திங்கள், 13 மார்ச், 2017

ஆரியர்களின் வருகை


ஆரியர்களுடன் இரத்த உறவு கொண்ட அண்டை பிரதேசத்தைச் சேர்ந்த ஈரானியர் சவை ஹ என உச்சரித்து அதனால் “சப்த சிந்து” பிரதேசத்தில் குடியேறி வாழ்ந்து கொண்டிருந்த தமது சகோதரர்களின் நாட்டை அவர்கள் "ஹப்த ஹிந்து" என்று அழைத்து வந்தனர். அதன் சுருக்கமே ஹிந்த் என்பது அக்காலத்தில் மேற்கத்தய நாடுகளில் சிறந்து விளங்கிய கிரீஸ் நாட்டினன் 'ஹ' வை ‘அ’ என்று உச்சரித்து வந்தனர். அதனால் ஹந்து இந்து இந்த்' ஆகிவிட்டது. இன்று எங்கும் நமது நாடு இதே பெயரில்தான் வழங்கப்படுகிறது. ரிக் வேதத்தில் சப்த சிந்து என்று பல இடங்களிலும் காணப் படுகிறது. அது சில இடங்களில் ஏழு நதிகள் பாயும் பிரதேசம் என்ற அர்த்தத்திலும் வருகிறது. அந்தச் சமயத்தில் இனக்குழுக்களின் பெயரிலேயே நாடுகளின் பெயரும், ஜனபதங்களின், ராஜ்ஜியங்களின் பெயரும் அமைந்து வந்தன. இதனால் அக்காலத்தவர்கள் நாட்டையும், ராஜ்ஜியத்தையும் பன்மையிலேயே குறிப்பிட்டனர்.

ஆரியர்கள் வெளியிலிருந்து இந்தியாவிற்குள் வந்தனர். இதை ஒப்புக் கொள்ளாவிட்டால் சில பிரச்சனைகள் தோன்றிவிடும். ஆரியர்கள் மொழியும், மேற்கு நாடுகளில் வாழும் மக்களின் பல்வேறு மொழிகளும் ஒரே மொழிக் குடும்பத்தை சேர்ந்தவையாக உள்ளன.

வெளியே இருந்து வந்தனன் என்பதை ஒப்புக் கொள்ளாவிட்டால் மேற்கு நாடுகளில் மக்கள் இந்தியா விலிருந்து சென்றவர்கள் என்று கருத வேண்டிவரும்.

இதனால் மேலும் பல பிரச்சினைகள் தோன்றும் அவற்றுக்கு தீர்வு காண்பது மிகவும் கடினம். ஆரியர் குறித்தும், இந்தோ-அய்ரோப்பிய மொழிகள் குறித்தும் மற்ற விஷயங்கள் குறித்தும் போதிய கவனம் செலுத்தாத காரணத்தாலேயே, இப்படிப்பட்ட கருத்து தோன்றுகிறது. இதனாலேயே நம் நாட்டு வரலாற்றாசிரியர்கள் சிலர் கலியுகம் மகாபாரதக்காலம் எனக் கணக்கிட்டு சரித்திரத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாள் கொண்டு செல்ல முயலுகின்றனர். உண்மையில் ஆசியா மைனரில் ஹித்திதரும், கிரீஸில் கிரேக்கர்களும் ஈரானில் ஈரானியரும் பிரவேசித்த காலத்தை ஆராய்ந்தால் இந்தியாவில் ஆரியர் கி.மு. 1500-க்கு முன் நுழைந்திருக்க மாட்டார்கள் என்பது புரியும்.

'ரிக் வேதத்தை இயற்றிய மிகப்புகழ்பெற்ற ரிஷிகளான பரத்வாஜரும், வசிஷ்டரும், விஸ்வாமித்தரரும் வெகு காலத்திற்கு பிறகு குறைந்தது 300 ஆண்டுகளுக்கு பிறகு இருந்தவர்கள்தாம் (வளரும்)

- ராகுல சாங்கிருத்தியாயன்

-விடுதலை ஞா.ம.11.3.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக