சனி, 14 நவம்பர், 2015

சென்னை மாகாணம் முதல் சட்டசபை - சாதனைகள்

- மா.பால்ராசேந்திரம்
ஒரு காலத்தில் உன்னதமான நிலையில் வாழ்ந்து, உலகிலே உயரிய இடம் பெற்றுத் திகழ்ந்து, இடைக் காலத்தில் எத்தரின் பிடியில் சிக்கிய தால் சீரழிந்து போன நாடு திராவிட நாடு என்பார் அண்ணா. அந்நாட்டின் பெருமையை, திராவிடரின் உரிமையை நிலைநாட்டிடக் கிடைத்த அரிய வாய்ப்பாக, 1919-ஆம் ஆண்டு அரசியல் சீர்திருத்தச் சட்டப்படி இந்தியச் சட்ட சபைக்கும், மாகாணச் சட்டசபைக்கும் 1920 நவம்பரில் அறிவிக்கப்பட்டது தான் பொதுத்தேர்தல்.
சென்னை மாகாணச் சபைக்கான மொத்த இடங்கள் 127. பொதுத்தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவோர் 65 பேர். அதில் 28 இடங்கள் பார்ப்பனரல்லா தார்க்கு என ஒதுக்கி 14 இடங்களே தந்தனர். மீதியைப் பொது இடங்கள் என்றனர். முஸ்லிம் 13 பேர், கிறித்தவர் 5 பேர், அய்ரோப்பியர், ஆங்கிலோ இந்தியர், பல்கலைக்கழகம் தலா ஒருவர், ஜமீன்தார் 6 பேர், அய்ரோப்பிய வர்த் தகர் 4 பேர், இந்திய வர்த்தகர் 2 பேர் எனத் தனித்தொகுதி மூலம் 33 பேர் தேர்வு செய்யப்படுவர். மீதி 29 பேர் கவர்னரால் நியமிக்கப்படுவார்.
இந்நாடு பொதுமக்கள் சிறையே
எவரும் நிகரென்ற பொதுவுரிமைதனைப்
பொந்தில் ஆந்தைநிகர் மன்னன் பறித்தான்
புரட்சிக்கவிஞரின் கூற்றுக்கேற்பப் பெரும்பான்மை மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. சொத்து உள்ளவர், வரி செலுத்துவோர், எழுதப்படிக்கத் தெரிந்தோர் மட்டுமே வாக்களிக்க உரிமை படைத்தோராய் அறிவிக்கப்பட் டது. அமையவிருக்கும் புதிய சட்ட சபையே பெண்கள் வாக்குரிமை பற்றி முடிவு செய்யும். சட்டசபைக் காலம் 3 ஆண்டுகள். கவர்னர், இக்காலத்திற்குள் சபையைக் கலைக்கலாம்; 5 ஆண்டு காலமாக நீடிக்கவும் செய்யலாம். சபைத் தலைவரை முதல் நான்காண்டுகள் அவரே நியமிப்பார். துணைத் தலைவர், உறுப்பினர்களால் தேர்வு செய்யப் படுவார். சபை உறுப்பினர்கள் கேள்வி கேட்க, தீர்மானம் கொண்டு வர, ஒத்தி வைப்புத் தீர்மானம் முன்மொழிய, மசோதா கொண்டுவர உரிமைகள் தரப்பட்டன. வந்தார்க்கோ நாமடிமை? வந்தார் பொருள் விற்கும்
சந்தையா நம்நாடு?
பூண்ட விலங்கைப் பொடியாக்க மாட்டீரோ!
புரட்சிக் கவிஞரின் புரட்சி வரி களுக்கேற்பத் தமிழர் சமுதாயத்திற்கு இடப்பட்ட ஆரியசனாதன விலங் கினைத் தகர்த்தெறிய நீதிக்கட்சித் தேர்தல் களத்தில் இறங்கியது. காங்கிரசு, தேர்தலைப் புறக்கணித்தது. எனினும், பார்ப்பனரின் வெற்றிக்குப் பாடுபட்டது. அண்ணல் காந்தியோ அரசியல் சீர் திருத்தத்தையே ஏற்க மறுத்து ஒத் துழையாமை இயக்கத்தை அறிவித்தார்.
பார்ப்பனர் காப்பாற்றப் படுதல் வேண்டும்
ஆள்வோர் பார்ப்பனர் சொற்படி ஆளவேண்டும்
ஆரியத்தை அடையாளங் கண்டு புதுவைக்குயில் பாடிய வரிகள். திரா விடர் அடிமைத்தளைத் தெறித்திடுமோ! பார்ப்பனர் நிலை இறங்கிடுமோவென அஞ்சிய ஹோம்ரூல் கட்சி வேட்பாளர் சர்.சி.பி.ராமசாமி அய்யர் சென்னைத் தேர்தல் கூட்டத்தில் துப்பாக்கியைக் காட்டிச் சுட்டு விடுவேன் என மிரட் டினார். தேர்தல் கள முதல் வன்முறை யாளரும் அவரே. அணில் தள்ளியா தென்னை சாயும்? எதிர்ப்பைப் புறந்தள்ளி நடந்து முடிந்த தேர்தலில் நீதிக்கட்சியில் சர்.பிட்டி.தணிகாசலச் செட்டியார் 4996 வாக்குகளும், ஓ.தணிகாசலச் செட்டியார் 4127 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். பார்ப்பனர் ஹோம்ரூல் இயக்கத்தில் சர்.சி.பி.ராமசாமி அய்யரும், டாக்டர் யூ.இராமராவும் முறையே 4933, 4408 வாக்குகள் பெற்று பெற்றி பெற்றனர். சர்.சி.பி.ரா. உறுப்பினர் பதவியை விடுத்து அட்வகேட் ஜெனரலாகக் கவர்னரால் முடி சூட்டிக் கொண்டார். தேர்தல் செலவை நாட்டில் முதன் முதல் வீணடித்த பெருமைக்குரியவ ரானார். தோற்றுப்போன நீதிக் கட்சியின் தோற்றுநர் சிகரம் டாக்டர் சி.நடேசனார் இடைத்தேர்தலில் வென்று 1921 மார்ச் 5 இல் சபை உறுப்பினரானார்.
நீதிக்கட்சி 98 இடங்களில் 63 இடங் களை வென்றது. நியமன உறுப்பினர் 18 பேர் ஆதரவாளராக வந்தனர். 81 பேரைக் கொண்ட கட்சியின் தலைவர் சர்.பிட்டி.தியாகராயரைக் கவர்னர் லார்டு வெலிங்டன் ஆட்சி அமைக்க அழைத்தார். அவரோ, பொன்னு வைக்கிற இடத்தில் பூவை வைத்தாற் போலப் பெருந்தன்மையோடு தென் னார்க்காடு மாவட்டச் சட்டசபைத் தொகுதியில் வென்ற கடலூர் வழக் கறிஞர் ஏ.சுப்பராயலு ரெட்டியாரைத் தலைமையேற்கச் செய்து முதல் அமைச்சர் ஆக்கினார். பி.ராமராய நிங்கார் (பனகல் அரசர்), வழக்கறிஞர் சர்.கே.வி.ரெட்டிநாயுடு இருவரும் அமைச்சர்களாயினர். கவர்னரால் சர்.பி.ராஜகோபாலச்சாரி சட்டசபைத் தலைவராகவும், சர்.கே.சீனிவாச அய்யங்கார் நிர்வாகக்குழு அய்வரில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டனர். சபைத்துணைத் தலைவராகத் திவான்பகதூர் கேசவப்பிள்ளை தேர் வானார். சட்டசபைச் செயலாளர்களாக சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியாரும், சர்.ஏ.ராமசாமி முதலியாரும், பாரிஸ்டர்.தங்கவேலுப் பிள்ளையும் பொறுப்பேற்றார்கள். நோய்வாய்ப்பட்ட முதல் அமைச்சர் 1921 திசம்பரில் காலமானார். பனாகல் அரசர் முதல் அமைச்சர் ஆனார். சர்.கே.வி.ரெட்டி நாயுடுவும், ஒரிசா பெர்காம்பூர்க்காரர் ஏ.பி.பாத்ரோவும் அமைச்சர்களாயினர். தமிழர் நாடாம் சென்னை, பிறமொழி பேசுவோரின் தலைமையிடமாகியது. சட்டசபையில் தமிழர் இல்லை; தெலுங்கர்களே என்ற மனக்குறை நீதிக்கட்சியினரிடம் இருந்தது.
இங்குத் தமிழ்மலை யாளம் தெலுங்கெனல்
எல்லாம் திராவிடம் தம்பி - இதில்
பொல்லாங்கொன் றில்லையே தம்பி!
என எண்ணும்படிக் குறைவிளக்கித் திராவிடர் சமுதாய இன்னல் களைந்தனர் நம் தலைவர்கள்.
அனைத்துச் சமுதாயத்தினருக்கும் அரசுப் பணிகளில் வாய்ப்பளிக்க வேண்டுமென முதல் அமைச்சர் 1921 ஆகஸ்டு 16இல் முதல் ஆணை பிறப் பித்தார். அதிகாரிகளோ ஆணையைக் கிடப்பில் போட்டனர்.
கல்வி, கண்ணென்ப வாழும் உயிர்க்கு அல்லவா!
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
ஏழுமையும் ஏமாப்பு உடைத்து
தலைமுறைகளை வாழ வைத்திடும் கல்வியை நல்கிடும் அரசுக் கல்லூரிகள் பார்ப்பனர் ஆதிக்கத்திலிருந்தன. அதனால் தமிழ் மாணவர் சேர்க்கை ஒடுக்கப்பட்டது. கல்லூரிதோறும் தேர்வுக் குழுக்களை அமைத்துத் தமிழர் மாணவர்களைச் சேர்ப்பிக்கச் செய்த பெருமை கல்வியமைச்சர் ஏ.பி.பாத் ரோவையே சாரும். அதற்கு முன்பு இன்டர்மீடியட் வகுப்பில் பார்ப்பனர் மாணவர் 1260 பேரும், பார்ப்பனரல் லாதார் மாணவர் 640 பேரும், பி.ஏ.வகுப்பில் பார்ப்பனர் 469 பேரும், அல்லாதார் 133 பேரும், எம்.ஏ.வகுப்பில் பார்ப்பனர் 157 பேரும், அல்லாதார் 20 பேரும், ஆசிரியர் பயிற்சி (எல்.டி) வகுப்பில் பார்ப்பனர் 1-4 பேரும், அல் லாதார் 11 பேரும் சேர்க்கப்பட்டார் களென்றால் பார்ப்பனரின் இழி குணத்தைக் காணமுடியுமே!
கொடியோர் பஞ்சமர் என்று
கூடப் பிறந்தோர்க்கிவர்
கடும்பேர் வைத்திட்டாரடி
தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் பஞ்சமர், பள்ளர், பறையர் என்னும் இழிபெயரால் அழைக்கப்படுவதை மாற்றி ஆதிதிராவிடர் என அழைத்திட டாக்டர் சி.நடேசனார் கொடுத்திட்ட விண்ணப்பத்தின் கீழ் 1922 மார்ச் 25 அன்று முறையான அரசு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டது.
தங்களால் தான் உலகம் இருக்கிறது. தங்களால் தான் மக்கள் வாழ முடி கிறது. மனித சமுதாயக்கூட்டு வாழ்க் கைக்குத் தாங்களே அஸ்திவாரமான வர்கள் என்பதை உணர வேண்டும் எனத் தந்தை பெரியார் அவர்கள் சொன்னதைப்போல நீதிக்கட்சியினர் ஆணைகள் பிறப்பித்துத் தங்கள் ஆட்சியால் திராவிடத் தமிழர்களைப் பெருமைக்குள்ளாக்கினர்.
15.01.1024 ஆணை எண் 116 / சட்டம் மற்றும் பொதுத்துறையில் தாழ்த்தப் பட்டோர் உட்பட எல்லா மக்களுக்கும் இடங்கள் வழங்கப்பட்டன.
தாழ்த்தப்பட்டோர்க்குப் பணி உயர்வு, உயர்பதவி நியமனங்கள் செய் யப்பட்டன. வீட்டு மனைகள், குடியி ருப்புகள், பள்ளிகள் ஏற்பாடு செய்யப் பட்டன. பள்ளிகளில் தடை ஏற்படின் புதிய ஏற்பாடும் செய்யப்பட்டன.
கோவை மாவட்ட வலையர், குறவர் குற்றப்பரம்பரையிலிருந்து மீட்க 25 நிதி உதவிகள் வழங்கப்பட்டன.
மீனவர் நலன் காக்கவும், கள்ளர் சமூக முன்னேற்றம் காணவும் லேபர் கமிசன் அமைக்கப்பட்டன.
மருத்துவப் பள்ளி, கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவிநிதி அளிக்கப் பட்டது.
அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமையை நிலை நாட்ட ஆண்டுதோறும் அறிக்கை கேட்டுப் பெறப்பட்டது.
தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கட்டணம் நீக்கப்பட்டது.
கல்லூரி, உயர்நிலைப்பள்ளிகளில் பிற்படுத்தப்பட்ட மாணவர்க்கு அரைச் சம்பளம் கட்டினால் போதுமெனச் சலுகை வழங்கப்பட்டது. எய்தற்கு அரிய இயைந்தக்கால் அந்நிலையே செய்தற்கு அரிய செயல், குறள்படி, சமூக அமைப்பை எப்படி மாற்றியமைக்கின் றோமோ, எப்படி உடைத்தெறிகின் றோமோ அதைப்பொறுத்தே அரசிய லும், பொருளாதாரமும் தானாகவே மாறுபாடு அடைந்துவிடும் எனும் அய்யாவின் கருத்திற்கிணங்க கிடைத்த வாய்ப்பை நழுவ விடாது. மயிரைக் கட்டி மலையை இழுத்தது போல் நீதிக்கட்சியின் முதல் சட்டசபை நமக் காக வழங்கிய சமூக நீதிச்சாதனைகளுக் காகப் பாராட்டுவோம் என்றும்.
-விடுதலை ஞா.ம.27.9.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக