ஞாயிறு, 15 நவம்பர், 2015

சரஸ்வதி நதி உண்டா?


சரஸ்வதி ஆறு பண்டைய இந்து நூல்களில் குறிப்பிடப்பட்ட  ஆறுகளில் ஒன்றாகும்.  பிற்கால வேத நூல்களான தாண் டய மற்றும் ஜைமினிய பிராமாணாஸ் போன்றவையும், அதே போல மகா பாரதமும் சரஸ்வதி ஆறு பாலை வனத்தில் வறண்டு விட்டதாகக் குறிப் பிடுகின்றன. பெண் கடவுளான சரஸ் வதி ஆற்றை இந்த மூலாதாரமாகக் கொண்டே ஆளுருவாக்கம் செய்யப் பட்டார்.  வேதங்களில் நீராதாரத்திற்கான ஒரு பொருளாக ஆறு குறிப்பிடப்பட் டுள்ளது. அந்த ஆற்றை சரஸ்வதி என்று கற்பனையாக குறிப்பிடுவார்கள், சரஸ்வதி என்றால் நீர்நிறைந்த பூஞ் சோலை என்று பெயர். சமஸ்கிருதத்தில் குட்டை, குளம் எனும் பொருளிலும்,  உள்ள பெண் பால் சொல்லாகும்.
வேதங்களில் சரஸ்வதி ஆறு குறித்து பல இடங்களில் உள்ளது, ஆனால் எந்த ஒரு இடத் திலும் சரஸ்வதி எங்கிருந்து தோன்று கிறது என்று குறிப்பிடப்படவில்லை. மேலும் பார்ப்பனர்கள் கூறும் சரஸ்வதி நதியின் தோன்றும் இடமாகக் கருதப் படும் அரியானா மற்றும் வடக்கு ராஜஸ்தான் மாநிலப் பகுதிகளில் எந்த ஒரு மலையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மகாபாரதத்தில் சரஸ்வதி ஆறு வறண்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. குருசேத்திரப் போர் பற்றி உள்ள கதைப் பகுதியில் வறண்டுபோன சரஸ்வதியின் எல்லையிலிருந்து என்று ஆரம்பிக் கிறது. அதே நேரத்தில் ரிக் வேதத்தில் காணப்படும் சரஸ்வதி ஆற்றின் குறிப்புகள் அனைத்தும் ஈரானில் உள்ள ஹெல்மாண்ட் ஆற்றைப் பற்றியதாகும். இராஜஸ்தான் மாநிலத்தில் ஆர வல்லி மலைத்தொடரில் தோன்றி ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் தற்போதும் ஓடிக்கொண்டு இருக்கும் ஆற்றின் பெயர் சரஸ்வதியாகும். சித்பூர் மற்றும் பதான் வழியாகப் பாய்ந்து கட்சு வளைகுடாவில் இறுதியாகக் கலக்கிறது. வங்கதேசத்தில் ஓடும் ஹூக்லி ஆற்றின் கிளை ஆறு ஒன்று 1900ஆம் ஆண்டு கணக்கில் வறண்டு விட்டது. இதையும் சரஸ்வதி ஆறு என்று வங்கப் பார்ப்பனர்கள் கூறுவார்கள்.
சமீபத்தில் டில்லியில் நடந்த வேத ஆய்வு மய்யக் கருத்தரங்கம் ஒன்றில் லலித்கலா அகடமி, சில வேத ஆய்வுக கட்டுரைகளை வெளியிட்டிருந்தது. அதில் வேதங்களில் எங்கும் கங்கையைப் பற்றி ஒரு வரிகூட எழுதவில்லை. அதே நேரத்தில் சரஸ்வதி ஆறு குறித்து பல்வேறு இடங்களில் சுமார் 800-க்கும் மேற்பட்ட குறிப்புகள் உள்ளன என்று கூறியிருந்தது.
புவியியல் ஆய்வாளர்களின் கருத்துப் படி ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இமயமலை உயர்ந்த போது ஏற்பட்ட பருவ மாற்றம் காரணமாக பல்வேறு ஆறுகள் தோன்றின. சுமார் 2000 சிறு ஆறுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கங்கை ஆறாக மாற 10 லட்சம் ஆண்டுகள் எடுத்துக் கொண்டன என்று கூறுகிறார்கள்(பிபிசி புவியியல் ஆய்வு ஆவணப்படம்).   மனித இனம் தோன்றுவதற்கு முன்பிருந்தே ஓடிக்கொண்டு இருக்கும் கங்கையைப் பற்றி வேதத்தில் எந்தக் குறிப்புமே இல்லை.
-விடுதலை,17.10.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக