வெள்ளி, 11 டிசம்பர், 2020

சிந்து சமவெளி நாகரிக மக்கள் மாடு,பன்றி போன்றவற்றின் இறைச்சியை உண்டுள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்தியாவில் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களை பண்பாடு,பாரம்பரியத்திற்கு எதிரானவர்கள் என்று தாக்கும் போக்கு அதிகரித்து வரும் சூழ்நிலையில் இந்திய பண்பாட்டின் தொடக்கமாக கருதப்படும் சிந்து சமவெளி நாகரிக மக்கள் மாடு,பன்றி போன்றவற்றின் இறைச்சியை உண்டுள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி படிக்கும் அக்‌ஷ்யேதா சூரிய நாராயணன் என்பவர் தனது Lipid residues in pottery from the Indus Civilisation in northwest India என்ற தலைப்பில் ஒரு ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரின் ஆய்வானது ஹரப்பா மற்றும் அன்றைய சிந்து சமவெளி நாகரிக மக்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்து கிடைத்த பொருள்களை கொண்டு நடத்தப்பட்டுள்ளது.


 
இவரது ஆய்வில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்திய கால்நடைகளில் 50% இருந்து 60% வரை மாடுகளாகவே இருந்துள்ளது. வெறும் 10% மட்டுமே ஆடுகளை பயன்படுத்தி இருக்கிறார்கள். சிந்து சமவெளிகளில் கிடைத்துள்ள பண்டைய எலும்புகளில் அடிப்படையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அக்‌ஷ்யேதா தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் சிந்து சமவெளி மக்கள் அதிகம் மாட்டிறைச்சியை உண்டு இருக்கிறார்கள் என்றும் அதன் பின்பு ஆட்டிறைச்சியை அதிகம் உண்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் பன்றி, கோழி, முயல், இதர பறவைகளின் இறைச்சியையும் அவர்கள் உண்டிருக்கிறார்கள் என்ற தகவலையும் அந்த கட்டுரையில் கொடுத்திருக்கிறார். இதுவரை சிந்து சமவெளி மக்கள் உண்ட பயிர்கள், தானியங்கள் பற்றிய ஆய்வுகளே அதிகம் நடந்திருக்கும் நிலையில் தற்போது அவர்கள் உண்ட அசைவ உணவுகள் பற்றிய இவரின் ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.


 
இதற்கு முன்பு நடந்த ஆய்வில் சிந்து சமவெளி மக்கள் கத்திரிக்காய், மஞ்சள், பூண்டு, இஞ்சி போன்றவற்றை பயன்படுத்தியது தெரியவந்தது. அதை தொடர்ந்து வெளிவந்த ஆய்வில் சிந்து சமவெளி மக்கள் ஆடு, செம்மறி ஆடு மற்றும் சீஸ் மற்றும் பன்னீர் போன்ற பொருட்களை தயாரித்து வெண்ணெய் மற்றும் தயிர் போன்ற உணவு பொருட்களை பயன்படுத்தியதும் தெரியவந்தது.

இந்த ஆய்வை நடத்திய அக்‌ஷ்யேதா கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய முனைவர் ஆராய்ச்சி படிப்பை முடித்துவிட்டு தற்போது பிரான்ஸ் தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வருகிறார்.

சனி, 5 டிசம்பர், 2020

'தமிழாற்றுப்படை’ நூலில் திராவிடர் ஆய்வு

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

திராவிடத்தை ஏற்ற விடுதலை புலிகளும் ஈழமும்

 




தோழர் மனோஜ் அவர்களின்
வாட்ஸ் அப் பதிவு...
புலிகள் திராவிடத்தை ஏற்றார்களா ?? இங்குள்ளவர்கள் ஈழத்தமிழர்களை திராவிடர்களாக ஏற்பார்களா??
.- நாம் தமிழர் கல்யாணசுந்தரம்
*முதல்_படம்* - "பூர்வகுடி இலங்கை தமிழர்கள் கூட்டமைப்பு" என்ற அமைப்பு அன்று ஆட்சி செய்து கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஓர் கடிதம் எழுதியது,,,அந்த கடிதத்தில் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கையில் திராவிடர்கள் என அடையாளப்படு்த்திக் கொண்டனர்,,,
இந்த கடிதம் எழுதப்பட்டது 1940 ஆம் ஆண்டு,,,அதாவது தமிழ்நாட்டிலேயே திராவிடர் கழகம் உருவாகாத ஆண்டு,,,திராவிடர் கழகம் 1944 ஆம் ஆண்டு தான் உருவானது,,,,
*இரண்டாம்_படம்* - 1978 ஆம் ஆண்டு கியூபாவில் நடைபெற்ற தேசிய இன விடுதலை இயக்கங்களுக்கான மாநாடு நடைபெற்றது,,,அதில் பங்கு பெற்ற தமிழீழ விடுதலைப்புலிகள் (LTTE) தங்களை திராவிடர்கள் என்றே அறிமுகப்படுத்திக் கொண்டனர்,,,,
*மூன்றாம்_படம்*- தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆசான் என அழைக்கப்பட்ட ஆண்டன் பாலசிங்கம் அவர்கள் "போரும் சமாதானம்" என்ற புத்தகத்தை எழுதினார்,,, அதில் தங்களை திராவிடர்கள் என்றே அடையாளப்படுத்திக் கொண்டார்,,,,
இதற்கு நாம் தமிழரை சேர்ந்த ஈன,மான,ரோசமுள்ள யாராவது பதில் அளிப்பாளர்களா ??
உங்களின் வயித்துப் பிழைப்பிற்காக நீங்கள் ஆரியத்தின் காலை நக்கிப்பிழைக்க திராவிட எதிர்ப்பு அரசியல் பேசிவிட்டு போங்கள்,,,என்ன வெங்காயத்துக்கு புலிகளின் வரலாறையும்,ஈழத்தமிழர் வரலாற்றையும் நீங்கள் மாற்றுகிறீர்கள் ??

புதன், 2 செப்டம்பர், 2020

திராவிட இயக்கங்களில் பார்ப்பனர்களின் பங்கு

#திராவிட_இயக்கங்களில் #பிராமணர்களின்_பங்கு.

வ.ரா.1889-1951

திங்களூரில் ஆச்சாரமான ஐய்யங்கார் குடும்பத்தில் பிறந்தவர்.
முழு பெயர் #வரதராஜ_ராமசாமி.

காந்தி காங்கிரஸ் மேல் பற்று கொண்டவர். ஒருகட்டத்தில் 
இந்த நாட்டின் சாபக்கேடு சாதி என்று உணர்ந்தார். சாதிக்கு எதிராக தன் வாழ்வை அர்ப்பணித்தார்.
குல ஆச்சாரங்களை கைவிட்டார்.

குறிப்பாக #பூணுலைஅறுத்து_எறிந்தார்.
குடுமியை துறந்தார்.

சாகும் வரை சடங்குகளுக்கும் 
மூட பழக்கங்களுக்கும் 
எதிராக செயல்பட்டார். பெரியார் மீது பற்று கொண்டார். திராவிட இயக்கங்களை தூக்கி சுமந்தார்.

ஏ.எஸ்.கே. 1907-1978

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஆச்சாரமான ஐயங்கார் குடும்பத்தில் பெங்களூரில் பிறந்தார்.

1934ல் சென்னை வந்தவருக்கு சிங்காரவேலருடனும் 
தந்தை பெரியாருடனும் நட்பு ஏற்ப்பட்டது.

பொதுஉடமை சிந்தனை உடைய இவர் சாதிகொடுமைகள்
ஏற்ற தாழ்வுகளையும் கண்டு 
மனம் குமுறினார்.

விளைவாக பெரியாருடன் கைகோர்த்தார்.

#ஆவியூர்சீனிவாசகிருஸ்ணமாச்சாரி 
எனும் தன் பெயரை 
ஏஎஸ்கே என மாற்றிக்கொண்டார்.

இவருடைய ‘பகுத்தறிவின் சிகரம் பெரியார்’ என்னும் நூல் இந்திய தத்துவ ஞான மரபில் பெரியாரின் இடம் எப்படி மறுதலிக்க முடியாதது 
என்பதை விளக்க கூடியது.

ஏஎஸ்கே அண்ணன்கள் துரைசாமி 
சாதி கடந்த மணமும், 
பார்த்தசாரதி மதம் கடந்த மணமும் செய்து கொண்டனர்.

ஏஎஸ்கே மணம் செய்து கொள்ளாதவர்.
                   #ந_சுப்பிரமணியன்.1915-2013

சிதம்பரத்தில் ஆச்சாரியமான ஐய்யங்கார் குடும்பத்தில் பிறந்தார்.

சாதிக்கொடுமைகள் உண்டாக்கிய கோபம் தான் இவரையும் 
திராவிட இயக்கம் சாதி ஒழிப்பு பிரச்சாரத்தில் சேர்த்தது.

தந்தை பெரியார் ஆசிரியர் வீரமணி மீது மரியாதை கொண்டு இருந்தார்.

தான் இறந்தால் தன் உடலுக்கு அருகில் தானும் வீரமணியும் உள்ள படத்தை வைக்ககோரினார்.

#விபி_இராமன்.1932-1991

சென்னையில் ஆச்சாரமான ஐயர் குடும்பத்தில் பிறந்தவர் 

#வேங்கடபட்டாபிராமன் சட்டவல்லுனர் திராவிட இயக்கத்தின் பால் கொண்ட நாட்டமும் மாநிலங்கள் உரிமையில் கொண்டிருந்த அக்கரையும் 
திமுகவில் இணைத்தது.

திமுகவுக்கான சாசனத்தை உருவாக்க பேரறிஞர்அண்ணா தேர்ந்தேடுத்த மூவர் குழுவில் 
ஈ.வெ.கி.சம்பத், இரா.செழியன், இவர்களுடன் வி.பி.ராமனும் 
இணைந்து பணி செய்தார்.
                ***
#சின்னக்குத்தூசி.1934-2011

திருவாரூர் ஆச்சாரமான அய்யர் குடும்பத்தில் பிறந்தார்.

இயற்பெயர் #ரா_தியாகராஜன் இளமையிலே சாதிக்கு எதிரான உணர்வை பெற்றவர்.

திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியின் தொடக்க ஆண்டில் 
படித்த மாணவர்களில் ஒருவர்.

பெரியாரியத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவர். குத்தூசியின் எழுத்தால் கவரப்பட்டு தன் பெயரை சின்ன குத்தூசி என்று மாற்றிக்கொண்டார்.

பின்னாளில் திமுகவின் இதழியல் குரல் ஆனார். முரசொலியில் இவரின் எழுத்துக்களுக்கு தனி வாசகர் வட்டமே இருந்தது.
                 *****
நன்றி: திரு.Napa #fb Lakshmanan SK

m.facebook.com/story.php?stor…

#பெரியார்

(பிராமணர் என்ற சொல்லில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் பார்ப்பனர்கள் எதார்த்த நிலையை புரிந்து கொண்டு இவர்களைப் போல வாழ்ந்தால் நாம் மதித்து ஏற்றுக் கொள்வோம். எப்படியிருப்பினும் திராவிடர் கழகத்தில் உறுப்பினர் ஆக முடியாது. Isai Inban)

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

50 வருடங்களாக திராவிடம் தமிழுக்கு என்ன செஞ்சதுன்னு தெரியனும். அதானே?

👉 50 வருடங்களாக திராவிடம் தமிழுக்கு என்ன செஞ்சதுன்னு தெரியனும். அதானே?

1. எழுத்துச் சீர் திருத்தம்.

2. இலக்கிய பரவல்.

3. புதுக்கவிதை புரட்சி.

4. நாடகத் தமிழ் வளர்ச்சி.

5. பரவலாக்கப்பட்ட பழந்தமிழர் இலக்கியம்.

6. இந்தியை எதிர்த்து தமிழின் ஆளுமையை நிலைநாட்டல்.

7. உலகத் தமிழ் மாநாடுகள்.

8. புதுச்சொல் அறிமுகம்.

9. செம்மொழி அங்கீகாரம்.

10. தமிழிலே பெயர் பலகை கட்டாயம்.

11. வள்ளுவர் கோட்டம்.

12. வள்ளுவர் சிலை.

13. சிலப்பதிகார அருங்காட்சியகம்(பூம்புகார்).

14. தமிழ் எண்முறை உள்ளீடு வளர்ச்சி.

15.கணினி எழுத்துரு அறிமுகம்.

16. கீழடி அகழாய்வு முடிவுகளை அறிவித்தல்.

17. செம்மொழிப் பூங்கா.

18. இரயில் பயணச்சீட்டில் தமிழ் மொழியை இடம்பெற வைத்தல்.

19. தேசிய தேர்வுகளை தமிழ் மொழியில் நடத்த சட்டப்போராட்டம்.

20. தமிழ் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களுக்கு அரசு முறை விருதுகள்.

21. மாநிலப் பிரச்சனைகளை தீர்த்து நட்புறவு மேம்பட பெங்களூரூவில் திருவள்ளுவர் சிலை நிறுவுதல்.

22. அலி போன்ற பெயர்களை ஒழித்து திருநங்கை சொல் புகுத்தல்.

23. ஊனமுற்றோர் சொல்லுக்கு பதிலாக மாற்றுத்திறனாளிகள் பெயர் அளித்தல்.

24. விதவை என்ற பெயருக்கு பதிலாக கைம்பெண் என மாற்றுதல்.

25. தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகம் துவக்கம்.

26. ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி இருக்கைக்கு நிதி அளித்தல்.

27. பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயம்.

28. இன்ஜினியரிங் படிப்பில் தமிழ்வழியை அறிமுகம் செய்தல்.

29. தமிழ்வழியில் படித்தோருக்கு இட ஒதுக்கீடு.

30. செம்மொழி தமிழாய்வு நிறுவனம் துவக்கம்.

31. உலக தமிழாராய்ச்சி நிறுவனம்.

32. கோயில்களில் தமிழ்மொழியில் அர்ச்சனை.

33. தமிழ் வளர்ச்சிக்கு தனி அமைச்சகம் அமைத்தல்.

34. தமிழ் ஓலைச்சுவடிகளை கணினிமயமாக்கல்.

35. டால்மியாபுரம் என மாற இருந்த பெயரை கல்லக்குடி என்ற தமிழ் பெயரையே போராடி நிலைநாட்டியது.

36. மதராஸ் மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றியது.

37. மதராஸ் என்ற பெயரை சென்னை என மாற்றியது.

38. செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் துவக்கப்பட்டது.

39. தொல்காப்பிய பூங்க திறப்பு.

40. வாகன பதிவெண்களை தமிழ் மொழில் எழுத சட்ட அங்கீகாரம்.

41. இளம்அறிவியல் படிப்பபில் பயிற்று மொழி தமிழ்.

42. தமிழ் தாய் கோயில் கட்டப்பட்டது.

43. பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகம் துவக்கம்.

44. ஆசியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலத்திற்கு திருவள்ளுவர் பெயர் சூட்டல்.

45. கிறிஸ்து ஆண்டுக்கு பதிலாக திருவள்ளுவர் ஆண்டை அரசிதழில் வெளியிடல்.

46. கொரோணா காலத்தில் wfh, இணைய வகுப்பை போல 1999ஆம் ஆண்டு உலகத் தமிழ் இணைய மாநாடு.

47. பேருந்துகளில் திருக்குறள் கட்டாயம்.

48. பேரவையின் துவக்கத்தில் அவைத்தலைவரின் திருக்குறள் உரை.

49. குறிஞ்சி நில மரபணு பூங்கா துவக்கம்.

50. மொழிப்போர் தியாகிகளுக்கு ஓய்வூதியம்.

51. இந்தியாவில் முதல் முறையாக கணினி அறிவியல் பாடம் அறிமுகம். அதுவும் தமிழில்!!

இன்னும் பல சாதனைகள்
ஐம்பது ஆண்டுகால திராவிட ஆட்சியில் தமிழ் வளர்ச்சிக்கு செய்த ஐம்பத்தி ஒன்னு காரியங்களை அடுக்கிவிட்டேன்
தமிழை வஞ்சிக்காது வாழ வைத்த திராவிடத்தை போல வேறு இயக்கம் தான் உலகத்தில் உண்டோ...!

👉 ஆம். தமிழ், திராவிடத்தின் குடும்ப சொத்து. 
- கட்செவி வழியாக கிடைத்தது...

திங்கள், 13 ஜூலை, 2020

திராவிடரா? தமிழரா? பெரியாரின் பதில்

''திராவிடர்'' என்பதற்கு பதிலாக ''தமிழர்கள்'' என்று வைத்து கொள்ளலாமே என்று கேட்பவர்களுக்கு பெரியாரின் பதில் 👇

''தமிழர்'' என்று சொன்னாலே பார்ப்பனர்கள் தாங்களும் ''தமிழர்கள்'' தான் என்று கூறி அதில் சேர்ந்து கொள்கிறார்கள். நாங்களும் தமிழ்நாட்டில் பிறக்கிறோம், வளர்கிறோம் 
தமிழ் பேசுகிறோம். அப்படி இருக்கும் போது எப்படி எங்களை தமிழர்கள் அல்லர் என்று நீங்கள் கூற முடியும் என்று கேட்கிறார்கள். 

ஒரு காலத்தில் ''தமிழர்'' என்பது (திராவிட) பண்பு உள்ள மக்களுக்கு உரிய பெயராக இருந்திருக்க கூடுமானாலும் ஆனால் இன்று அது பொதுப் பெயராக மாறிவிட்டிருப்பதால் அம்மொழி பேசும் ஆரிய பண்புடைய மக்கள் யாவரும் தாமும் ''தமிழர்'' என்று உரிமை பாராட்ட முன் வந்து விடுகிறார்கள்.  அதோடு ஆரிய பண்பை நம் மீது சுமத்த அந்த சேர்க்கையை பயன்படுத்தி விடுகிறார்கள்.

அவர்களும் நாமும் ஒரு கூட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தான் நாம் 
சூத்திரர்களாகி விடுகிறோம். ஆக நம் கூட்டத்தில் இருந்து விலக்கி பேசத்தான் நாம் ''திராவிடர்'' என்று அழைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. நம்மில் ''தமிழன்'' என்று சொல்லும் ஏமாளிகளை தான் பார்ப்பனர்களால் ஏமாற்ற முடியுமே ஒழிய 'திராவிடர்' என்றால் அவர்களால் ஏமாற்ற முடியாது. 

தன்னையும் திராவிடன் என்று கூறிக்கொண்டு ஒரு பார்ப்பான் முன் வருவான் ஆனால் உடனே நீ திராவிடனா? திராவிடனுக்கு ஏது? பூணூல் அதை கத்தரித்து கொள் என்போம். அதற்கு துணிவனால் திராவிடருக்கு ஏது நாலு சாதி. நீ ''பிராமணன்'' அல்ல என்பதை ஒப்புக் கொள் என்று கூறுவோம். 
அதற்கு எந்தப் பார்ப்பானும் உடன்பட மாட்டான். அதற்கும் அவன் ஒப்புக் கொண்ட பிறகு அவனைப் பற்றி கவலை ஏது.  சாதி வேறுபாடுகள் உயர்வு தாழ்வுகள் ஒழிய வேண்டும் என்பதே நமது ஆசை.

சாதியை கைவிட்டு, சாதி ஆச்சாரத்தை விட்டு அனைவரும் ஒன்றே என்ற கொள்கையை ஏற்க முன் வரும் பார்ப்பானை நாம் ஏன் ஒதுக்கப் போகிறோம்?

விடுதலை 05.10.1948

புதன், 1 ஜூலை, 2020

டாக்டர்.தாரவாட் மாதவன் நாயர்!

திராவிட இயக்க வரலாற்றில் உருவான முதல் தளபதி.பிட்டி.தியாகராயரின் தளபதியாகவே செயல்பட்டவர்.அன்றைய காங்கிரசாராலும்-ஹோம்ரூல் இயக்கத்தினராலும் அதிக தாக்குதலுக்கு உள்ளானவர்.

சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.ஏ படித்து பின்பே சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து சில காலமே பயின்று மேனாட்டில் மருத்துவம் பயில விரும்பி 1889இல் இங்கிலாந்து சென்றார். 1894ல் எம்.பி.சி.எம் என்ற உயர்ந்த பட்டத்தைப் பெற்றார்.

அதன் பின் பிரைட்டன் நகரில் ENT மருத்துவராக பணியாற்றினார்கள்.1896இல் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் எம்.டி பட்டம் பெற்றார். பிரான்சின் பெருநகரான பாரிசில் செவி-மூக்கு-தொண்டை பற்றிய ஒராண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இக்காலக்கட்டத்தில் "கிரேக்க" மொழியைக் கற்றுக் கொண்டார்.

1897ல் சென்னைக்கு திரும்பி இத்துறையில் ஈடு இணையற்ற மருத்துவராக விளங்கினார்.

இவர் கம்பீரமான தோற்றமுடையவர்.ஆறரை அடி உயரமும் உயரத்திற்கேற்ற உடலமைப்பு கொண்டவர்.இவரது தோற்றத்தைக் கண்ட இந்திய அமைச்சர் "மாண்டேகு" வியப்படைந்து தமது இந்திய  டைரியில் இவரைப் பற்றி எழுதியிருக்கிறார்.

டாக்டர் நாயர் ஆண்டி செப்டிக் என்ற பெயரில் மாதஇதழை நடத்தினார்.அந்த இதழே இங்கே முதன் முதலில் தோன்றிய மருத்துவ இதழாகும்.

1914ல்  மெட்ராஸ் யுனைட்டெட் லீக் திராவிடர் சங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்பு  திருவில்லிக்கேணி உயர்நிலைப்பள்ளி ஒன்றில் டி.எம்.நாயர் ஆற்றிய உரையில் ஒரு வாக்கியத்தைக் கூறி தனது உரையை முடித்தார்கள்.

[ விழியுங்கள்!  எழுங்கள்!!  இன்றேல் என்றும் நீவீர் வீழ்ந்துபட்டோராவீர்!!!
-Awake, Arise or be forever fallen! - ]

இவர்தான் முதன்முதலில் சென்னை மெடிக்கல் ரிஜிஸ்ட்ரேசன் சட்டத்தை அரசினர் கொண்டு வர காரணமாக இருந்தார். 
  
பிறகு பிரிட்டிஷ் இந்திய அரசு அமைத்த தொழிலாளர் கமிசனில் இவரை உறுப்பினராக்கினார்கள்.கமிசன் பணிக்காக இந்தியா முழுவதும் சுற்றி தொழிலாளர்களின் நிலையையறிந்து  அறிக்கையை அளித்தார்.பிரிட்டிஷ் அரசின் இந்தியமைச்சர் இவருடைய கருத்தைத்தான் ஏற்றுக்கொண்டார்.

மாண்டேகு செம்ஸ்போர்டு அறிக்கை  சட்டம் ஆவதற்கு முன் லண்டன் சென்று " தாழ்த்தப்பட்டோருக்கும் பார்ப்பனரல்லாதோருக்கும் இட ஒதுக்கீடு தேவை என்று வற்புறுத்தினார்.இதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் கருத்து தெரிவிக்கத் தடை போட்டும் தளர்ச்சியடையாமல் ஆங்கிலேய அதிகாரிகளை தனிதனியாகச் சந்தித்து தடையை நீக்கி இங்கிலாந்து பார்லிமென்டில்  தனது கருத்துகளை எடுத்து வைத்தே சென்னை திரும்பினார்.

"நீங்கள் பார்ப்பனர்களுக்கு பதவிகளை வழங்குகிறீர்கள்.ஆனால் ஹோம்ரூல் இயக்கம் மூலமாக நீங்கள் போராடிக்கொண்டிருக்கும் ஜெர்மானியர்களிடம் பணம் பெறுகிறார்கள்"

"திராவிடநாடு திராவிடருக்கே" என்ற முழக்கத்தை எடுத்து வைத்தவாறு பிரிட்டிஷ் பாராளுமன்ற குழுவிடம் சாட்சியம் அளிக்க லண்டன் சென்ற நாயர் அதற்கு முன்பாகவே 17.7.1919 அன்று மறைந்து போனார்.

டாக்டர் டிஎம்.நாயரின் உடல் லண்டனில்  "கோல்டர்ஸ் கீரின்" என்ற இடத்தில் எரியூட்டப்பட்டது.

அவரின் பேச்சுரைகளில் தெறிக்கவிட்ட சில!

1] பாரிஸ்டர் காந்தி தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக கடவுள் படைப்பில் இதென்ன வித்தியாசம் ? இது தவறு என கிளர்ச்சி செய்தாராம். இந்திய நாட்டு வண்டவாளங்கள் எல்லாம் அறிந்த ஒரு வெள்ளையர் காந்தியிடம் போய் "உம் நாட்டில் ஆதிதிராவிட பறையர் எனவும் அவர்களை சேரியில் மட்டுமே குடியிருக்கவேண்டும்மெனவும்,கோயிலுக்குள் வரக்கூடாது எனவும், பார்ப்பனரல்லாதரை சூத்திரன் எனவும் வேசி மகன்கள் எனவும் சொல்லிக்கொண்டே இங்கு வந்து உபதேசமா எனக் கேட்டவுடன் காந்திக்கு மூஞ்சி செத்து போச்சாம்.

african colour -bar-all u hate !
aryan caste-bar- dooms our fate!

2] கடவுளின் தலையில்-கையில்-இடுப்பில்-பாதத்திலிருந்து பிறந்தவர்கள் என பல பிறப்புகளைச் சொல்லுகிறார்கள்.

ஆனால் இங்கிலாந்தில் பல ஆண்டுகளாக வைத்திய தொழில் செய்து வருகிற நான் இம்மாதிரியான டெலிவரி கேசுகளை கண்டதுமில்லை!கேட்டுமறியோன்!

3] எனது அருமை தலைவர் தியாகராயரின் சமூகமான நெசவாள திராவிடர்களுக்கு தேவாங்க பிராமணர் பட்டம் கொடுத்தனர்.அது போலவே பட்டுநூல் வியாபாரிகளை சௌராஷ்டிர பிராமணர்கள்-திராவிட பொற்க்கொல்லர்களை விஸ்வகர்மா பிராமணர்கள் என பிரமோசன் கொடுத்தார்கள்.

ஆனால் திராவிடருக்கு பெயரளவில் பட்டம் கொடுத்து சங்கராச்சாரி முதலான பீடங்களில் நம் தலைவர் தியாகராயர் முதல் வேறெந்த டூப்ளிகேட் பிராமணர்கள்  அமரமுடியாது.அமர ஆசைப்பட்டால் "ராமனால் தலையிழந்த சூத்திர சம்பூகன் கதிதான்!

3] ஆரிய இனம் எங்கெங்கு நுழைந்ததோ அங்கெல்லாம் பழங்குடி மக்களை ஒழித்துக்கட்டி அடிமையாக்கு அவர்களின் உல்லாசபுரி வாழ்கையை நிலைநாட்டியிருக்கிறார்கள் என்பதே வரலாறு கூறும் உண்மை.

இங்கிலாந்து நாட்டின் "கெல்ட்ஸ்" பழங்குடிகளை கூடியவரை ஒழித்த இன்று ஆளும் வர்க்கத்தின் முன்னோர்கள் கிறிஸ்தவ மத பரந்த மனப்பான்மை காரணமாக கலப்புமணம் மூலம் இரண்டறக் கலந்து விட்ட இனம்தான் இன்றுள்ள ஆங்கில இனம் என்ற மாஜி ஆரிய இனம்!

ஆனால் இந்நாட்டு ஆரியர்களோ காலணா கொடுத்து வாங்கிய பூணூலொன்றை மாட்டிக்கொண்டு இன்றும் பிறந்தமேனியாகவே  இருக்கிறார்கள். வெட்கம்!

அடுத்ததாக நூற்றாண்டைக் கடந்த அவரின்  "Mass" வாக்கியங்கள்.

1] சாதிகளால் சூழப்பட்ட இந்தியா ஒரு விபரீதமான நாடு.

2] பார்ப்பான் கெஞ்சினால் மிஞ்சுவான்.மிஞ்சினால் கெஞ்சுவான்.

3] சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும்,எத்தியோப்பியன் தன் நிறத்தை மாற்றிக்கொண்டாலும் பார்ப்பான் தன் பிறவிக்குணத்தை மாற்றிக்கொள்ளவே மாட்டான்.

நெருப்புப் பொறி பறக்கின்ற வகையில் அவர் பேசியதனாலே என்னவோ லண்டனில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் அவர் "மரணமடைய வேண்டும்" என பார்ப்பனர்கள் விசேச அர்ச்சனைகள் செய்தார்கள் என்பதே வரலாறு கூறும் உண்மை.இந்த நிகழ்வுகள் ஏ.டி.பன்னீர் செல்வம்-பெரியார்-அண்ணா-கலைஞர் வரையிலும் தொடர்ந்தது.

இப்படியெல்லாம் தன்னலமற்ற தனிப்பெரும் தலைவன்கள் இம்மக்களுக்காவே பாடுபட்ட வரலாறு திராவிட இயக்கத்திற்கு மட்டுமே உண்டு!

வாழ்க டாக்டர். டி.எம்.நாயர் புகழ்!
 - விஜய் கார்த்திக் (திராவிட ஆய்வு) முகநூல் பதிவு, 1.7.20