ஞாயிறு, 15 நவம்பர், 2015

ராட்சதர்கள் யார்?


இந்து மதப் பண்டிகைகள் பெரும்பாலும் அசுரனைக் கொன்றதாக - அரக்கனைக் கொன்றதாகக் கூறி, அவற்றின் அடிப்படையில் கொண்டாடப்படுகின்றன. மகாவிஷ்ணு எடுத்ததாகக் கூறப்படும் அவதாரங்களும் அசுரர்களைக் கொன்றதாகவே இருக்கின்றன.
தீபாவளி கதையை எடுத்துக் கொண்டாலும், நரகாசுரனைக் (அசுரனை) கொன்றதாகத்தான் கூறப்படுகிறது. அசுரர்கள், அரக்கர்கள், தஸ்யூக்கள், ராட்சதர்கள், குரங்குகள், கரடிகள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் யார்? வரலாற்றுப் பேராசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்?
தென்னிந்தியாவில் வசித்துவந்த ஆரியரல்லாதவர் களையே குரங்குகள் என்றும் அசுரர்கள் என்றும் ராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.
(ரோமேஷ் சந்திர டட் எழுதிய 'புராதன இந்தியா' எனும் நூல் பக்கம் 52)
ராமாயணக் கதை என்பது, ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திராவிடர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதைச் சித்திரித்துக் காட்டுவதாகும்
(சிதம்பரம் பிள்ளை எழுதிய 'திராவிடரும் ஆரியரும்' எனும் நூல் பக்கம் 24)
தென்னிந்தியாவில் இருந்த மக்களேதான் ராமாயணத்தில் குரங்குகள் என்றும் , அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டி ருக்கிறார்கள்
('விவேகானந்தரின் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் என்னும் நூலில் 'ராமாயணம் ' எனும் தலைப்பில் 587-589 ஆம் பக்கங்களில் இடம் பெற்றுள்ளது')
ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள் என்றும், தஸ்யூக்கள், அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆரிய ருக்கும் ஆரியரல்லாதவருக்கும் இருந்து கொண்டிருந்த அடிப்படையான பகைமையைப் பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம். இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும், அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகை மைக்குக் காரணமாகும்"
(டாக்டர் ராதாகுமுத முகர்ஜி எம்.ஏ., பிஎச்.டி., எழுதிய 'இந்து நாகரிகம்' எனும் நூல் பக்-69)
குழந்தைத் தொழிலாளர்களை ஊக்குவித்து அவர்கள் வாயிலடித்து, வயிற்றிலடித்து சுற்றுபுறத்துக்கு ஊறு விளைவிக்கும் ஊசி வெடிகளை வெடிக்கத்தான் வேண்டுமா?
உருண்டை வடிவிலான பூமியை பாயாகச் சுருட்ட முடி யாது என்பது பள்ளிக்கூட குழந்தைக்குக் கூட பழங்காலத் திலேயே இன்றையப் போரட்டம்தெரியுமே! பாயாகச் சுருட்டி னான்; அதைக் கொண்டு போய் கடலுக்குள் ஒளித்தான் என்றால் எப்படி நம்புவது? கடலும் பூமிக்குள் தானே இருக் கிறது. அறிவியல் வளராத காலத்து மூடக் கதைகளை இன்றும் பின்பற்றலாமா? இதற்கு பணம் , உணவுப் பொருள், சுற்றுச்சூழல், அறிவு இத்தனையும் வீணாக்குவதா? சிந்திப்பீர்!
இராமயணமும், மகாபாரதமும் இந்தோ ஆரியர் காலத்தையும் அவர்களுடைய வெற்றிகளையும், உள் நாட்டுச் சண்டைகளையும் பற்றிக் கூறுவதாகும்
(ஜவகர்லால் நேரு எழுதிய 'டிஸ்கவரி ஆப் இந்தியா 'நூல் பக்கம் 76-77)
இராமாயணம் என்பது தென்னிந்தியாவில் ஆரியர் பரவி யதைக் குறிப்பதாகும்
(ஜவகர்லால் நேரு அதே நூல் பக்கம் -82)
-விடுதலை,19.10.13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக