வெள்ளி, 6 ஏப்ரல், 2018

திராவிடர்- ஆரியர் மரபணு ஆய்வு முடிவு

நாடே இல்லாத நாடோடி கூட்டமாகிய ஆரியர்கள் வந்தேறிகளே !!
பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை ஆர்யர் என்ற சொல்லுக்கு பழைய ஈரான் மற்றும் வட இந்திய துணைக்கண்டத்தில் இருந்தவர்கள் என்றுதான் பொருள் கொள்ளப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் தான் ஆர்யர் என்னும் சொல்லுக்கு மொழியியல் ரீதியான அர்த்தம் கொடுக்கப்பட்டது – encyclopediyaa britanica வில் தெளிவாக பதியப்பட்டுள்ளது .

ஸ்ரீ கிறிஸ்ன சைதன்யர் , மற்றும் மொழியியல் வல்லுனர்கள் கருத்துப்படியும் ஈரானிய மொழியும், சமஸ்கிருத மொழியும் ஒரே மொழிக்குடும்பத்தை சார்ந்தவை . ‘ஈரன்‘ என்ற சமஸ்கிருத சொல்லுக்கு ‘பாலை நிலம்‘ என அர்த்தம். துருக்கியின் ஒரு பகுதியான ‘அனடோலியா‘ என்ற இடத்தின் வழிவந்த ‘ஈரண்‘ மக்கள் இந்திய மண்ணில் ‘ஆரண்‘ என்றாகி ‘ஆர்யன்‘ என மருவியிருக்கக்கூடும், ( துருக்கியில் வேதகால நாகரீகம்)

சமஸ்கிருதம் என்பது இந்தோ இரானிய மொழிகுடும்பத்தை சார்ந்த ஒரு மொழி
வில்லியம் ஜோன்ஸ் கல்கத்தா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்தார். இவர் அய்ரோப்பிய மொழிகள், ஈராணிய மொழிகள், இந்திய மொழிகள் ஆகியவற்றை ஒப்பிட்டு அவைகளை வகைப்படுத்தினார். அதன்படி பாரசீக மொழியும் சமஸ்கிருதமும் இந்தோஇராணிய மொழிக்குடும்பத்தை சார்ந்தவை என்று தெளிவாய் பறைசாற்றினார் .

ஆடு மாடு மேய்த்து வந்த நாடோடி கூட்டமாகிய ஆரியர்கள் இங்கே வாழ்ந்த திராவிடர்களுடன் போரிட வேண்டிய நிர்பந்தத்தால் போரிட்டு திராவிடர்களை அடிமையாக்கினர்.
தங்களுடன் போர் தொடுத்த திராவிடர்களை திட்டி , கேவலபடுத்தி , பழித்து தங்கள் வேதங்களில் எழுதி வைத்தனர் .-ரோமேஷ் மஜும்தார் (பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும் 22 ஆம் பக்கம் )

ஆரியர் அல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள் எனவும் தஸ்யுக்கள் , அசுரர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன .-Dr. ராதாகுமுத முகர்ஜி Phd (இந்து நாகரீகம் பக்கம் 69)
இன்னும்  இதே  கருத்துகள்  ரிக் வேத கால இந்தியா பக்கம் 151 , இந்திய சரித்திரம் பக்கம் 16 , இந்திய மக்கள் சரித்திரம் பக்கம் 41 , புராதன இந்தியாவும் இந்தியாவின் நாகரிகமும் பக்கம் 19 , ஆகிய பக்கங்களில் வரலாற்று நிபுணர்களால் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது .

ஒ இந்திரனே அந்த அசுரகூட்டத்தை துரோகிகளை தீமையே உருவானவர்களை அக்னி குண்டத்தில்  வைத்து நீர்பானையில் வேகவைத்து கொல். பிராமண துரோகிகளான அந்த பச்சை மாமிசம் தின்னும் அரக்கர்களை மீளா நரகத்தில் தள்ளி இம்சிப்பாயாக –ரிக் வேதம் 7 வது மண்டலம் 104 வது மந்திரம் , சுலோகம் 2

வழிப்போக்கர்களிடமிருந்து கொள்ளையடிக்கும் திருடனைப்போல், தெய்வமற்ற தாசர்களுடைய தமிழர்களுடைய செல்வங்களைத் திருடி இந்திரனைப்போற்றும் ஆரியர்களுக்கு அளிக்க வேண்டும். ஆரியர்களின் புகழையும் பலத்தையும் சிறப்பிக்க வேண்டும்”
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 103, பாடல் (சுலோகம்) 3,6

4. இந்திரா! ஆந்தையைப்போலும், ஆந்தைக் குஞ்சைப் போலும் உள்ள தஸ்யூக்களைக் தமிழர்களை கொல்லவும். நாயைப் போலும் கழுகைப்போலும் உள்ள தஸ்யூக்களைக் (சமணத்தமிழர்களை) நசுக்கி ஒழிக்கவும்.
மண்டலம் 7, அதிகாரம் (சூக்தம்) 104, பாடல் (சுலோகம்) 22

இந்திரன் ஆரியனுக்காக, மோசமானவர்களையும், கொடூரமானவர்களையும், ஒளி இழந்த நிறம் உடையவர்களையும் விரட்டி அடித்தான். கருப்பு நிறத்தை வெற்றி கொண்டதைப் பற்றி ரிக் -I-130-8 கூறுகிறது.

இன்னும் இதுபோல் எண்ணற்ற வசங்கள் உள்ளன

-அகில் டானேஷ், முகநூல் பதிவு, 4.4.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக