செவ்வாய், 5 ஜூலை, 2016

திராவிடர்கள் யார்?


சில பார்ப்பன அடிமைகள் ‘திராவிடர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்?’ என்று தெரிந்தோ, தெரியாமலோ கேட்கிறார்கள். பார்ப்பானை தவிர்த்த மற்ற மக்களெல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாசாரப்படி கூறுகிறோம். உதாரணமாக முஸ்லீம் ஒருவரை இரத்தப் பரீட்சை செய்து பார்த்தால், நமக்கும் அவருக்கும் பேதம் இருக்காது. அவன் முன்பு நம்மவனாக இருக்கலாம். ஆனால், கலாசாரப்படி முஸ்லிம் என்கிறான், பார்ப்பானை ஏன் ஆரியன் என்கிறோம்? ஆரிய கலாசாரம் வேறு, அவன் பூணூல் போட்டுக் கொள்கிறான். ஆரியர்கள் மற்றும் ஆரியக் கடவுள்கள், இதிகாசங்கள், சாஸ்திர புராணங்கள் வேறு. ஆனால், இவற்றையெல்லாம் நம் தலையில் கட்டினான். அவன் வேறு ஜாதி, பிறப்பு; நாம் வேறு ஜாதி, பிறப்பு என்ற முறையைப் புகுத்தினான்.

தீண்டாமை ஒரு வழக்கம். தீண்டாமை ஒழிந்த தினமே பறையன் மாறிப் போவானா? சக்கிலி இல்லாமற் போவானா? தீண்டாமை ஒழிந்து விட்டதால் சக்கிலி வேறாய் விட்டானா? நமக்குத் தீண்டாமை இல்லையென்பதாலேயே நமக்கு சூத்திரப் பட்டம் போய் விட்டதா?

டில்லி ஆட்சியின் அரசமைப்புச் சட்டத்திலே ஒரு வார்த்தை ‘ஜாதி ஒழிக’ என்று இருக்கிறதா?

24.02.1954 அன்று அதிகாரப்பட்டியில் தந்தை பெரியார் ஆற்றிய உரையின் ஒரு பகுதி (‘விடுதலை’ 28.02.1954)
-உண்மை,1-15.6.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக