிகம் குறித்தும் ஒரு நூலாகவே எழுதியிருக்கும் நிலையில் ஆரியப் பார்ப்பன வார ஏடான ‘துக்ளக்’ எழுதுகிறது (25.10.2017, பக்கம் 10) பி.ராமமூர்த்தி போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் எல்லாம் திராவிட நாட்டுக்கும் திராவிடம் என்ற சொல்லுக்கும் எதிரானவர்கள் என்று ‘துணிவாக’ பொய்யை எழுதுவதற்குச் சற்றும் கூச்சப்படாமல் திரித்து எழுதுவதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

திராவிடர்” பிரச்சினை எங்கும்! எங்கும்!!

செவ்வாய், 26 ஜூலை, 2022

பார்ப்பனர் - ஆரியர்களே என்பதற்குச் சான்றுகள்

திங்கள், 6 டிசம்பர், 2021

செம்மொழி : தமிழும் பிராகூயி மொழியும்


வெள்ளி, 8 அக்டோபர், 2021

நாங்கள் ஹிந்து அல்ல... திராவிடர்!இலண்டனில் நடைபெற்ற வழக்கு!


பிரிட்டிஷ் மகாராணி இங்கிலாந்தில் ஒரு சட்டத்தை நிறைவேற்றினார்.

இந்தியாவை ஆளும் மன்னர்கள், பாளையக்காரர்கள், ஜமீன்களுக்கு ஆண் வாரிசு இல்லை என்றால், மன்னர் மற்றும் அவருடைய மனைவி இறந்த பின்பு அந்த நிலப்பகுதி பிரிட்டிஷ் அரசுக்குச் சொந்தம் எனச் சட்டம் இயற்றினார்.

இந்நிலையில் இராமநாதபுரம் சமஸ்தானத்தின் மன்னர் கிழவன் சேதுபதி இறந்துவிட, ராணியான பர்வதவர்த்தினி தன் சமஸ்தானத்தை ஆள முத்துராமலிங்கம் எனும் ஒரு ஆண் பிள்ளையைத் தத்தெடுத்தார். சிறிது காலத்தில் ராணியும் இறந்துவிட, இராமநாதபுரம் சமஸ்தானத்தின் மன்னராக முத்துராமலிங்கம் பதவியேற்கிறார்.

இதை எதிர்த்து மதுரை மாவட்டத்தின் வெள்ளைக்கார ஆட்சியர், இலண்டனில் உள்ள மகாராணி  சார்பில் நோட்டீஸ் அனுப்புகிறார்.
இதற்கு மறுப்புத் தெரிவித்து, முத்துராமலிங்கத்தைத் தத்தெடுத்தது சரியே எனச் சென்னை ராஜதானி நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெறுகின்றனர்!

இங்கு தான் பார்ப்பனர்கள் தங்களின் 'விஷம' விளையாட்டை தொடங்கினர். மீண்டும் அந்த வழக்கு இராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு எதிராக இலண்டனில் உள்ள பிரிவியூ கவுன்சிலுக்கு எடுத்து செல்லப்படுகிறது. 

ஹிந்து சட்டப்படி, ஒரு விதவைப் பெண் தத்தெடுக்க வேண்டுமானால் மன்னர் இறக்கும் முன்பே மன்னரின் முன் பலருடைய சாட்சிகளின் முன்னிலையில் தத்தெடுக்க வேண்டும் என ஸ்மிருதிகள் சொல்கின்றன. எனவே ஹிந்து மதப்படி முத்துராமலிங்கம் பதவி ஏற்றது செல்லாது எனக் கூறினர். 

இந்த வழக்கு 1867 ஆம் ஆண்டு இலண்டன் பிரிவியூ கவுன்சிலில் நடந்தது. இராமநாதபுரம் சமஸ்தானம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் எங்களின் சட்டம் ஆரியன் ஸ்கூல் ஆப் லா-வின் (Aryan School Of Law) கீழ் வராது. எங்களுடைய சட்டம் திராவிடியன் ஸ்கூல் ஆப் லா-வின் (Dravidian School Of Law) கீழ் வரும் என வாதாடி வழக்கில் வெற்றி பெற்றார்கள். 

முத்துராமலிங்கம் VS மதுரை ஆட்சியர் வழக்கு என மூர்ஸ் ஜர்னல் (Moores Journal) எனும் இலண்டன் பத்திரிகையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கு இடம் பெற்றுள்ளது.  இந்திய ஒன்றியத்தின் சட்டப் புத்தகத்தில் "ஹிந்து குடும்பச் சட்டத்திலும்" இவ்வழக்கு இடம் பெற்றுள்ளது!

நன்றி!
வழக்கறிஞர் அருள்மொழி

செவ்வாய், 5 அக்டோபர், 2021

நாங்கள் இந்து மதம் அல்ல..! திராவிட மதம்!!



1860இல் ராமநாதபுரம் மன்னர் இறக்கிறார்.
அவருக்கு ஆண் வாரிசு இல்லை.
மன்னருக்கு ஆண் வாரிசு இல்லையென்றால் இராணி உயிரோடு இருக்கும் வரை அதை அனுபவிக்கலாம். 
அதன் பிறகு இங்கிலாந்து அரசின் கட்டுபாட்டுக்குள் வந்து விடும் என்பது அப்போதைய (பிரிட்டிஷ்) சட்டம்.

ஆனால் இராணியாரோ கணவர் இறந்த பிறகு 
ஒரு ஆண் மகனை தத்து எடுத்து 
“முத்துராமலிங்க சேதுபதி” என பெயர் சூட்டி 
இளவரசராக்குகிறார்.

ராணி இறந்த உடன் முத்துராமலிங்க சேதுபதி மன்னராகிறார். 

இந்நிலையில் மதுரை கலெக்டர் இதை எதிர்த்து வழக்கு தொடுக்கிறார். 

அந்த வழக்கு மேல்முறையீட்டில் இங்கிலாந்து உச்சநீதி மன்றத்தில்
(Privy Council, London) நடக்கிறது.

அங்கே கலெக்டர் தரப்பு “இந்து மதத்தில் ஒருவரை தத்து எடுக்க வேண்டும் என்றால் கணவர் இறப்பதற்கு முன்பே தன் மனைவியிடம் சொல்லியிருந்தால் மட்டுமே தத்து எடுக்க முடியும்.அது தான் இந்து மத சட்டம் (மனுஸ்மிருதி )” என்று வாதிடுகிறார்.

அதற்கு எதிராக மன்னர் சேதுபதி தரப்போ 

“நாங்கள் இந்துக்கள் அல்ல; நாங்கள் திராவிட இனத்தை சேர்ந்தவர்கள்.
எங்கள் திராவிட ஆகம விதிகளின்படி “பங்காளிகள் ஒத்துக் கொண்டால் போதும்; அந்த தத்தெடுப்பு செல்லும்”

என்று வாதாடி 1868 இல் வெற்றி பெறுகிறார்.

உச்சநீதி மன்றமும் “இந்து மதம் வேறு; திராவிட இனம் வேறு; திராவிட இனம் இந்து மதத்தில் அடக்கமான ஒரு பிரிவு அல்ல”

என்ற உண்மையை உணர்ந்து, வெள்ளைக்கார கலெக்டருக்கு எதிராகவே தீர்ப்பளித்தது; எவ்வளவு நேர்மையான தீர்ப்பு அது?

---வழக்கறிஞர் அருள்மொழி

வெள்ளி, 1 அக்டோபர், 2021

வெற்றுச் சொல்லா திராவிடம்?

 

கவிஞர் கலிபூங்குன்றன்

திராவிடர்திராவிடம் என்பது ஆரி யத்தின் அடி வயிற்றைக் கலக்கிக் கொண்டுள்ளதுஇதன் தன்மையைப் பார்ப்பனர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள்அதனால்தான் அந்தச் சொல்லின் வீரியத்தில் வீற்றிருக்கும் "அணுகுண்டின்ஆபத்தைப் புரிந்து கொண்டு அலறுகிறார்கள்.

"ஆரியமாதிராவிடமா?" என்று கேட்டால் நாங்கள் ஆரியத்தின் பக்கமே என்று கூறும் எட்டப்பர்களும் வழக்கம்போல் நம் இனத்தில் தலை எடுத்துள்ளார்கள்அதை இடறித் தள்ளுவோம்!

'தினமணிஎன்னும் ஏட்டில் (24.9.2021) "திராவிடம் என்பதோர் வெற்றுச் சொல்!"  எனும் தலைப்பில் நடுப்பக்கக் கட்டுரை ஒன்றை திருஜெயபாஸ்கரன் என்பவர் எழுதி இருக்கிறார்.

பாறாங்கல்லை விழுங்கியவன் பஞ்சு மிட்டாய் சாப்பிட்டதாகக் கூறுவதைப்போல - அண்டப் புளுகின் அப்பனாகவும் ஆகாயப் புளுகின் பாட்டனாகவும் ஒரு தகவல் இதோ:

"தமிழ்நாட்டில் 1920களில் 'தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்!' என்ற பெயரில் தீவிரம் பெற்றிருந்ததுஅரசியல் இயக்கம் ஒன்று 1944ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம்சேலம் மாநகரில் நடத்தப்பட்ட அவ்வியக்கத்தின் மாநாட்டுத் தீர்மானத்தில் அது 'திராவிடர் கழகம்என்று பெயர் மாற்றம் பெற்றது.

அப்படியொரு தீர்மானம் மாநாட்டின் உணவு இடைவேளையின்போதுஒரு சிலரால் திட்டமிடப்பட்டுஅவசர அவசரமாக முடிவு செய்யப்பட்டதென்றும்அந்தத் தீர்மானத்தை மேடையில் நின்று படித்தவருக்கே அப்போது தான் அச்செய்தி தெரியும் என்கிற அளவுக்குஅது தந்திரமானதாக இருந்தது என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள்அரசி யல் ஆய்வாளர்கள்இதுதான் திராவிடம் என்பதோர் வெற்றுச் சொல்என்ற தலைப்பில் கட்டுரை எழுதிய 'வெத்து வேட்டுகுறிப்பிட்டுள்ளது.

அரசியல் ஆய்வாளர்கள்  குறிப்பிடுகிறார்களாம்யார் அந்த அரசியல் ஆய்வாளர்கள்குறிப்பிட ஏன் தயக்கம்இப்படி ஆதாரமின்றி 'அத்திரிபாட்சா கொழுக்கட்டைஎன்ற ரீதியில் அவாள் எழுதுவது வழமைதான்.

புகழ் பெற்ற "அண்ணா துரை தீர்மானம்என்பது அவர்களுக்கு அவ்வளவு அலட்சியமாகப் போய் விட் டதுஅந்தத் தீர்மானம் தந்தை பெரியாரிடம் அண்ணா அவர்கள் மாநாட்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே தங்கி தந்தை பெரியாராலும் தீட்டப்பட்ட ஒன்று.

இரு நாள் நடைபெற்ற சேலம் மாநாட்டில் தீர்மானங்கள் விஷயாலோசனைக் கூட்டத்தி லும் விவாதிக்கப்பட்டன என்ற வரலாறு எல்லாம் தெரியாமல்இடைவேளை நேரத்தில் அவசரகதியில் நிறை வேற்றப்பட்டதாக எழுதுவது எல்லாம் அசல் போக்கிரித்தனம் அல்லவா?

அக்கிரகாரப் பேர்வழி களின் எடை மேடையின் கண்ணோட் டத்தில் அண்ணா அவர்கள்கூட சாதாரணமானவர்தானோபல்லாயிரக்கணக்கானோர் திரண்ட ஒரு மாநாட்டில் அவசர அவசரமாக உணவு இடைவேளையின் போது நிறை வேற்றப்பட்டது என்றும்தீர்மானத்தைப் படித்தவருக்கே அப்போதுதான் அந்த செய்தி தெரியும் என்றும் எழுதுகிற அளவுக்குச் செல்லுகிறார்கள் என்றால்இவர்கள் வேறு எதைத்தான் திரித்து எழுதத் தயங்குவார்கள்?

அண்ணா என்றாலே 'தினமணிவட்டாரத்துக்கு ஒவ்வாமை எப்போதுமே உண்டு.

"முடிவை மாற்றுங்கள்என்பது தினமணியின் தலையங்கம் (6.5.2020) அதில் ஆச்சாரியர் பெயர் வரும் போதெல்லாம் ராஜாஜி ராஜாஜி ராஜாஜி என்று மூன்று முறை குறிப்பிட்டு ஆராதனைஆனால் அதே தலையங்கத்தில் அண்ணா என்று எழுதிட மனம் வரவில்லைஅண்ணாதுரை - எம்.ஜி.ஆரைக் குறிப்பிடும் இடங்களிலோ எம்.ஜி.இராமச்சந்திரன்.

இதற்குப் பெயர்தான் ஆரியம் - திராவிடம் வேறுபாடு என்பது.

"எது எப்படி இருப்பினும் 'திராவிடம்', 'திராவிடர்', 'திராவிட நாடுஆகியவை எல்லாம் குழப்பத்திலும் சிக்கலிலும்பாதுகாப்பு உணர்விலும் தமிழுக்கும்தமிழர் களுக்கும் எதிரான ஏதோவோர் உள்ளுணர்விலும் கண்டறி யப்பட்ட வெற்று வாளாகவும் போலிக் கேடயமாகவும் வடிவமைக்கப்பட்டுதமிழ் நாட்டில் அரசியலில் இன்றளவும் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு இருப்பதை எவராலும் மறுக்க முடியாது"

இப்படியாக தன் முதுகைத்தானே தட்டிக் கொள்வதுடன் அவரே நான்கு வரிகளை கிறுக்கி விட்டுஎவராலும் மறுக்க முடியாது என்று கித்தாப்பு வேறு!

'தினமணி'யின் இந்தக் கூற்றுக்குத் 'தினமணியைக் கொண்டே சூடு கொடுத்து விடலாம்இதோ 'தினமணி':

"தமிழ் உள்ளிட்ட 82 மொழிகளை உள்ளடங்கிய திராவிட மொழிக் குடும்பம் 4500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என்று ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதுஅவற்றில் தமிழ்தான் மிகப் பழைமையான மொழி என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதுசமஸ்கிருதம் போல சிதைந்து அழியாமல்தமிழ்மொழி தொடர்ந்து செழுமையோடு பயன்பாட்டில் இருப்பதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது." ('தினமணி' 22.3.2018).

'தினமணியேதினமணியேதிரா விடம் என்பது வெற்றுச் சொல் என்று இப்பொழுது எழுதியதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டாம் - கருத்தை மாற்றிக் கொள்கிறோம் என்று கண்ணியத்தை எதிர்பார்க்கலாமா?

திராவிடம்திராவிடர் என்பதெல்லாம் தந்தை பெரியாரால் புதிதாகக் கற்பிக் கப்பட்டதில்லைஅதற்கென்று வர லாற்று ஆவணங்கள் வலிமையாக வளமையாகவே உண்டு.

மறுபடியும் 'தினமணிக்கேவரு வோம். 'தினமணி'யின் ஆசிரியர் திருஅய்ராவதம் மகாதேவன் "சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம்!" என்று அறுதியிட்டுச் சொன்னது வெற்றுச் சொல்தானா!

மேனாள் 'தினமணிஆசிரியர் அய்ராவதம் மகாதேவன்மீது இன்றைய 'தினமணிஆசிரியர் திருவாளர் வைத் தியநாதய்யருக்கு என்ன வஞ்சினமோ யாம் அறியோம்.

வரலாற்று ஆசிரியர்கள் என்ன சொல்லுகிறார்கள்?

திராவிடர்களை ஆரியர்கள் வென்று விட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும்கரடிகள் என்றும்ராட்சதர்கள் என்றும் எழுதிவைத்தார்கள்ஆனால்இந்தப்படி இழிவுபடுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தே (திராவிடர்களிடமிருந்தேபல நாகரீ கங்களை இந்தப் பிராமணர்கள் கற்றுக் கொண்டார்கள்”.

இது ஷோஷி சந்தர்டட் எழுதிய “இந்தியா அன்றும் இன்றும்” என்னும் புத்தகத்தின் 15-ஆவது பக்கத்தில் இருக் கிறது.

"ஆரியர்கள் தங்களால் தோற்கடிக்கப் பட்ட எதிரிகளாகிய திராவிடர்களைத் தங்களுடைய புத்தகங்களில் திராவி டர்கள் தஸ்யூக்கள் என்றும்தானவர்கள் என்றும்ராட்சதர்கள் என்றும் குறிப்பிட் டிருக்கிறார்கள்”.

ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறதுஏனெனில்ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்".

(இது சி.எஸ்சீனிவாச்சாரி எம்.., & எம்.எஸ்ராமசாமி அய்யங்கார் எம்.., ஆகிய சரித்திர போதகர்கள் எழுதிய “இந்திய சரித்திரம் முதல் பாகம்” என்னும் புத்தகத்தில் “இந்து இந்தியா” என்னும் தலைப்பில் 16, 17-ஆவது பக்கங்கள்)

"ஆரியர்களில் சமஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து வட இந்தியாவை அடைந்தார்கள்அங்கு தங்களைவிட முன்னேற்றமான திராவிடர்களைக்கண்டு அவர்களிடமி ருந்து பல நாகரீகங்களைக் கற்றுக் கொண் டார்கள்”.

இது எச்.ஜிவெல்ஸ் எழுதிய “உலகத் தின் சிறு சரித்திரம்” என்னும் புத்தகத்தின் 105-ஆவது பக்கம்.

"தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவின் தென்கிழக்கிலும்இலங்கையின் சில பாகத்திலும் வசிக்கும் ஆரியரல்லாத திராவிட மக்கள் ஆவார்கள்தமிழ் என்பது மேற்படியார்களால் பேசும் பாஷை”.

(சர்-ஜேம்ஸ்மர்ரே எழுதிய  அகராதி யின் பக்கம் 67)

தென்னிந்தியாவில் வசித்துவந்த ஆரியரல்லா தார்களையே - குரங்குகள் என்றும்அசுரர்கள் என்றும் ராமாயணக் கதையில் எழுதி ". வைக்கப்பட்டிருக்கிறது”.

இது ரோமேஷ் சந்திரடட் C.I.E.I.C.S  எழுதிய “புராதன இந்தியா” என்னும் புத்த கத்தில் 52-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

திராவிடர்கள் தங்கள்மீது படையெ டுத்து வந்த ஆரியர்களோடு கடும்போர் புரியவேண்டி இருந்ததுஇந்த விஷயம் ரிக் வேதத்திலிருந்து அநேக சுலோகங்களாக இருக்கின்றன."

இது டாக்டர் ரோமேஷ் சந்திர மஜும்தார் எம்., யின் “பூர்வீக இந்திய சரித்திரமும்நாகரீகமும்” என்னும் புத்த கத்தின் 22-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

ராமாயணக் கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திரா விடர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதைச் சித்திரித்துக் காட்டுவதாகும்”.

(பிசிதம்பரம்பிள்ளையின் 'திராவி டரும் - ஆரியரும்பக்கம் 24)

ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தபோது பல புதிய பிரச்சினைகள் கிளம்பினஇனத்தாலும்அரசியலாலும் மாறுபட்ட திராவிடர்கள் ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்டனர்திராவிடர்கள் நீண்டகால நாகரிகத்துடன் வாழ்ந்து வந்த படியால்இவர்களை விடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்ட ஆரியர்களுக்கும்திராவிடர்களுக்கும் இடையே விரிந்த பெரிய பிளவு ஏற்படட்து.

(ஜவகர்லால் நேருவின் Discovery of India பக்கம் 82)

இவர்கள் எல்லாம் வரலாற்று ஆசிரி யர்களே இல்லை என்று விதண்டாவாதம் பேசப் போகிறார்களா?

(காலப் பிழையோடுஇவர்களும் .வெ.ராபேச்சைக் கேட்டுக் குட்டிச்சுவர் ஆனவர்கள் என்கிற அளவுக்குப் போனா லும் போவார்கள் - புகைக்க புகைக்கப் புனை சுருட்டு ஊதுவதில் இந்த உஞ்சி விருத்திகளுக்கு இணை வேறு எவர்?)

இப்பொழுது 'தினமணி'கள் அடுத்த கட்டத்துக்கு வந்தாக வேண்டும்.

மனு தர்மத்தை திராவிடர் கழகம் கொளுத்தியதுண்டு - இப்பொழுது அதே வேலையை சிண்டைத் தட்டிக் கொண்டு செய்தாலும் செய்வார்கள்.

இதோ மனுதர்மம் பேசுகிறது:

மனுதர்மம் 10ஆவது அத்தியாயம் 22 மற்றம் 44 ஆவது சுலோகங்களில் திராவிடம் என்ற சொல் உள்ளது.

விராத்திய க்ஷத்திரியனுக்கு அவ்வித க்ஷத்திரிய ஸ்த்ரீயினடத்தில் சல்லன் பிறக்கிறான்அவனுக்கு மல்லன்நிச்சு விநடன்கரணன்கஸன்திராவிடன் என அந்தந்த தேசத்தில் வெவ்வேறு பெய ருண்டு. (அத்தியாயம் 10; ஸ்லோகம் 22)

பௌண்டரம்ஔண்டரம்திரா விடம்காம்போசம்யவநம்சகம்பாரதம்சீகம்கிராதம்தரதம்கசம் இந்தத் தேசங்களையாண்டவர்களைவரும் மேற் சொன்னபடி சூத்திரர்களாய் விட்டார்கள். (அத்தியாயம் 10; ஸ்லோகம் 44).

சிறீமத் பாகவதம் வேதவியாசம் எழுதிவேணுகோபாலாச்சாரி தமிழில் மொழிபெயர்த்துபாகவதம் பக்கம் 404இல் திராவிடம் குறிப்பிடப்பட்டுள்ளது.

'தினமணிதிருவாளர்கள் மனுதர்மத் தையும் சிறீமத் பாகவத்தையும் என்ன செய்யப் போவதாக உத்தேசம்?

தனக்குத்தானே கோலடிப்பது (Self Side Goal) என்பார்கள்அதனையும் திருவாளர் ஜெயபாஸ்கர் சாங்கோ பாங்கமாக செய்து முடித்து விட்டார்உண்மையைச் சொன்னால் அதில் முரண்பாடு கதவு திறக்க வாய்ப்பு இல்லைபொய்யென்று தெரிந்திருந்தும் ஓரிடத்தில் சொன்னால் கடைசி வரை அதைக் காப்பாற்றுவது முயற்கொம்பே!

ராபர்ட் கால்டுவெல்லில் ஆரம்பித்து மனோன்மணியம் சுந்தரனாரை உள்ளுக் குள்அழைத்து தேசிய கீதம் பாடல் எழுதிய நோபால் கவிஞர் இரவீந்திரநாத்தையும் துணைக்கழைத்து, "திராவிடம்எனும் நியாயத்துக்கு உண்மை வரலாற்றுக்கு முடிசூட்டு விழாவினையும் நடத்தி தனது திராவிடத்துக்கு எதிரான கருத்துக்கு முடிவுரை எழுதித் தீர்த்து விட்டாரேநமது ஆழ்ந்த இரங்கல்!

திராவிடத்தின் உண்மையை உறுதி செய்து கொள்ள வாக்கெடுப்பு நடத்தலாம் என்று இலவசமாக ஆலோசனை கூறுகிறது 'தினமணி!'. தினமணியேகூட நடத்தலாமேஅப்படியே ராமன் கோயில் கட்டுவதுஇந்து ராஜ்ஜியம்பூணூல் அணிவதுசங்கராச்சாரியார் கூறும் தீண்டாமை க்ஷேமகரமானதுஉயர்ஜாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு  (EWS) இவற்றுக்கெல்லாம்கூட வாக்கெடுப்பு நடத்துங்கள் வரவேற்கிறோம்.

திராவிடர் இயக்கம் தோற்றுவிக்கப் படுவதற்கு முன்பே "ஆதி திராவிட ஜனசபை"யை (1892) அயோத்திதாசர் தோற்றுவிக்கவில்லையாஇரட்டைமலை சீனிவாசன் "திராவிட மகாஜன சபையைஉண்டாக்கவில்லையா? (1894).

அதே இரட்டைமலை சீனிவாசன் 1906இல் தம்மால் தொடங்கப்பட்ட இதழுக்கு "ஒரு பைசா தமிழன்என்று பெயர் சூட்டினார்இது முரண்பாடல்ல - இரண்டும் ஒரு பொருளைக் குறிக்கின்றன என்பதுதானே இதன் பொருள்.

தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற பார்ப்பனர் அல்லாதார் இயக்கம்தான் திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம் பெற்றது.

1910 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பற்றி அயோத்திதாசர் வெளியிட்ட அறிக்கை என்ன கூறுகிறது?

"இத்தேச பூர்வ சரித்திரங்கள் ஆதாரங்களை சொல்லும் இத்தேசப் பூர்வ சரித்திரங்களைக் கொண்டும் பூர்வக் குடிகளை  ஜாதி பேதமுள்ள இந்துக்களினின்று பிரித்துஜாதி பேதமற்ற திராவிடர்கள் என்றே எழுதும்படியான உத்தரவளிக்க வேண்டுகிறோம்என்று கூறிடவில்லையா? ("அயோத்தியதாசர் சிந்தனைகள்" - தொகுதி 1 பக்கம் 367-368)

திராவிட நாகரிகம் குறித்து மறை மலை அடிகளார் சென்னையில் சொற் பொழிவாற்றவில்லையா? (1913)

டாக்டர் நடேசனார் திராவிட சங்க விடுதியை தோற்றுவித்ததும் (1913) திரா விடர் இல்லம் என்ற விடுதியையும் தோற்றுவித்தது எதற்காக? (1916)

கல்லூரிகளில் படிக்க வேண்டும் என் றால் சென்னைக்கு வர வேண்டும்வசதி வாய்ப்புள்ள பார்ப்பனர் அல் லாத மாணவர்கள்கூடத் தங்கிப் படிக்க வசதியில்லைபெரும்பாலும் பார்ப்பனர் களால் நடத்தப்படும் உணவு விடுதிகளில் 'சூத்திரர்கள்' 'பஞ்சமர்கள்என்று கருதப் பட்டவர்கள் எடுப்பு சாப்பாடு முறையில் உணவருந்த முடியுமே தவிரஉள்ளே அமர்ந்து சாப்பிட முடியாதுஇந்த நிலையில் டாக்டர் நடேசனாரின் திராவிட விடுதி இல்லம் (சென்னை திருவல்லிக்கேணிஎத்தகைய தாக்கத்தை உண்டாக்கியது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டாமா?)

சென்னை நகர ஓட்டல்களில் பஞ்சமர்களும்நாய்களும்பெரு நோய்க் காரர்களும் நுழையக் கூடாது!" (குடிஅரசு 3.5.1936) என்ற அறிவிப்புப் பலகைகள் இருந்தன என்பது எதைக் காட்டுகிறது?

டாக்டர் நடேசனாரின் 'திராவிட விடுதி இல்லம்என்ற விடுதியில் தங்கிப் படித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் யார் யார் தெரியுமா?

இரயில்வே நிலையங்களில் பிராம ணர்கள்இதராள் சாப்பிடும் இடம் இருந் ததும்அது தந்தை பெரியாரின் எதிர்ப்புக் குரலால் டாக்டர் இராமசாமி முதலியார் இரயில்வே போர்டு உறுப்பினராக இருந்த போது ஒழிக்கப்பட்டதெல்லாம் தெரியுமா?

ஆர்.கேசண்முகம் (பிற்காலத்தில் ஒன்றிய நிதி அமைச்சர்பாரிஸ்டர் ரெங்கராமானுஜநாயுடுடி.எம்நாரா யணசாமிஎஸ்.ஜிமணவாளராமா னுக்கு (பிற்காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள்சுப்பிரமணிய நாடார் (பிற்காலத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிசடகோப முதலியார் (பிற்காலத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர்). இவர்களுக்கெல்லாம் அடைக்கலம் கொடுத்தது திராவிடர் இல்லம்.

திராவிடன் என்பது ஒரு கோட் பாட்டுத் தத்துவம் என்பது இன்னும் புரியவில்லையாஇல்லை புரியாதது போல வேடம் கட்டிஆட்டமா?

அறிஞர் அண்ணா அவர்கள் மாநிலங் களவை உறுப்பினராக சென்றபோது தனது கன்னிப் பேச்சில் "I belong to Dravidian Stock" என்று சொன்னதும்அதையே சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு முத்து வேல் கருணாநிதி அவர்களும்  தற்போது முழங்கியதும் கூடவா தெரியாது.

நாடாளுமன்றத்தில் பதவிப் பிர மாணம் எடுத்த தமிழ்நாடு உறுப்பினர்கள் "பெரியார் வாழ்க!" "திராவிடம் வெல்க!" என்று முழக்கமிடவில்லையா?

இந்த உணர்வுகளின் அதிர்வு அலைகளால் தாக்கப்பட்ட பார்ப்பனர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்அதன் ஆத்திர ஓசைதான்ஆற்றாமையின் கூக்குரல் தான் தந்தை பெரியார் பற்றியும்திராவிடம் பற்றியும்தினமணி வகையறாக்களின் வெளிப்பாடு!

திராவிடம் வெல்லும் - நாளை வரலாறு அதனைச் சொல்லும்!

வாழ்க பெரியார்!

வெல்க திராவிடம்!