திங்கள், 7 நவம்பர், 2016

சிந்துவெளியில் மலர்ந்த தமிழ்!

மொழியியல் வல்லுநர் சாத்தூர் சேகரன், பல எம்.ஏ. பட்டங்கள் பெற்றவர். சிந்துவெளியில் மலர்ந்த தமிழ்பற்றிஅவர் சொல்லும் அரிய தகவல்கள் இதோ:
சான்று:
“1923-_24இல் ரெயில் பாதை போடுவதற்காக ஆங்கில கம்பெனியார், மொகஞ்சதரோ பகுதியில் வேலை செய்தபொழுது, அதிக நீள - அகல - உயரமான கனத்த செங்கல்களை பழைய கட்டட இடிபாடுகளில் கண்டனர். சதுப்பு நிலங்களில் பதித்திட அவை உதவும் என்று அறிந்தனர். பின்னர்தான் அவர்களுக்கே தெரிய வந்தது. இவை அழிந்துபோன சிந்துவெளி நாகரிகத் தின் இடிபாடுகள் என்று! இதற்குள் இந்திய அகழ்வாய்வுத் துறைக்கு செய்தி பறந்தது. இதன் பயனாக அரசு இதற்கான அகழ்வாய்வுத் துறையை வலுப்படுத்தியது.
இதன்பின் இரண்டாம் உலகப் போர் தொடங்கியதால், ஆய்வுப் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. ஆங்கிலேய அரசு போரில்தன் கவனத்தைச் செலுத்தியது. எனவே, கி.பி. 1936 முதல் 1945 முடிய பெரிய பணிகள் எதுவும் நடக்கவில்லை.
இந்தத் தேக்க நிலை, இரண்டாம் உலகப் போர் நின்றதுவும் முடியத் தொடங்கியது. இந்தியா -_ பாகிஸ்தான் இரு நாடுகளும் 1947இல் விடுதலை பெற்றன என்ற போதிலும் மக்களின் அறியாமையாலும், மதவெறியாலும் மூண்ட சில்லறைச் சண் டைகள் 1948_49 முடிய நடை பெற்று வந்தன.
பாகப் பிரிவினையில் - _ பாகிஸ்தான் வசம் 40 அகழ்வாய்வுக் களங்களும், இந்தியப் பகுதியில் வெறும் 10 அகழ்வாய்வுக் களங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், தொன்மையான நாடு இந்தியா என்ற காரணத் தால், இதற்குத் தொன்மை யான அகழ்வாய்வுக் களங்கள் கிட்டும் என்று அன்றைய பிரதமர் நேரு முதல் அகழ்வாய்வு அதிகாரிகள் அனைவரும் நம்பினர்.
2008_2009 ஆண்டளவில் இந்தியப் பகுதியில் தோண்டிய மொத்த அகழ் வாய்வுக் களங்கள் 1,000-க்கும் மேல் ஆகும். உலக நாகரிகங்களில் முதல் நாகரிகம் இந்திய (தமிழ்) நாகரிகம் என்ற கருத்துக்கு ஒவ்வொரு அகழ்வாய்வுக் குழிகளும் சான்றுகளைத் தந்து கொண்டே இருந்தன.
தொன்மை
மொகஞ்சதரோ, ஹரப்பா ஊர்களில் இருந்து 1,000_1,500 கிலோ மீட்டருக்கு அப்பாலும் சிந்துவெளி நாகரிகத்தை யொத்த பல அகழ்வாய்வுக் களங்கள் கிடைத்தன. அவற்றைச் சுற்றியுள்ள பல ஊர்களும் ஊர், பூர், புரி, புரம், கோட்டை, நகர், பாடி போன்ற தமிழ்ப் பாணிகளைக் கொண்டுள்ளன. எனவே, அகழ்வாய்வுக் களங்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள ஊர்களிலும் தமிழர்களே வாழ்ந்திருக்க வேண்டும் என்பதற்கு அசைக்க முடியாத சான்றுகளாக இவை திகழ்கின்றன.
தமிழகத்து அனைத்து நகர்களிலும் பெரிய தெப்பக் குளங்கள் உண்டு. வடக்கே செல்லச் செல்ல அவை சிறிய அளவாகி உள்ளன. சிந்துவெளி நாகரி கம் மட்டும்தான் உலகில் தொன்மை யான நாகரிகமாகிறது. சிந்துவெளி மட்டுமின்றி அகன்ற இந்தியாவிலும் 1,000 இடங்களில் நாகரிக நகர்களை அமைத்துள்ளான் தமிழன் என்ற செய்தி வெளியாகி உள்ளது.
வட இந்தியாவில் 2005-_2006 காலக் கட்டத்தில் 10க்கு மேற்பட்ட தோண் டப்பட்ட அகழ்வாய்வுகள் ஒரு பிரள யத்தையே தோற்றுவித்துவிட்டன. இங்கு கிடைத்த பல பொருட்களைச் சோதனை யிட்ட பொழுது - இங்கு நாகரிகம் தோன்றி 30 ஆயிரம் ஆண்டுகளைக் குறித்தன.  வேறு சில இடங்களில் நாக ரிகத் தொன்மை 33 ஆயிரம் ஆண்டு களுக்கும் அதிகமாக செல்கிறது.
பண்டைத் தமிழ்ச் சான்றோர் குமரிக் கண்ட காலம் கி.மு. 50 ஆயிரம் ஆண்டு களுக்கு முன் என்பர். தமிழர்கள் குமரிக்கண்ட மேரு மலைக் கடவுளை வணங்கினர். அது அழிந்த பின், இமய மலையை மேரு மலை  என்றனர். சிந்து வெளி நாகரிக மக்கள் சுமேரியப் பகுதியில் குடியேறியபொழுது - தம் சொந்த கடவுள் மலை நினைவாக அப்பகுதியைச் ‘சு-_மேரு’ என்று அழைத்தனர். அது ‘சுமேரியா’ ஆயிற்று. தமிழுக்கும், சுமேரிய மொழிக்கும் பல ஒற்றுமை உண்டு என்கிறார் அறிஞர் சதாசிவம். ஆம்..  சிந்துவெளி நாகரிகத்துத் தமிழர்களே சுமேரிய நாகரிகத்தைப் படைத்தனர்.
“சிந்து சமவெளி நாகரிகத்தை உருவாக்கியவர் யார்? என்பது தொன்று தொட்டு கேட்கப்படும் கேள்வியாகும். ஆனால், அங்கு சுக்கூர், மோகூர், ஜம்பு, பாலகோட், காந்தகோட், மூலைத்தானம், மான்கரை, ராஜன் நகர், மலைகண்டு, கண்டலாறு, கலாமாக்கம், மண்டி, சந்திரமான் போன்ற ஊர்ப் பெயர்களும் ஈதன், அணங்க மன்னன், அறவன், அந்தன், கோவன், திங்களன், நத்தன், உதயன், அதிகன், கூத்தன், மாசானன், சேயன், காளத்தி என மக்கள் பெயர் களும் உண்டு. இனியேனும் சிந்துவெளி நாகரிகம் தமிழருடையது என்று எவ்வித ஐயமும் இல்லாமல் உலகம் ஏற்றுக் கொள்ளும் என்று நம்பலாம்’’
நன்றி: ‘ராணி’ 14.11.2010
-விடுதலை ஞா.ம.23.1.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக